நில அபகரிப்பு முயற்சி | மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினப் பெண் மீது தீ வைப்பு; காங்கிரஸ் கண்டனம்

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினப் பெண் ஒருவர் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் தீ பற்றி எரிய கதறும்போது வன்முறையாளர்கள் அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி காண்போரை பதறச் செய்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பியாரி சஹாரியா. இவருடைய கணவர் அர்ஜூன் சஹாரியா. இவர்களுக்கு அரசு நலத் திட்டத்தின் கீழ் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற மூன்று … Read more

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்னாத் ஷிண்டே வெற்றி!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மாநிலத்தை விட்டு வெளியேறினர். இதனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை உத்தவ் தாக்கரே நிரூபிக்குமாறு மாநில ஆளுநர் பிகத் சிங் கோஷியாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிசும் பொறுப்பேற்றனர். இந்த … Read more

ஒடிசாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து கால்வாயின் தடுப்பு சுவரில் மோதி தீ பிடித்து எரிந்து விபத்து.!

ஒடிசா மாநிலம் புல்பானியில் இருந்து புவனேஷ்வர் நோக்கிச் சென்ற பேருந்து பாரமுண்டா பேருந்து நிலையம் அருகே கால்வாயின் தடுப்பு சுவரில் மோதியதில் தீ பிடித்து எரிந்தது. இன்ஜினில் பற்றிய தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை முழுவதும் அணைத்தனர். இந்த தீ விபத்தில் பயணிகள் 4 பேர் காயமடைந்தனர். Source link

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்: ரூ.2 லட்சம் நிவாரணம்

இமாச்சல்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பேருந்து கவிழ்ந்து 16 பேர்  உயிரிழந்துள்ளதாக வந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்தது என்று பிரமர் மோடி ட்வீட் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு PMNRF-ல் இருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து… பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு

இமாச்சல் பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் குடுபத்துக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இமாச்சல் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் நியோலி-ஷன்ஷேர் சாலையின் சைனஜ் பள்ளத்தாக்கில் பள்ளி மாணவர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ … Read more

ஒரு ஆட்டின் விலை ரூ.1.05 லட்சம்: ஆக்ரா சந்தையில் களைகட்டிய பக்ரீத் குர்பானி ஆடு விற்பனை

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா ஆட்டுச் சந்தையில் பக்ரீத் குர்பானிக்கான ஆடு விற்பனை களை கட்டியுள்ளது. அங்கு ஒரு ஆட்டின் விலை ரூ.1.05 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் தங்கள் விலை உயர்ந்த ஆடுகளுடன் விற்பனைக்கு குவித்துள்ளனர். இதனால் விற்பனை சூடுபிடித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இறைவன் பெயரில் ஆடுகள் அதிக அளவில் குர்பானி கொடுக்கப்படுகிறது. இதற்காக, உ.பி.,யின் ஆக்ரா சந்தைக்கு அண்டை மாநிலங்களான டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் … Read more

திருப்பதியில் 25 ஆண்டுகள் தரிசனம் செய்யும் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1982ஆம் ஆண்டு உதய, அஸ்தமன சேவா (காலை முதல் மாலை வரை தரிசனம்) டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. உதய, அஸ்தமன சேவா டிக்கெட் பெற்றவர்கள் ஏழுமலையான் கோயிலில் காலை சுப்ரபாதம் முதல் மாலை சகஸ்ர தீப அலங்கார சேவை வரை நடைபெறும் அனைத்து உற்சவங்களிலும் குடும்பத்தினருடன் பங்கேற்கலாம். ஆண்டுக்கு ஒருமுறை என 25 ஆண்டுகளுக்கு இந்த தரிசனம் செய்து கொள்ளலாம். அதன்படி அதற்கான டிக்கெட் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த டிக்கெட் பெற்றவர்களின் … Read more

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா வீட்டில் அத்துமீறி நுழைந்த மர்மநபர் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவு.!

மேற்குவங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஒரு நாள் முழுவதும் தங்கி இருந்த மர்மநபர் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மம்தாவின் தனிப்பட்ட வீடு தெற்கு கொல்கத்தாவின் கலிகட் பகுதியில் 34பி ஹரிஸ்சடர்ஜி என்ற முகவரியில் உள்ளது. இந்த வீட்டிற்கு பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் நுழைந்த மர்ம நபர் இரவு முழுவதும் பதுங்கி இருந்துள்ளார். காலையில் வழக்கம் போல் போலீசார் ரோந்து … Read more

மராட்டிய சட்டபேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் ஏக்நாத் ஷிண்டே

மும்பை: மராட்டிய சட்டபேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை ஏக்நாத் ஷிண்டே நிரூபித்துள்ளார். பெரும்பான்மைக்கு 145 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 160-க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: பள்ளிக் குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

குலு: இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் சிக்கி பள்ளிக் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகினர். இதுகுறித்து குலு துணை ஆணையர் அசுதோஷ் கார்க் கூறுகையில், “இன்று காலை பள்ளிக் குழந்தைகள் மற்றும் பிற பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சயிஞ் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்து குலு பகுதியில் வந்தபோது திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த பள்ளிக்குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணிகள் … Read more