முழு மின்னணு வாக்காளர் பட்டியல் வேண்டும்: ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு

பெங்களூரு: ​வாக்​குத் திருட்டு நடை​பெற்​றுள்​ள​தாக கூறி கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வில் நேற்று ராகுல் காந்தி பேரணி நடத்தினார். இந்​நிலை​யில், உறு​தி​மொழிப் பத்​திரத்​தில் கையெழுத்​திட வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யம் கூறி​யுள்​ளதற்கு பதில் அளித்து ராகுல் காந்தி கூறிய​தாவது: நாடாளு​மன்​றத்​துக்​குள் நான் உறு​தி​மொழி எடுத்​திருக்​கிறேன். ஆனால், வாக்​கு​கள் திருட்டு தொடர்​பாக உறு​தி​மொழி எடுக்க வேண்​டும் என்று தேர்​தல் ஆணை​யம் கூறுகிறது. வாக்​கு​கள் திருட்டு தொடர்​பாக காங்​கிரஸ் கட்சி குற்​றம் சாட்​டிய​வுடன் சில மாநிலங்​களின் தேர்​தல் ஆணைய இணை​யதளங்​கள் முடங்​கி​விட்​டன. … Read more

செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணை தலை​வர் தேர்​தல் வாக்கெடுப்பு

புதுடெல்லி: நாட்​டின் 14-வது குடியரசு துணை தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் கடந்த ஜூலை 21-ம் தேதி பதவியை ராஜி​னாமா செய்​தார். இதைத் தொடர்ந்து தலைமை தேர்​தல் ஆணை​யம் நேற்று வெளி​யிட்ட அறிவிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலுக்​கான வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்​வதற்​கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும். ஆகஸ்ட் 22-ம் தேதி வேட்பு மனுக்​கள் மீதான பரிசீலனை நடை​பெறும். வேட்​பு மனுக்​களை திரும்​பப் பெறு​வதற்​கான கடைசி தேதி ஆகஸ்ட் 25 ஆகும். செப்​டம்​பர் 9-ம் … Read more

ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப்: 3-வது சுற்றுடன் கமலி, ஷ்ரிஷ்டி வெளியேற்றம்

சென்னை: ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது நாளான நேற்று ரெப்பேஜ் சுற்றுகள் மற்றும் 3-வது சுற்றுபோட்டிகள் நடைபெற்றன. ஆடவர் ஓபன் 2-வது சுற்றில் (ரெப்பேஜ்) கடும் மோதல் இருந்தது. ஆக்ரோஷமான முன்பக்க தாக்குதலுடன் தொடக்கத்திலேயே மிரட்டிய கொரியாவின் கனோவா ஹீஜே, ஹீட்டில் 16.67 புள்ளிகளை குவித்ததுடன் 4.17 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மகளிர் ஓபன் 2-வது சுற்றில் (ரெப்பேஜ்) இந்தியாவின் ஷ்ரிஷ்டி செல்வம், கமலி மூர்த்தி … Read more

இ-டிக்கெட் பெறும் ரயில் பயணிகளுக்கு 45 பைசாவில் பயணக் காப்பீடு

புதுடெல்லி: மக்​களவை​யில் உறுப்​பினரின் கேள்விக்கு ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: குடிமக்​கள் ஆன்​லைனில் அல்​லது முன்​ப​திவு கவுண்​டர்​களில் ரயில் டிக்​கெட்​டு​களை முன்​ப​திவு செய்​ய​லாம். இருப்​பினும் ஆன்​லைனில் முன்​ப​திவு செய்​து, பயணம் உறுதி செய்​யப்​படும் மற்​றும் ஆர்​ஏசி பயணி​களுக்கு மட்​டுமே காப்​பீட்டு சலுகை கிடைக்​கும். காப்​பீட்டு சலுகையை பெற​விரும்​பும் எந்​தவொரு பயணி​யும் டிக்​கெட் முன்​ப​திவு செய்​யும்​போது தனது சுய விருப்​பத்​தின் அடிப்​படை​யில் இந்த திட்​டத்தை (Optional Travel Insurance Scheme – OTIS) தேர்வு … Read more

பிஹாரில் ட்ரம்​புக்கு இருப்​பிட சான்​றிதழ் கேட்டு விண்ணப்பித்ததால் வழக்குப் பதிவு

பாட்னா: பிஹாரில் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு வாக்​காளர் அட்​டையை சரி​பார்ப்​ப​தற்கு இருப்​பிட சான்​றிதழ் கட்​டாய​ம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்​து, மாநிலம் முழு​வதும் இணைய வழி​யில் இருப்​பிட சான்​றிதழ் கோரி விண்​ணப்​பித்​து வருகின்றனர். அந்த வகை​யில், பாட்​னா​வில் பாபு என்ற பெயரில் ஒரு நாய் புகைப்​படத்​துடன் இருப்​பிட சான்​றிதழ் வழங்​கப்​பட்​டது. பின்னர், அந்த சான்​றிதழ் ரத்து செய்​யப்​பட்​டது. மேலும், விண்​ணப்​பித்​தவர், சான்​றிதழ் வழங்​கிய அதி​காரி மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. இந்த சூழ்​நிலை​யில், சமஸ்​திபூர் மாவட்​டத்​தில் டொனால்டு ஜான் … Read more

உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கிய 274 பேர் மீட்பு: 59 பேரை தேடும் பணி தீவிரம்

டேராடூன்: உத்​த​ராகண்ட் பெரு​வெள்​ளத்​தில் சிக்​கிய 274 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்டு உள்​ளனர். 9 ராணுவ வீரர்​கள் உட்பட 59 பேரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. உத்​த​ராகண்​டில் கங்​கோத்ரி கோயிலுக்கு செல்​லும் வழி​யில் தரளி கிராமம் அமைந்​துள்​ளது. இமயமலை​யில் சுமார் 10,200 அடி உயரத்​தில் உள்ள இந்த கிராமத்​தில் கடந்த 5-ம் தேதி மேகவெடிப்​பால் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது. கீர் கங்கா நதி​யில் கரைபுரண்ட வெள்​ளத்​தால் தரளி கிராமம் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டது. இதில் 5 … Read more

‘வாக்கு திருட்டு’ சர்ச்சை: ராகுல் காந்தி தலைமையில் இன்று பெங்களூருவில் பேரணி

பெங்களூரு: 2024 மக்களவைத் தேர்தலின் போது நடந்ததாக கூறப்படும் ‘வாக்கு திருட்டை’ கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் இன்று பேரணி நடத்தப்படுகிறது. மேலும், காங்கிரஸார் பேரணியாக சென்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கவுள்ளனர். “நமது வாக்கு, நமது உரிமை, நமது போராட்டம்” என்ற கோரிக்கையுடன் ‘வாக்காளர் அதிகார பேரணி’ இன்று பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் நடைபெறுகிறது. இப்பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் … Read more

பிப்ரவரியில் அறிமுகமான வருமான வரி மசோதா வாபஸ்: ஆக.11-ல் புதிய மசோதா தாக்கல்

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஆகஸ்ட் 8) மக்களவையில் வருமான வரி மசோதா 2025-ஐ திரும்பப் பெற்றார். மேலும், தேர்வுக் குழு பரிந்துரைத்த மாற்றங்களைச் சேர்த்த பிறகு அரசு புதிய மசோதாவை அறிமுகப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீ பைஜயந்த் பாண்டா தலைமையிலான 31 உறுப்பினர்களை கொண்ட தேர்வுக் குழு, கடந்த பிப்ரவரி 13 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதாவில் பல மாற்றங்களை பரிந்துரைத்திருந்தது. இந்தக் குழு 4,500 பக்கங்களில் புதிய … Read more

மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட 5 முக்கிய முடிவுகள்! ரூ.30,000 கோடி மானியம்

Delhi News In Tamil: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. மோடி அமைச்சரவைக் கூட்டத்தில் 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரூ.48,172 கோடி மதிப்பில் 45 சாலைத் திட்டங்கள்: மக்களவையில் நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில் ரூ.48,172 கோடி மதிப்பில் 45 சாலைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். தமிழ்நாட்டில் பாரத் மாலா திட்டத்தின் கீழ் 45 சாலைத் திட்டங்கள் 1476 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிறைவேற்றப்பட்டு வருவதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர், இந்தத் திட்டங்கள் 48,172 கோடி ரூபாய் … Read more