பாலக்காடு அருகே 13 வயது சிறுமி பலாத்காரம்: 16 வயது அண்ணன் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய 16 வயது அண்ணனை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மண்ணார்க்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுமியை வயிற்று வலி என்று கூறி அவரது பெற்றோர் அங்குள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பரிசோதனையில் சிறுமி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மண்ணார்க்காடு … Read more

"இந்திய மீனவர்களை (தமிழக) விடுவிக்க நடவடிக்கை வேண்டும்” – மத்திய அரசுக்கு அண்ணாமலை கடிதம்

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்ததில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை கடற்படையினரால் கடந்த 8 ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட 2977 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தமிழக பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில், கடந்த 3-ம் … Read more

பசியோடு யார் வந்தாலும் உணவு, உடை, தங்குமிடம் இலவசம்: ஹைதராபாத் மருத்துவ தம்பதியினரின் தன்னலமற்ற சேவை

ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைத ராபாத் கொத்தப்பேட்டா பகுதியை சேர்ந்தவர் வி.சூரிய பிரகாஷ். இவரது மனைவி காமேஸ்வரி. இருவரும் மருத்துவர்கள். இவர்கள், தங்கள் வீட்டுக்கு யார் பசியோடு வந்தாலும் உணவு, உடை வழங்கி, எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். மருத்துவ தம்பதியரின் வீட்டுக்கு அடைக்கலம் தேடி வருவோர், தங்களுக்கு பிடித்த உணவுகளை அவர்களே சமைத்து சாப்பிடலாம். இது குறித்து சூரிய பிரகாஷ் கூறியதாவது. எங்களது வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்காக செலவு செய்கிறோம். … Read more

sevice tax: சேவை வரி இனி கட்டாயமில்லை… வாடிக்கையாளர்கள் நிம்மதி!

நுகர்வோர் உரிமைகளை மீறும் வகையிலும், முறையற்ற வர்த்தக நடைமுறையை தடுக்கும் வகையிலும், உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, உணவு உண்டதற்கான விலை ரசீதுகளில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது என்றும், வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூலிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. சேவை வரியை செலுத்துமாறு உணவகங்கள் நுகர்வோரைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், சேவை வரியை செலுத்துவது நுகர்வோரின் விருப்பம் என்பது அவர்களிடம் … Read more

காளி புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர் : இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறையில் புகார்..!

இந்து கடவுள் காளியை இழிவுப்படுத்தும் வகையில் போஸ்டர் வெளியிட்டதாக ஆவணப் பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த லீனா மணிமேகலை, தற்போது கனடாவில் உள்ளார். காளி குறித்த ஆவணப்படம் தயாரித்துள்ள அவர், காளி புகைப்பிடிப்பது போன்ற போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூகவலைகாளி புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்.. இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி காவல்துறையில் புகார்..!த்தளங்களில் வலுத்து வருகிறது. Source … Read more

ஆந்திராவில் பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை நெருங்கிய கருப்பு பலூன்களால் பரபரப்பு

ஆந்திரா: ஆந்திராவில் கருப்பு பலூன்கள் நடுவானில் பிரதமர் மோடி இருந்த ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்றபோது அவருக்கு எதிராக கருப்பு பலூன் போராட்டம் நடத்தப்பட்டது.

பிரதமரின் ஹெலிகாப்டரை சுத்துப்போட்ட கருப்பு பலூன்கள்! ஆந்திராவில் பரபரப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டருக்கு அருகே ஏராளமான கருப்பு பலூன்கள் பறந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பாஜக செயற்குழுக் கூட்டம் இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தொண்டர்கள் இடையே உரையாற்றினார். செயற்குழுக் கூட்டம் முடிவடைந்ததை அடுத்து, நரேந்திர மோடி இன்று டெல்லி திரும்பினார். இதற்காக ஹைதராபாத்தில் இருந்து ஆந்திராவின் விஜயவாடாவுக்கு இன்று மாலை வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார். பிரதமரின் ஹெலிகாப்டர் பறக்க … Read more

தெலங்கானாவில் விரைவில் இரட்டை இன்ஜின் ஆட்சி: பொதுக் கூட்டத்தில் பிரதமர் உறுதி

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் போலீஸ் பயிற்சி மைதானத்தில் நேற்று மாலை தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் தலைமையில் ‘விஜய சங்கல்ப சபை’ எனும் பெயரில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி முதலில் தெலுங்கில் பேசி தனது உரையை தொடங்கினார். பின்னர் அவர் ஹிந்தியில் பேசியதாவது. தெலங்கானா மண் ஒரு வீரம் மிக்க மண் மட்டுமின்றி ஆன்மீக மண்ணும் கலந்துள்ள பூமியாகும். தெலங்கானாவுக்கு அனைத்து மத்திய அரசின் … Read more

காங்கிரஸ் பறக்க விட்ட கருப்பு பலூன்கள் – பிரதமர் ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு!

ஆந்திர மாநிலத்தில், பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர் பறக்க விட்ட கருப்பு பலூன்கள், பிரதமரின் ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்த நாளின் ஓராண்டு கால விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் விஜயவாடாவில் இருந்து ஹெலிகாப்டரில் … Read more

“ஓட்டல்கள், உணவகங்களில் சேவை கட்டணம் விதிக்கக் கூடாது” – மத்திய அரசு

நாடு முழுவதும் உள்ள ஓட்டல்கள், உணவகங்கள், சேவைக் கட்டணத்தை தன்னிச்சையாக விதிக்கவோ, கட்டண ரசீதில் சேர்க்கவோ கூடாது என மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தாமாக வாடிக்கையாளர்கள் தருவதே சேவைக் கட்டணம் எனக் குறிப்பிட்ட அந்த அமைச்சகம், அதனை செலுத்தக்கோரி நிர்பந்திக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. இதனை மீறி சேவைக் கட்டணம் விதிப்பவர்கள் மீது புகாரளிக்க உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. Source link