தார் ஜீப்பின் டாப்பில் கறி வெட்டும் கத்தியுடன் உலா வந்த நகை கடை அதிபர்.. பாய்ந்தது போலீஸ் வழக்கு!

இறைச்சிக் கடை திறப்பு விழாவிற்காக, கையில் வெட்டுக்கத்தியுடன் தார் ஜீப்பின் கூரையில் அமர்ந்து ஊர்வலமாக வந்த பிரபல நகைக்கடை அதிபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் செம்மனூர் பேஷன் ஜுவல்லரியின் உரிமையாளர் போபி செம்மனூர் என்பவர் தான் கெத்து காட்டுவதற்காக, தார் ஜீப்பின் மீது ஏறி கத்தியுடன் அமர்ந்து உலா வந்து வாண்டடாக வழக்கு வாங்கிய வள்ளல். கேரளா மற்றும் தமிழகத்தில் நகைக்கடைகளை நடத்தி வரும் இவர், தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக சாலையில் … Read more

இந்தியாவில் மிக குறைந்த கட்டணத்தில் விரைவில் ஆகாசா ஏர் விமான சேவை : ஒன்றிய அரசு அனுமதி

டெல்லி : ஆகாசா ஏர் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய விமான நிறுவனம் ஒன்றிற்கு விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2022 டிசம்பரில் குறைந்த கட்டணத்தில் இந்தியாவில் விமான சேவை வழங்கும் நோக்கில் ஆகாசா ஏர் விமான நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பெருமளவு முதலீடு செய்துள்ளார். வினய் துபே மற்றும் ஆதித்யா கோஷ் ஆகியோரும் இதில் இணைந்துள்ளனர். விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளதால் மிகவும் குறைந்த கட்டணத்தில் இந்த … Read more

தேசிய கல்வி கொள்கை, தாய்மொழி கல்விக்கு வழிவகுக்கிறது – வாரணாசியில் நலத்திட்டங்களை தொடங்கி பிரதமர் மோடி உறுதி

வாரணாசி: தேசிய கல்வி கொள்கை, தாய்மொழி கல்விக்கு வழிவகுக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 2வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒருநாள் பயணமாக வாரணாசி சென்றார். அப்போது ரூ.600 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். வாரணாசியின் எல்.டி. கல்லூரியில் … Read more

கடந்த 7 நாட்களில் 89 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்க தரிசனம்

ஜம்மு:  இந்த ஆண்டுக்கான அமர்நாத் பனிலிங்க யாத்திரை கடந்த 30ம் தேதி தொடங்கியது. வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி முடிவடைகிறது. இதுவரை மொத்தம் 89 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று 8வது குழுவினர் யாத்திரைக்கு புறப்பட்டனர். 5726 பக்தர்கள் அடங்கிய குழுவானது பக்வதி நகர் யாத்திரை நிவாசில் இருந்து 242 வாகனங்களில் புறப்பட்டுச்சென்றனர்.

ராஜஸ்தானில் 3 நாள் ஆர்எஸ்எஸ் மாநாடு தொடக்கம்

ஜுன்ஜுனு: ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் கூட்டம் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு நகரில் நேற்று தொடங்கியது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நிர்வாகிகள் மன்மோகன் வைத்யா, அருண் குமார், கிரிஷன் கோபால் மற்றும் சி.ஆர் முகுந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். 2025-ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்து இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு, நூற்றாண்டு விழாவை காஷ்மீரில் கொண்டாடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பை விரிவுபடுத்த … Read more

குஜராத்தை போல் லக்னோவிலும் நிறுவப்பட உள்ள 108 அடி உயர அனுமன் சிலை..!

குஜராத்தை போல் லக்னோவிலும் 108 அடி உயர அனுமன் சிலை புதிதாக நிறுவப்பட உள்ளது. அங்குள்ள கோமதி நதிக்கரையில் உள்ள தேவ்ரஹா காட் பகுதியில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான அனுமன் கோயிலில் இந்த சிலை நிறுவப்படுகிறது. அனுமன் கோயிலில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. இரண்டு ஆண்டுகளில் சிலை தயாராகிவிடும் என்று கட்டடக் கலைஞர்களில் ஒருவரும், கோயிலின் அறங்காவலருமான விஜய் சின்ஹா கூறினார். ஏற்கனவே அங்கு 151 அடி உயரத்தில் லட்சுமணன் … Read more

கேரளாவில், 2 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நாளை மஞ்சள் அலர்ட்

திருவனந்தபுரம் : கேரளாவில், 2 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நாளை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கேரளாவில் அடுத்த 5 நாட்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை – போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை

காரைக்காலில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதிக்குட்பட்ட கீழ பொன்பேத்தி, சேவகன் பேட்டையை சேர்ந்தவர் ஜெயராமன் (50) பெயிண்டர் வேலை செய்து வரும் இவர், கடந்த 2020 அன்று அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பான புகாரை நெடுங்காடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு … Read more

குண்டு வெடித்து தந்தை மகன் உயிரிழப்பு – கண்ணூரில் சோகம்

கண்ணூர்: கேரள மாநில போலீஸார் நேற்று கூறியதாவது: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பசல் ஹக் மற்றும் அவரது மகன் ஷஹீதுல் ஆகிய இருவரும் கண்ணூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். இவர்கள் பழைய இரும்பு பொருட்களை சேகரித்து விற்று வந்துள்ளனர். பழைய பொருட்களில் இருந்த ஒரு டிபன் பாக்ஸை திறந்தபோது பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதில், பசல் ஹக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஷஹீதுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, வெடிகுண்டு … Read more

வெள்ளத்தில் சிக்கிய காருக்குள் 3 பேர் உயிர்ப்போராட்டம்… போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

குஜராத் மாநிலம் துவாராகாவில் பெய்த கடும் மழையால் பாவடா என்ற கிராமத்தில் ஒரு கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது காருக்குள் மூன்று பேர் இருந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்துக்குப் பிறகு காரில் இருந்த மூன்று பேரையும் பத்திரமாக மீட்டனர். இதனிடையே பஞ்சாப் மாநிலம் மோஹாலியில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் ஒரு பெண் உள்பட 2 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். Source link