கச்சத்தீவை மீட்க இதுவே சிறந்த நேரம்

அரியலூர் வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்து பேசிதாவது,  தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனையில் போற்ற கூடிய சாதனைகள் எதுவும் இல்லை, இன்னும்‌ செய்ய வேண்டியது நிறைய உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு உள்ளது. அதை யாரும் மறுக்க முடியாது. ரேஷன் அரிசி கடத்தலில் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அதிக அளவு கடத்தப்படுகிறது. இதனை தமிழ்நாடு முதல்வர் தடுக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை, செயின் பறிப்பு சம்பவம், சட்ட ஒழுங்கு எந்த அளவிற்க்கு கேள்வி குறியாகி … Read more

மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட கடும் எதிர்ப்பு – ஆந்திராவில் அமைச்சர், எம்எல்ஏ வீடுகளுக்கு தீ வைப்பு

அமலாபுரம்: ஆந்திராவில் கோனசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர், எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். ஆந்திராவில் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோனசீமா என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவானது. இதற்கு அமலாபுரம் மாவட்ட தலைநகராக அறிவிக்கப்பட்டது. 2 மாதங்கள் கழித்து இந்த மாவட்டத்துக்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் … Read more

பிரபல தனியார் உணவக குளிர்பானத்தில் இறந்து கிடந்த பல்லி… உணவகத்திற்கு சீல்

அகமதாபாதில் உள்ள மெக்டோனால்ட் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் குளிர்பானம் வாங்கியதும் அதிர்ச்சியடைந்தார். அதனுள் ஒரு பல்லி இறந்து கிடந்ததையடுத்து அவர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அந்த உணவகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் உணவகத்தை மூடி சீல் வைத்தனர்.  Source link

திமுகவின் சமூக நீதி சட்டம் வார்த்தையில் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும்

கோவை பாஜக அலுவலகத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்து உள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பலனடைந்து உள்ளனர். இந்த வரியை குறைத்ததால் ஒன்றிய அரசுக்கு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல் மீது மாநில அரசு விதிக்கும் வரி மூலம் ஆண்டிற்கு ரூ.4 ஆயிரம் கோடி வரை தமிழ்நாடு அரசிற்கு வருவாய் கிடைக்கறது. மக்கள் நலனை கருத்தில் … Read more

முதல்வர் அலுவலகத்தில் வேலை.. உடனே விண்ணப்பிங்க..!!

 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ள பெல்லோஷிப் திட்டம், ஆளுமை மற்றும் சேவை வழங்கல் செயல்முறைகளை மேம்படுத்த இளம் தொழில் வல்லுநர்களின் திறமைகளைப் பயன்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில்  (டிஎன்சிஎம்ஃப்பி) 2022-24-க்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இன்று முதல் ஆன்லைன் வாயிலாக https://www.bim.edu/tncmpfஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், ஆன்லைன் விண்ணப்பத்தை வருகிற ஜூன் மாதம் 10-ம் தேதியுடன் விண்ணப்பிக்க கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் … Read more

காஷ்மீர் பாரமுல்லாவில் என்கவுன்ட்டர்: பாக். ஆதரவு 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் கிரீரி பகுதியில் நஜிபாத் என்ற இடத்தில் நேற்று காலை ராணுவத்தினரும் போலீஸாரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஓரிடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் போலீஸ்காரர் ஒருவரும் உயிரிழந்தார். இதனிடையே, ஸ்ரீநகரில் அஞ்சர் சவுரா பகுதியில் தனது வீட்டு … Read more

இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை ; வாகனங்கள், மரங்களுக்குத் தீ

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தை நோக்கி இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. வாகனங்கள், மரங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. இஸ்லாமாபாதில் மெட்ரோ ரயில் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. பிரதமர் பதவியை விட்டு விலக்கப்பட்ட இம்ரான் கான் தமது ஆதரவாளர்களைத் திரட்டி தலைநகர் நோக்கி பேரணியாக வருமாறு அழைப்பு விடுத்தார். இதையடுத்து இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி, கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வன்முறை ஏற்பட்டது. … Read more

பைக்கில் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் – மும்பை போலீசார் அதிரடி

மும்பை: சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் மரணம் தொடர்பாக போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தியதில், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும்போது ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலை நசுங்கி உயிரிழப்பது தெரியவந்தது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என மும்பை போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டனர். அடுத்த 15 நாட்களில் இது அமலுக்கு வரும் என போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் கட்டாயம் விதியை மீறும் … Read more

தேடப்படும் குற்றவாளிக்கு நிவாரணம் வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 6 பேர் மீது, மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் (1992) (எம்சிஓசிஏ) 23(2)வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாநில ஏடிஜிபி மற்றும் புனே மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டனர். இந்த சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோர முடியாது. இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கடுமையான எம்சிஓசிஏ சட்டத்தின் கீழ் … Read more

பாராளுமன்ற, சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: பஞ்சாப், உத்தர பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள பாராளுமன்ற, சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூன் 23-ல் இடைத்தேர்தல் நடைபெறும். ஜூன் 26-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையும் படியுங்கள்…இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா பதவி விலகல்