ஒரு சிறந்த உலகளாவிய அரசியல்வாதி, ஒரு சிறந்த தலைவர் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க நிர்வாகி..: ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்டரில் இரங்கல் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவுகளை காண்போம், ஷின்சோ அபேவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும், ஜப்பான் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எனது அன்பான நண்பர்களில் ஒருவரான ஷின்சோ அபேயின் சோகமான மறைவு குறித்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளேன். அவர் ஒரு சிறந்த உலகளாவிய அரசியல்வாதி, ஒரு சிறந்த தலைவர் மற்றும் ஒரு … Read more

அதிமுகவின் தர்மர் உள்ளிட்ட 27 பேர் மாநிலங்களவை எம்பி ஆக பதவியேற்பு!

நாடு முழுவதும் அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாடு உட்பட ஒன்பது மாநிலங்களில் இருந்து 57 உறுப்பினர்கள் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக இன்று 27 பேர் பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட 4 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் … Read more

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட 27 பேர் ராஜ்யசபா எம்பியாக பதவியேற்பு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட, 27 பேர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில் 27 பேர், இன்று அரசியலமைப்பு சாசனப்படி முறையாகப் பதவியேற்றனர். அவர்கள் அனைவரும் மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் … Read more

பள்ளி மாணவர்கள் மீது மரம் விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழப்பு.!

சண்டிகரில், வேரோடு மரம் முறிந்து பள்ளி மாணவர்கள் மீது விழுந்த விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மார்க் பகுதியில் அமைந்துள்ள செக்டர் 9-ல், மதிய இடைவேளையின் போது பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வேரோடு முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

பஞ்சாப், அரியானா, சண்டிகருக்கு கனமழை எச்சரிக்கை: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: பஞ்சாப், அரியானா, சண்டிகருக்கு இந்திய வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து பஞ்சாப், அரியானா, சண்டிகரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவித்தது. 

45 நாள்களுக்குப் பின் ஜாமீன் பெற்ற முன்னாள் பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர்!

ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சருக்கு 45 நாட்களுக்கு பிறகு பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த மே மாதம் பஞ்சாப் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜய் சிங்கலா, சுகாதாரத்துறைக்கான அரசு ஒப்பந்தங்களில் 1 சதவீதம் கமிஷன் கேட்டதாக முறையீடு புகார் பெறப்பட்டதையடுத்து பஞ்சாப் மாநில அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டார். முறைகேடு வழக்கில் கைது … Read more

மழை நீர் சூழ்ந்த பகுதியில் சிக்கிய பள்ளிப்பேருந்து.. சிறார்களை உடனடியாக மீட்க களத்தில் இறங்கிய பொதுமக்கள்.!

தெலங்கானா மாநிலத்தின் மஹ்பூப் நகரில் 30 மாணவர்களுடன் சென்ற பள்ளிப்பேருந்து மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பாதி மூழ்கிய நிலையில், அதில் இருந்த சிறார்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மஹ்பூப் நகர் பகுதியில் நேற்று முதல் தொடர் கனமழை பெய்த நிலையில், அங்குள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இந்நிலையில், இன்று காலை மாணவர்களுடன் சென்ற பள்ளிப் பேருந்து ஒன்று மச்சனப்பள்ளி என்ற பகுதியின் அருகே ரயில் பாலத்தின் கீழே சென்றபோது மழைநீர் சூழ்ந்த இடத்தில் சிக்கியது. இதனைக் … Read more

நடிகையின் பலாத்கார காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு மீண்டும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை போலீசார் கைப்பற்றி எர்ணாகுளம் விசாரண நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தனர். இந்த நிலையில் பலாத்கார காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருப்பதாக பாலச்சந்திர குமார் என்பவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் மெமரி கார்டை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறி … Read more

பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமின் – உச்ச நீதிமன்றம் அதிரடி!

‘ஆல்ட் நியூஸ்’ இணையதள இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செய்தியின் உண்மை தன்மையை சரிபார்க்கும் இணையதள நிறுவனமாக ‘ஆல்ட் நியூஸ்’ செயல்பட்டு வருகிறது. இந்த இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனராக முகமது ஜுபைர் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, 2018 ஆம் ஆண்டு முகமது ஜுபைர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சைக்குரியை வகையில் கருத்திருந்தார். இது மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக அளிக்கப்பட்ட … Read more

ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்.. 9 பேர் உயிரிழப்பு!

உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் கார் ஒன்று ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். ராம்நகரில் பெய்து வரும் கனமழை காரணமாக தேலா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்ற கார் திடீரென வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தகவலறிந்து விரைந்த மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு, காருக்குள் இருந்த எஞ்சிய ஒருவரை பத்திரமாக மீட்டனர். மேலும், ஆற்றில் பாய்ந்த காரை டிராக்டர் உதவியுடன் மீட்கும் பணி  நடைபெற்றது.  … Read more