அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம்

* பீகார், உபி, ஜார்க்கண்ட்டில் போலீஸ் குவிப்பு * 600 ரயில்கள் ரத்து, பள்ளிகளுக்கு விடுமுறைபுதுடெல்லி: அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நேற்று பாரத் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி, பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். 600 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பந்த் காரணமாக, சில மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முப்படைகளில் 4 ஆண்டு குறுகிய கால சேவையில் வீரர்களை சேர்க்கும் புதிய அக்னிபாதை திட்டத்துக்கு … Read more

காஷ்மீரில் ஒரே நாளில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..

காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நான்கு பேர் உள்பட 7 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குப்வாராவின் குல்காம், புல்வாமா மாவட்டங்களில் போலீசாருடன் இணைந்து ராணுவ வீரர்கள் நடத்திய ஆப்ரேஷனில், தீவிரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களில் மட்டும் 24 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜய குமார் தெரிவித்தார். Source link

நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் இன்று சர்வதேச யோகா தினம்: மைசூரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

புதுடெல்லி: சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி, மைசூருவில் நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். நாட்டின் 75 முக்கிய இடங்களில் அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில் 15,000 பேர் பங்கேற்கும் சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இது குறித்து பிரதமர் மோடி தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் தனது டிவிட்டரில், “இந்தாண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாக … Read more

மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் சடலங்கள் கண்டெடுப்பு.!

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மஹைசல் கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டிற்குள் மூன்று உடல்கள் ஒரு இடத்திலும், 6 பேரின் உடல்கள் வெவ்வேறு இடங்களிலும் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர். இது, தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  Source link

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிட 20 கோடியில் நவீன கட்டிடம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடுவதற்காக ₹20 கோடியில் நவீன கட்டிடம் கட்டும் பணியை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப கோயிலில் உள்ள உண்டியல்களில் பணம் மட்டுமின்றி தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல் ஒருநாளைக்கு 2 முறை நிரம்பும். ஆனால் தற்போது பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் 9 முதல் … Read more

அக்னி பாதை திட்டம்; ராகுல் காந்தி மீதான விசாரணைக்கு எதிர்ப்பு – ஜனாதிபதியிடம் முறையிட்ட காங்கிரஸ்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். சந்திப்பில், அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெறக் கோரிய போராட்டத்தின் போது, ​​கட்சி எம்.பி.க்களை போலீஸார் மோசமாக நடத்தப்பட்ட விவகாரம், ராகுல் காந்தியை அமலாக்கத்துறை விசாரணை செய்கின்ற விவகாரம் போன்றது குறித்து பேசினர். காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவில் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் … Read more

31 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட்கள் 3 பேர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை..

மத்திய பிரதேசத்தில், 31 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் 3 பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாலகாட் மாநிலத்தில், மாராட்டிய மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில், மத்திய பிரதேச மாநில போலீசாரின் ஹாக் படை பிரிவினருடன் நடைபெற்ற மோதலில் ஒரு பெண் மாவோயிஸ்ட் உள்பட 3  கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். Source link

அக்னி வீரர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதரவு

புதுடெல்லி: அக்னி பாதை திட்டத்தின் கீழ் 4 ஆண்டு ராணுவ சேவை முடித்த பின்னர் அக்னி வீரர்களுக்கு என்ன மாதிரியான வேலைவாய்ப்பு கிடைக்கும் என பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அக்னி வீரர்களுக்கு மகேந்திரா நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா டிவிட்டரில் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, நாட்டின் பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் அக்னி வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் … Read more

குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட மறுப்பு.. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரித்த கோபாலகிருஷ்ண காந்தி

மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி குடியரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிடும் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.  Source link

தங்களது நிலையால் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் பின்தங்கிவிட கூடாது: ஒன்றிய அமைச்சர் நாராயணசுவாமி பேச்சு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் தங்களது நிலையால் சமூகத்தில் பின்தங்கிவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று ஒன்றிய இணை அமைச்சர் நாராயணசுவாமி கூறியுள்ளார். சென்னை மாவட்டம் நிர்வாகம் மற்றும் அலிம்கோ ஆகியவை சார்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் கற்பகம்பாள் திருமண மண்டபத்தில் சமூக வலுவூட்டல் முகாம் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் நாராயணசுவாமி கலந்து கொண்டு ரூ.1,04,92,301 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில்,”1325 … Read more