இடைத்தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் அமோக வெற்றியை கொடுத்துள்ளனர்; ஜே.பி.நட்டா மகிழ்ச்சி

புதுடெல்லி: நாடு முழுவதும் மூன்று மக்களவைத் தொகுதிகள், 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், உத்தர பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகளிலும், திரிபுராவில் 3 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி சங்ரூர் மக்களவைத் தொகுதியில் தோல்வி அடைந்தது. திரிபுராவில் பர்தோவாலி டவுன் சட்டசபை தொகுதியில் போட்டியிடட் முதல்வர் மாணிக் சஹா தாம் வெற்றி பெற்றார். இந்நிலையில், இடைத்தேர்தலில் … Read more

அசாம்: இடுப்பளவு வெள்ளத்தில் பிறந்த குழந்தையை சுமந்து சென்ற தந்தை – வைரலாகும் வீடியோ

அசாம் மாநிலத்தில் இடுப்பளவு வெள்ளத்தில் ஒருவர், தனது குழந்தையை தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அசாம் மாநிலத்தில் தொடர் மழை காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. தொடர்மழையால் அணைகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை தேசிய பேரிடர் … Read more

ஜூலை 11 மகாராஷ்டிரா அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: ஜூலை 11 மகாராஷ்டிரா அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர்  ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி உயர்த்தியுள்ளனர். தன்னுடன் சிவசேனா எம்எல்ஏ.க்கள் 42 பேர் உட்பட 50 எம்எல்ஏ.க்கள் இருப்பதாக ஷிண்டே கூறி வருகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அவர்கள் அசாம் மாநிலம், கவுகாத்தி ஓட்டலில்  முகாமிட்டு … Read more

நேற்று வரை இருள்.. வேட்பாளரான பின் திரௌபதி முர்மு கிராமத்திற்கு திடீரென கிடைத்த மின்சாரம்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்ட பின்னர்தான், அவரது கிராமத்திற்கு முதன்முறையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது சொந்த கிராமமான உபர்பேடா கிராமத்திற்கு மின்சார வசதியில்லை என்ற செய்தி பரவத் துவங்கியது. பல தசாப்தங்களாக இருளில் வாழும் கிராமவாசிகளின் அவலநிலை பற்றிய புகார்கள் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, ஒடிசா அரசாங்கம் மின்மயமாக்கத் தொடங்கியுள்ளது. 3,500 … Read more

உலகின் மிகப்பெரிய தங்க நாணத்தை தேடும் பணியில் மத்திய அரசு.!

12 கிலோ தங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நாணயத்தை தேடும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முகலாய மன்னர் ஜஹாங்கீரால் உருவாக்கப்பட்ட அந்த தங்க நாணயம், கடைசியாக ஐதராபாத் நிஜாம்கள் வசம் இருந்த நிலையில், அதனை சிலர் ஸ்விஸ் வங்கியில் ஏலம் விட முயன்றதாக கூறப்படுகிறது. 1987ஆம் ஆண்டில் அந்த தங்க நாணயத்தை ஜெனிவாவில் ஏலம் விடுவது குறித்து இந்திய அதிகாரிகள், அரசிடம் தெரிவித்ததாகவும், அதற்கு பின் அந்த நாணயம் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை என்றும் … Read more

தொழில்நுட்ப பயன்பாட்டில் குற்றவாளிகளை விட புலனாய்வு அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும்: அமித் ஷா

கெவாடியா: தொழில்நுட்ப பயன்பாட்டில் குற்றவாளிகளை விட புலனாய்வு அமைப்புகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினார். குஜராத் மாநிலம் கெவாடியாவில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். தடய அறிவியல் திறனை வலுப்படுத்துதல் மற்றும் அறிவியல்பூர்வ புலனாய்வு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை கையாளும் இத்தருணத்தில் அவர்களுக்கு ஒருபடி மேலாக புலனாய்வு அமைப்புகள் செயல்பட வேண்டும். … Read more

2018-ல் பதிவிட்ட ட்வீட் – மத உணர்வுகளை புண்படுத்தியதாக பத்திரிகையாளர் திடீர் கைது!

2018 ஆம் ஆண்டு பதிவிட்ட ட்வீட் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டார். மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், பகைமையை ஊக்குவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு, AltNews என்ற உண்மைச் சரிபார்ப்பு இணையதளத்தின் நிறுவனர்களில் ஒருவரான பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் டெல்லி காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டார். முகமது ஜுபைர் மார்ச் 2018 இல் ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளை வேண்டுமென்றே அவமதிக்கும்” ஒரு “கேள்விக்குரிய” படத்தை ட்வீட் செய்ததாகக் குற்றம் … Read more

ஜனநாயகத்தையும், இந்தியர்களையும் வலுப்படுத்துவதே எதிர்கட்சிகளின் நோக்கம் : யஷ்வந்த் சின்ஹா பேட்டி

டெல்லி: ஜனநாயகத்தையும், இந்தியர்களையும் வலுப்படுத்துவதே எதிர்கட்சிகளின் நோக்கம் என்று யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார். புகுத்திய கட்டடம் கட்டுவதால் மட்டும் நாடாளுமன்றத்தின் கண்ணியம், மகத்துவத்தை உயர்த்த முடியாது என்றும்  யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். விதிகள் மதிக்கப்படும்போது நாடாளுமன்றத்தின் கண்ணியம் அதிகரிக்கிறது என்று டெல்லியில் யஷ்வந்த் சின்ஹா பேட்டியளித்துள்ளார்.

“ஸ்டாக் இல்லை” – தெலுங்கானா, கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு! என்ன காரணம்?

தெலங்கானாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் கிடங்குகளில் எரிபொருள் பற்றாக்குறையால் இத்தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. பல எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல், டீசலுக்காக 2 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தலைநகர் ஹைதராபாத்தில் 40 சதவீத எரிபொருள் நிலையங்களில் ‘ஸ்டாக் இல்லை’ என்ற பதாகையே தொங்கவிடப்பட்டுள்ளன. இதே போல கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கடந்த 2 நாட்களாக டீசல் தட்டுப்பாடு நிலவுவதால், அரசு பேருந்து … Read more

இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு பெரியாற்றை நீந்தி கடந்த 70 வயது பெண்மணி..!

கேரளாவில் இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டிக்கொண்டு, பெரியாறு நதியை 70 வயது பெண்மணி ஒருவர் நீந்தி கடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆரிஃபா என்ற அந்த பெண்மணி, நீச்சல் கற்றுக்கொள்ள வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார். 780 மீட்டர் அகலமுள்ள பெரியாறு நதியை இரண்டு கைகளையும் கட்டிய நிலையில் அவர் 45 நிமிடத்தில் நீந்தி கடந்தார். நீச்சல் தெரியாமல் நதியில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், நீச்சல் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு … Read more