5ஜி ஏலம்: கைப்பற்றப்போவது யார்?- அம்பானியுடன் மோதும் அதானி?

புதுடெல்லி: இணைய வரலாற்றில் பெரும் புரட்சியாக கருதப்படும் 5ஜி சேவையை கைபற்றுவதற்கான ஏலம் ஜூலை 26-ம் தேதி நடைபெறுகிறது. ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அம்பானியின் ஜியோ நிறுவனமும், மிட்டலின் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியிடும் நிலையில் தற்போது திடீர் திருப்பமாக அதானியும் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக பணக்காரர்களில் டாப் 10 இடங்களில் இருப்பவர்களில் இருவர் இந்தியர்கள். அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி ஆகிய … Read more

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி குழுமம்!

அதிவேக இணையத் தொடர்புக்கான 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி குழுமமும் பங்கேற்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலத்தை இம்மாத இறுதியில் தொலைத்தொடர்புத் துறை நடத்த உள்ளது. இதில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்நிலையில் அதானி குழுமமும் ஏலத்தில் பங்கேற்கப் போவதாகக் கூறப்படுகிறது Source link

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் கால் பதிக்கிறார் அதானி?: அலைக்கற்றை உரிமம் பெற விண்ணப்பம் என தகவல்..!!

டெல்லி: ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு போட்டியாக கவுதம் அதானி குழுமம் தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் கால் பதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் அலைக்கற்றை மற்றும் 5ஜி சேவைகளுக்கு உரிமம் பெறுவதற்கான ஏலம் இந்த மாதம் 26ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், நேற்று வரை  மொத்தம் 4 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. முகேஷ் அம்பானியின் ஜியோ, மிட்டிலின் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது. 4வது நிறுவனம் தேசிய … Read more

கனமழையால் சேறும், சகதியுமாக காட்சியளித்த நெடுஞ்சாலை… மண்ணில் புதையுண்ட வாகனங்கள்

காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் சேறும், சகதியுமாக காட்சியளித்த நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மண்ணில் புதையுண்டன. குந்தி வனத்தின் மலைபிரதேசப் பகுதியில் இன்று அதிகாலையில் திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டதை அடுத்து அங்கு பெய்த கனமழையால் நெடுஞ்சாலை சேறும், சகதியுமாக மாறியது. பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சேற்றில் சிக்கிய வாகனங்கள் மீட்கப்பட்டன. Source link

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆலோசனை

டெல்லி: டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு நடத்தினார். மராட்டிய மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஜே.பி.நட்டாவுடன்  ஏக்நாத் ஷிண்டே ஆலோசனை நடத்தினார். ஜே.பி.நட்டாவுடன் மராட்டிய துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். 

கர்நாடகாவில் பல பகுதிகளில் 2 முறை மிதமான நில அதிர்வுகள்

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று காலையில் 2 முறை மிதமான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. காலை 6.22 மணியளவில் உணரப்பட்ட நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோளில் 4 புள்ளி 9 ஆகவும், 6.24 மணியளவில் உணரப்பட்ட நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 6 ஆகவும் பதிவாகி உள்ளது. கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவை அனைத்தும் ரிக்டர் அளவுகோலில் 5-க்குக் கீழ் பதிவாகி … Read more

கர்நாடகவில் கனமழை: கே.ஆர்.எஸ். அணை முழுகொள்ளளவை எட்டியுள்ள நிலையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ். அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வினாடிக்கு 10,000 முதல் 25,000 வரை நீர் வெளியேற்றப்பட இருப்பதால் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் மிக தீவிரமடைந்துள்ளது. கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களான குடகு, சிக்மங்களூர், ஹசன், மைசூர், மண்டியா, ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழையானது பதிவாகிவருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளான கே.ஆர்.எஸ்.மற்றும் கபினி … Read more

அமர்நாத் மேக வெடிப்பு: கலங்க வைக்கும் 10 தகவல்கள்!

காஷ்மீர் மாநிலத்தில் பிரசித்திபெற்ற அமர்நாத் குகை அருகே நேற்று மாலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் சூழ்ந்தது. பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கோர நிகழ்வின் சில முக்கியத் தகவல்களை அறிவோம்: * அமர்நாத் குகை அருகே நேற்று மாலை 5:30 மணியளவில் மேக வெடிப்பு காரணமாக கொட்டிய கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த சமயத்தில் நிலச்சரிவும் உண்டாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி அமர்நாத் புனித யாத்திரை சென்ற 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். … Read more

நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த நண்பருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஜோத்பூர்: நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சிலர் கொல்லப்பட்டனர். மேலும் சிலருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த மகேந்திர சிங் ராஜ் … Read more

2021-22-ம் நிதியாண்டில், ரூ.13,000 கோடியை எட்டிய இந்திய பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி

2021-22-ம் நிதியாண்டில், இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 13 ஆயிரம் கோடியை எட்டியுள்ளதாக தெரிவித்த பாதுகாப்பு துறை, வரும் 2025-ம் ஆண்டுக்குள் விண்வெளி மற்றும் பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதியை 35 ஆயிரம் கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் தனியார் நிறுவனங்கள் 70 சதவிகித பங்கு வகிக்கும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட தற்போது தளவாட ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.  Source link