ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!

பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்தும் முடிவை மத்திய அரசு தள்ளிவைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு பொருட்களுக்கான வரியை சீரமைக்க ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டிருந்தது. இதன்படி பல பொருட்கள் குறைந்த வரி பிரிவிலிருந்து அதிக வரி பிரிவிற்கு மாற்றப்படும் எனத் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்கெனவே கடுமையாக அதிகரித்து பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஜிஎஸ்டி வரியையும் அதிகரிப்பது சரியாக இருக்காது என அரசு கருதுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ள … Read more

இந்தியாவில் சப்பாத்திக்கு வருகிறது நெருக்கடி – என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

உக்ரைன் போர் மட்டுமின்றி காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் இந்த ஆண்டு கோதுமை உற்பத்தியும், அதன் தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஷனில் வழங்கப்படும் கோதுமை இனி அரிசியாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் வட இந்திய மாநிலங்களில் சாதாரண குடும்பங்களில் பயன்படுத்தப்படும் சப்பாத்தி என்பது அரிதான ஒன்றாகும் மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல … Read more

Vinay Kumar Saxena: டெல்லி துணைநிலை ஆளுநராக பதவியேற்றார் வினய் குமார் சக்சேனா

டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக, வினய் குமார் சக்சேனா பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விபின் சங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தலைநகர் டெல்லியின் 21வது துணைநிலை ஆளுநராக செயல்பட்டு வந்தவர் அனில் பைஜால். 1969 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் டெல்லி துணைநிலை ஆளுநராக செயல்பட்டு வந்தார். இதற்கிடையே, 76 வயதான அனில் பைஜால், கடந்த 18 ஆம் தேதி … Read more

கார்த்தி சிதம்பரத்தை 30ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது சிபிஐ நீதிமன்றம்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது. இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறி அவர் மீது சி.பி.ஐ. சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர  ராமன் கைது செய்யப்பட்ட நிலையில், சி.பி.ஐ. சம்மனை … Read more

நகை, பணம் கொள்ளையடித்த வீட்டில் ‘ஐ லவ் யூ’ என எழுதி சென்ற திருடர்கள்; கோவாவில் விநோத சம்பவம்

பனாஜி: கோவா மாநிலத்தில் ஒரு வீட்டில் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகள், அங்கு ‘ஐ லவ் யூ’ என்று எழுதி சென்ற விநோத சம்பவம் நடந்துள்ளது. கோவா மாநிலம் மார்கோவ் நகரில் வசித்து வருபவர் ஆசிப் செக். 2 நாட்கள் பயணமாக வெளியூருக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்திருந்தது. அதிர்ச்சிடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை … Read more

உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல்!

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்த தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை கூடியது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பாஜக அரசு இன்று தாக்கல் செய்யவுள்ளது. மாநில நிதியமைச்சர் சுரேஷ் கன்னா பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டானது வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் விதமாக அமையும் என்றும் … Read more

“குடும்ப அரசியல் மாநிலத்துக்கும் நாட்டுக்கும் கேடு” – ஹைதராபாத்தில் பிரதமர் மோடி கடும் விமர்சனம்

ஹைதராபாத்: “குடும்ப அரசியல் மாநிலங்களுக்கு மட்டுமல்லாது, நாட்டிற்கும் கேடு விளைவிக்கும்” என ஹைதராபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகப் பேசினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் மதியம் 1 மணியளவில் ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையம் சென்றடைந்தார். அவரை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, பாஜக தெலங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய், முன்னாள் எம்பியும், நடிகையுமான விஜயசாந்தி உட்பட பல … Read more

தெலங்கானாவில் விரைவில் அரசியல் மாற்றம் நிகழும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

தெலுங்கானா: தெலங்கானாவில் விரைவில் அரசியல் மாற்றம் நிகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தெலங்கானா, ஹைதராபாத்தில் பாஜக தொண்டர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி பேசினார். குடும்ப அரசியல் காரணமாக இளைஞர்களுக்கு அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைப்பதில்லை என அப்போது தெரிவித்தார்.

மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!

அகமதாபாத் நகரத்தில் உள்ள ஒரு மெக்டொனால்டு கடையில் வாங்கிய குளிர்பானத்தில் பல்லி இறந்த நிலையில் மிதந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். அகமதாபாத் நகரத்தில் உள்ள ஒரு மெக்டொனால்டு கடைக்கு பார்கவ் ஜோஷி என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். இரண்டு பர்கர்கள் மற்றும் இரண்டு கிளாஸ் கோககோலாவை அவர்கள் ஆர்டர் செய்துள்ளனர். பரிமாறப்பட்ட கோககோலாவை குடித்துக் கொண்டிருக்கும்போது ஒரு சிறிய பல்லி இறந்த நிலையில் குளிர்பானத்தில் மிதந்ததைப் பார்த்து பார்கவ் அதிர்ச்சி அடைந்தார். Here is video … Read more

காங்கிரஸிலிருந்து விலகியது கஷ்டம்தான் – மனம் திறந்த கபில் சிபல்

சமீபத்தில் காங்கிரஸிலிருந்து மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் விலகினார். அவர் நடக்கவுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ஆதரவில் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார். இந்நிலையில் விலகிய பிறகு முதன் முறையாக ஒரு தனியார் தொலைக்காட்சி அளித்த நேர்காணலில் “தான் காங்கிரஸில் கட்சியிருந்து விலகிய கஷ்டமான விஷயம்தான். ஆனால், சில நேராமவது நாம் எல்லோரும் அவரவர்களது விஷயம் குறித்தும் யோசிக்க வேண்டும் அல்லவா?” எனக் கூறியுள்ளார். மேலும் கட்சியிருந்து விலகிய ஆசுவாசமாக இருக்கிறது. இனி நாடாளுமன்றத்தில் ஒரு … Read more