பிரதமர் மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்து: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீண்டும் புகழாரம்

புதுடெல்லி: ‘பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மிகப்பெரிய சொத்து’ என்று காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். இவர், மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து அவ்வப்போது பாராட்டு தெரிவித்து வருகிறார். இதனால், காங்கிரஸ் மேலிடத்துக்கும் சசி தரூருக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. இந்நிலையில், காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து ஆதாரப்பூர்வமாக உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு … Read more

குண்டர் தடுப்பு சட்டத்தில் சைபர் குற்றவாளிகள் கைது: தமிழகத்தின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் வரவேற்பு

தமிழகத்தில் சைபர் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் வரவேற்று உள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியை பானுமதி (74). கடந்த ஆண்டு மே மாதம் இவரது செல்போனில் மர்ம நபர் ஒருவர் பேசினார். மும்பை காவல் துறையில் இருந்து பேசுவதாக கூறிய அந்த நபர், “உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி புதிய செல்போன் வாங்கப்பட்டிருக்கிறது. அந்த எண்ணை … Read more

ஐஎன்எஸ் அர்னாலா போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்ப்பு

புதுடெல்லி: எதிரிநாட்டு நீர் மூழ்கி கப்பல்களை அழிக்கும் ஐஎன்எஸ் அர்னாலா போர்க்கப்பல் கடற்படையில் நேற்று இணைக்கப்பட்டது. எதிரிநாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும், கடல் கண்ணி வெடிகளை போடுவதற்கும், குறைந்த ஆழமுள்ள கடலோர பகுதிகளிலும் செல்லும் வகையிலான போர்க் கப்பல் ஒன்றை கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) தயாரித்து கடற்படையிடும் கடந்த மே மாதம் 8-ம் தேதி ஒப்படைத்தது. இந்த போர்க்கப்பலுக்கு மகாராஷ்டிராவின் வசாய் பகுதியில் அர்னாலா என்ற வரலாற்று … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பெண்ணை அச்சுறுத்தி ரூ.22 லட்சம் மோசடி

மும்பை: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மும்பை பெண் ஒருவரை அச்சுறுத்தி மர்ம நபர்கள் ரூ.22 லட்சம் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து மும்பை சைபர் குற்றப் பிரிவு அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: தெற்கு மும்பை கிர்கான் பகுதியில் வசிக்கும் 64 பெண்ணுக்கு அடையாளம் தெரியாத எண்களில் இருந்து இம்மாதம் 3 அழைப்புகள் வந்தன. அதில் பேசிய ஒருவர் தன்னை டெல்லி தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரி பிரேம் குமார் குப்தா என அறிமுகம் செய்துகொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் … Read more

ஹனிமூன் கொலையை தொடர்ந்து மற்றொரு அதிர்ச்சி.. வட இந்தியாவில் நடப்பது என்ன?

மத்திய பிரதேசத்தின் ஹனிமூன் கொலையை தொடர்ந்து ஜார்க்கண்ட்டில் மற்றொரு கொலை அரங்கேறி உள்ளது. ஒரு பெண் தனது கணவனை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சர்வோதயா பள்ளியில் நீட்தேர்வு எழுதிய 25 மாணவிகளில் 12 பேர் தேர்ச்சி

லக்னோ: உத்தர பிரதேச்த்தில் உள்ள சர்வோதயா பள்ளி மாணவிகள் 25 பேர் நீட் தேர்வு எழுதியதில் 12 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். உ.பி.யின் மிர்சாபூர் மாவட்டம் மரிஹானில் உள்ள சர்வோதயா வித்யாலயாவைச் சேர்ந்த 25 மாணவிகள் கடினமான மருத்துவ நுழைவுத் தேர்வாக கருதப்படும் நீட் தேர்வை எழுதினர். இதில், கிட்டத்தட்ட பாதி பேர் அதாவது 12 மாணவிகள் ஒரே நேரத்தில் தேர்ச்சி பெற்று சாதித்து காட்டியுள்ளனர். இவர்கள் அனைவருமே சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் … Read more

இனி திருப்பதியில் டக்குனு லட்டு வாங்கலாம்… தேவஸ்தானத்தின் புது ஐடியா – என்ன தெரியுமா?

TTD Laddus KIOSK Machines: இனி திருப்பதி செல்லும் பக்தர்கள் லட்டு வாங்க நீண்ட கூட்டத்தில் நிற்க வேண்டாம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது. 

“குஜராத்தில் 2027-ல் ஆம் ஆத்மி புயல் வீசும்” – இடைத்தேர்தல் வெற்றிக்குப் பின் கேஜ்ரிவால் உத்வேகம்

புதுடெல்லி: குஜராத்தில் நடந்த இடைத்தேர்தல் என்பது 2027 சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டி என தெரிவித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், பொதுத் தேர்தலில் பாஜக – ஆம் ஆத்மி கட்சி இடையேதான் போட்டி இருக்கும் என்றும் கூறியுள்ளார். குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி … Read more

4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: ஆம் ஆத்மி 2, பாஜக, காங்., டிஎம்சி தலா 1 தொகுதிகளில் வெற்றி

புதுடெல்லி: கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக, காங்கிரஸ், டிஎம்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள முடிவுகளின்படி, குஜராத்தில் … Read more

அகமதாபாத் விமான விபத்து.. மத்திய அரசு விளக்கம்!

குஜராத் அகமதாபாத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்து குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.