பெங்களூரு: கர்நாடக அரசின் சமூக நலத்துறை நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: கர்நாடகாவில் பட்டியல் வகுப்பில் 101 பிரிவினர் உள்ளனர். இதில் எந்த பிரிவை சேர்ந்தவர், புத்த மதத்துக்கு மாறியிருந்தாலும், அவர்களுக்கு உடனடியாக எஸ்சி சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். கர்நாடக பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சட்ட விதிகள் இதனை ஏற்கெனவே உறுதி செய்திருக்கிறது. கடந்த 1990-ல் மத்திய அரசு வெளியிட்ட அரசாணையிலும், கர்நாடக அரசு 2013-ல் வெளியிட்ட … Read more