நிர்மலா சீதாராமன் உட்பட 27 எம்பிக்கள் பதவியேற்பு

புதுடெல்லி: மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உட்பட 27 எம்பி.க்கள் நேற்று பதவியேற்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் 57 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 27 எம்பி.க்கள் நேற்று பதவியேற்றனர். மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு முன்னிலையில் இவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 10 மாநிலங்களை சேர்ந்த 27 எம்பி.க்கள் 9 மொழிகளில் பதவி பிரமாணம் செய்தனர். 12 எம்பி.க்கள் இந்தியிலும், ஆங்கிலத்தில் … Read more

மெஸ் சாப்பாட்டால் துவண்டுப் போன மகனின் தோழிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அம்மா!

“வீட்டு சாப்பாட்டோட அருமை வெளியே போனாதான் உங்களுக்கு தெரிய வரும்” அம்மாக்கள் பல நேரங்களில் பிள்ளைகளிடம் கூறும் ஒரே சொற்றொடராக இருக்கும். அதுவும் ஹாஸ்டலில் தங்கி படிக்கும், வேலை பார்ப்போரால் அம்மாக்களின் இந்த அன்பு கலந்த வசை எப்போதும் உணர்ச்சி மிகுந்ததாகவே இருந்திருக்கும். அப்படியான சம்பவத்தை பற்றிதான் பார்க்கப்போகிறோம். ஷ்ருபெர்ரி என்ற ட்விட்டர் பயனர் ஒருவரின் ட்வீட்தான் நெட்டிசன்களிடையே பேசுபொருளாகியிருக்கிறது. அதில், “மெஸ் சாப்பாடு மீதான அதிருப்தி குறித்து என்னுடைய நண்பனிடம் தொடர்ந்து கூறிவந்தேன். அவர் தன்னுடைய அம்மாவிடம் … Read more

50 சதவீத ஆஃபர் – கேரள மாலில் 'நள்ளிரவு ஷாப்பிங்' செய்ய குவிந்த மக்கள் கூட்டம்

கொச்சி: கேரளாவின் பிரபல வணிக வளாகத்தில் நள்ளிரவு ஷாப்பிங் செய்ய மக்கள் அதிகமாக கூடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கேரள மாநிலத்தில் பிரபலமாக மால்களில் லூலூ மால். திருவனந்தபுரம் மற்றும் கொச்சி இரண்டு இடங்களில் செயல்பட்டு வரும் இந்த மால், கேரளாவில் பிறந்து வளர்ந்து அரபுநாட்டில் கொடிகட்டி பறக்கும் தொழிலதிபர் எம்ஏ யூசுப் அலிக்கு சொந்தமானது. சில நாள்கள் முன் இந்த மால் தரப்பில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது. ஜூலை 6 அன்று இரவு … Read more

8 ஆண்டுகளில் வளர்ச்சியையும், உள்ளடக்கத்தையும் நாடு காண்கிறது – பிரதமர் மோடி

கடந்த எட்டு ஆண்டுகளில் நாடு வளர்ச்சியையும், உள்ளடக்கத்தையும் கண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த அருண் ஜெட்லி நினைவு சொற்பொழிவு மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, அனைவருக்குமான வளர்ச்சி இல்லாமல் உண்மையான வளர்ச்சி இல்லை என தெரிவித்தார். உள்ளடக்கிய வளர்ச்சியே அனைவருக்குமான வளர்ச்சி என்ற கொள்கையின் படி கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார். சீர்திருத்தங்கள் யாருடைய வற்புறுத்தலின் பேரில் செய்யப்படவில்லை என்றும் உள்ளார்ந்து அடுத்த … Read more

பாலியல் வழக்கில் கைதான ஜார்கண்ட் ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்

ராஞ்சி: ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட் மாநிமல், குந்தி மாவட்டத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சையத் ரியாஸ் அகமது. வெளிமாநிலத்தை சேர்ந்த 8 பொறியியல் மாணவ, மாணவிகள் பயிற்சிக்காக இந்த மாநிலத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் அரசு துணை மேம்பாட்டு ஆணையர் குடியிருப்பில் தங்கினர். இரவில் ஒரு மாணவி தனியாக இருந்தபோது, இந்த துறையின் ஐஏஎஸ் அதிகாரியான சையத் ரியாஸ் அகமது அங்கு சென்று, … Read more

‘ஆல்ட் நியூஸ்’ ஜுபைருக்கு ஜாமீன்

புதுடெல்லி: செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் இணைய தள நிறுவனமாக ‘ஆல்ட் நியூஸ்’ செயல்படுகிறது. இதன் இணை நிறுவனர் முகம்மது ஜுபைர். இந்து துறவிகள் சிலர் மக்களிடையே வெறுப்புணர்வை பரப்புவதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். புகாரின் பேரில் உ.பி. சீதாபூர் போலீஸார் ஜுபைரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி ஜுபைர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், முகம்மது ஜுபைருக்கு 5 … Read more

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மராட்டிய மாநிலத்தில் விதர்பா மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பயோ எத்தனாலை வாகனங்களுக்கு பயன்படுத்தலாம் என்றார்.  எத்தனால் மீது எடுக்கப்பட்ட முடிவால் ஆண்டுக்கு 20ஆயிரம் கோடி ரூபாய் நாட்டுக்கு மிச்சமானது என்றும் கூறினார்.  பச்சை ஹைட்ரஜன், எத்தனால், சிஎன்ஜி மூலம் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓடும் நாள் வெகு … Read more

மேகவெடிப்பால் பலத்த மழை வெள்ளத்தில் 10 பக்தர்கள் பலி: அமர்நாத் யாத்திரையில் பரிதாபம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் குகை அடிவாரத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பினால் 3 பெண்கள் உள்பட 10 பக்தர்கள் பலியாகினர். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த, அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கும் அமர்நாத் புனித யாத்திரை கடந்த 30ம் தேதி தொடங்கியது. 43 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் இதுவரையில் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.இந்நிலையில், அமர்நாத் பனிக்குகை பகுதியில் நேற்று மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு, பலத்த கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் … Read more

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் – பாஜக வேட்பாளரை வெல்ல எதிர்க்கட்சிகள் புதிய வியூகம்

புதுடெல்லி: நாட்டின் புதிய குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பொதுவேட்பாளரை அறிவிக்க எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. இதில், குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரை அறிவிப்பதில் காட்டிய அவசரம் தற்போது கூடாது என முடிவு செய்துள்ளன. இந்த அவசரம் காரணமாக எதிர்க்கட்சிகளில் சில, ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவளித்துவிட்டன. இதனால், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா தோல்வியுறும் நிலை உள்ளது. இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் … Read more

சீர்திருத்தங்களை செய்வது ஏன்?..பிரதமர் மோடி விளக்கம்

புதுடெல்லி: ‘நிர்பந்தங்கள் காரணமாக சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு பலன் அளிக்கும் என்ற அடிப்படையிலேயே அவை எடுக்கப்படுகின்றன,’ என பிரதமர் மோடி  கூறினார். மறைந்த பாஜ மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதித்துறை அமைச்சருமான அருண் ஜெட்லியின்நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:  அனைவரையும் உள்ளடக்காமல் வளர்ச்சி சத்தியமா? அனைவரையும் உள்ளடக்காமல் இது பற்றி சிந்திக்க முடியுமா? உள்ளடக்கிய வளர்ச்சியை கருத்தில் … Read more