செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரில் இறுதிப் போட்டியில் நுழைந்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா.!

செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் சென்னையின் ஆர். பிரக்ஞானந்தா இறுதிப் போட்டியில் நுழைந்தார். நெதர்லாந்தைச் சேர்ந்த அனிஷ் கிரியை 3.5 – 2.5 என்ற புள்ளிக்கணக்கில் அரையிறுதியில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு நுழைந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதனையடுத்து செஸ்ஸபிள் மாஸ்டர் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர்-2 வீரரான சீன வீரர் டிங் லிரனை எதிர்கொள்கிறார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா.  Source link

நன்கொடை வசூலித்து தில்லுமுல்லு 2,100 கட்சிகள் மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் கடந்த 15ம் தேதி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பின்னர் நிதி முறைகேடுகள், விதிமுறைகளை மீறி செயல்படும், ‘பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்’ மீது  நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, விதிமுறைகளை மீறி நன்கொடைகளை  பெற்று மோசடியில் ஈடுபட்டு வரும் இதுபோன்ற கட்சிகள் மீதான அதிரடி துவங்கி உள்ளது. கடுமையான நிதி முறைகேட்டில் ஈடுபட்ட 3 அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், … Read more

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு: சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கை..!

டெல்லி: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகனான எம்பி கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் விதிமுறைகளை மீறி ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாக புகார் எழுந்தது. அதையடுத்து கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதனை தொடர்ந்து அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் கடந்த வாரம் சோதனை … Read more

கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கும் திட்டம் இல்லை – மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்

கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கும் திட்டம் இல்லை என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார். தற்போதையை சூழலில் கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்கினால், அது கள்ளசந்தை வியாபாரிகளுக்கே பயனளிக்கும் என்றார். எனினும் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு குறைந்த விலையில் கோதுமை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலகின் இரண்டாவது பெரிய கோதுமை ஏற்றுமதியாளரான … Read more

லாரி மீது பைக் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

திருப்பதி: சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் லாரி மீது பைக் மோதிய விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அருகே பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி, எதிரே வந்த பைக் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது.லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் விபத்திலிருந்து தப்பி, விபத்து குறித்து தகவல் அளித்ததன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விபத்து ஏற்பட்ட … Read more

பிரதமர் நரேந்திர மோடி நாளை ஹைதராபாத் வருகை – 930 மாணவர்களின் சமூக வலைதள பக்கங்கள் ஆய்வு

ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி நாளை ஹைதராபாத் வர உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஒரு கல்லூரி விழாவில் அவர் கலந்துக்கொள்ள உள்ளதால், இதில் பங்கேற்க உள்ள 930 மாணவ, மாணவியரின் சமூக வலைதள பக்கங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி நாளை ஹைதராபாத் கச்சிபொலி பகுதியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் (ஐஎஸ்பி) கல்லூரியின் 20-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இதனால், இப்போதிருந்தே ஹைதராபாத்தில் … Read more

இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி பலி..! வீட்டில் சமைத்தாலும் கவனம் தேவை..!

வீட்டில் மட்டன் சமைத்து சாப்பிட்ட கல்லூரி மாணவி ஒருவரின், தொண்டையில் இறைச்சி சிக்கியதால் , அவர் மூச்சுதினறி பலியான விபரீதம் அரங்கேறி உள்ளது கேரளாவின் மலப்புரம் மாவட்டம் செத்தலூர் பகுதியை சேர்ந்தவர் ஆசீப் இவரது மனைவி பாத்திமா ஹனான். 22 வயதான இவர் திருமணத்திற்கு பின்னர் மண்ணார்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை அறிவியல் பட்ட மேற்ப்படிப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் மட்டன் எடுத்து சமைத்த பாத்திமா ஹனான், அதனை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த … Read more

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை- டெல்லி சிறப்பு நீதிமன்றம்

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் 2019-ல் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், யாசின் மாலிக் குற்றவாளி என தீர்ப்பளித்த நிலையில் தண்டனையை அறிவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையும் படியுங்கள்.. விசா முறைகேடு விவகாரம்- கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு

பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தப்பியோடிய தாய்: போலீஸ் விசாரணை

ஓசூர்: கடந்த 16 ஆம் தேதி ஓசூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் ஓசூர் கொல்லர் பேட்டையைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சுகப்பிரசவத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் குழந்தையின் எடை மிகக் குறைவாக இருந்ததோடு மூச்சுவிடுவதில் சிரமப்பட்டது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை மருத்துவமனையின் சார்பில் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு வார்டில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். இந்த நிலையில் குழந்தையின் தாயார் ஐஸ்வர்யா கடந்த 22 … Read more

கோக கோலா துணை நிறுவனம் மீதான அபராதத்துக்கு தடை

புதுடெல்லி: அமெரிக்காவின் குளிர்பான நிறுவனமான கோக கோலாவுக்கு வட இந்தியாவில் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனமாக மூன் குளிர்பான நிறுவனம் செயல்படுகிறது. உ.பி.யைச் சேர்ந்த சுசில் பட் மூன் குளிர்பான நிறுவனத்துக்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம் அந்நிறுவனத்துக்கு ரூ.15 கோடி அபராதம் விதித்தது. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராயவும் குழு அமைத்தது. இதை எதிர்த்து மூன் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை … Read more