நாடு முழுவதும் 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல்.!

நாடு முழுவதும் 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் சங்குருர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஆம் ஆத்மியின் பகவத் மான், முதலமைச்சரான நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல உத்தரபிரதேச மாநிலத்தில் இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. Source link

தங்கம் கடத்தலில் முதல்வருக்கு தொடர்பா? சொப்னாவிடம் 2ம் நாளாக 9 மணி நேரம் விசாரணை

திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் தொடர்பாக சொப்னாவிடம் 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தல், வெளிநாட்டுக்கு பணம் கடத்தியது ஆகிய சம்பவங்களில் கேரள முதல்வர் பினராய் விஜயன், அவரது குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர், அரசு உயரதிகாரிகள் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் சொப்னா ரகசிய வாக்குமூலம் அளித்தார். இதுதொடர்பாக, சொப்னா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், நீதிமன்றத்தில் சொப்னா அளித்த ரகசிய வாக்குமூலத்தை நீதிமன்ற அனுமதியுடன் பெற்ற அமலாக்கத் துறை … Read more

தெருவிளக்கில் படித்த ஏழை சிறுவன் – சொந்த செலவில் பள்ளியில் சேர்த்து உதவிய வாரணாசி போலீஸ் அதிகாரி

புதுடெல்லி: அரசு பணியில் இருக்கும் உயர் அதிகாரிகள் நினைத்தால் ஏழை சமூகத்தை உயர்த்தலாம். இதற்கு உதாரணமாக உத்தரப்பிரதேசம் வாரணாசியில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான இங்கு காவல்துறை கூடுதல் ஆணையராக சுபாஷ் சந்திர துபே பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன் இருட்டிய மாலைபொழுதில் பதனி கேட் பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எடை பார்க்கும் இயந்திரம் ஒன்றை பக்கத்தில் வைத்துக்கொண்டு தெருவிளக்கு ஒளியில் சோனு எனும் சிறுவன் அமர்ந்து … Read more

கடந்த இரண்டரை ஆண்டுகளாக முதலமைச்சர் தங்களை சந்திக்கவே இல்லை என சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டு.!

கடந்த இரண்டரை ஆண்டுகளாக முதலமைச்சர் தங்களை சந்திக்கவே இல்லை என சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு 3 பக்க கடிதத்தை அனுப்பியுள்ளனர். அதில் தொகுதி பணிகள் தொடர்பாக முதலமைச்சர் சந்திக்க முயன்றும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக சந்திக்க முடியவில்லை என்றும், அதேநேரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அடிக்கடி முதலமைச்சரை சந்தித்ததாகவும் கூறியுள்ளனர்.  Source link

அக்னிபாதை திட்டத்தை கண்டித்து போராட்டம்; ரயில் இருக்கைக்கு தீ வைத்த வாலிபர் கைது.!

தெலங்கானா: அக்னிபாதை திட்டத்தை கண்டித்து நடந்த போராட்டத்தின்போது, ரயில் இருக்கைக்கு தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்திய ராணுவத்தில் 17 வயது முதல் 23 வயது வரையிலான இளைஞர்களை 4 ஆண்டு காலத்துக்கு பணியில் அமர்த்தும் அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்துக்கு விரைவில் ஆட்சேர்ப்பு நடைமுறை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. பீகார், உத்தரபிரதேசம், தெலங்கானா மற்றும் … Read more

ஒரே நாளில் எகிறிய கொரோனா… எவ்வளவுன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீ்ங்க!

இந்திய அளவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 13,313 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவி்ததுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் மட்டும் 4,224 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவுக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா -3,260, டெல்லி -928 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, கொரோனா … Read more

பெட்ரோல், டீசல் விலைக் கட்டுப்பாட்டால் இழப்பு.. விலையை மாற்றியமைக்க மத்திய அரசுக்குத் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடிதம்..!

கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள போதும், பெட்ரோல் டீசல் விலையைக் உயர்த்தாமல் வைத்திருப்பதால் இழப்பு ஏற்படுவதாகத் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஜியோ பிபி, நயாரா எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் பெட்ரோலிய அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், பெட்ரோல் டீசல் அடக்கச்செலவில் மூன்றில் இரண்டுபங்கு விலைக்கே விற்கப்படுவதாகவும், இதனால் ஒரு லிட்டர் டீசலில் 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையும், பெட்ரோலில் 14 ரூபாய் முதல் 18 ரூபாய் வரையும் இழப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.  … Read more

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தே.ஜ. கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு சந்திப்பு..!!

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் தே.ஜ. கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு சந்தித்து பேசினார். குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்முவை தேர்வு செய்ததற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அடிப்படை பிரச்னை பற்றிய திரௌபதி முர்முவின் புரிதல், நாட்டின் வளர்ச்சிக்கான பார்வை சிறப்புக்குரியது எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

திருமண ஊர்வலத்தில் மணமகன் துப்பாக்கியால் சுட்டத்தில் நண்பர் பலி.. மணவாழ்க்கையை தவறவிட்டு, சிறைவாழ்க்கையை அனுபவிக்கும் மணமகன்..!

உத்திரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் திருமண ஊர்வலம் ஒன்றில் கொண்டாட்டத்திற்காக மணமகன் துப்பாக்கியால் சுட, அது நண்பனின் உயிரை பறித்தது. அம்மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிகளில் மணமக்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவதை பெருமையாக கடைப்பிடிக்கின்றனர். இதுபோல், பிராம்நகர் என்ற இடத்தில் ஒரு மணமகன் துப்பாக்கியால் சுட, அது அருகில் இருந்த மணமகனின் நண்பர் உயிரை பறித்தது. மணவாழ்க்கையில் இருக்க வேண்டிய மணமகன் தற்போது சிறைவாழ்க்கையை அனுபவித்து வருகிறார். Source link

அபயா கொலை வழக்கு; பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன்: தண்டனை நிறுத்திவைப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள பயஸ் டென்த் கான்வென்டில் தங்கியிருந்த அபயா என்ற கன்னியாஸ்திரி கடந்த 1992ம் ஆண்டு கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கோட்டயம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் தங்களது மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அபயாவின் பெற்றோர் கேரள அரசுக்கு கோரிக்கை … Read more