பெண் குழந்தையின் கை, கால்களை கட்டி உச்சி வெயிலில் வீட்டின் மேற்கூரையில் வீசி சித்ரவதை !!

தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியான காராவால் நகரின், துக்மிர்பூர் என்ற பகுதியில் திருமணமான பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் குழந்தையின் தாய் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அதாவது, டெல்லியில் ஒரு வீட்டின் மேற்கூரையில் 5 வயது பெண் குழந்தையின் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கொளுத்தும் வெயிலில் படுத்திருக்கும் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 25 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், … Read more

'முகமது நபி அவமதிப்பால் எதிர்மறையான சூழல்' – இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து

புதுடெல்லி: ஈரான் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்தோலியான் நேற்று (புதன்கிழமை) இந்தியா வந்தார். பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சால் இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ள சூழலில் அமீர் அப்தோலியானின் இந்திய வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக அவருக்கு இந்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அமீர் அப்தோலியான், இருநாட்டு வர்த்தக உறவு குறித்து ஆலோசித்தார். வர்த்தக தொடர்பை மேம்படுத்துவது, தீவிரவாத தடுப்பு … Read more

இந்தியாவை மீண்டும் மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 7,240 பேர் பாதிப்பு!

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 7,240 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில், கடந்த சில வாரங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு, டெல்லி போன்ற தலைநகரங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுப்பது, பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி … Read more

நள்ளிரவில் கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை.. ஏணி மூலமாக மீட்டு காட்டுக்குள் விடுவித்த தீயணைப்புத் துறையினர்..!

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டம் ஹின்டோல் அருகில் உள்ள ஆழமான கிணற்றில் விழுந்து விட்ட சிறுத்தையை தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஏணி மூலமாக மீட்டனர். சிறுத்தையின் உறுமல் கேட்டு கிணற்றில் விழுந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்ததும் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் மீட்பு முயற்சிகளை மேற்கொண்டனர். முதலில் ஒரு பலகையைக் கயிறு கட்டி கிணற்றில் போட்டனர். அது நீரில் மிதந்தது. சிறுத்தை அதன் மீது ஏறிக் கொண்டது. பின்னர் ஒரு மரத்தால் ஆன ஏணி கிணற்றில் விடப்பட்டது. சிறுத்தை … Read more

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது.. 8 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 7,240 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,97,522 ஆக உயர்ந்தது.* புதிதாக 8 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

'விஷமத்தனமான கருத்துகள் பரவுவதை தடுங்கள்' – பிரதமருக்கு நசிருதீன் ஷா வேண்டுகோள்

முகமது நபிகள் குறித்த பாஜக பிரமுகரின் கருத்துக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பிரதமர் மோடி தலையிட்டு இவ்விவகாரத்தில் மேலும் விஷமத்தனமான கருத்துக்கள் பரவுவதை நிறுத்த வேண்டும் என்று பாலிவுட் மூத்த நடிகர் நசிருதீன் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த கருத்துகள் சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட … Read more

இரு குழந்தைகள் கொலை.. தாயும் சோக முடிவு- கடிதத்தில் பகீர் தகவல் !!

பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சுகாதாரத் துறையில் பணியாற்றி வருபவர் ஃபர்கான். இவருக்கு சபீனா.  ஃபர்கான்- சபீனா தம்பதிக்கு சனா (13), யமீனா (11) ஆகிய இரு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் சபீனா தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரமாக சபீனா வீட்டின் கதவை திறக்காததால் உறவினர்கள் சென்று பார்த்தப்போது அவர்கள் … Read more

மக்களே கவனம்.. இந்தியாவில் மீண்டும் 7,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு !

இந்தியாவில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு அண்மைக்காலமாக அதிகரித்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி தினசரி கொரோனா பாதிப்பு 5,233 பேருக்கு பதிவானது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,240 பேருக்கு கொரோனா … Read more

5 வாரங்களில் 2-வது முறையாக வட்டி விகிதங்களை உயர்த்தியது ஆர்பிஐ – கார், வீட்டு கடன் சுலப தவணை அதிகரிக்கிறது

புதுடெல்லி: பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவதைக் கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி வட்டி விகத்தை 50 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. 5 வாரங்களில் 2-வது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் பிற இனங்களில் கடன் பெற்றவர்களுக்கு சுமை அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் 6 பேர் அடங்கிய குழு வட்டி உயர்வுக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்தது. இதனால் வட்டி விகிதம் தற்போது 4.90 … Read more

இறந்து போன மகனின் உடலை எடுத்துச் செல்ல ரூ.50,000 லஞ்சம் கேட்ட அரசு மருத்துவமனை.. பணம் இல்லாததால் தெருதெருவாக பிச்சை எடுத்த பரிதாபம்..!

பீகார் மாநிலத்தில் இறந்து போன மகனின் உடலை எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனைக்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முடியாததால், வேதனையடைந்த வயதான தம்பதியினர் லஞ்சம் கொடுக்க தெரு தெருவாக பிச்சை எடுத்த சம்பவம் நடந்துள்ளது. சமஸ்டிபூரைச் சேர்ந்தவர் மகேஷ் தாக்குர், இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சதார் அரசு மருத்துவமனையில் மகனின் உடல் இருப்பதாக கிடைத்த தகவலின்படி உடலை வாங்க தனது மனைவியுடன் சென்றார். ஆனால், அங்கிருந்த … Read more