உதய்பூர் படுகொலை | பதற்றம், கடைகள் அடைப்பு – அமைதி காக்க ராஜஸ்தான் முதல்வர் வேண்டுகோள்

உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டவர் படுகொலை செய்யப்பட்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் நேற்று அத்துமீறி புகுந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கன்னையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து அவரது தலையை துண்டித்தனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் … Read more

பாலிமர் பூங்கா சுற்றுச்சூழல் அனுமதி ரத்து தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

புதுடெல்லி: பாலிமர் பூங்கா விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்த தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ‘டிட்கோ’ எனப்படும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், ‘சிப்காட்’ என்னும் தொழில் முன்னேற்ற நிறுவனமும் இணைந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் வயலூர், புழுதிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில்  265 ஏக்கரில் ‘தமிழ்நாடு பாலிமர் பூங்கா’வை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக மாநில சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கப்பட்டது.இந்நிலையில், இந்த திட்டத்துக்கு எதிராக சரவணன் என்பவர் … Read more

பிஎஸ்எல்வி-சி53 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது – கவுன்ட்-டவுன் இன்று தொடக்கம்

சென்னை: இந்தியாவுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உட்பட 3 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி-சி53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இறுதிக்கட்ட பணிகளுக்கான 25 மணி நேர கவுன்ட்-டவுன் இன்று (ஜூன் … Read more

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைதான ஜூபைருக்கு 4 நாள் போலீஸ் காவல்; டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: செய்திகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜூபைர், கடந்த 2018ம் ஆண்டு டிவிட்டரில் குறிப்பிட மதக் கடவுளை இழிவுபடுத்தும் விதமாக டிவிட் செய்ததாக டெல்லி போலீசில் டிவிட்டர் பயனாளர் ஒருவர் புகார் அளித்தார். டிவிட்டரில் செய்யப்பட்ட இந்த புகாரில், ஜூபைதரின் சர்ச்சைக்குரிய டிவிட்டும் இணைக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில், டெல்லி போலீசார் நேற்று முன்தினம் ஜூபைரை கைது செய்தனர்.  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட … Read more

மும்பை திரும்பும் எம்எல்ஏக்கள் ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் – ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவி

குவாஹாட்டி: அசாம் மாநிலம் குவாஹாட்டியில் முகாமிட்டுள்ள, சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவினர் விரைவில் மும்பை வந்து, மகாராஷ்டிர ஆளுநரை சந்திக்க உள்ளனர். அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைக்க பாஜகவும் தயாராகி வருகிறது. மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கக் கோரி, அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ.க்கள் சிலரும் தற்போது குவாஹாட்டியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே … Read more

கும்பளங்கி நைட்ஸ் படத்தில் பிரபலமானவர்; கொரோனாவுக்கு மலையாள நடிகை பலி

திருவனந்தபுரம்: மலையாள நடிகையும், இணை இயக்குனருமான அம்பிகா ராவ் கொரோனாவுக்கு பலியானார். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அம்பிகா ராவ் (58), மலையாளத்தில் ‘கிருஷ்ண கோபால கிருஷ்ணா’ என்ற படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமானார். பிறகு ‘தொம்மனும் மக்களும்’, ‘சால்ட் அன்ட் பெப்பர்’, ‘ராஜமாணிக்கம்’, ‘வெள்ளி நட்சத்திரம்’ உள்பட பல படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தார். மேலும் ‘மீசை மாதவன்’, ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’, ‘தமாஷா’, ‘வைரஸ்’, ‘கும்பளங்கி நைட்ஸ்’ உள்பட பல மலையாள படங்களில்  குணச்சித்திர … Read more

விஜய் பாபுவுக்கு ஆண்மை பரிசோதனை

திருவனந்தபுரம்: மலை யாள புதுமுக நடிகை பலாத்கார வழக்கில் நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு விசாரணைக்காக எர்ணாகுளம் தெற்கு போலீசில் ஆஜரானார். பிறகு போலீசார் அவரை கைது செய்தனர். மாலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஜூலை 3ம் தேதி வரை விஜய் பாபு விசாரணைக்கு ஆஜராக வேண்டும். விஜய் பாபுவின் அடுக்குமாடி குடியிருப்பு மட்டுமின்றி, கொச்சியிலுள்ள சில ஓட்டல்களில் வைத்தும் தன்னை பலாத்காரம் செய்ததாக நடிகை புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து விசாரணை நடைபெறும் நாட்களில், பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் … Read more

அரசியலுக்கு வர மாட்டேன்; பூனம் கவுர்

ஐதராபாத்: தமிழில் ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘பயணம்’, ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘6 மெழுகுவர்த்திகள்’, ‘என் வழி தனி வழி’ உள்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர், பூனம் கவுர். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது, ஒருங்கிணைந்த ஆந்திர மாநில கைத்தறி துறையின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டார். அப்போது சந்திரபாபு நாயுடு, ‘பூனம் கவுர் தொலைநோக்கு பார்வை கொண்டவர். அவர் அரசியலுக்கு வர வேண்டும்’ என்று சொன்னார். ஆனால், இதுவரை பூனம் கவுர் நேரடி … Read more

சோதனையின் போது மோதல்.. இளைஞரை துப்பாக்கியால் சுட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

பஞ்சாப் மாநிலத்தின் தேரா பஸ்ஸியில் சோதனை மேற்கொள்ள முயன்ற போது ஏற்பட்ட மோதலில், இளைஞரை துப்பாக்கியால் சுட்ட காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஹெபத்பூர் சாலையில் நின்றிருந்த கணவன் மனைவியை போலீசார் சோதனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, மதுபோதையில் இருந்த போலீசார் தன் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட மோதலில் தனது சகோதரரை காவல் உதவி ஆய்வாளர் சுட்டதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். அதேநேரம், கணவன் மனைவியை விசாரிக்கும் … Read more

கவலை எதுக்கு… கிரெடிட் கார்டு இருக்கு… ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் கிரெடிட் கார்டை உரசிய மக்கள்; பரிவர்த்தனையில் புது உச்சம்

மும்பை: கடந்த மே மாதத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக, கிரெடிட் கார்டு மூலம் ரூ.1.1 லட்சம் கோடிக்கு மேல் பரிவர்த்தனை நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மே மாதத்துக்கான கிரெடிட் கார்டு பரிவர்த்தனை விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில், ‘கடந்த மே மாதத்தில் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1,14,000 கோடி அளவுக்கு பரிவர்த்தனைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது முந்தைய மாதத்தை விட 8 சதவீதமும், கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 118 … Read more