பட்டியலினத்தவருடன் காதல்! 17 வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை!

கர்நாடகாவில் பட்டியனத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால், 17 வயது மகளை தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆணவக் கொலை வழக்கில், கர்நாடகாவின் மைசூருவின் பெரியபட்னா தாலுக்காவில் உள்ள ககுண்டி கிராமத்தில் தனது 17 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்றதற்காக தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியபட்னாவில் உள்ள கல்லூரியில் இரண்டாம் பியூசி படிக்கும் மாணவியான ஷாலினி பிற்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். பக்கத்து கிராமத்தில் உள்ள பட்டியனத்தை சேர்ந்த ஒரு இளைஞனை … Read more

மூஸ் வாலா கொலை வழக்கில் 8 பேர் கைது – குடும்பத்தினருக்கு ராகுல் நேரில் ஆறுதல்

சண்டிகர்: பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கு தொடர்பாக 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பிரபல பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் இளம் தலைவருமான சித்து மூஸ் வாலா கடந்த மே 29–ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தது மற்றும் வேவு பார்த்தது தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவை சேர்ந்த 8 பேரை பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளாக அடையாளம் … Read more

வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞருடன் காதல் : பெற்ற மகளை கழுத்தை நெறித்துக் கொலை செய்த தந்தையின் வெறிச்செயல்

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே, வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்த ஆத்திரத்தில், பெற்ற மகளை கழுத்தை நெறித்துக் கொலை செய்த தந்தை போலீசில் சரணடைந்தார். சுரேஷ் – பேபி தம்பதியின் 17 வயதான மகள், இளைஞர் ஒருவரை காதலித்ததற்கு, பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோர் மீது மாணவி கொடுத்த புகாரை விசாரித்த போலீசார், பெற்றோருடன் செல்ல மாணவி விருப்பம் தெரிவிக்காததால் அவரை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காப்பகத்தில் இருந்து மாணவியை வீட்டிற்கு அழைத்து … Read more

மலப்புரம் அருகே கால்பந்து போட்டியின்போது கேலரி சரிந்து 100 பேர் காயம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே கால்பந்து போட்டியின்போது கேலரி சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ேடார் காயமடைந்தனர். கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள பூக்கோட்டுபாடம் அரசுப் பள்ளி மைதானத்தில் கிளப்புகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு அரையிறுதிப் போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்ட 2 அணிகளிலும் வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் போட்டியை காண வழக்கத்தைவிட மிக அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் குவிந்தனர். … Read more

தாயை கொன்று, தங்கையை அறையில் பூட்டி வைத்த சிறுவன் – நண்பர்களை அழைத்து படம் பார்த்த அவலம்

பப்ஜி விளையாடுவதை தடுத்ததற்காக தனது தாயை 16 வயதே ஆன மகன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த விவகாரத்தில், மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் அந்த சிறுவனிடம் நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர், மேற்கு வங்க மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி, 16 வயதான மகன் மற்றும் 10 வயதான மகள் ஆகிய 3 பேர் மட்டும் லக்னோவில் தனியாக வசித்து வந்துள்ளனர். இதில் ராணுவ அதிகாரியின் … Read more

ஆர்எஸ்எஸ் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – புதுக்கோட்டை இளைஞர் கைதின் பின்னணி தகவல்கள்

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரின் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் முனைவர் நீல்காந்த் மணி பூஜாரி. இவர், தலைநகரான லக்னோவில் வசிக்கிறார். மேலும் அங்கு அலிகன்ச் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் தீவிரத் தொண்டராக உள்ளார். இந்நிலையில் நீல்காந்தின் கைப்பேசி எண் வாட்ஸ்-அப்பிற்கு அறிமுகமற்ற ஒருவரிடம் இருந்து 2 தினங்களுக்கு முன் ஒரு குழும இணைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அதில் சேரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. நீல்காந்த் இதனை ஏற்று குழுமத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் அதில் இந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் … Read more

Tirupati Darshan Tickets: தரிசன டிக்கெட்டுகள் காலி – ஏழுமலையான் பக்தர்கள் ஷாக்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் விற்று தீர்ந்தன. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ளது, திருப்பதி ஏழுமலையான் கோவில் . இந்தக் கோவில், உலகப் பிரசித்திப் பெற்றது. இக்கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை … Read more

விமான நிலையங்கள் மற்றும் விமானத்திற்குள் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் – விமானப் போக்குவரத்து இயக்குநரகம்

விமான நிலையங்கள் மற்றும் விமானத்திற்குள் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, விமான பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, முகக் கவசம் அணியாத பயணிகள் விமானம் புறப்படுவதற்கு முன் வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.   Source link

முப்படை தலைமை தளபதி பணி நியமன விதியில் திருத்தம்: 62-க்கு குறைவாக இருக்கவேண்டும் என அறிவிப்பு

டெல்லி: முப்படை தலைமை தளபதி நியமன விதிகளில் ஒன்றிய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. ராணுவப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும், வளங்களை முறையாக பயன்படுத்தும் வழிமுறைகளை வகுக்கவும் முப்படை தலைமை தளபதி பதவியை ஒன்றிய அரசு உருவாக்கியது. நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில்  உயிரிழந்தார். அதன்பிறகு, முப்படை தலைமை தளபதி காலியாக இருந்தது. இந்நிலையில் … Read more

"ராசிமணல் பகுதியில் எந்தத் திட்டத்தையும் முன்னெடுக்கும் யோசனை இல்லை”- தமிழக அரசு

ராசிமணல் பகுதியில் எந்த ஒரு திட்டத்தையும் முன்னெடுக்கும் யோசனை இல்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் புதிய அணை அமைக்க கோரி யானை ராஜேந்திரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த மனு மீது பதிலளிக்க தமிழக அரசு, கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது. இதில் மனுதாரரான யானை ராஜேந்திரனுக்கு தமிழக அரசு தரப்பிலிருந்து தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் … Read more