டிஜிட்டல் மையத்தில் உலகை வழிநடத்துகிறது இந்தியா – பிரதமர் மோடி

ரேஷன் கார்டுக்கும், பிறப்புச் சான்றிதழுக்கும் வரிசையில் நின்ற காலம் மலையேறி விட்டதாகவும், டிஜிட்டல் மயமாக்கத்தால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு சேவைகளுக்கான டிஜிட்டல் போர்ட்டல்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய மோடி, காந்தி நகரில் துவக்கி வைக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் தொழில் தொடங்குவதை எளிதாக்கி, தொடக்க நிலை நிறுவனங்களுக்கு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் என்றார். நான்காம் தொழிற்துறை புரட்சியில் இந்தியா அங்கம் … Read more

தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் செல்போன் ஜாமர் கருவிகளை பயன்படுத்துவது சட்டவிரோதம்

புதுடெல்லி: செல்போன் ஜாமர்களை தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று  ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தகவக் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல ஊடக அறிக்கைகளின்படி, வயர்லெஸ் ஜாமர் மற்றும் பூஸ்டர்/ரிப்பீட்டர்களை முறையாகப் பயன்படுத்துவது குறித்து பொது மக்களுக்கு கடந்த 1ம் தேதி தொலைத்தொடர்புத் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம் ஒரு ஆலோசனையை வழங்கி உள்ளது. அதன்படி, செல்போன் சிக்னல் ஜாமர், ஜிபிஎஸ் பிளாக்கர் அல்லது பிற சிக்னல் … Read more

ஹோட்டலுக்கு சாப்பிட போறீங்களா? பில் கட்டும்போது இதை கவனித்தில் கொள்ளவும்

உணவகங்களில் சேவை கட்டணத்தை சேர்த்து ஜிஎஸ்டியை வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உணவகங்கள் சேவை கட்டணம் விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், உணவகங்களில் சாப்பிட்ட மொத்தத் தொகையில் சரக்கு மற்றும் சேவை கட்டணத்தை விதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் எந்த ஒரு பெயரிலும் சேவை கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்றும் சேவை கட்டணத்தை செலுத்துமாறு நுகர்வோரைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. சேவை கட்டணத்தை செலுத்துவது நுகர்வோரின் விருப்பம் … Read more

75வது சுதந்திரத்தை கொண்டாடும் விதமாக மாணவர்களின் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு: இந்தியா சுதந்திரம் அடைந்து வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் 75 ஆண்டு நிறைவடைகிறது. இதனால் சுதந்திர தின பவள விழாவை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசும், மாநில அரசுகளும் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் கர்நாடக உயர்கல்வித் துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் உயர்கல்வி நிறுவனங்களுக்கும், கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘‘75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு … Read more

100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த பக்தரை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவத்தினர்..!

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சென்று திரும்பும் போது 100 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தவரை ராணுவத்தினர் மீட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர். மகாராஷ்ட்ராவை சேர்ந்த சத்ய நாராயணன், குடும்பத்தினருடன் அமர்நாத் யாத்திரை சென்று குதிரை வண்டியில் திரும்பிய நிலையில், பிராரிமார்க் அருகில் வண்டி கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறியது. இதில் நூறு அடி ஆழ பள்ளத்தில் சத்ய நாராயணன் தவறி விழுந்தார். தலையில் காயம் மற்றும் மார்பு பகுதியில் எலும்பு முறிவுடன் கிடந்த … Read more

ராகுல் குறித்து போலி வீடியோ பாஜ எம்பிக்கள் 2 பேர் மீது வழக்கு

புதுடெல்லி:  காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி குறித்து போலி வீடியோ பதிவிட்டது தொடர்பாக பாஜ எம்பிக்கள் ராஜ்யவர்த்தன் சிங் ரதோர் ம்றறும் சுப்ராத் பதவ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வயநாடு எம்பி அலுவலகம் தாக்குதல் சம்மந்தமாக பேசிய கருத்தை உதய்பூரில் நடந்த கொலையுடன் தொடர்புபடுத்தி பாஜ எம்பியும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் போலியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. … Read more

பல்வேறு உதவிகளை மறந்து 16 ஆண்டு நண்பர் சதி திட்டம்: மகாராஷ்டிர மருந்து கடைக்காரர் கொலை வழக்கில் திருப்பம்

மும்பை: மகாராஷ்டிர மருந்து கடைக்காரர் உமேஷ் கோல்கே கொலை வழக்கில், அவரது நெருங்கிய முஸ்லிம் நண்பர் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியிருப்பது அம்பலமாகி உள்ளது. மகாராஷ்டிராவின் அமராவதி நகரில் உமேஷ் கோல்கே (54), கால்நடை மருந்து கடை நடத்தி வந்தார். இவரை கடந்த ஜூன் 21-ம் தேதி இரவு 2 பேர் வழிமறித்து கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் உமேஷின் நெருங்கிய முஸ்லிம் நண்பர் யூசுப் கான் கொலைக்கு … Read more

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம .!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வருகிற 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூலை 20-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். ஜூலை 22-ஆம் தேதி வேட்புமனுவை … Read more

எஸ்ஐ நியமன முறைகேடு விவகாரத்தில் கர்நாடகா ஏடிஜிபி கைது: சிஐடி போலீசார் அதிரடி

பெங்களூரு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய சிஐடி போலீசார் மாநில ஏடிஜிபி அம்ருத் பாலை நேற்று கைது செய்தனர். முறைகேடு வழக்கில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில அரசு 545 போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்வதற்கு முடிவு செய்தது. இப்பணிகளை நிரப்ப கடந்த 2021 அக்டோபரில் தேர்வு நடந்தது. தேர்வு முடிவு வெளியாகும் முன்பே இதில் முறைகேடு … Read more

ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்களில் சேவை கட்டணம் வசூலிக்க கூடாது – நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று நுகர்வோரிடம் கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவு கட்டணத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவைக் கட்டணம் அளிக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர் விருப்பத்துக்கு உட்பட்டதாகும். அதை நுகர்வோரின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் ஆர்டர் செய்த உணவுடன் எந்த பெயரிலும் சேவைக் … Read more