ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் விபத்து: 3 பேர் பலி; பலர் காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தின் பசந்த்கர் பகுதியில் உள்ள காண்ட்வா அருகே சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் 15 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பேசிய உத்தம்பூர் கூடுதல் எஸ்பி சந்தீப் பட், “இன்று காலை 10.30 மணியளவில் கட்வா பகுதியில், பசந்த்கர் பகுதியில் 187-வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த பங்கர் வாகனம் கவிழ்ந்தது. அப்போது மொத்தம் 23 சிஆர்பிஎப் வீரர்கள் அதில் இருந்தனர். வீரர்கள் … Read more

போலி வாக்காளர்கள்… தேர்தல் ஆணையம் செய்த மோசடிகள் – ஆதாரத்தை காட்டும் ராகுல் காந்தி!

Rahul Gandhi Vote Chori: ஆளும் மத்திய பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தல் ஆணையம் மோசடி செய்திருப்பதாக ராகுல் காந்தி பெரும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை வெளியீடு

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21. மாநிலங்களவை செயலாளர்தான் தேர்தல் அதிகாரி. வேட்புமனுக்களை வேட்டாளர்கள், மாநிலங்களவை அறை எண் 28-ல் தேர்தல் அதிகாரி அல்லது துணை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம். பொது விடுமுறை இல்லாத நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும். இதற்கான … Read more

அமித்ஷா அடுத்த பிரதமராக இருப்பார்? மோடி சூசகம்.. அரசியலில் பூகம்பத்திற்கான ஆரம்பம்!

Next Prime Minister After Modi: ஒட்டுமொத்தமாக நரேந்திர மோடி தனது வாரிசாக அமித் ஷாவை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி அலசப்பட்டு உள்ளது. ஆனால் ஷாவின் பாதை கூட்டணிகளை நிர்வகித்தல் மற்றும் கட்சிக்குள் ஒருமித்த கருத்தை உருவாக்குதல் உள்ளிட்ட சவால்களால் நிறைந்துள்ளது. இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்விக்கான விடையை காண்போம்.

உள் விசாரணைக் குழுவை எதிர்த்த நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், தன்னை பதவிநீக்கம் செய்ய பரிந்துரைத்த உள் விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் திடீரென தீப்பற்றியது. அப்போது அவர் வீட்டில் இல்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் வீட்டில் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு … Read more

எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: பிஹாரில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து எதிரொலித்து வருகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் நேற்றும் இந்த விவகாரத்தை நாடாளுமன்ற இரு அவைகளிலும் எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, மக்களவை, மாநிலங்களவை அலுவல்கள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் அவை மீண்​டும்​ கூடியபோது … Read more

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேர் விவரத்தை வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என கடந்த ஜூன் 24-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கு குறைவான அவகாசமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த உத்தரவை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, வாக்காளர் … Read more

அமைச்சர் அமித் ஷாவை அவமதித்த வழக்கில் ராகுலுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

ராஞ்சி: கடந்த 2018-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புகழைக் கெடுக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை ராகுல் கூறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சாய்பாசா நகரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பிரதாப் குமார் என்பவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால், … Read more

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி – 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியலில் பெயர்​களை தவறாக சேர்த்​தது தொடர்​பாக இந்​திய தேர்​தல் ஆணையம் (இசிஐ) 4 அதி​காரி​களை சஸ்​பெண்ட் செய்​துள்​ளது. இதுகுறி்த்து இசிஐ வெளியிட்ட அறிக்கையில், ‘‘மேற்கு வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் தரவுத்​தளத்​தின் உள்​நுழைவு சான்​றுகளை அங்​கீகரிக்​கப்​ப​டாத நபர்​களு​டன் பகிர்ந்து கொண்​டது மற்​றும் பெயர்​களை தவறாக சேர்த்​தது குறித்து பருய்​பூர் புர்​பா​வில் பணியாற்​றிய நான்கு அதி​காரி​கள் மீது மேற்கு வங்க தலைமை தேர்​தல் அதி​காரி இசிஐ-க்கு புகார் தெரி​வித்​தார். இதையடுத்து அந்த நான்கு … Read more

நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் SIR குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது: கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: எஸ்ஐஆர் விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மக்களவை இன்று காலை கூடியதும் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் மீண்டும் எழுப்பின. விவாதத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதை அடுத்து எதிர்க்கட்சிகள் … Read more