Kerala Gold Smuggling Case: சிபிஐ விசாரணை கோரி பிரதமருக்கு ஸ்வப்னா சுரேஷ் கடிதம்!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிபிஐ அமைப்பின் விசாரணைக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஸ்வப்னா சுரேஷ் கடிதம் எழுதியுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்துக்கு 2020 ஆம் ஆண்டில் பார்சல் மூலம் கடத்தி வரப்பட்ட 30 கிலோ எடை கொண்ட, அன்றைக்கு ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 5-7-2020 அன்று சுங்கத் துறையினர், அமலாக்கத் துறையினர் விசாரணை … Read more

குஜராத்தில் ஒற்றுமையின் சிலை அருகே மிதமான நிலநடுக்கம்

குஜராத்தில் ஒற்றுமையின் சிலை என அழைக்கப்படும் வல்லபாய் படேல் சிலைக்கு அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கெவாடியாவின் தென்கிழக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில், ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.1ஆக பதிவானது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சூறாவளிகளை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள ஒற்றுமை சிலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று நினைவுச்சின்னத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ராகுல் படேல்தெரிவித்தார். Source link

தேர்வுக்கு தயாராகும் நாட்கள் குறைவாக உள்ளதால் இளநிலை ‘நீட்’ தேர்வை ஒத்திவைக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு தேசிய பெற்றோர் சங்கம் கடிதம்

நாக்பூர்: தேர்வுக்கு தயாராகும் நாட்கள் குறைவாக உள்ளதால் இளநிலை ‘நீட்’ தேர்வை ஒத்திவைக்க வேண்டும்! என்று பிரதமர் மோடிக்கு தேசிய பெற்றோர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. மாணவர்களும் டுவிட்டரில் ஹேஷ்டாக் அமைத்து டிரெண்டிங் செய்து வருகின்றனர். நடப்பு ஆண்டிற்கான இளநிலை நீட் தேர்வு ஜூலை 17ம் தேதி நடக்க உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்த மாத இறுதியில்  ஆன்லைனில் விண்ணப்பத்தின் மீதான நடவடிக்கைகள் முடிவுக்கு வருமென்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு அட்மிட் கார்ட்,  தேர்வு … Read more

சிக்கலில் மகாராஷ்டிர அரசு; மோதும் பாஜக – சிவசேனா: சட்டப்பேரவையில் எண்ணிக்கை நிலவரம் என்ன?

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள் சூரத் நகரில் முகாமிட்டுள்ள நிலையில் ஆளும் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அங்கு எந்த அணிக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநில சட்டமேலவைக்கு நேற்று நடந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக 5 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இத்தேர்தலில் சிவசேனா எம்எல்ஏக்கள் 11 பேர் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மகாராஷ்டிராவில் எம்எல்சி தேர்தலில் கட்சி மாறி … Read more

Agnipath Scheme: அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற முடியாது: அஜித் தோவல் திட்டவட்டம்!

அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, அக்னிபத் என்ற ராணுவத்தில் சேரும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தில், ராணுவத்தில் சேரும் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். 4 ஆண்டுகள் பயிற்சி முடிந்த பிறகு, 25 சதவீத இளைஞர்கள் மட்டுமே நிரந்தரப் பணியில் அமர்த்தப்படுவர். 75 சதவீத … Read more

கடன் தொல்லை .. ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலையில் 13 பேர் கைது..!

மகாராஷ்டிரா மாநிலம் சாங்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக 25 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கடன் தொல்லையால் அவர்கள் தற்கொலை செய்திருக்ககலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். கடன்கொடுத்த நபர்கள் அவர்களை துன்புறுத்தியதாக தற்கொலை செய்து கொண்டவர்களின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவும் , இது தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். Source link

ஜூன் 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

டெல்லி: ஜூன் 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஜூலை 6ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும்; அதற்கு மேல் ஒத்திவைக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிப்பு

புது டெல்லி: எதிர்வரும் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. “எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை போட்டியிட செய்து மோடி தலைமையிலான அரசு மேற்கொண்டு சேதம் செய்வதை தடுக்க முடிவு செய்துள்ளோம். இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் யஷ்வந்த் சின்காவை பொது வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம். அனைத்து அரசியல் கட்சிகளும் யஷ்வந்த் சின்காவுக்கு வாக்களிக்க வேண்டும்” … Read more

போர்க்கொடி தூக்கிய அமைச்சர் – கட்சி பதவியில் இருந்து நீக்கம்!

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி தூக்கிய அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநில அமைச்சராக உள்ள சிவசேனா மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்று … Read more

அப்படியே காலை தூக்கி ஓங்கி அடித்து போலீஸை தவிக்கவிட்ட குடிமகள்..! பல்டி அடித்து ரோட்டில் உருண்டு ரகளை.!

குடி போதையில் வாகனம் ஓட்டிய பெண்ணிடம் சிக்கி, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் தவித்த சம்பவத்தின் வீடியோகாட்சிகள் வெளியாகி உள்ளது. மும்பை சாலையில் குடிமகள் செய்த ரகளை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. குடிச்சிட்டு கார் ஓட்டிய அந்த பொண்ண பார்த்த போலீசாருக்கு முதலில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… அது நம்மகிட்ட சிக்கவில்லை, நாம் தான் அந்த குடிமகளிடம் சிக்கி இருக்கிறோம் என்று..! மும்பையில் குடி போதையில் காரை ஓட்டிவந்த பெண் போலீசில் சிக்கினார். போலீசிடம் சிக்கிய … Read more