திரும்பப் பெறப்பட்ட தனியார் பல்கலை. சட்டத் திருத்தம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
சென்னை: தனியார் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்தம் குறித்து மக்கள் மன்றத்தில் இருந்து வந்த விமர்சனக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து, அந்த சட்ட மசோதாவை திரும்பப் பெறும் தமிழக அரசின் முடிவை வரவேற்பதாக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘அண்மையில் நடந்த சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் தனியார் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்த மசோதாவால் ஏற்படும் எதிர்விளைவுகள், அரசின் சமூகநீதிக் கொள்கைக்கு … Read more