உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் – முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு பாஜகவினர் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனாவின் 39 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அணி திரண்டுள்ளனர். இதனால் ஆட்சியில் இருப்பதற்கான பெரும்பான்மையை சிவசேனா இழந்தது. இதையடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவின் பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அம்மாநில ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக சிவசேனா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. 16 அதிருப்தி எம்எல்ஏக்களை … Read more

மகாராஷ்டிரா அடுத்த முதல்வர் யார்?- இரவு முழுவதும் அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்கள்

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகியுள்ள நிலையில் நேற்று இரவு முழுவதும் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடந்தன. அடுத்த முதல்வரை முடிவு செய்ய பாஜக மற்றும் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 38 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். மகாராஷ்டிர … Read more

ஆந்திராவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஜெகன் அறிவிப்பு

அமராவதி: மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி தெரிவித்தார். ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்தியசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்து எறிந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

‘மழை பெஞ்சா என்ன? சிறுவனை நாங்க கைவிடமாட்டோம்’- ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

மத்தியப் பிரதேசத்தில் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன், சுமார் 8 மணி நேர போராட்டத்துக்குப்பின் பத்திரமாக மீட்கப்பட்டார். சத்தர்பூர் மாவட்டம் நாராயண்பூர் கிராமத்தில் அகிலேஷ் யாதவ் என்பவரின் 5 வயது மகன் திபேந்திரா யாதவ், ஆழ்துளைக்கிணற்றில் விழுந்தார். சுமார் 30 அடி ஆழத்தில் சிக்கியிருந்த அச்சிறுவனை மீட்க, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் போராடினர். இடையே மழை பெய்ததால், மீட்புப் பணிகள் சவாலானதாக அவர்களுக்கு அமைந்தது. எனினும் விடாமுயற்சியுடன் செயல்பட்ட … Read more

இறுதிக்கட்டத்தை நெருங்கும் மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் – கோவா திரும்பினர் அதிருப்தி எம்எல்ஏக்கள்

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே விலகினார். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி (மகா விகாஸ் அகாடி) ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்நிலையில் சிவசேனா … Read more

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட அமர்நாத் பனிலிங்க தரிசனத்திற்கு இந்த ஆண்டு அனுமதி.!

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட அமர்நாத் பனிலிங்க தரிசனம் இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டதால் இன்று அதிகாலை 4 ஆயிரத்து 890 பக்தர்களின் முதல் குழு புறப்பட்டுச் சென்றது. பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்காக 43 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி யாத்திரை முடிவுக்கு வரும்.பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை குழுவை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் பக்தர்களுக்கு … Read more

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா … சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!! ..

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 18,819 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,52,164 ஆக உயர்ந்தது.* புதிதாக 39 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

ஆண்கள் கழிவறையில் டையப்பர் ஸ்டேஷன்: பெண்களின் பாராட்டை பெற்ற பெங்களூரு ஏர்போர்ட் நிர்வாகம்

பாலின சமத்துவத்தை வளர்க்கும் வகையில் சமூகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவும் குழந்தைகள் வளர்ப்பதில் தாய் தந்தை என இருவரது பங்கும் பொறுப்பும் இருத்தல் வேண்டும் என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதனை வெளிப்படுத்தும் விதமாக கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள ஆண்களுக்கான கழிவறையில் டையப்பர் ஸ்டேஷன் என்ற புது வசதியை விமான நிலைய நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. அதன் மூலம் தாய்மார்கள் மட்டுமல்லாமல் தற்போது தந்தைகளும் குழந்தைகளின் டையப்பரை மாற்றி விடும் வகையில் பெங்களூரு … Read more

உத்தராகண்டில் 2 ஆண்டுக்கு பிறகு ஜூலை 14-ல் கன்வார் யாத்திரை

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களின் ஷ்ரவண மாதத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் சிவ பக்தர்கள் கன்வாரியாக்கள் என அழைக்கப்படுகின்றனர். வட மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வருவார்கள். பிறகு அந்த கங்கை நீரைக் கொண்டு தங்கள் ஊர்களில் உள்ள சிவன் ஆலயங்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் நடத்துவார்கள். இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக … Read more

உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றி எரிந்த ஆட்டோ.. டிரைவர் உட்பட 8 பேர் உடல்கருகி உயிரிழப்பு

சத்யசாய் மாவட்டத்தில் ஆட்டோ டிரைவர் உட்பட 11 பேர் பயணித்த ஆட்டோ தீப்பற்றியது ஆட்டோ மேல் வைத்துக் கொண்டு செல்லப்பட்ட இரும்புக் கம்பி உயர் மின்னழுத்த கம்பியில் உரசியது உயர் மின்னழுத்த கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து ஆட்டோ தீப்பற்றி எரிந்தது தீ விபத்தில் சிக்கி ஆட்டோ டிரைவர் உட்பட 8 பேர் உடல்கருகி உயிரிழப்பு – 3 பேருக்கு சிகிச்சை உயிரிழந்தவர்கள் முட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என போலீசார் தகவல் Source link