'இன்னும் ஒரு தேஜாஸ் mk1a போர் விமானம் கூட டெலிவரி ஆகவில்லை' விமானப்படை தளபதி பகீர்

National News: ராணுவ தளவாடங்கள் சொன்ன நேரத்தில் டெலிவரி செய்யப்படுவதில்லை என விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் கவலை தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தாமாக இந்தியா திரும்புவர்” – ராஜ்நாத் சிங் நம்பிக்கை

புதுடெல்லி: “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மக்கள் இந்திய குடும்பத்தின் ஒரு பகுதியினர். அவர்கள் தாமாக முன்வந்து இந்தியாவின் முக்கிய நீரோட்டத்துக்த் திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிஐஐ (CII) வணிக உச்சி மாநாட்டில் இன்று (மே 29) உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்திய அரசு தனது உத்தி மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான பதிலை மறுவடிவமைப்பு செய்து மறுவரையறை செய்துள்ளது. பாகிஸ்தான் உடனான … Read more

மகளிருக்கு ரூ. 1 லட்சம் ஊக்கத்தொகையா? மோடி படத்துடன் மோசடி – பெண்களே உஷார்!

Lakhpati Didi Yojana Scam: மத்திய அரசின் லக்பதி தீதி யோஜனா திட்டத்தின்கீழ் பெண்களுக்கு ரூ.1 லட்சம் கொடுக்கப்படும் என பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் மோசடி நடந்துள்ளது.

மோடியின் திசைதிருப்பும் பயிற்சி: பஹல்காம் தாக்குதல் சிறப்புக் கூட்டத்தொடர் மீது காங். விமர்சனம்

புதுடெல்லி: அவசரநிலையின் 50-ம் ஆண்டு நிறைவு நாளில், பஹல்காம் தாக்குதல் குறித்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை நடத்த மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் மோடி அரசின் மற்றுமொரு திசை திருப்பும் முயற்சி என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கடந்த ஏப்.22-ம் தேதி இரவில் இருந்தே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் … Read more

“பஹல்காமில் பயங்கரவாதிகள் நிகழ்த்தியது மனிதகுலத்தின் மீதான தாக்குதல்” – பிரதமர் மோடி

புதுடெல்லி: பஹல்காமில் பயங்கரவாதிகள் நிகழ்த்தியது மனிதகுலத்தின் மீதான தாக்குதல் என்றும், இந்தியாவில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு பொருத்தமான பதிலடி என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலம் உதயமானதன் 50-ம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்துக்குச் செல்ல இருந்தார். எனினும், சீரற்ற வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் காணொலி காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, … Read more

''பொங்கி எழும் வெறியர்கள்'' – தன்னை விமர்சிப்போர் குறித்து சசி தரூர் காட்டம்

புதுடெல்லி: “பயங்கரவாத தாக்குதல்களுக்கான இந்தியாவின் பதிலடி பற்றி மட்டுமே நான் பேசினேன். முந்தைய போர்களைப் பற்றி அல்ல என்பதை பொங்கி எழும் வெறியர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.” என்று தன்னை விமர்சிப்போருக்கு சசி தரூர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பனாமாவில் ஒரு நீண்ட மற்றும் வெற்றிகரமான நாளுக்குப் பிறகு, ஆறு மணி நேரத்தில் கொலம்பியாவின் போகோடாவிற்குப் புறப்படுவதற்காக நள்ளிரவில் நான் செல்ல வேண்டும். எனவே இதற்கு எனக்கு உண்மையில் நேரமில்லை. எனினும், … Read more

​நாடு முழுவதும் திருடப்படும் செல்போன்கள் கண்டறியப்படுவது எப்படி?

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் பல்​வேறு இடங்​களில் திருடப்​படும் செல்​போன்​கள், கண்​டறியப்​பட்டு வெற்​றிகர​மாக உரியவர்களிடம் சேர்க்​கப்​படும் தகவல் தற்​போது தெரிய​வந்​துள்​ளது. இதற்​காக போலீ​ஸார் உதவி​யுடன் மத்​திய அரசு நடத்​தும் இணை​யதளம் உதவி வரு​கிறது. நாடு முழு​வதும் கோடிக்​கணக்​கான மக்​கள் செல்​போன்​களை பயன்​படுத்தி வரு​கின்​றனர். இதில் பலர் தங்​களது செல்​போன்​களை தவற​விடு​கின்​றனர். மேலும் சிலர், திருடர்​களிடம் தங்​களது செல்​போன்​களை பறி​கொடுக்​கின்​றனர். அதே​நேரத்​தில் திருடப்​படும் செல்​போன்​கள் குறித்து போலீஸ் நிலை​யங்​களுக்கு வரும் புகார்​கள் குறை​வாகவே உள்​ளன. இருந்​த​போதும் புகார் தரப்​பட்ட செல்​போன் … Read more

சொத்துகளை ஆன்லைனில் பதிய சட்டம் கொண்டு வருகிறது மத்திய அரசு

புதுடெல்லி: சொத்துக்களை பதிவு செய்தல், விற்பனை ஒப்பந்தம், சொத்துக்களை விற்பதற்கான அதிகாரம் வழங்குதல், விற்பனை சான்றிதழ்கள் மற்றும் அடமானம் உட்பட அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வரைவு மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இது 117 ஆண்டு கால பத்திரபதிவு சட்டத்தை மாற்றும். சொத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வகையில் பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்ய பல மாநிலங்கள் முடிவு செய்தன. இதனால் சொத்துக்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வரைவு மசோதாவை … Read more

கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு

பெங்களூரு: கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசனின் கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிடில் ‘தக் லைஃப்’ படத்துக்கு தடை விதிக்கப்படும் என அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி எச்சரிக்கை விடுத்தார். இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள‌ தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். … Read more

தமிழில் இருந்து தான் கன்னட மொழி வந்ததா? வரலாற்று உண்மை என்ன? பிரபலங்கள் கருத்து!

தக் லைப் படத்தின் ப்ரமோஷன் விழாவில் கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கவலையை அதிகரித்துள்ளது.