கணவர் தின்பண்டம் வாங்கச் சென்ற நேரத்தில் மனைவிக்கு நேர்ந்த கொடூரம் – உ.பி.யில் பயங்கரம்

உத்தர பிரதேசத்தில் ரயிலுக்கு காத்திருந்த போது கணவன் தின்பண்டம் வாங்க போன நேரத்தில், மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரதாப்கார் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு ரயில் ஏறுவதற்காக கணவன் மனைவி இருவரும் வந்துள்ளனர். ரயில் வர தாமதமானதால் அவர்கள் இருவரும் காத்திருப்பு அறையில் இருந்துள்ளனர். அந்த பெண்ணின் கணவர் சாப்பிட தின்பண்டம் வாங்கி வருகிறேன் என்று மனைவியிடம் கூறி விட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில், காத்திருப்பு அறையில் உள்ள கழிவறைக்கு … Read more

181.21 கோடி கோவிட்-19 தடுப்பூசி: இந்தியா சாதனை

புதுடெல்லி: இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 181.21 கோடியைக் கடந்தது இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை (26,240) மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.06% ஆக உள்ளனர். இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 98.74 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,196 நோயாளிகள் குணமடைந்ததையடுத்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை (பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து) 4,24,65,122 ஆக உள்ளது. குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இந்தியாவில் கடந்த … Read more

அடுத்த 5 ஆண்டில் ஜப்பான் இந்தியாவில் ரூ.3.19 லட்சம் கோடி முதலீடு செய்யும் – ஜப்பான் பிரதமர் அறிவிப்பு

இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் 3 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஜப்பான் முதலீடு செய்யும் என அந்நாட்டின் பிரதமர் பூமியோ கிசிடா தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய – ஜப்பானிய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியை ஜப்பான் பிரதமர் சந்தித்துப் பேசினார். அதன்பின் இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டனர். 2014ஆம் ஆண்டு அறிவித்தபடி இந்தியாவில் ஜப்பான் முதலீடு இரண்டரை இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகப் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். அடுத்த ஐந்தாண்டுகளில் மின்சாரக் காருக்கான பேட்டரி … Read more

பதவியேற்றவுடன் பணி நியமன ஆணை: பாராட்டு மழையில் பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பகவந்த் மான், முதல் வேளையாக, மாநில அரசுத் துறைகளில் 25 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்த பகவந்த் மான் அளித்திருக்கும் ஆணையில், காவல் துறையில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரப்படவுள்ளது. எஞ்சிய 15 ஆயிரம் பேர் அரசின் பிற துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களில் அமர்த்தப்படவுள்ளனர். பகவந்த் மான் தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் … Read more

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு “Y” பிரிவு பாதுகாப்பு – பசவராஜ் பொம்மை

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் வந்த நிலையில், அவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய கர்நாடகா அரசு தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை வழங்கிய … Read more

ஹிஜாப் அணிய தடை உத்தரவு- தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. இந்த மனுக்களை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி மற்றும் நீதிபதிகள் கிருஷ்ணா எஸ். தீட்சித் மற்றும் காஜி செய்புன்னேசா மொகியுதீன் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் விசாரணை நடத்தியது. அப்போது, ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை … Read more

காஷ்மீர் பண்டிட் வீடுகளை ஒப்படைப்போம்: சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரல் அறிவிப்பு

புதுடெல்லி: காஷ்மீரில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் தங்கள் வீடுகள், சொத்துக்களை விட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி டெல்லி உட்பட பல இடங்களில் அகதிகளாக வாழ்கின்றனர். அவர்கள் விட்டுச் சென்ற வீடுகள், பல்வேறு கட்டிடங்களில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ள சிஆர்பிஎஃப் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் முகாம்கள் அமைத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் பேட்டியளித்த சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரல் குல்தீப் சிங் கூறியதாவது: காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் 10 இடங்களில் முகாம்கள் அமைப்பதற்காக 65 ஏக்கர் நிலத்தை … Read more

சந்திரபாபுநாயுடு பெகாசஸ் செயலியை பயன்படுத்தினாரா..? விசாரணை நடத்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது ஆட்சிக்காலத்தில் பெகாசஸ் உளவு செயலியை வாங்கி பயன்படுத்தியதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் பெகாசாஸ் ஸ்பைவேர் என்ற உளவுபார்க்கும் செயலியை, மத்திய அரசு வாங்கி முக்கிய பிரபலங்களின் செல்போன்களை ஒட்டு கேட்டதாக கூறப்படும் புகார் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவுபடி உயர்மட்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அவர் முதலமைச்சராக இருந்த போது பெகாசஸ் செயலியை … Read more

பஞ்சாப் வெற்றியைத் தொடர்ந்து ராஜஸ்தானில் களமிறங்க ஆம் ஆத்மி திட்டம்

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் கிடைத்த அமோக வெற்றியால் உற்சாகமடைந்துள்ள ஆம் ஆத்மி கட்சி இப்போது ராஜஸ்தானில் களமிறங்க கவனம் செலுத்துகிறது. ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் ஆம் ஆத்மி அமைப்பை பலப்படுத்த ஜெய்ப்பூரில் இரண்டு நாள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலப் பொறுப்பாளரும் ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங் மார்ச் 26- 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியின் நலக் கொள்கைகள் குறித்து மக்களுக்குத் … Read more

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனே செயல்பட வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்கு ஒன்றிய அரசு உடனடியாக செயல்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி இருக்கிறார்.  கடந்த பிப்ரவரியில் சில்லறை பணவீக்கம் எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.07 சதவீதம் உயர்ந்தது. மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 13.11 சதவீதமாக உயர்ந்தது. கச்சா எண்ணெய் மற்றும் உணவு பொருட்கள் அல்லாதவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று அரசு வெளியிட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி … Read more