இமாச்சலப் பிரதேசத்தில் கேபிள் காரில் சிக்கிய 11 பேரும் பாதுகாப்பாக மீட்பு

இமாச்சலப் பிரதேசத்தில் பர்வானூ என்னுமிடத்தில் தொழில்நுட்பக் கோளாறால் நடுவழியில் நின்ற கேபிள் காரில் சிக்கிக் கொண்ட 11 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சோலன் மாவட்டத்தில் டிம்பர் டிரெயில் எனப்படும் சுற்றுலா விடுதிக்குச் சென்றுவர கேபிள் கார் போக்குவரத்து வசதி உள்ளது. 11 பேருடன் சென்ற கேபிள் கார் நடுவழியில் நின்றது. தகவல் அறிந்த தொழில்நுட்பக் குழுவினரும், மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் இணைந்து கேபிள் காரில் இருந்த அனைவரையும் ஒவ்வொருவராகக் கயிறுகட்டிப் பாதுகாப்பாகத் தரையிறக்கினர். மாலைக்குள் மீட்புப் … Read more

கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி குணமடைந்து வீடு திரும்பினார்

டெல்லி: டெல்லி கங்காராம் மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா குணமடைந்து வீடு திரும்பினார். சோனியா காந்தி வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதாக காங். செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்

இமாச்சல பிரதேசம்: நடுவானில் நின்ற ரோப் கார் – பதைபதைக்கும் வீடியோ

இமாச்சல பிரதேசத்தில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடுவானில் கேபிள் கார் நின்றதில் 11 சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டனர். இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்று பர்வானூ. இப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக கேபிள் கார் சேவை செயல்படுகிறது. இந்நிலையில், இன்று மதியம் 1.30 மணியளவில் இந்த கேபிள் காரில் 11 சுற்றுலாப்பயணிகள் சென்றுள்ளனர். அப்போது கேபிள் கார் திடீரென பல நூறு அடி உயரத்தில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடுவழியில் 2 மணிநேரம் நின்றது. இதையடுத்து பர்வானூ … Read more

‘‘அக்னிபாதை பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு மகேந்திரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு’’- ஆனந்த் மகேந்திரா உறுதி

புதுடெல்லி: அக்னிபாதை பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பை மகேந்திரா குழுமம் வரவேற்கிறது என அந்நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபதிபருமான ஆனந்த் மகேந்திரா கூறியுள்ளார். ராணுவத்துக்கு புதிதாக இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் தெலங்கானாவிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. மாணவர்களை போராட தூண்டியதாக பிஹார், ஆந்திரா, தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் மீது … Read more

கர்நாடகத்தில் ரூ.28,000 கோடி மதிப்பில் திட்டங்கள்.. தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டிய பிரதமர்..

கர்நாடகத்தில் 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பணி முடிக்கப்பட்ட திட்டங்களைத் தொடக்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, தமது ஒவ்வொரு நிமிடத்தையும் மக்களுக்குத் தொண்டாற்றச் செலவிடுவதாகத் தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொங்கண் ரயில்வேயில் 740 கிலோமீட்டர் மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதை, முழுவதும் குளிரூட்டப்பட்ட பெங்களூர் விஸ்வேஸ்வரையா ரயில் நிலையம், அரிசிக்கரை – துமக்கூர், ஏலகங்கா – பெனுகொண்டா ஆகியவற்றின் இடையான இரட்டை ரயில்பாதை ஆகியவற்றைப் பயன்பாட்டுக்குப் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். … Read more

அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

டெல்லி: அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 111 அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த முகவரியில் செயல்படாதது தெரிய வந்ததால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட கோபால கிருஷ்ண காந்தியும் மறுப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சரத்பவார், பரூக் அப்துல்லாவை தொடர்ந்து கோபால கிருஷ்ண காந்தி இன்று நிராகரித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில், 17 எதிர்க்கட்சிகள் டெல்லியில் கடந்த 15-ம் தேதி ஆலோசனை நடத்தின. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவர் தனக்கு … Read more

Presidential Election: குடியரசு தலைவர் வேட்பாளர் – மகாத்மா காந்தி பேரன் மறுப்பு!

சரத் பவார், பரூக் அப்துல்லாவைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட, கோபால கிருஷ்ண காந்தி மறுப்புத் தெரிவித்து உள்ளார். இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. … Read more

எல்.ஐ.சி.யின் புதிய “தன் சஞ்சய்” ஆயுள் காப்பீட்டு திட்டம் அறிமுகம்.!

பாலிசி தாரர்களின் குடும்பங்களுக்கு 22 லட்சம் ரூபாய் வரை காப்பீடு தொகை கிடைக்கும் வகையில் ”தன் சஞ்சய்” என்ற புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தை எல்.ஐ.சி. நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை நீடிக்கும் இந்த காப்பீடு திட்டத்தில், 3 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து பாலிசி பிரீமியத்தை மொத்தமாகவோ, அல்லது தவணை முறையிலோ செலுத்தலாம் என எல்.ஐ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாலிசிதாரர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேரும் பட்சத்தில் குடும்பத்தினருக்கு 3 லட்சத்து … Read more

தேர்தல் பிரசாரத்திற்கு வரமுடியவில்லை; கொரோனா வந்துடுச்சி மன்னிச்சிடுங்க! தனிமைப்படுத்திக் கொண்ட ஒன்றிய அமைச்சர்

புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் டெல்லி தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியவில்லை என்று ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி வருத்தம் தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சருமான ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், டெல்லியின் ராஜேந்திர நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியவில்லை. என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்.  ராஜேந்திர நகர் தொகுதி மக்கள் என்னை மன்னிக்க வேண்டும். தொகுதி … Read more