‘1 கோடி அரசு வேலை, விவசாயிகளுக்கு ரூ.9000’ – பிஹாரில் தே.ஜ. கூட்டணியின் தேர்தல் அறிக்கை!

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டு தேர்தல் அறிக்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று வெளியிட்டது. ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை, விவசாயிகளுக்கு ரூ.9 ஆயிரம் நிதியுதவி உள்ளிட்ட வாக்குறுதிகள் இந்த 69 பக்க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 2025 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான கூட்டு தேர்தல் அறிக்கை இன்று ( அக்டோபர் 31) வெளியிடப்பட்டது. பாட்னாவில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, முதல்வர் நிதிஷ் குமார், எல்ஜேபி தலைவர் சிராக் … Read more

ஆர்எஸ்எஸ் அமைப்பை பிரதமர் மோடி தடை செய்ய வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கூறுகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “நாட்டின் தற்போதைய சட்டம் – ஒழுங்கு நிலைக்கு பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும்தான் காரணம். சர்தார் வல்லபாய் படேல் முன்வைத்த கருத்துகளை பிரதமர் நரேந்திர மோடி உண்மையிலேயே மதிக்கிறார் என்றால் அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும். இது எனது தனிப்பட்டக் கருத்து. இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். … Read more

பிஹார் தேர்தலில் தாக்கம் செலுத்தும் ‘தமிழ்நாடு மாடல்’ – வாக்குறுதிகள் சொல்வதென்ன?

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பிரதான அணிகளான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியின் தேர்தல் அறிக்கைகளில் பல்வேறு தமிழகத் திட்டங்கள் தாக்கம் செலுத்தியுள்ளன. இதன் பின்னணி குறித்து பார்ப்போம். பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, ஹெச்ஏஎம், ஆர்எல்பி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியில் … Read more

“இந்திய மதிப்புகளைப் பற்றி எப்போதும் அச்சமின்றிப் பேசும் அமைப்பே ஆரிய சமாஜம்” – பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்திய மதிப்புகளைப் பற்றி எப்போதும் அச்சமின்றி பேசும் அமைப்பு ஆரிய சமாஜம் என்றும், அதன் நிறுவனரான தயானந்த சரஸ்வதி பெண்களின் விடுதலைக்காகப் பாடுபட்ட தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஆரிய சமாஜத்தின் 150-ம் ஆண்டை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஆரிய சமாஜம் நிறுவப்பட்ட 150 ஆண்டுகள் என்பது சமூகத்தின் ஒரு பிரிவினரோடு மட்டும் தொடர்புடையது அல்ல. மாறாக, அது முழு நாட்டின் வேத … Read more

“எங்கள் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்துள்ளது என்டிஏ” – தேஜஸ்வி விமர்சனம்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்கள் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டவை என தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், “அவர்கள் எல்லாவற்றையுமே காப்பி அடிக்கிறார்கள். அவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் எங்கள் தேர்தல் அறிக்கையைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டவையே. சமீபத்தில் நாங்கள் … Read more

காதலுக்காக தாயை கொன்ற 16 வயது சிறுமி.. பெங்கரூரில் அதிர்ச்சி! என்ன நடந்தது?

பள்ளி வயதிலுள்ள ஒரு மாணவி, தனது காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது. 

என்டிஏ தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் நிதிஷை பேச அனுமதிக்கவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் முதல்வர் நிதிஷ் குமாரை பேச அனுமதிக்கவில்லை என்றும், இது பிஹார் மற்றும் பிஹாரிகளுக்கு அவமானம் என்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மஞ்சி, சிராக் … Read more

அட கொடுமையே… டிஜிட்டல் மோசடியில் ரூ.1 கோடியை இழந்த முதியவர்… ஷாக்கில் பிரிந்த உயிர்

Digital Arrest: டிஜிட்டல் மோசடியில் ரூ.1.19 கோடியை இழந்த முதியவர், அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். டிஜிட்டல் மோசடி நாளுக்கு நாள் பெருகி கொண்டு வரும் நிலையில்,  தனது வாழ்நாள் சேமிப்பை இழந்ததில் ஷாக்கான முதியவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்பு

ஹைதராபாத்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் இன்று தெலங்கானா அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், முகமது அசாருதீன் அமைச்சராக நியமிக்கப்படுவார் என பேசப்பட்டு வந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத அவரை ஆளுநர் கோட்டாவில் சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்ய தெலங்கானா அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் … Read more

முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார்; நேரு அனுமதிக்கவில்லை – பிரதமர் மோடி

நர்மதா: ‘சர்தார் வல்லபாய் படேல் மற்ற சமஸ்தானங்களை இணைத்தது போல், முழு காஷ்மீரையும் நாட்டுடன் ஒன்றிணைக்க விரும்பினார். ஆனால் அப்போதைய பிரதமர் நேரு அதை நடக்க அனுமதிக்கவில்லை’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமரான 2014 முதல் அக்டோபர் 31 ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒற்றுமை தினம்) ஆகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பிரதமர் மோடி குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள … Read more