படிகட்டில் தவறி விழுந்து காயம் லாலு ஐசியுவில் அனுமதி

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் படிக்கட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்ததை அடுத்து நேற்று அதிகாலை ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன முறைகேடு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறுநீரக கோளாறு பிரச்னையால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக அவர் வெளிநாடு செல்ல வேண்டும் என்பதால் கடந்த மாதம் ஜாமீனில் … Read more

மத்திய பிரதேசத்திலும் பீச் இருக்கு? தெரியுமா உங்களுக்கு? இந்த வீடியோவை பாருங்க!

மத்திய பிரதேச மாநிலத்தில் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனுப்பூர் பகுதியில் உள்ள மக்கள் விநோதமான போராட்டம் ஒன்றை கையிலெடுத்துள்ளது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதன்படிம் அனுப்பூர் மற்றும் பிஜுரி மனேந்திரகர் பகுதியை இணைக்கும் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளதை, வாக்கு கேட்டு வரும் அரசியல் கட்சியினருக்கு உணர்த்தும் வகையில் சாலையில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். சாலையில் போராடுவது வழக்கமானதுதான் என கேள்வி எழலாம். … Read more

'மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை' – காளி போஸ்டர் சர்ச்சையில் நுஷ்ரத் ஜஹான் கருத்து

மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என்று ‘காளி’ போஸ்டர் சர்ச்சை குறித்து நடிகையும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான நுஷ்ரத் ஜஹான் கூறியுள்ளார். காளி போஸ்டர் சர்ச்சை: நேற்று, இயக்குநர் லீனா மணிமேகலையின் ‘காளி’ ஆவணப்பட போஸ்டர் வெளியானது. அதில் காளியின் கையில் ஒரு சிகரெட் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் காளிதேவியின் கையில் திரிசூலம், அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் LGBTQ+ சமூகத்தினரின் (தன்பாலின உறவாளர்கள்) பெருமித அடையாளக் கொடியும் இருக்கிறது. இந்தப் படம் இணையத்தில் வைரலானது. … Read more

திருப்பதி உண்டியல்: வரலாறு காணாத கலெக்‌ஷன்!

திருப்பதி திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் செல்லும் நிலையில், கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தால், மாநில அரசு அளித்துள்ள தளர்வுகளின்படி, திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதியில் தினமும் ரூ.300 ஆன்லைன் தரிசனத்தில் 25,000 பக்தர்களும், ஸ்ரீவாணி அறக்கட்டளை இதர சேவைகள் மூலம் … Read more

மோசமான வானிலையால் அமர்நாத் யாத்திரை ரத்து.. குகைகோயிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு..!

பருவமழையால் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், பஹல்காம் முகாமில் இருந்து குகை கோயிலுக்கு செல்ல யாத்ரீகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 ஆயிரம் பேர் குகை கோயிலில் தரிசனம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜம்முவிலிருந்து 6 ஆயிரத்து 351 யாத்ரீகர்கள் அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

ஊழல் வழக்கை விசாரித்தற்காக பணிமாறுதல் கிடைத்தாலும் கவலையில்லை: கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சந்தேஷ் பேட்டி

கர்நாடக: ஊழல் வழக்கை விசாரித்தற்காக பணிமாறுதல் கிடைத்தாலும் கவலையில்லை என கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சந்தேஷ் கூறியுள்ளார். அரசு அதிகாரிகளுக்கு எதிரான கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு விசாரணையின் போது நீதிபதி சந்தேஷ் பேட்டியளித்துள்ளார். அதிகாரிகளுக்கு எதிராக கருத்து கூறியதால் எனக்கு பணிமாறுதல் தண்டனையாக கிடைக்கும் என நீதிபதி என்னிடம் கூறினார்கள். எந்த அச்சுறுத்தலுக்கும் அடிப்பணிய மாட்டேன், அரசியல் சாசனத்தை பாதுகாப்பதே என் கடமை என நீதிபதி சந்தேஷ் தெரிவித்துள்ளார்.

”ரோடு என்ன உங்க வீட்டு சொத்தா?” : நெட்டிசன்களை கொதித்தெழ வைத்த No Parking Board!

மெட்ரோ நகரங்களில் வசிப்பவராக இருந்தால் கட்டாயம் வாகனங்கள் நிறுத்துவது தொடர்பான சண்டைகளை பார்த்திருப்பீர்கள் இல்லை அதில் நீங்களே கூட ஈடுபட்டிருக்கலாம். இப்படியாக பார்க்கிங் செய்வதில் பல தகராறுகள் நாட்டின் பல இடங்களில் தினந்தோறும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் குடியிருப்பு பகுதிகளில் நடக்கும் பார்க்கிங் சண்டைகளெல்லாம் உணர்ச்சி மிகுந்ததாகவே இருக்கும். இந்த நிலையில், ஆதித்யா மொரார்கா என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில், no parking board தொடர்பான ஃபோட்டோவை ஷேர் செய்திருக்கிறார். அதில், கர்நாடகாவின் கோரமங்கலாவில் … Read more

உலகின் வசிக்கத்தக்க சிறந்த நகரங்களின் பட்டியல்: சென்னை, பெங்களூருக்கு எந்த இடம்? 

உலகின் வசிக்கத்தக்கச் சிறந்த நகருக்கான பட்டியலில் சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்கள் மிகக் குறைவான புள்ளிகளை பெற்றுள்ளது. பொருளாதார புலனாய்வு அமைப்பு உலகம் முழுவதும் மொத்தம் 173 நகரங்களில் வாழ்க்கை நிலைமைகளை ஆய்வு செய்து இந்த ஆண்டுக்கான உலகின் வசிக்கத்தக்கச் சிறந்த நகருக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள நகரங்களில் வாழக் கூடிய தரத்தின் அடிப்படையில் தரவரிசையில் இடம்பெறும். குறிப்பாக நகரத்தின் உள்கட்டமைப்பு வசதி, சுகாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி உள்ளிட்ட அம்சங்களை வைத்து … Read more

“மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர்கள் செயல்படுவார்கள்” – மத்திய கல்வித்துறை அமைச்சர்

மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர்கள் செயல்படும் நடைமுறையை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் பேசிய அவர், மத்திய பல்கலைக்கழகங்களுக்கு குடியரசுத் தலைவர் வேந்தராகவும், மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராகவும் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். இது சரியான மற்றும் நன்கு பரிசோதிக்கப்பட்ட அமைப்பு எனக்கூறிய அவர், வேந்தர் பதவியில் சிலர் அரசியல் பிரச்னைகளை உருவாக்குவதாகவும் மம்தா பானர்ஜியை மறைமுகமாக சாடினார். Source link

மகா விகாஸ் அகாடி கூட்டணி 100 இடங்களுக்கு மேல் வெல்லும்: சஞ்சய் ராவத்

மராட்டியம்: சட்டசபை தேர்தல் இன்று நடத்தப்பட்டால் மகா விகாஸ் அகாடி கூட்டணி 100 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் எங்கள் பக்கம் திரும்பி வருவார்கள் என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.