ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.250.60 கோடி ஒதுக்கீடு- மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி: பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, ஊட்டசத்து திட்டம் கடந்த 2018ம் ஆண்டு, மார்ச் 8ம் தேதி தொடங்கப்பட்டது. 6 வயது வரை உள்ள குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பினி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்யும் வகையில் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஊட்டச்சத்து … Read more

நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் யோகி ஆதித்யநாத்துக்கு நோட்டீஸ்: ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி

அல்வார்: நாளை மறுநாள் உத்தரபிரதேச முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ள யோகி ஆதித்யநாத்துக்கு வழக்கு ஒன்றில் நோட்டீஸ் அனுப்ப ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் மல்கேடாவில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பங்கேற்றார். அப்போது அவர், ‘பஜ்ரங்பாலி என்பது நாட்டுப்புற தெய்வம்; தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்’ என்று கூறியிருந்தார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை … Read more

பாலியல் வன்கொடுமையை கணவன் செய்தாலும் அது வன்கொடுமையே – கர்நாடக உயர்நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமையை கணவன் செய்தாலும் அது வன்கொடுமையே என்று தெரிவித்துள்ள கர்நாடக உயர்நீதிமன்றம் அச்செயலில் ஈடுபட்ட கணவன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது தனது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கணவன் மீது குற்றம்சாட்டப்பட்ட வழக்கு இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனைவி மீது பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தியது கண்வனாகவே இருந்தாலும், அது பாலியல் வன்கொடுமை குற்றமாகவே கருதப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். திருமணம் என்பது ஆண்களுக்கு மிருகத்தை கட்டவிழ்த்துவிடுவதற்கான எந்த சிறப்பு உரிமையையும் … Read more

இந்தியாவில் புதிதாக 1,778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரித்து 1,778 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில் தொற்று பாதித்த 62 பேர் உயிரிழந்த நிலையில், 2 ஆயிரத்து 542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் 23 ஆயிரத்து 87 பேர்  சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.  Source link

மேற்குவங்கம் பிர்பும் பகுதியில் வன்முறை சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: மேற்குவங்கம் பிர்பும் பகுதியில் வன்முறை சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். குற்றவாளிகளை கைது செய்ய மே.வங்க அரசுக்கு தேவையான உதவிகளை வழங்க ஒன்றிய அரசு தயார் எனவும் கூறினார். வன்முறையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் எனவும் தெரிவித்தார்.

ஆபாச படங்களுக்கு அடிமையான குழந்தைகளை மீட்க டிஜிட்டல் டீ-அடிக்‌ஷன் சென்டர்

ஆன்லைன் கேம்கள் மற்றும் ஆபாசப் படங்களில் இருந்து குழந்தைகளை விலக்கி வைக்கும் முயற்சியில் ஒருகட்டமாக கேரள காவல்துறை மாநிலம் முழுவதும் டிஜிட்டல் டி-அடிக்ஷன் மையங்களை அமைக்கவுள்ளது. சமீபகாலமாக ஆபாச படங்கள் மற்றும் ஆன்லைன் கேம்களுக்கு பல குழந்தைகள் அடிமையாகி வருகின்றனர். அம்மாதிரியான குழந்தைகளுக்கு உதவ, டி-டாட் என்ற டிஜிட்டல் டி-அடிக்ஷன் சென்டர்களை (Digital de-addiction center) கேரள காவல்துறை அமைக்கவுள்ளது. இந்த திட்டம் இரண்டு மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக காவல்துறை சமர்ப்பித்த … Read more

பேருந்தில் இருந்து இறங்கிய பெண், அதே பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் : ஓரு நொடி ஒதுங்கி நிற்காததால், நடந்த விபரீதம்

ஐதராபாத்தில், பேருந்தை விட்டு கீழே இறங்கிய பெண், ஒருசில நொடிகள் கூட ஒதுங்கி நிற்காமல், பேருந்தின் முன்புறத்தை ஒட்டியவாறு சாலையை கடக்க முயன்ற நிலையில், அதே பேருந்து மோதி, உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. அப்சல் கஞ்ச் பேருந்து நிறுத்தத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பேருந்தின் முன்படிக்கட்டு வழியாக பெண்மணி கீழே இறங்கியுள்ளார். அவர், சாலையை கடக்க விரும்பினால், உடனடியாக, தனது இடதுபுறத்தில், சாலை ஓரம் ஒதுங்கி நின்று, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் … Read more

அசத்தும் நவீன் பட்நாயக் அரசு… நாட்டிலேயே ஒடிசாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் மிகவும் குறைவு

புவனேஸ்வர்: நாட்டில் வேலைவாய்ப்பின்மை தொடர்பான புள்ளிவிவர அறிக்கையை பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டு செப்டம்பர்-டிசம்பர் காலகட்டத்தில் உள்ள நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மை விகிதம் மிகவும் குறைவாக உள்ள மாநிலமாக, நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநிலம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஒடிசாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 1.47 சதவிதமாகவும், மாநிலத்தில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 39.96 சதவீதமாகவும் உள்ளது.  வேலைவாய்ப்புன்மை விகிதம் அதிகம் உள்ள மாநிலமாக அரியானா (25.7 சதவீதம்) உள்ளது. … Read more

அந்தமான் நிகோபார் தீவில் நடத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி: இந்திய பாதுகாப்புத்துறை தகவல்

அந்தமான்: அந்தமான் நிகோபார் தீவில் நடத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. நிலத்திலிருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை நிலத்திலுள்ள குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. ஒன்பது மீட்டர் நீளமுள்ள ஏவுகணை ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியது மற்றும் 300 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது. ஒரு நிலபரப்பிலிருந்து இன்னொரு நிலபரப்புக்கு சென்று தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை  இன்று  அந்தமான் நிக்கோபாரில் வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்த மேம்படுத்தப்பட்ட … Read more

'கலாச்சார அடையாளங்களை அழிக்கிறது ரயில்வே' – மாநிலங்களவையில் கனிமொழி சோமு விளாசல்

புதுடெல்லி: “ரயில்வே துறை அமைச்சர், ரயில்வே என்ற மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தின் தலைமைப் பிரதிநிதி தானே தவிர, அவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அல்ல” என்று தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு பேசியுள்ளார். மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என். சோமு கலந்து கொண்டு பேசினார். அவர் தனது பேச்சில், “சில பல ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே டிக்கெட்டுகள் விற்பனை பற்றி மட்டும் … Read more