பீர்பூம் மாவட்டத்தில் 8 பேர் எரித்துக் கொலை – மேற்கு வங்காள அரசிடம் அறிக்கை கேட்கிறது உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி: மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணை தலைவராக இருந்தவர் பாது ஷேக். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.  நேற்று இரவு பைக்கில் வந்த 4 பேர் ஷேக் மீது வெடிகுண்டு வீசி பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த பாது ஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் சொந்த ஊரான போக்டுய் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. இவரது கொலை காரணமாக அந்த கிராமத்தில் பதற்றமான … Read more

டெல்லி திமுக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அமித்ஷாவுக்கு அழைப்பு

டெல்லி: டெல்லி திமுக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சென்று அழைப்பிதழை வழங்கினார்.

இந்தியாவில் கிளைகள் தொடங்க இத்தாலி, பிரான்ஸ் உயர் கல்வி மையங்கள் ஆர்வம்

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கிளை தொடங்க தயங்கிவந்த நிலையில், தற்போது இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த உயர் கல்வி மையங்கள் இங்கு தங்கள் கல்வி மையங்களைத் திறக்க ஆர்வம் காட்டியுள்ளன. தேசிய கல்விக் கொள்கையின்படி, உலகத் தரம் வாய்ந்த கல்வி மையங்களின் கிளைகளை இந்தியாவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட்டின்போது அறிவித்தார். குஜராத்தில் உருவாக்கப்படும் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் (கிஃப்ட்) மூலம் வெளிநாடுகளில் உள்ள தரம்வாய்ந்த … Read more

ரஷ்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் இந்தியா தடுமாறுகிறது – ஜோ பைடன்

ரஷ்ய விவகாரத்தில் இந்தியா தடுமாறுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றச்சாட்டியுள்ளார். வாஷிங்டனில் தொழிலதிபர்களுடனான சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைக் கண்டிப்பதில் நேட்டோ உறுப்பு நாடுகள் ஓரணியில் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், குவாட் கூட்டமைப்பிலும் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளதாகவும், இந்தியா மட்டுமே விதிவிலக்காக உள்ளதாகவும் பைடன் கூறினார். உக்ரைன் விவகாரத்தில் நேட்டோவில் பிரிவினை ஏற்படுத்தலாம் என புதின் எதிர்ப்பார்த்தாகவும், ஆனால், இந்தளவு ஒற்றுமையாக இருக்கும் என … Read more

உத்தவ் தாக்கரேவின் மைத்துனருக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மைத்துனருக்குச் சொந்தமான நிறுவனங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இதில், உத்தவ் தாக்கரேவின் மைத்துனர் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக சோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவருக்கு சொந்தமான ரூ.6.45 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.   முன்னதாக, உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் சிவசேனாவை சேர்ந்த அனில் பராப் ஆகியோருக்கு நெருங்கிய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மேற்கு வங்காளம் … Read more

125வது வயதில் பத்மஸ்ரீ விருது பரஸ்பரம் யோகா சாமியார் – மோடி மரியாதை

புதுடெல்லி: தனது 125வது வயதில் பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா சாமியாரும் மோடியும் பரஸ்பரம் காலில் விழுந்து மரியாதை செய்து கொண்டனர். குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று பல்வேறு சாதனையாளர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார். அப்போது காசியை சேர்ந்த யோகா குரு சுவாமி சிவானந்தா (125), தனக்கு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதைப் பெறுவதற்கு முன் அரங்கத்தில் அமர்ந்திருந்த பிரதமர் மோடி பார்த்து கைகூப்பி வணங்கினார். பின்னர் திடீரென மோடியின் அருகே சென்று அவரது … Read more

பென்ஸ் கார் தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை! 6 மணி நேரம் போக்கு காட்டிய பின் சிக்கியது!

புனேவில் உள்ள பென்ஸ் கார் தொழிற்சாலைக்குள் 3 வயது ஆண் சிறுத்தை நுழைந்தது. ஆறு மணி நேரப் போராட்டத்திற்கு பின் சிறுத்தையை பத்திரமாக வெளியேற்றினர் வனத்துறையினர். உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்புகளுக்குள் வன விலங்குகள் நுழைந்த சம்பவங்கள் பல உண்டு. ஆனால் முதன்முறையாக தொழிற்சாலைக்குள் அதிரடி விசிட் கொடுத்திருக்கிறது ஒரு சிறுத்தை. அதுவும் சாதாரண தொழிற்சாலை அல்ல! சொகுசு கார்களை தயாரிப்பதில் உலகளவில் முன்னணியில் இருக்கும் பென்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை அது! புனேவில் உள்ள அந்நிறுவனத்தின் … Read more

"முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கவே ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்கு வரிவிலக்கு” – ஃபரூக் அப்துல்லா கொந்தளிப்பு

புதுடெல்லி: ”முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கவே ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு பல மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது’ என்று ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் பற்றிய தனது கருத்தை பதிவு செய்த அவர், ”விவேக் அக்னி கோத்ரி இயக்கி இருக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதிருப்பதன் மூலமாக பாஜக தலைமையிலான அரசு மக்களின் மனங்களில் பிரிவினையைத் தூண்டிவிடப் பார்க்கிறது. அவர்கள் மக்களிடம் வெறுப்பை … Read more

சுங்கக் கட்டணம் குறைகிறது? – மத்திய அரசு திட்டத்தால் ஜாக்பாட்!

60 கிலோ மீட்டருக்கு ஒருமுறை மட்டுமே சுங்கக் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும், புதிய நடைமுறை 3 மாதங்களில் அமலுக்கு வரும் எனவும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையில் இன்று பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன், தமிழகத்தில் விதிகளை மீறி சுங்கச்சாவடிகள் செயல்படுவதாக … Read more

60 கி.மீ.க்குள் அருகருகே இருக்கும் சுங்கச்சாவடிகள் மூடப்படும் – அமைச்சர் நிதின்கட்கரி

தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட  சுங்கச்சாவடிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மூடப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அவர், 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள், அமெரிக்காவில் இருப்பதை போல் இருக்கும் என்று உறுதி அளித்தார். பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 8 பேர் வரை பயணிக்க கூடிய வாகனங்களில் குறைந்தபட்சம் 6 ஏர் பேக்குகள் … Read more