ஒடிசாவில் ஆற்றில் கவிழ்ந்த லாரி வெடித்து சிதறி கோர விபத்து: காப்பாற்ற சென்றவர்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு

புபனேஸ்வர்: ஒடிசாவில் எரிபொருள் ஏற்றி சென்ற லாரி ஆற்றில் கவிழ்ந்து வெடித்து சிதறியதால் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த மாநிலத்தின் Paradwip பகுதியில் இருந்து நள்ளிரவு 2 மணி அளவில் பெட்ரோல், டீசல் ஏற்றிக் கொண்டு 2 லாரிகள் மேகார் பகுதியை நோக்கி சென்றன. இடாமதி என்ற பகுதியில் குசுமி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலம் மீது சென்று கொண்டிருந்த போது முதலில் சென்ற லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. … Read more

₹ 2000 நோட்டில் GPS இருக்கா? அமிதாப் கேள்வியால் அலறிய நெட்டிசன்ஸ்!

இந்தியாவின் பிரபலமான டிவி ஷோக்களில் ஒன்று குரோர்பதி நிகழ்ச்சி. அதன் 14வது சீசன் குறித்த ப்ரோமோவை சோனி டிவி வெளியிட்டுள்ளது. இந்த சீசனையும் பாலிவுட்டின் Big B அமிதாப் பச்சனே தொகுத்து வழங்குகிறார். குரோர்பதி நிகழ்ச்சி புதிய சீசனாக வெளிவருவதும், மீண்டும் சின்னத்திரையில் அமிதாப் பச்சன் தோன்றுவதும் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும் அந்த ப்ரோமோ நெட்டிசன்களிடையே பெருமளவில் பேசுபொருளாகியுள்ளது. ஏனெனில், அந்த ப்ரோமோவில் ஹாட் சீட்டில் இருக்கும் போட்டியாளரிடம் “பின்வருனவற்றுள் GPS தொழில்நுட்பம் எதில் இருக்கிறது … Read more

2 நாட்களில் 400 வழக்குகளை விசாரித்த நீதிபதி ஷிண்டே – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராட்டு

மும்பை: நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்கள் காலை 10.30 முதல் மாலை 4.30 வரை செயல்படுவது வழக்கம். சில நாட்களில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக இரவு வரை செயல்படுவதும் உண்டு. ஆனால் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.ஷிண்டே கடந்த 9-ம் தேதி 190 வழக்குகளையும் 10-ம் தேதி 200-க்கும் மேற்பட்ட வழக்குகளையும் விசாரித்துள்ளார். இந்த 2 நாட்களிலும் அவர் காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை பணிபுரிந்துள்ளார். இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் … Read more

இந்தியாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – தினசரி பாதிப்பு உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 8,582 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதன் காரணமாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 8,582 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி … Read more

மகாராஷ்டிராவில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பஞ்சர் கடையை அமைத்துள்ள வியாபாரி.!

மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சாலையோர வியாபாரி பஞ்சர் கடையை அமைத்துள்ளார். தாபீர் ஷேக் என்ற சாலையோர வியாபாரி, பழைய டயர்களை கொண்டு டைனோஸர், டிராகன், ஆமை போன்ற உருவங்களை கலைநயத்துடன் வடிமைத்துள்ளார். கலை படைப்புகளை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் வியாபாரி கூறியுள்ளார். Source link

போர்வெல்லில் விழுந்த சிறுவனை மீட்க 2வது நாளாக முயற்சி

ஜான்ஜீர்: சட்டீஸ்கரின் ஜான்ஜீர்சம்பா மாவட்டத்தில் பிக்ரிட் கிராமத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் வீட்டின் பின்புறம் 11வயது சிறுவன் ராகுல் சாஹூ விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தான். இதனை தொடர்ந்து சுமார் 4மணியளவில் சிறுவனை மீட்கும் முயற்சிகள் தொடங்கின. தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து … Read more

ஹரியாணா எம்எல்ஏ.வை நீக்கியது காங்கிரஸ்

புதுடெல்லி: ஹரியானாவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னாய். மாநிலங்களவை தேர்தலில் இவர், கட்சி மாறி, பாஜக ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளர் கார்திகேயா சர்மா என்பவருக்கு வாக்களித்தார். இதன் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாக்கன் தோல்வியடைந்தார். இதனால் குல்தீப் பிஷ்னாயை, அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி காங்கிரஸ் தலைவர் சோனியா அறிவித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் செயலாளர் கே.சி வேணுகோபால் தெரிவித்துள்ளார். குல்தீப் பிஷ்னாயின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ரத்து செய்யும்படியும், … Read more

ஒரு கிலோ உடல் எடை குறைத்தால் ரூ.1000 கோடி நிதி: அமைச்சர் சவால்!

மத்திய பிரதேச மாநிலம் மால்வா பகுதியில் ரூ.5,772 கோடி மதிப்பிலான 11 சாலை திட்டங்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். அப்போது, உஜ்ஜயினி மக்களவை தொகுதியின் பாஜக உறுப்பினர் அனில் பிரோஜியா என்பவர் நிதின் கட்கரியிடம் தொகுதி வளர்ச்சிக்கான நிதி வழங்கும்படி கோரியுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு கிலோ எடை குறைவுக்கும் ரூ.1,000 கோடி தொகுதி வளர்ச்சி நிதி வழங்கப்படும் என … Read more

கோடை வெயில் உஷ்ணத்தை தாங்க முடியாமல் திண்டாடும் விலங்குகள்

கோடை வெயில் உஷ்ணத்தை தாங்க முடியாமல் பஞ்சாபின் ஜிராக்பூரில் உள்ள மிருக காட்சி சாலையில் உள்ள விலங்குகள் திண்டாடி வருகின்றன. பஞ்சாபில் கடந்த இரண்டு வாரங்களாக 40 டிகிரி செல்சியசுக்கு மேல் கோடை வெப்பம் தகித்து வருகிறது. வெப்பத்தின் உஷ்ணத்தில் இருந்து சிங்கம், புலி, யானை, மான் வகைகள் மற்றும் பறவை இனங்களை காக்க நீரோடை, நீர் காற்றாடி மற்றும் தண்ணீர் தெளிப்பான்களை பூங்கா நிர்வாகத்தினர் பொருத்தி உள்ளனர்.  Source link

காஷ்மீரில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்து ராணுவம் துப்பாக்கிச் சூடு: 10 மணி நேர சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..!

புல்வாமா: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற கடும் துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள திராத்கம் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து நேற்று மாலை பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இது தரப்பினர் இடையே … Read more