“ராம ராஜ்ஜியம் அமைந்தால் தெலங்கானாவில் உருது மொழிக்கு தடை” – பாஜக மாநிலத் தலைவர் பேச்சால் சர்ச்சை

ஹைதராபாத்: “ராம ராஜ்ஜியம் அமைந்தால் தெலங்கானாவில் உருது மொழிக்கு தடை விதிக்கப்படும்” என அம்மாநில பாஜக தலைவரும் கரீம்நகர் தொகுதி எம்.பி. பண்டி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். மேலும் “நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு மதரஸாக்கள் தான் காரணம். மதரஸாக்கள் தீவிரவாத பயிற்சிக் கூடங்களாக செயல்படுகின்றன” என்றும் கூறினார். கரீம்நகரில் ஒரு பொதுக் கூட்டத்தில் பண்டி சஞ்சய் குமார் கலந்து கொண்டார் அதில் அவர் பேசுகையில், “இந்த நாட்டில் எப்போது குண்டு வெடிப்பு நடந்தாலும் அதன் பின்னணியில் … Read more

டெல்லி துணை நிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனா பொறுப்பேற்பு

டெல்லி துணை நிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். துணை நிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய துணை நிலை ஆளுநராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமார் சக்சேனாவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார். வினய் குமார் சக்சேனா, மத்திய அரசின் பல்வேறு குழுவில் பணியாற்றி உள்ளார். Source link

குடும்ப அடிப்படையிலான அரசியல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய எதிரி- பிரதமர் மோடி

ஐதராபாத்தில் இந்திய தொழில் வர்த்தக பள்ளியின் (ஐஎஸ்பி) 20 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார். இதற்கு முன்னதாக ஐதராபாத்தில் நடைபெற்ற பேரணியின்போது பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- தெலுங்கானாவில் குடும்ப கட்சிகள், தங்கள் வளர்ச்சியை மட்டுமே நினைக்கின்றனர். ஏழை மக்களைப் பற்றி கவலைப்படாத இந்தக் கட்சிகள், ஒரே குடும்பம் எப்படி ஆட்சியில் இருக்க முடியுமோ, அவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதில்தான் அவர்களின் அரசியல் உள்ளது. மக்களின் … Read more

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பழக்கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!

பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்தும் முடிவை மத்திய அரசு தள்ளிவைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு பொருட்களுக்கான வரியை சீரமைக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டிருந்தது. இதன்படி பல பொருட்கள் குறைந்த வரி பிரிவிலிருந்து அதிக வரி பிரிவிற்கு மாற்றப்படும் எனத் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்கெனவே கடுமையாக அதிகரித்து பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஜிஎஸ்டி வரியையும் அதிகரிப்பது சரியாக இருக்காது என அரசு கருதுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ள … Read more

இந்தியாவில் சப்பாத்திக்கு வருகிறது நெருக்கடி – என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

உக்ரைன் போர் மட்டுமின்றி காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் இந்த ஆண்டு கோதுமை உற்பத்தியும், அதன் தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷனில் வழங்கப்படும் கோதுமை இனி அரிசியாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் வட இந்திய மாநிலங்களில் சாதாரண குடும்பங்களில் பயன்படுத்தப்படும் சப்பாத்தி என்பது அரிதான ஒன்றாகும் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல … Read more

Vinay Kumar Saxena: டெல்லி துணைநிலை ஆளுநராக பதவியேற்றார் வினய் குமார் சக்சேனா

டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக, வினய் குமார் சக்சேனா பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபின் சங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தலைநகர் டெல்லியின் 21வது துணைநிலை ஆளுநராக செயல்பட்டு வந்தவர் அனில் பைஜால். 1969 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் டெல்லி துணைநிலை ஆளுநராக செயல்பட்டு வந்தார். இதற்கிடையே, 76 வயதான அனில் பைஜால், கடந்த 18 ஆம் தேதி … Read more

கார்த்தி சிதம்பரத்தை 30ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது சிபிஐ நீதிமன்றம்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது. இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறி அவர் மீது சி.பி.ஐ. சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர  ராமன் கைது செய்யப்பட்ட நிலையில், சி.பி.ஐ. சம்மனை … Read more

நகை, பணம் கொள்ளையடித்த வீட்டில் ‘ஐ லவ் யூ’ என எழுதி சென்ற திருடர்கள்; கோவாவில் விநோத சம்பவம்

பனாஜி: கோவா மாநிலத்தில் ஒரு வீட்டில் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள், அங்கு ‘ஐ லவ் யூ’ என்று எழுதி சென்ற விநோத சம்பவம் நடந்துள்ளது. கோவா மாநிலம் மார்கோவ் நகரில் வசித்து வருபவர் ஆசிப் செக். 2 நாட்கள் பயணமாக வெளியூருக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்திருந்தது. அதிர்ச்சிடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை … Read more

உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல்!

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்த தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை கூடியது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பாஜக அரசு இன்று தாக்கல் செய்யவுள்ளது. மாநில நிதியமைச்சர் சுரேஷ் கன்னா பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டானது வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் விதமாக அமையும் என்றும் … Read more