அகமதாபாத் விமான விபத்து: நடந்தது என்ன?; அடுத்தது என்ன? – மத்திய அமைச்சர் முழு விளக்கம்
Ahmedabad Plane Crash: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று விரிவாக விளக்கம் அளித்தார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Ahmedabad Plane Crash: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று விரிவாக விளக்கம் அளித்தார்.
புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பயணிகள் தீயில் கருகி இறந்தனர். அவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி உள்ளன. இதையடுத்து, விபத்து நடந்த இடங்களில் சிதறி உள்ள உடல் பாகங்களை சேகரிக்கும் பணியில் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அந்த பாகங்களின் மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்தில் இறந்த பயணிகளின் உறவினர்கள் பலர் தங்களது டிஎன்ஏ மாதிரிகளை வழங்கி … Read more
NEET UG 2025 Result: 2025ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டது. நீட் தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.
அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த 241 உயிர்களை இழந்த பயங்கரமான விமான விபத்தில் பல குடும்பங்களின் கனவுகள் கலைந்து போயுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார். இதில் பயணம் செய்தவர்களின் கனவுகள் கலைந்து அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீள முடியாத சோகத்துக்குச் சென்றுள்ளனர். விபத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த 10 பேர் இறந்தனர். அதில் 5 பேர் ஒரே … Read more
புதுடெல்லி: போயிங் விமானங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை ஏற்கெனவே சுட்டிக்காட்டிய ஜான் பார்னெட் என்பவரின் முந்தைய கருத்துகள் பொதுவெளியில் வைரலாகி வருகின்றன. 1962 பிப்ரவரி 23-ல் கலிபோர்னியாவில் பிறந்தவர் ஜான் பார்னெட். பெற்றோர் பிரிந்த பிறகு அவர் தனது தாயார் மற்றும் மூன்று சகோதரர்களுடன் லூசியானாவுக்கு குடிபெயர்ந்தார். நாசாவின் விண்வெளி ஓடத் திட்டங்களில் பணியாற்றியவர். பின்னர் 2010 மற்றும் 2017-க்கு இடையில் வடக்கு சார்லஸ்டன் போயிங் ஆலையில் தரக்கட்டுப்பாட்டு மேலாளராக பணிபுரிந்தார். அப்போதே அவர் போயிங் நிறுவனத்தில் … Read more
அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் (டிவிஆர்) சாத னத்தை குஜராத் தீவிர வாத தடுப்புப் பிரிவினர் நேற்று மீட்டனர். அனைத்து விமானங்களிலும் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் என்ற சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் போன்று இருக்கும் இந்த சாதனத்தில், விமானத்தின் செயல்பாடு, பயணிகள் இருக்கும் பகுதி, விமானத்தின் வெளிப்புற பகுதி ஆகியவற்றின் வீடியோ காட்சிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பதிவாகும். விமான விபத்து நடந்த இடத்தில், … Read more
ஷில்லாங்: மேகாலயாவுக்கு தேனிலவு கொண்டாட சென்ற இடத்தில் கணவனை கூலிப்படை வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கணவனை கொலை செய்ய அவர் ஏற்கெனவே மூன்று முறை முயற்சித்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், நான்காவது முயற்சியில் கணவரின் கதையை திட்டமிட்டபடி அவரது மனைவி காதலனுடன் சேர்ந்து முடித்துள்ளார் இதுகுறித்து கிழக்கு காசி ஹில்ஸின் காவல் கண்காணிப்பாளர் விவேக் சையம் கூறியதாவது: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த … Read more
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ … Read more
இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினர், நண்பர்களை சந்தித்துவிட்டு, பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியான அனுபவங்களுடன் லண்டன் புறப்பட்ட பயணிகள் மற்றும் குஜராத்தில் படிக்கும் 10 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் எதிர்கால கனவுகளை தீக்கிரையாக்கியது துரதிருஷ்டவசமான விமான விபத்து. குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் கடைசி புகைப்படம்: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் கடைசி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை சக … Read more
புதுடெல்லி: கீழடி தொல்லியல் அகழ்வாய்வு அறிக்கையை வெளியிட தமிழகத்தின் வரலாற்றாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து சென்னை பல்கலைகழக வரலாற்றுத்துறை தலைவரும், செனட் உறுப்பினருமான பேராசிரியர் சுந்தரம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி அகழ்வாய்வு அறிக்கையை அறிவியல் பூர்வமான ஆய்விற்கு அனுப்புவதாக சொல்லியுள்ளார். கீழடியில் ஆய்வு நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணா அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அறிவியல் பூர்வமான ஆதாரம் என்பது காலதாமதமே. இனியும் தாமதப்படுத்தாமல் ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு … Read more