அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்: மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

October Month Changes Update: அக்டோபர் 1 முதல் அமலுக்கு வர இருக்கக்கூடிய சில முக்கியமான மாற்றங்கள் பத்தி பார்ப்போம். கேஸ் சிலிண்டர், ஆதார் கார்ட், யூபிஐ டிரான்சாக்சன்ஸ், ரயில் டிக்கெட் முன்பதிவு, யூபிஐ பேங்க் உட்பட ஐந்து முக்கிய முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்.1 முதல் அமல்: பியூஷ் கோயல்

புதுடெல்லி: ஐரோப்பிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியின் நிறைவுநாள் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய அவர், “ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்து, லிக்டன்ஸ்டீன், நார்வே, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி செய்யப்பட்டது. இந்த வர்த்தக ஒப்பந்தம் … Read more

கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ‘எக்ஸ்’ தளம் முறையீடு செய்ய முடிவு – பின்னணி என்ன?

பெங்களூரு: இந்திய சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டுமென எக்ஸ் சமூக வலைதளத்துக்கு கடந்த 24-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது கர்நாடக உயர் நீதிமன்றம். இந்நிலையில், இந்த உத்தரவு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது எக்ஸ் தரப்பு. அதன் பின்னணி குறித்து பார்ப்போம். இந்திய தகவல் தொழில்நுட்ப விதியின் சட்டப் பிரிவு 79-ன் கீழ் எக்ஸ் நிறுவனத்துக்கு சில ட்வீட்களை நீக்குவது மற்றும் சிலரின் கணக்குகளை முடக்குவது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எக்ஸ் தரப்பில் கர்நாடக உயர் … Read more

கரூர் பேரணி விஜய் விவகாரம்.. விசாரணை நடத்த எட்டு பேர் கொண்ட குழுவை அமைத்தது டெல்லி பாஜக

NDA-BJP MPs committee: தமிழ்நாட்டின் கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தின் போது நடந்த துயர சம்பவம் குறித்து விசாரிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP) 8 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

பிஹாரில் 160+ இடங்களில் வெற்றி பெறுவோம் என அமித் ஷா கூறுவது வாக்கு திருட்டின் மீதான நம்பிக்கை: காங்.

புதுடெல்லி: வாக்கு திருட்டு மீதான நம்பிக்கை காரணமாகவே, பிஹாரில் இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 160 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அமித் ஷா தெரிவித்துள்ளார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பிஹாரின் அராரியா நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “பிஹாரில் கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக சிறப்பாக செயல்பட்டது. இம்முறை இன்னும் … Read more

சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

திருவனந்தபுரம்: கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் இணைந்து இந்த தீர்மானத்தை இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றி உள்ளன. அந்த தீர்மானத்தில், “கேரளாவில் இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் நோக்கில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது … Read more

வக்பு சட்டப் போராட்டம் குறித்து விஎச்பி கவலை: கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அரசிடம் வேண்டுகோள்

புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வக்பு சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) கவலை தெரிவித்துள்ளது. வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மீது பல அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளனர். இதன் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் வக்பு சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் அக்டோபர் 3 ஆம் தேதி நாடு … Read more

புதிய வீடு கட்டும் மக்களுக்கு ஜாக்பாட்! மணல் முற்றிலும் இலவசம் – முதல்வர் அறிவிப்பு!

வீடு கட்டும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கனவை நனவாக்கும் வகையில், மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஒரு அதிரடியான மற்றும் புரட்சிகரமான திட்டத்தை அறிவித்துள்ளார்.

வங்கி வாடிக்கையாளர்களின் ரூ.16 கோடியை சுருட்டிய அதிகாரி

புதுடெல்லி: பேங்க் ஆப் இந்​தி​யா​வில் அதி​காரி​யாக பணி​யாற்றி வந்​தவர் ஹிதேஷ் சிங்லா (32). இவர் வேலை பார்த்த வங்கிகிளையில் தணிக்கை நடை​பெற்ற போது இந்த மோசடி வெளிச்​சத்​துக்கு வந்​தது. 2023 மே முதல் 2025 ஜூலை வரையி​லான கால​கட்​டத்​தில் எப்​டி, பிபிஎப், மூத்த குடிமக்​கள் சேமிப்பு திட்​டம் மற்​றும் செயலற்ற கணக்​கு​களில் உள்ள ரூ.16.10 கோடி மதிப்பிலான பணத்தை சிங்லா தன் வங்கி கணக்​கிற்கு மாற்​றிக் கொண்​டுள்​ளார். குறிப்​பாக, மூத்த குடிமக்​கள், மைனர், இறந்தவர்கள் மற்​றும் அரி​தாகவே … Read more

திருமலை மாட வீதிகளில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஆய்வு

திருமலை: ​திரு​மலை​யில் உள்ள மாட வீதி​களில் நேற்று பிற்​பகல் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் ஆய்வு மேற்​கொண்​டார். அங்​குள்ள பக்​தர்​களிடம், அன்​னபிர​சாதம், குடிநீர் போன்​றவை சரிவர வழங்​கப்​படு​கிற​தா? முதல் உதவி சிகிச்​சைகள் உடனுக்​குடன் கிடைக்​கிற​தா? குழந்​தைகளுக்கு பால் வழங்​கப்​படு​கிற​தா? உள்​ளிட்ட பல கேள்வி​களை பக்தர்கள் மற்​றும் அங்​கிருந்த ஸ்ரீ​வாரி சேவகர்​களிடம் அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் கேட்​டறிந்​தார். கருட சேவைக்கு திரு​மலைக்கு நிமிடத்​துக்கு ஒரு பேருந்து வீதம் திருப்​ப​தி​யில் இருந்து திரு​மலைக்கு இயக்​கப்​பட்​டன. பைக்​கு​கள் … Read more