ரூ.44,000 கோடியில் கண்ணிவெடி அகற்றும் திட்டம்: சீனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்தியா மீண்டும் தொடக்கம்

கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்க எதிரிப் படைகளால் கடலுக்கடியில் வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்க 12 சிறப்பு போர்க்கப்பலை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்கான நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டத்தை இந்தியா மீண்டும் மும்முரமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அண்டை நாடான சீனாவுடன் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா இந்த நடவடிக்கையை தொடங்க உள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: எதிரி நாட்டு படைகளால் துறைமுகங்களை அழிக்கவும், கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் வணிகத்தை சீர்குலைக்கவும் நீருக்கடியில் வைக்கப்படும் … Read more

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும் 9,000 எச்.பி. திறன் கொண்ட மின்சார ரயில் இன்ஜினையும் அறிமுகம் செய்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று குஜராத் மாநிலம் சென்றடைந்தார். தாஹோத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் தாஹோத் நகரில் … Read more

பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்த டெல்லி நீதிமன்றம்!

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான போக்சோ வழக்கை முடித்து வைத்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். காவல் துறையின் பரிந்துரையின் பேரில் நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் போலீஸாரின் பிஆர்ஓ, “மைனர் மல்யுத்த வீராங்கனை அளித்த புகாருக்கு உறுதியான ஆதாரம் இல்லை. அவரும் அவரது தந்தையும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அறிக்கை அளித்துள்ளோம். இதனால் பிரிஜ் பூஷண் சரண் சிங் … Read more

“மன்மோகன் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி அதிகம்” – ப.சிதம்பரம்

புதுடெல்லி: நாட்டின் தனிநபர் வருமான உயர்வை பொறுத்தவரை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 10 ஆண்டு கால உயர்வைவிட, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால உயர்வு அதிகம் என்று முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்தியாவின் தனிநபர் வருமானம் 2013-14-ஆம் ஆண்டில் 1438 அமெரிக்க டாலர்களிலிருந்து 2024-இல் 11 ஆண்டுகளில் 2880 அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாகியுள்ளது … Read more

கர்நாடக பெண் ஐஏஎஸ் அதிகாரியை 'பாகிஸ்தானி' என்று பாஜக பிரமுகர் அழைத்ததால் சர்ச்சை!

பெங்களூரு: பெண் ஐஏஎஸ் அதிகாரியை ‘பாகிஸ்தானி’ என்று கூறிய கர்நாடக பாஜக எம்எல்சி ரவிக்குமாரின் கருத்து அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. பாஜகவை சேர்ந்த சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் சலவாடி நாராயணசாமி, கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கேவை நாயோடு ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறப்பட்டதை அடுத்து, மே 21 அன்று நாராயணசாமி கலபுரகி சித்தாப்பூரில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது காங்கிரஸ் தொண்டர்கள் அவரை முற்றுகையிட்டு உள்ளே அடைத்தனர். இதனையடுத்து கலபுரகியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய … Read more

நீதிபதி யஷ்வந்த் வர்மா பண விவகாரம்: உள்ளக குழு அறிக்கையை கோரிய ஆர்டிஐ மனு நிராகரிப்பு

புதுடெல்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் டெல்லி இல்லத்தில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்ற நிர்வாகம் நிராகரித்துள்ளது. தற்போது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மா, இதற்கு முன் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். கடந்த மார்ச் 14-ம் தேதி இரவு அவரது டெல்லி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, … Read more

பாகிஸ்தானிடம் சொல்லிவிட்டுதான் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடந்ததா? – காங். குற்றச்சாட்டுக்கு ஜெய்சங்கர் ரியாக்‌ஷன்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதாக காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டு நேர்மையற்றது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டம் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சி.வேணுகோபால், ஜெயா பச்சன், தயாநிதி மாறன், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக டெல்லியில் சிஆர்பிஎஃப் வீரர் கைது

புதுடெல்லி: பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காக தேசிய புலனாய்வு முகமை (NIA) திங்கள்கிழமை (மே 26) CRPF பணியாளர் ஒருவரைக் கைது செய்தது. அவர் கைது செய்யப்பட்ட உடனேயே மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவரை பணிநீக்கம் செய்தது. குற்றம் சாட்டப்பட்ட மோதி ராம் ஜாட் என்ற அந்த நபர் CRPF-இல் உதவி துணை ஆய்வாளராகப் பணியாற்றி வந்துள்ளார். உளவு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்ட அவர், 2023 முதல் தேசிய பாதுகாப்பு தொடர்பான … Read more

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்… எப்போது வருகிறது தெரியுமா? வந்தது பெரிய அப்டேட்!

Bullet Train: இந்தியாவில் புல்லட் ரயில் சேவை எப்போது, எங்கு தொடங்கப்பட உள்ளது என்பது விரிவான அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. 

குஜராத்தில் பிரதமரின் ‘ரோடு ஷோ’வில் கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் பங்கேற்பு

வதோதரா: குஜராத்தின் வதோதரா நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினர் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வதோதராவில் வாகனப் பேரணி நடத்தினார். அப்போது, சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் காத்திருந்து அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். சாலையோரத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடையில் … Read more