பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு

தேசிய ஜனநயகக் கூட்டணியின் குடியரவுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். நாட்டின் கிழக்குப்பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், மேலும் அவர் ஒரு பெண்ணாக இருக்கவேண்டும் என்றும், அவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்றும் இன்று பாஜக நாடாளுமன்ற குழுவிலே பேசி விவாதிக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது இவை அனைத்திற்கும் பொருத்தமான திரௌபதி முர்முவை வேட்பாளராக பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த திரௌபதி முர்மு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் … Read more

“யோகா… தனிநபர்களுக்கு மட்டுமின்றி நமது சமூகத்திற்கும் அமைதியை தருகிறது” – பிரதமர் மோடி

மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற 8-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற கண்காட்சியிலும் பங்கேற்றார். அப்போது அவர் பேசியது: “மைசூர் போன்ற இந்தியாவின் ஆன்மீக தலங்களின் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த யோக முறை இன்று உலக சுகாதாரத்திற்கு வழிகாட்டியாக மாறியுள்ளது. யோகா இன்று உலகளாவிய ஒத்துழைப்பிற்கான அடிப்படையாக மாறி, மனித குலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வின் நம்பிக்கையை வழங்குகிறது. யோகா என்பது இன்று வீடுகளையும் … Read more

பா.ஜ.க. கூட்டணி குடியரசுத்தலைவர் வேட்பாளர் அறிவிப்பு..!

பா.ஜ.க. கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அறிவித்தார் ஜே.பி.நட்டா பா.ஜ.க கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு போட்டியிடுவார் என்று அறிவிப்பு ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநரான திரௌபதி முர்மு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜார்க்கண்ட் மாநில முதல் பெண் ஆளுநராக பொறுப்பு வகித்தவர் திரௌபதி முர்மு மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட நாட்டின் முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை பெற்றவர் திரௌபதி முர்மு 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் … Read more

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு- வை பாஜக அறிவித்தது .டெல்லியில் தே.ஜ.கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளரை பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்தார். திரௌபதி முர்மு ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

'காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிடலாமா'? – சிவில் சர்வீஸ் தேர்வு கேள்வியால் சர்ச்சை

மத்தியப் பிரதேச மாநில சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று வைரல் ஆகியுள்ளது. மத்தியப் பிரதேச மாநில சிவில் சர்வீஸ் தேர்வு கடந்த ஜூன் 19 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த தேர்வில் காஷ்மீர் தொடர்பான கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விதான் மத்திய பிரதேசத்தில் புயலை கிளப்பியுள்ளது. ’காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கும் முடிவை இந்தியா எடுக்க வேண்டுமா?’ என்பதுதான் அந்த கேள்வி. அந்த கேள்வியுடன் இரண்டு வாதங்கள் கொடுக்கப்பட்டது. அதன்பிற்கு பதிலுக்கு நான்கு … Read more

புதுச்சேரியில், கடலுக்கு அடியில் யோகாசனம் செய்த நபர்

யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியை சேர்ந்த ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் ஒருவர் கடலுக்கடியில் 60 அடி ஆழத்தில் யோகாசனம் செய்தார். கடலில் சிக்கியவர்களை மீட்பதற்காக காவலர்களுக்கு ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளித்து வரும் அரவிந்த் என்ற அந்த நபர், ஏராளமான வண்ண மீன்களுக்கு மத்தியில் வித விதமான யோகாசனங்களை செய்து காட்டினார். Source link

மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சி மேற்கொள்வதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சரும், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஏக்நாத் ஷிண்டே 12 எம்எல்ஏக்களுடம் குஜராத்தில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இந்த சூழலில் பாரதிய ஜனதா மீது ஆளும் ஆட்சி கவிழ்ப்பு புகாரை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் முன்வைத்துள்ளார்.2019ம் ஆண்டு சிவசேனா தலைமையில் மகா மெகா சகாதி கூட்டம் … Read more

யோகா தனிநபருக்கானது அல்ல: பிரதமர் மோடி பேச்சு!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று மைசூரில் உள்ள மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மைசூர் போன்ற இந்தியாவின் ஆன்மீக தலங்களின் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த யோக முறை இன்று உலக சுகாதாரத்திற்கு வழிகாட்டியாக மாறியுள்ளது என்றார். இன்று யோகா உலகளாவிய ஒத்துழைப்பிற்கான அடிப்படையாக மாறி, மனித குலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வின் நம்பிக்கையை வழங்குகிறது, என்று பிரதமர் கூறினார். … Read more

நாட்டு வைத்தியர் வெட்டிக் கொலை.. சிகிச்சை ரகசியத்தை சொல்ல மறுத்ததால் ஆத்திரம்.!

சிகிச்சை ரகசியத்தை சொல்ல மறுத்த மைசூரு நாட்டு வைத்தியரை துண்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்து ஆற்றில் வீசிய வழக்கில் தொடர்புடைய 5 முக்கிய குற்றவாளிகள் தமிழகத்தில் தலைமறைவாக உள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ஷாபா செரீப் என்பவர் பைல்ஸ் நோய்க்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவரிடம் சிகிச்சை பெற்றவர்களுக்கு விரைவில் நோய் குணமானதால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷாபா … Read more

பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய நியமிக்கப்பட்ட 25 குழுவில் 17 குழுக்களில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள்? வழிகாட்டுதல் குழு தலைவர் கருத்து கூற மறுப்பு

புதுடெல்லி: புதிய தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ், பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், முதன்முறையாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஐந்தாவது முறையாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட இஸ்ரோ முன்னாள் தலைவர்  கஸ்தூரிரங்கன் தலைமையிலான 12 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் தலைமையில் தேசியக் கல்விக் கொள்கைக்கான பாடத்திட்ட திருத்தம் நடைபெறுகிறது. … Read more