பஞ்சாப் பாடகர் படுகொலை- ஆம் ஆத்மி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

சண்டிகர்: பஞ்சாப் மாநில பிரபல பாடகர்  சித்து மூஸ்வாலா கடந்த டிசம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்தார். பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூஸ்வாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.  இந்நிலையில் நேற்று மான்சா மாவட்டத்தில் அவர் காரில் சென்ற போது சுற்றி வளைத்த மர்ம கும்பல் துப்பாக்கியால் பலமுறை … Read more

கேரளாவில் புதிதாக பரவும் நோய் வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு ஒருவர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக பரவிவரும் வெஸ்ட் நைல் என்ற காய்ச்சலுக்கு திருச்சூரை சேர்ந்த ஒருவர் மரணமடைந்தார். இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சுகாதாரத் துறையில் இந்தியாவிலேயே கேரளா முன்னணி மாநிலமாக இருந்த போதிலும் இங்குதான் தொற்று நோய்கள் அதிகமாக உள்ளன. நாட்டிலேயே கேரளாவில் தான் கொரோனா முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. நிபா, பன்றிக் காய்ச்சல்,  எலிக் காய்ச்சல், டெங்கு, பறவைக் காய்ச்சல், ஷிகெல்லா உள்பட பல தொற்று நோய்கள் அடுத்தடுத்து பரவி வருகின்றன. இதைத் … Read more

காலணிக்குள் பதுங்கியிருந்த நாகப்பாம்பு.. சரியான நேரத்தில் பாம்பு இருந்தது கண்டறியப்பட்டதால் உயிர்தப்பியது..!

கர்நாடக மாநிலத்தில் நாகப்பாம்பு ஒன்று காலணிக்குள் பதுங்கியிருந்த நிலையில், சரியான நேரத்தில் கண்டறியப்பட்டதால் அதனை அணிய முயன்றவரின் உயிர்தப்பியது. அம்மாநிலத்தின் தும்கூருக்கு அருகே உள்ள ரங்காபூர் என்ற கிராமத்தில் ரங்கநாத் என்பவர், வெளியே செல்வதற்காக தனது காலணியை அணிய முயன்றார். அப்போது காலணியில் இருந்து ஒருவித ஓசை எழுந்ததை அடுத்து அதனை சோதனையிட்ட அவர், அதில் பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை அடுத்து, பாம்பு பிடிக்கும் ஒருவரிடம் தகவல் தெரிக்கப்பட்ட நிலையில், அந்த பாம்பு … Read more

2 ஆண்டுகளுக்குப் பின் வங்க தேசத்துக்கு ரயில்: இந்தியா தொடங்கியது

கொல்கத்தா: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா -வங்கதேசம் இடையே  மீண்டும் பயணிகள் ரயில் சேவை துவங்கியது. கடந்த 2020ம் ஆண்டு  கொரோனா தொற்று பரவல் தீவிரமானதால், இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், இந்தியா – வங்கதேசம் இடையேயான பந்தன் எக்ஸ்பிரஸ், மைத்ரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் சில இடங்களில் தொடங்கி உள்ளன. வங்கதேசத்துக்கான பயணிகள் … Read more

ஏழைச் சிறுமிகளின் கல்விக்கும் நலனுக்கும் பாடுபடும் ராம் பூபால் ரெட்டி ஓர் தன்னலமற்ற தொண்டர்.. பிரதமர் மோடி பாராட்டு..!

ஆந்திரத்தைச் சேர்ந்த ராம் பூபால் ரெட்டி என்பவர் ஓய்வுக்குப் பின் ஈட்டிய வருமானத்தில் 25 இலட்ச ரூபாய்க்கு மேல் ஏழைச் சிறுமிகளின் நலனுக்காகச் செலவிட்டுள்ளதாகப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மர்க்காபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த ராம் பூபால் நூறு சிறுமிகளுக்கு அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு, வங்கிக் கணக்குத் தொடங்கி அவற்றில் 25 இலட்ச ரூபாய்க்கு மேல் செலுத்தியுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார். இவர் போல் நாடு முழுவதும் எண்ணற்றோர், ஊருக்கு உழைப்பதே யோகம் என்பதை வாழ்வின் குறிக்கோளாகக் … Read more

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை- பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

புதுடெல்லி: கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி  முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ இழந்த குழந்தைகளுக்கு அரசு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம், கடந்த ஆண்டு மே 29ந் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப் பட்டது.  கொரோனாவால் அனாதையான குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், … Read more

வெடிகுண்டுகளுடன் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது: அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதி

ஜம்மு: நவீன வெடிகுண்டுகளுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் அடிக்கடி பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் பறக்க விடப்படும் என்பதால், கூடுதல் கண்காணிப்பு பணி இங்கு நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், நேற்று காலை இந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தானுக்குச் சொந்தமான டிரோன் ஒன்று பறந்தது. இதைக் … Read more

8 ஆண்டில் தலைகுனிவை ஏற்படுத்தும் தவறுகள் நடக்கவில்லை – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

காந்திநகர்: தேசத்தந்தை மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேலின் கனவுகளை மத்திய அரசு நிறைவேற்றுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டம், அட்கோட்டில் ரூ.50 கோடி செலவில் 200 படுக்கை வசதிகளுடன் மதுஸ்ரீ கே.டி.பி. உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ படேல் சேவாசமாஜ் அறக்கட்டளை நிர்வகிக்கும் இந்த மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி … Read more

காலையில் அறிவிப்பு; மாலையில் திரும்ப பெற்றது ஆதார் அமைப்பு!

இந்திய குடிமக்களின் அடிப்படை அடையாள ஆதாரமாக ஆதார் கார்டு உள்ளது. ஆனால் இதன் பாதுகாப்பு மீது பெரும்பாலோர் அதிகக் கவனம் செலுத்துவதில்லை. நிறைய இடங்களில் ஆதார் கார்டை நகல் எடுக்கின்றனர். அதேபோல வேலைக்குச் செல்லும் இடத்திலும் பல்வேறு இடங்களிலும் ஆதார் ஆவணத்தைக் கொடுத்து விடுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள் ஆதார் உடைமையாளர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம். இதுகுறித்து ஆதார் அமைப்பு ( UIDAI ) இன்று எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தது. அதில், எந்தவொரு நிறுவனத்திடமும் யாரும் தங்களது ஆதார் … Read more

வடகிழக்கு மாநிலங்களை மேம்படுத்த ரூ.1,34,200 கோடி மதிப்பில் திட்டங்கள் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வடகிழக்கு மாநிலங்களில், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், வடகிழக்கு பிராந்தியத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கி வருவதாக குறிப்பிட்டார். தற்போது வடகிழக்கு பகுதிகளில், 74 ஆயிரம் கோடி மதிப்பிலான 20 ரயில்வே துறை திட்டங்களும், 58 ஆயிரம் கோடி மதிப்பிலான சாலை பணிகளும்  நடைபெற்று வருவதாக … Read more