இந்தியாவில் மின் விபத்துகளால் கடந்த 3 ஆண்டுகளில் 17,781 பேர் உயிரிழப்பு: திமுக எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த மூன்றாண்டுகளில் மின் விபத்துகளால் 17,781 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார் மின்கசிவு காரணங்களால் கடந்த மூன்றாண்டுகளில் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதம் பற்றி மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இந்த பதிலை அளித்துள்ளார். அமைச்சரின் பதிலில், “இந்தியாவில் கடந்த மூன்றாண்டுகளில் மின் உற்பத்தி நிலையங்கள், மின்பகிர்மானப் பிரிவுகள், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் ஏற்பட்ட மின்விபத்துகள் பற்றிய … Read more

ஊர்தி வரத் தாமதமானதால் மருத்துவமனையில் உயிரிழந்த மகளை தோளில் சுமந்து கொண்டு சென்ற தந்தை

சத்தீஸ்கரின் சுர்குஜா மாவட்டத்தில் மருத்துவமனையில் உயிரிழந்த மகளின் உடலைக் கொண்டு செல்ல ஊர்தி வராததால், தந்தையே தோளில் சுமந்து கொண்டு சென்ற காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. லக்கன்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி மகள் உயிரிழந்தார். உடலைச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உடனடியாக ஊர்தி வராததால் தந்தையே தோளில் போட்டுச் சுமந்து சென்றார். சமூக வலைத்தளங்களில் இந்தக் காட்சி பரவியதால் இது குறித்து விசாரிக்க மாநில நலவாழ்வுத் துறை அமைச்சர் டி.எஸ்.சிங்தேவ் … Read more

திருப்பதியில் 2 ஆண்டுக்கு பிறகு அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதி ஸ்ரீனிவாசன் தங்கும் விடுதி, பூதேவி காம்ப்ளக்ஸ் மற்றும் கோவிந்தராஜ சாமி சரித்திரம் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. … Read more

இறந்த மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை: சட்டீஸ்கரில் பரிதாபம்

சட்டீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர் தாஸ் என்பவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகள் சுரேகாவை, அங்குள்ள சுகாதார மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால், ஆக்ஸிஜன் பற்றக்குறையால் சிறுமி உயிரிழந்து விட்டதாக அங்கு பணியாற்றிய டாக்டர் வினோத் பார்கவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை வீட்டீற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உதவியை உறவினர்கள் கோரிய நிலையில், மற்றொரு சடலம் விரைவில் வரும் என்றும் அதுவரை காத்திருக்குமாறு அங்குள்ள … Read more

2014-க்கு பிறகு ஆயுதங்கள் ஏற்றுமதி 6 மடங்கு அதிகரிப்பு – இணையமைச்சர் அஜய் பட் தகவல்

இந்தியாவின் ஆயுதங்கள் ஏற்றுமதி 7 ஆண்டுகளுக்குப் பிறகு 6 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பு நிதியாண்டின் இதுவரை 11,607 கோடி ரூபாய் மதிப்பில் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதற்கு நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 2025ஆம் ஆண்டிற்குள் 36,500 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு … Read more

ஆயுஷ்மான் திட்டத்துக்கு ரூ.37,185 கோடி அனுமதி

புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ்மருத்துவமனையில் சேருவோருக்கு இதுவரை ரூ.37,185 கோடிஅனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது: மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்காகவும் அவர்கள் குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை பெறவும் ஆயுஷ்மான் பாரத்- பிரதம மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா திட்டம் கடந்த 2018-ம்ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. கடந்த மார்ச் 21-ம் தேதிவரை இத்திட்டத்தின் கீழ் மருத்துவமனையில் சேருவோருக்கு இதுவரை ரூ.37,185 … Read more

பிம்ஸ்டெக் மாநாட்டில் மார்ச் 30ஆம் நாள் பங்கேற்கிறார் பிரதமர் மோடி..!

வங்கக் கடலோர நாடுகளின் பல்துறைத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 30ஆம் நாள் பங்கேற்க உள்ளார். வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள இந்த அமைப்பின் ஐந்தாவது மாநாட்டை இலங்கை நடத்துகிறது. காணொலியில் நடைபெறும் இந்த மாநாட்டில் மார்ச் 30ஆம் நாள் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேச உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், அதற்கு உதவுவதற்கு … Read more

ராணுவ வீரர்கள் மேற்கொண்ட வான்வழி பயிற்சி- சீன எல்லை அருகே நடைபெற்றது

சிலிகுரி: சீனாவுடனான வடக்கு எல்லை மற்றும் நேபாளம், பூடான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளின் எல்லைகளுடன் தொடர்புள்ள பகுதியாக உள்ள  மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இந்திய ராணுவத்தின் வான்வழி விரைவு குழுக்கள் பங்கேற்ற  இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.  இதில் 600க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டு, வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ விமானங்களில் இருந்து பாராசூட் மூலம் கீழே உள்ள இலக்குகளை குறி வைத்து குதிக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டனர். #WATCH … Read more

பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை முழுமையாக வெளியேற்ற வேண்டும்: சீன வெளியுறவு அமைச்சரிடம் அஜித் தோவல் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘எல்லையில் அமைதியை நிலைநாட்டவும், பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவும், கிழக்கு லடாக்கில் எஞ்சிய பகுதிகளில் இருந்து படைகளை முழுமையாக வாபஸ் பெற வேண்டும்’ என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தி உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி, கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். … Read more

சிரித்துக் கொண்டே சொல்வது வன்முறைக் கருத்து அல்ல! அது குற்றமும் அல்ல! – உயர்நீதிமன்றம்

சிரித்துக் கொண்டே சொல்வது வன்முறைக் கருத்து அல்ல! அது குற்றமும் அல்ல! என டெல்லி கலவரம் தொடர்பான வெறுப்பு பேச்சு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 24, 2020 அன்று வடகிழக்கு டெல்லியில் வகுப்புவாத மோதல்கள் வெடித்தன, குடியுரிமைச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான கட்டுப்பாட்டை மீறி வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பாஜக எம்பியுமான பிரவேஷ் வர்மாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரிய முந்தைய … Read more