ஆந்திராவில் எரிந்த பேருந்தில் இருந்த 234 ஸ்மார்ட்போன்களால் தீயின் தீவிரம் அதிகரித்ததா?

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பைக் மீது பேருந்து மோதி தீப்பிடித்தது. இதில் 2 சிறுவர்கள் உட்பட 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்தை பேருந்தில் இருந்த 234 ஸ்மார்ட்போன்கள் மேலும் தீவிரப்படுத்தியிருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 23-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ‘வி-காவேரி’ எனும் தனியார் சொகுசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் கர்னூல் வழியாக பெங்களூரு … Read more

பாத்ரூமில் குளிக்க சென்ற சகோதரிகள் உயிரிழப்பு.. இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க

Bengaluru Crime News: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கழிவறையில் ஒன்றாக குளிக்கச் சென்ற சகோதரிகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காற்றோட்டம் இல்லாத வகையில், அந்த கழிவறை இருந்ததும், அவர்களது உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்துள்ளது.   

மகாராஷ்டிர பெண் மருத்துவர் தற்கொலை: ஒருவர் கைது – மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

மும்பை: மகாராஷ்டிர பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பிரசாந்த் பங்கரை சதாரா போலீஸார் இன்று கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே தலைமறைவாகிவிட்டார், அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சதாரா எஸ்பி தோஷி, “பால்டன் தாலுகாவில் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரில் ஒருவரான பிரசாந்த் பங்கரை போலீஸார் கைது செய்தனர், அவர் இன்று நீதிமன்றத்தில் … Read more

பாக். அணு ஆயுதங்களை அமெரிக்காவிடம் முஷாரப் ஒப்படைத்தார்: சிஐஏ முன்னாள் அதிகாரி தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் அந்நாட்டு அணு ஆயுதக் கிடங்கின் முழு கட்டுப்பாட்டையும் அமெரிக்காவிடம் ஒப்படைத்தார் என்றும், முஷாரப்பை அமெரிக்கா மில்லியன் கணக்கான டாலர்களை கொடுத்து வாங்கியது என்றும் முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ கூறினார். பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் தலைவர் உட்பட அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவில் 15 ஆண்டுகள் பணியாற்றிய ஜான் கிரியாகோ சமீபத்தில் செய்தி நிறுவனாம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், “பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை … Read more

ஒசாமா பின்லேடன் பெண் வேடமிட்டு ஆப்கனிஸ்தானில் இருந்து தப்பினார்: முன்னாள் சிஐஏ அதிகாரி

புதுடெல்லி: ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அவர் பெண் வேடமணிந்து தப்பியதாக முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார். 9/11 தாக்குதல்: கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அல் கயிதா அமைப்பின் 19 பயங்கரவாதிகள், 4 வர்த்தக விமானங்களைக் கடத்தினர். அதில், இரண்டு விமானங்கள் மூலம் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரம் (ட்வின் டவர்) என வர்ணிக்கப்பட்ட இரண்டு மிக உயரமான … Read more

கர்னூல் பேருந்து விபத்து: உள்ளே இருந்த 234 ஸ்மார்ட்போன்கள்… தீ அதிகமாக இதுதான் காரணமா?

Kurnool Bus Accident: கர்னூல் நகரில் பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் இருந்த 234 ஸ்மார்ட்போன்களே தீயை தீவிரப்படுத்தியிருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.

நிதிஷை மீண்டும் முதல்வராக்க மாட்டார்கள்; பாஜக அவரை கடத்திச் சென்றுவிட்டது: தேஜஸ்வி யாதவ்

பாட்னா: நிதிஷ் குமாரை பாஜக கடத்திச் சென்றுவிட்டது என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் அவரை பிஹாரின் முதல்வராக்க மாட்டார்கள் என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். சஹர்சா மாவட்டத்தில் நடந்த பேரணியில் பேசிய தேஜஸ்வி யாதவ், “தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களே பிஹார் முதல்வரை முடிவு செய்வார்கள் என்று அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு … Read more

பாஜக அதிருப்தி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் ஆதரவு

கோபால்கன்ச்: பிஹார் கோபால்கன்ச் தொகுதியில் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சசி சேகர் சின்ஹா திடீரென தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். பாஜக அழுத்தம் காரணமாக அவர் தனது மனுவை வாபஸ் பெற்றார் என பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டினார். இந்நிலையில் கோபால்கன்ச் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பாஜக அதிருப்தி வேட்பாளர் அனுப் குமார் வஸ்தாவுக்கு ஜன் சுராஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என பிரசாந்த் கிஷோர் நேற்று அறிவித்தார். இது குறித்து பிரசாந்த் … Read more

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 2 தீவிரவாதிகள் கைது

புதுடெல்லி: டெல்லி காவல் துறை கூடுதல் ஆணையர் பிரமோத் குஷ்வாஹா நேற்று கூறியதாவது: கடந்த 16-ம் தேதி அட்னான் என்பவரை டெல்லி சாதிக் நகரிலும் பிறகு அதே பெயருடைய மற்றொருவரை போபால் நகரில் கைது செய்தோம். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் ஐஎஸ்ஐஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதும் டெல்லியில் தீபாவளி பண்டிகை நாளில் பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது. தெற்கு டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஒரு வணிக வளாகம், பூங்கா உள்ளிட்ட இடங்களை … Read more

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

புதுடெல்லி: இளைஞர்​களுக்கு அதி​காரம் அளிப்​ப​தற்​கான பணி​யில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி அரசு ஈடு​பட்டு வரு​கிறது என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார். இளைஞர்​களுக்கு அரசு பணி ஆணையை வழங்​கும் 17-வது ரோஜ்கர் மேளா ஜார்க்கண்ட் மாநில ராஞ்சியில் நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்​திர மோடி​யின் பேச்சு ஒலிபரப்​பப்​பட்​டது. அதில் பிரதமர் நரேந்​திர மோடி கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டில் இளைஞர்​களுக்கு வழி​காட்​டும் சிறந்த அரசாக பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி அரசு செயல்​பட்டு வரு​கிறது. இளைஞர்​களுக்கு மத்​திய … Read more