தீபாவளி வாழ்த்து கூறிய ட்ரம்ப்; நன்றி சொன்ன மோடி – வரி விதிப்பு குறித்து மவுனம்!

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீபாவளி அன்று தனக்கு தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்ததை உறுதிப்படுத்திய பிரதமர் மோடி, அவருக்கு நன்றி தெரிவித்தார். இருப்பினும், ரஷ்ய எண்ணெய் விவகாரம், வரிகள் மற்றும் வர்த்தகம் போன்ற பிரச்சினைகள் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ அதிபர் ட்ரம்ப், உங்கள் தொலைபேசி அழைப்பு மற்றும் அன்பான தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி. இந்த தீபத் திருநாளில், நமது இரண்டு பெரிய ஜனநாயக … Read more

திருமலையில் மழை வாகன ஓட்டிகள் அவதி

திருப்​பதி மற்​றும் திரு​மலை​யில் கடந்த 3 நாட்​களாக ஓயாமல் மழை பெய்து வரு​கிறது. இதனால் வெளியூர்​களில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய திரு​மலைக்கு வந்த பக்​தர்​கள் அறை​களி​லேயே தங்க வேண்​டிய சூழ்​நிலை ஏற்​பட்​டுள்​ளது. இரண்​டாவது மலைப்​பாதை​யில் 15-வது வளை​வில் நிலச்​சரிவு ஏற்​பட்​டு, பாறை​கள் சாலை​யில் வந்து விழுந்​தன. எனினும் இதில் அசம்​பா​விதம் ஏதும் ஏற்​பட​வில்​லை. இந்த நிலச்​சரி​வால் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​ட​தால் வாகன ஓட்​டிகள் அவதி​யுற்​றனர். Source link

ஆந்திராவில் சொத்து பிரச்சினை காரணமாக தந்தையின் உடலை 3 நாட்களாக அடக்கம் செய்ய விடாமல் தடுக்கும் மகன்

அமராவதி: சொத்​துக்​காக தந்​தை​யின் சடலத்தை அடக்​கம் செய்ய விடா​மல் தடுக்​கும் மகனால், 3 நாட்​களாக தந்​தை​யின் சடலம் வீட்டு வாசலிலேயே அனாதை​யாய் கிடக்​கிறது. ஆந்​திர மாநிலம், பல்​நாடு மாவட்​டம், பழைய சொலசா கிராமத்தை சேர்ந்த விவ​சாயி ஆஞ்​சநே​யுலு (85). இவர் கூலி வேலை செய்​து, 20 ஏக்​கர் விவ​சாய நிலத்தை வாங்கி அதில் விவ​சா​யம் செய்து வந்​துள்​ளார். கடந்த 10 ஆண்​டு​களுக்கு முன்​னர் ஆஞ்​சநேயலு​வின் மனைவி உடல்நலம் குன்றி மரணமடைந்​தார். இவருக்கு நாகேஸ்வர ராவ், வெங்​கடேஸ்​வருலு என … Read more

பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்பு பரிமாற்றம் தவிர்ப்பு

ஜெய்ப்பூர்: சுதந்திர தினம், குடியரசு தினம், தீபாவளி, ரம்ஜான் உள்ளிட்ட நாட்களில் இந்திய – பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு வீரர்களும் பல ஆண்டுகளாக இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். என்றாலும் எல்லையில் பதற்றம் ஏற்பட்டால் இந்த இனிப்பு பரிமாற்றம் ரத்து செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட கடுமையான நிலைப்பாட்டை … Read more

குருவாயூர் கோயில் பொக்கிஷங்களுக்க முறையான ஆவணங்கள் இல்லை: தணிக்கை அறிக்கையில் அம்பலம்

திருவனந்தபுரம்: கேரளா​வில் உள்ள குரு​வாயூர் கோயிலுக்கு சொந்​த​மாக தங்​கம், வெள்ளி ஆபரணங்​கள், பாத்​திரங்​கள், தந்​தம், பக்​தர்​கள் காணிக்​கை​யாக அளிக்​கும் பொருட்​கள் அதி​கள​வில் உள்​ளன. ஆனால், இந்த பொக்​கிஷங்​களுக்​கான ஆவணங்​கள் சரி​யாக பராமரிக்​கப்​ப​டாத​தால், முறை​கேடு​களுக்​கான வாய்ப்பு அதி​கம் உள்​ளது என குரு​வாயூர் தேவசம் வாரி​யத்​தின் தணிக்கை அறிக்கை மூலம் தெரிய​வந்​துள்​ளது. குரு​வாயூர் தேவசம் வாரி​யத்​தின் புன்​னத்​தூர் கோட்டா சரணால​யத்​தில் கடந்த 2019-20-ம் ஆண்டு அறிக்​கை​யில் 522.86 கிலோ தந்​தம் மற்​றும் தந்​தப் பொருட்​கள் உள்​ள​தாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. சட்​டப்​படி தந்​தம் … Read more

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தரிசனம்

குமுளி: மாதாந்​திர பூஜைக்​காக சபரிமலை ஐயப்​பன் கோயி​ல் நடை கடந்த 17-ம் தேதி மாலை திறக்​கப்​பட்​டது. மறு​நாள் முதல் கணபதி பூஜை, நெய் அபிஷேகம் உள்​ளிட்ட பல்​வேறு தொடர் வழி​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. குடியரசு தலை​வர் திர​வுபதி முர்மு இன்று சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் தரிசனம் செய்ய உள்​ளார். இதற்​காக நேற்று பிற்​பகலில் இருந்தே பக்​தர்​களின் வருகை கட்​டுப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. கனமழை தொடர்ந்​த​தால் குறை​வான பக்​தர்​களே நேற்று சுவாமி தரிசனத்​துக்கு வந்​திருந்​தனர். இதனால் பம்​பை, அப்​பாச்​சிமேடு, நடைப்பந்​தல் உள்​ளிட்ட … Read more

பஞ்சாபில் மகன் மர்ம மரணம் தொடர்பாக முன்னாள் டிஜிபி, மனைவி மீது வழக்குப் பதிவு

சண்டிகர்: பஞ்​சாபில் மர்ம மரணமடைந்த மகன் வெளி​யிட்​டிருந்த சமூக வலை​தளப் பதி​வால், பெற்​றோர் மீது போலீ​ஸார் கொலை வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். பஞ்​சாப் மாநில முன்​னாள் டிஜிபி முகமது முஸ்​த​பா, முன்​னாள் அமைச்​சர் ரஸியா சுல்​தா​னா தம்பதியின் மகன் அகில் அக்​தர் (35). கடந்த அக்​டோபர் 16-ம் தேதி வீட்​டில் மர்மமான முறையில் உயி​ரிழந்​தார். அக்​தர் அதிக போதைப் பொருள் உட்​கொண்​ட​தால் இறந்​ததாக கூறப்​பட்​டது. ஆனால், அக்​தர் மரணத்​தில் சந்​தேகம் அடைந்த அவரது குடும்​பத்​துக்கு அறி​முக​மான சம்​சுதீன் … Read more

கூகுள் ஏஐ மையம்: EPS சொன்ன அந்த வார்த்தை – உடனே சந்திரபாபு மகன் போட்ட பதிவு

Google AI and Data Centre: கூகுள் நிறுவனம் தமிழ்நாட்டை தேர்வு செய்தாதது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு, ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் அளித்த பதிலை இங்கு காணலாம்.

“பிஹாரில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை” – பிரச்சாரம் தொடங்கிய நிதிஷ் குமார் வாக்குறுதி

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முசாபர்பூர் மாவட்டத்தின் மினாபூர் தொகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் நிதிஷ் குமார். அப்போது பேசிய நிதிஷ் குமார், “பிஹாரில் மொத்தம் 50 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு … Read more

நவி மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு; 14 பேர் காயம்

மும்பை: மகாராஷ்டிராவின் நவி மும்பை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள், ஒரு சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். நவி மும்பையின் வாஷி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் நள்ளிரவுக்குப் பின் சுமார் 12.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர், தீ 11 மற்றும் 12வது மாடிகளுக்கும் பரவியுள்ளது. இது குறித்த தகவல் கிடைத்ததும் 8 தீ அணைப்பு வாகனங்களில் … Read more