பாஜக, நிதிஷ்குமாருக்கு எத்தனை சீட்? NDA-க்கு தீர்ந்தது தலைவலி – பீகார் அப்டேட்

Bihar Assembly Election 2025: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக – நிதிஷ்குமாரின ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

முடிவுக்கு வந்தது தொகுதிப் பங்கீடு பிரச்சினை: பிஹார் பாஜக தலைவர் தகவல்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது, வேட்பாளர் பட்டியல் வார இறுதியில் வெளியாகும் என பிஹார் பாஜக தலைவர் திலிப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய திலிப் ஜெய்ஸ்வால், “பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டுக்காக பாஜக டெல்லியில் 3 நாள் தேர்தல் குழு கூட்டத்தை நடத்தியது, அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. பாஜக ஒரு தேசிய கட்சி. பாஜகவின் மத்திய தலைமை தேர்தல் குழு, மத்திய நாடாளுமன்ற குழு மூலம் வேட்பாளர்களைத் … Read more

‘அரசமைப்பை காக்க ராகுல் காந்தி போராடுகிறார்’ – அமைதிக்கான நோபல் பரிசு குறித்து காங். கருத்து

புதுடெல்லி: அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. அவர் வெனிசுலா நாட்டின் எதிர்க்​கட்​சித் தலை​வர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவருடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஒப்பிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுரேந்திரா ராஜ்புத். “அரசமைப்பை பாதுகாக்கும் நோக்கில் போராடிய வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் … Read more

ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாத விவகாரம் – வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது குறித்த விவகாரத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஆறு நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி, நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே முதல்முறையாக உயர்மட்ட அளவில் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பேசிய ஜெய்சங்கர், “ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, … Read more

அகிலேஷ் யாதவின் பேஸ்புக் பக்கம் முடக்கம்: 80 லட்சம் பேர் தொடரும் சமாஜ்வாதியின் முக்கிய ஊடகம்!

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. 80 லட்சம் பேர் தொடரும் இந்தப் பக்கம் கட்சியின் முக்கிய ஊடகம். முகநூலின் இந்த முடக்க நடவடிக்கையால் உ.பி.யின் கன்னோஜ் தொகுதி எம்.பியான அகிலேஷ் யாதவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தை முடக்கியதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தம் தலைவரது பக்கத்தை மீண்டும் நிறுவுமாறு பேஸ்புக் நிறுவனத்திடம் சமாஜ்வாதி கட்சி கோரியுள்ளது. அதேசமயம், பேஸ்புக்கின் இந்த நடவடிக்கையை சமாஜ்வாதி கட்சியினர் … Read more

சீனாவைச் சேர்ந்தவர் வீட்டில் சோதனை

திருப்​பதி: சீன நாட்டை சேர்ந்​தவர் ட்யூ யாங்​கன். விசா நிபந்​தனை​களை மீறியது, போலி ஆவணங்​கள் தயாரித்​தது, நிபந்​தனை​களை மீறி இந்​தி​யா​வில் தங்​கியது தொடர்​பாக 2021-ம் ஆண்டு யாங்​கன் மீது புகார் எழுந்​தது. இதையடுத்து திருப்​பதி அருகே உள்ள ரேணி​குண்டா போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்​தனர். இவ்​வழக்கு திருப்​பதி நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது. இதனைத் தொடர்ந்​து, அவர், பல பகு​தி​களில் தொழிற்​சாலைகளில் பணி​யாற்​றும் சீன நாட்​டைச் சேர்ந்​தவர்​களுக்​காகவே ரேணி​குண்​டா​வில் ‘பிக் கிச்​சன்’ என்ற சீன … Read more

தீபாவளிக்கு 29 லட்சம் விளக்குகளை ஏற்ற தயாராகும் அயோத்தி: ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் பாஜக ஆட்சி அமைந்​தது முதல் ஒவ்​வொரு தீபாவளி பண்​டிகைக்​கும் அயோத்​தி​யில் லட்​சக் கணக்​கில் அகல் விளக்​கு​கள் ஏற்​றப்​படு​கின்​றன. இது உலக சாதனை​யாகப் பதி​வாகி வரு​கிறது. அந்த வகை​யில், தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு வரும் 19-ம் தேதி 9-வது தீப உற்​சவம் நடை​பெற உள்​ளது. இவ்​விழாவை உ.பி. அரசு சார்​பில் அயோத்​தி​யின் ராம் மனோகர் லோகியா அவத் பல்​கலைக்கழகம் நடத்​துகிறது. இதில், 29 லட்​சம் அகல் விளக்​கு​கள் ஏற்ற திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதன்​முலம் கடந்த ஆண்​டின் … Read more

தொழிலாளர் வரைவு கொள்கை வெளியீடு: பெண்கள், சமூகப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம்

புதுடெல்லி: பெண்​கள் மற்​றும் சமூகப் பாது​காப்​பில் அதிக கவனம் செலுத்​தும் வகையி​லான தொழிலா​ளர் வரைவு கொள்கையை மத்​திய அரசு வெளி​யிட்​டுள்​ளது. வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் பெண்​களின் பங்​களிப்பை 35 சதவீத​மாக அதி​கரிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. அதேபோன்​று, இளைஞர்​களுக்​கான தொழில்​முனைவு மற்​றும் அதற்​கான வழி​காட்​டு​தல் முயற்​சிகளை விரி​வாக்​கம் செய்​வதை​யும் முக்​கிய நோக்​க​மாக கொண்டு அரசு இந்த வரைவு கொள்கையை தயாரித்​துள்​ளது. பல தளங்​களை தேடிச் சென்று பார்​வை​யிடு​வதற்கு பதிலாக, தொழிலா​ளர்​கள் தங்​கள் நன்​மை​களை ஒரே தொகுப்​பின் கீழ் பார்த்து … Read more

சபரிமலை தங்க முலாம் விவகாரம்: கேரள ஐகோர்ட் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க முலாம் காணாமல் போனது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க முலாம் காணாமல் போனது தொடர்பான விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு ஆறு வாரங்களுக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை தொடர்பான எந்தத் தகவலும் கசியக்கூடாது என்றும், சிறப்பு புலனாய்வுக் குழு சீல் வைக்கப்பட்ட கவரை நேரடியாக நீதிமன்றத்திற்கு … Read more

சோதனையின் போது ரூ.1.45 கோடி ஹவாலா பணத்தை சுருட்டிய 9 ம.பி. காவலர்கள் சஸ்பெண்ட்

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்​பகு​தி​யில் கடந்த புதன்​கிழமை இரவு நடந்த வாகன சோதனை​யின்​போது பந்​தோல் காவல் நிலையை பொறுப்​பாளர் மற்​றும் காவலர்​கள் ஒரு நான்கு சக்கர வாக​னத்தை வழிமறித்​துள்​ளனர். அப்​போது அதில், மத்​தி​யப் பிரதேசத்​தில் உள்ள கட்​னி​யில் இருந்து மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள ஜல்​னா​விற்கு ஒரு பெரிய அளவி​லான தொகை கொண்டு செல்​லப்​பட்​டது தெரிய​வந்​தது. ஹவாலா பணம் என சந்​தேகப்​பட்ட போலீ​ஸார் அதனை பறி​முதல் செய்​வதற்​குப் பதிலாக, ஓட்​டுநரை அடித்து விரட்டி விட்டு அந்​தப் பணத்தை … Read more