மேகதாது அணை விவகாரம்: தமிழகத்துக்கு எதிராக கர்நாடக பேரவையில் இன்று தீர்மானம்

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துவிடும் எனக் கூறி இத்திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எதிர்ப்பை முன்னிறுத்தி, கர்நாடகாவின் முயற்சிக்கும் எதிராக தமிழக சட்டப்பேரவையில் நேற்று … Read more

பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலை எதிரொலி: மே.வங்க வன்முறைக்கு 8 பேர் உயிரிழப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து துணைத் தலைவர் கொலை செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டம், ராம்பூர்ஹத் அருகே பரிஷால் கிராமப் பஞ்சாயத்து உள்ளது. இதன் துணைத் தலைவராக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேக் (38) என்பவர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், பாது ஷேக் … Read more

மேற்கு வங்கம் பிர்பும் பகுதியில் 8 பேர் உயிருடன் தீ வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை கேட்டது மத்திய அரசு

மேற்கு வங்கம் பிர்பும் பகுதியில் தீ வைப்பு வன்முறைச் சம்பவம் குறித்த அறிக்கையை அளிக்கும்படி மேற்கு வங்க அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து வன்முறை வெடித்ததில் 8 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.ஏராளமான வீடுகளும் தீக்கு இரையாக்கப்பட்டன.வங்கத்தில் சட்டம் ஒழுங்கு இல்லை என்றும் பயங்கரவாதமும் வன்முறையும் தலைவிரித்தாடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.  இதனிடையே மேற்குவங்க பாஜகவைச் சேர்ந்த 9 பேர் கொண்ட குழு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து … Read more

விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சியின் ரூ.19,111 கோடி சொத்துகள் பறிமுதல்

புதுடெல்லி : பிரபல தொழில் அதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர். அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வந்து, வழக்குகளை சந்திக்க வைப்பதற்கான மத்திய அரசின் முயற்சிக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை. இவர்கள் சொத்துகள் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிதித்துறை ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் … Read more

டெல்லியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக தீவிரவாதிகள் மிரட்டல்

டெல்லி: டெல்லியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளார். மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலை தொடர்ந்து, டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெகு விமர்சையாக நடைபெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்கா சந்தனக்கூடு ஊர்வலம்

புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் 199 ஆம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்ஹா அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு கந்தூரி விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு 199 ஆவது ஆண்டு கந்தூரி விழா கடந்த 13ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் … Read more

பிரம்மாண்ட விழாவில் 2-வது முறையாக உ.பி. முதல்வராக மார்ச் 25-ல் பதவி ஏற்கிறார் யோகி: பிரதமர் மோடி, 10 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: உத்தரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் வரும் 25-ம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளார். இதையொட்டி திரைப்படக் காட்சிகளை மிஞ்சும் வகையில் பிரம்மாண்ட விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 403 உறுப்பினர்களை கொண்ட உ.பி. சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 275 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. உ.பி.யில் சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே கட்சி, தொடர்ந்து 2-வதுமுறையாக ஆட்சி அமைக்கிறது. இதனால், முதல்வர் யோகிஆதித்யநாத்தின் பதவியேற்புவிழா, திரைப்படக் காட்சிகளைமிஞ்சும் வகையில், … Read more

கிராமத்திற்குள் புகுந்து அன்னநடை போட்ட சிங்கம்!

குஜராத்தில் கிராமத்திற்குள் புகுந்த சிங்கம் ஒன்று அநாயசமாக வீதிகளில் உலா வரும் வீடியோ வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் கிராமத்திற்குள் நுழைந்த சிங்கம் இரைத் தேடி அங்கிங்கும் சுற்றித் திரிந்துள்ளது. வாகனம் வருவதை கண்ட சிங்கம் அங்கிருந்து தப்ப முயலும் காட்சி வீடியோவாக வெளியாகி உள்ளது. வாகன முகப்பு விளக்கு வெளிச்சத்தில் சிங்கம் மிரண்டு ஓடும் காட்சி இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.   Source link

உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் இன்று பதவியேற்பு: பிரதமர் மோடி பங்கேற்பு

பனாஜி: உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பொறுப்பேற்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாப் தவிர, உபி, மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜ ஆட்சியை பிடித்தது. இதில் நீண்ட இழுபறிக்குப் பின், 11 நாட்கள் கழித்து, உத்தரகாண்ட், கோவா முதல்வர்கள் நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி, உத்தரகாண்ட்டில் புஷ்கர் சிங் தாமியும், கோவாவில் பிரமோத் சாவந்த்தும் மீண்டும் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் … Read more

உக்ரைன் போர் சூழல் எப்படி இருக்கிறது? விவாதித்த இருநாட்டு பிரதமர்கள்

பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் நிலவரம் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உக்ரைனின் தற்போதைய சூழல் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையிலான நெருக்கடியை தணிக்க, போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி , போரிஸ் ஜான்சனிடம் சுட்டிக்காட்டியதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச சட்டம், அனைத்து நாடுகள் இடையிலான பிராந்திய ஒருமைப்பாடு … Read more