கர்நாடக குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் தாயகம் திரும்ப உதவி செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்​நாடகா மாநிலம் உத்தர கன்​னடா மாவட்​டத்​தில் கோகர்ணா அரு​கே​யுள்ள‌ ராமதீர்த்த மலை குகை​யில் ரஷ்​யாவை சேர்ந்த நினா குடினா (40) தனது 2 மகள்​களு​டன் வசித்து வந்​தார். அவரது பாஸ்​போர்ட் தொலைந்து விட்​ட​தால், கடந்த 6 ஆண்​டு​களாக அங்கு சட்ட விரோத​மாக தங்​கி​யிருந்​தது தெரிய வந்​தது. இதையடுத்து கர்​நாடக போலீ​ஸார் அவரை மீட்டு கடந்த ஜூலை​யில் அரசு காப்​பகத்​தில் தங்க வைத்​தனர். இந்​நிலை​யில் நினா குடி​னா​வின் கணவர் ட்ரோர் ஷலோமா கோல்ட்​ஸ்​டெ​யின் கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் … Read more

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா பிரதமர் நரேந்திர மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் நிதி உதவி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

அமராவதி: ஒவ்​வொரு ஆண்​டும் ஆட்டோ ஓட்​டுநர்​களுக்கு தலா ரூ. 15 ஆயிரம் நிதி உதவி வழங்​கப்​படும் என்று ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு அறி​வித்​துள்​ளார். ஆந்​திர மாநில மழைக்​கால சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடர் தற்​போது அமராவ​தி​யில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: தேர்​தல் வாக்​குறு​தி​களை கூட்​டணி அரசு வெற்​றிகர​மாக செயல்​படுத்தி வரு​கிறது. சூப்​பர் சிக்ஸ் திட்​டம் ஆந்​தி​ரா​வில் சூப்​பர் வெற்​றி. ஒவ்​வொரு மாத​மும் முதல் தேதி அன்று மாத உதவி தொகைகளை நேரில் சென்று … Read more

சோனம் வாங்சுக் கைது ஏன்? – லடாக் டிஜிபி விளக்கம்

லே: லடாக் யூனியன் பிரதேசத்​துக்கு மாநில அந்​தஸ்து கோரி, சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக் தலை​மை​யில் நடைபெற்ற உண்​ணா​விரம் போராட்​டம் வன்முறையாக மாறியது. இது குறித்து லடாக் டிஜிபி சிங் ஜாம்​வல் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: உண்​ணா​விரத போராட்​டம் வன்​முறை​யாக மாற சோனம் வாங்​சுக் காரண​மாக இருந்​தார். இந்த போராட்​டத்​தில் பாகிஸ்​தானுக்கு தொடர்பு உள்​ள​தான என விசா​ரணை நடை​பெறுகிறது. வாங்​சுக் ஏற்​கெனவே பாகிஸ்​தான் சென்​றுள்​ளார். இஸ்​லாம​பாத் அதி​காரி​களு​டன் அவர் பேசி​யுள்​ளார். லே பகு​தி​யில் போராட்​டம் மேலும் தீவிரமடைவதை … Read more

2029-ம் ஆண்டுக்குள் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்ற இலக்கு

சூரத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத், மகா​ராஷ்டிர மாநிலம் மும்பை இடையே புல்​லட் ரயில் திட்​டத்தை மத்​திய அரசு கட்​டமைத்து வரு​கிறது. இந்​நிலை​யில் நேற்று சூரத் பகு​தி​யில் கட்​டப்​படும் ரயில் நிலை​யத்தை மத்திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் பார்​வை​யிட்​டார். பின்​னர் அவர் கூறிய​தாவது: இந்​தி​யா​வின் முதல் புல்​லட் ரயில் திட்​டத்​தின் சூரத் மற்​றும் குஜ​ராத்​தில் உள்ள பிலிமோரா இடையே​யான 50 கி.மீ. நீளத்​துக்கு 2027-ம் ஆண்டு திறக்​கப்​படும். மேலும் 2029-ம் ஆண்​டுக்​கு மும்​பை அகம​தா​பாத் இடையே​யான முழுத் … Read more

ரஷ்ய ராணுவத்தில் இருந்து 27 இந்திய வீரர்களை விடுவிக்க வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்​தில் பணி​யாற்​றும் 27 இந்​திய வீரர்​களை உடனடி​யாக விடுவிக்க வேண்​டும் என்று மத்​திய அரசு வலி​யுறுத்தி உள்​ளது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் ரஷ்​யா, உக்​ரைன் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது. இதன்​காரண​மாக ரஷ்ய ராணுவத்​தில் வெளி​நாட்​டினர் அதிக அளவில் சேர்க்​கப்​பட்டு வரு​கின்​றனர். மத்​திய அரசின் வலி​யுறுத்​தலின்​பேரில் கடந்த சில ஆண்​டு​களில் 96 இந்​தி​யர்​கள் ரஷ்ய ராணுவத்​தில் இருந்து விடுவிக்​கப்​பட்​டனர். சுமார் 12 இந்​திய வீரர்​கள் போரில் உயி​ரிழந்​திருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இதுதொடர்​பாக மத்​திய வெளி​யுறவுத் … Read more

ஐ.நா.வில் ஷெபாஸ் ஷெரீப்புக்கு பதிலடி தந்த இந்திய தூதர் பீட்டல் – யார் இவர்?

புதுடெல்லி: நியூ​யார்க்​கில் ஐ.நா. பொதுச் சபை கூட்​டம் நடை​பெற்​றது. இதில் பல்​வேறு நாட்டு தலை​வர்​கள் பங்​கேற்​றனர். பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசும்​போது, “ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலின் போது, பாகிஸ்​தான் வெற்றி பெற்​றது. இந்​தி​யா​வின் 7 போர் விமானங்​களை நாங்​கள் சுட்டு வீழ்த்​தினோம்” என்று கூறி​னார். இந்​நிலை​யில், ஐ.நா. சபை​யில் இந்​தியா சார்​பில் நேற்று உரை​யாற்​றும் சுற்று வந்​தது. அப்​போது ஐ.நா.​வின் நிரந்தர பிர​தி​நி​தி​யான முதன்மை செயலர் பீட்​டல் கெலாட், ஷெபாஸ் ஷெரீப்​புக்கு சரி​யான பதிலடி கொடுத்​தார். … Read more

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப்பின் பாகிஸ்தான் உள் பகுதிக்கு மாறிய தீவிரவாதிகள்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலுக்​குப்​பின் பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் மற்​றும் பஞ்​சாப் எல்​லை​யில் செயல்​பட்டு வந்த ஜெய்​ஷ்​-இ-​முகமது, ஹிஸ்​புல் முஜாகிதீன் போன்ற தீவிர​வாத அமைப்​பு​கள் பாகிஸ்​தானின் உள் பகு​திக்கு தங்​கள் முகாம்​களை மாற்​றின. தற்​போது லஷ்கர்​-இ-தொய்பா அமைப்​பும் பாகிஸ்​தானின் உள்​பகு​திக்கு இடம் மாறி​யுள்​ளது. எதிர்​காலத்​தில் இந்​தி​யா​வின் தாக்​குதலை தவிர்ப்​ப​தற்​காக, இந்த அமைப்​பு​கள் தங்​களின் இருப்​பிடத்தை மாற்​றி​ உள்​ளன. ஆப்​கன் எல்​லை​யி​லிருந்து 47 கி.மீ தொலை​வில் உள்ள திர் மாவட்​டத்​தில் மர்​கஷ் ஜிகாத்​-இ-அக் ஷா என்ற புதிய மையத்தை லஷ்கர்​-இ-தொய்பா … Read more

இந்தியாவில் கார்ப்பரேட் தலைமைத்துவத்தில் பெண்களின் பங்கு முதல் முறையாக 20% எட்டியது

புதுடெல்லி: இந்​தி​யா​வில் முதல் முறை​யாக கார்ப்​பரேட் தலை​மைத்​து​வத்​தில் பெண்​களின் எண்​ணிக்கை 20 சதவீதத்தை எட்​டி​யுள்​ளது. இதுதொடர்​பாக நியூ​யார்க்கை சேர்ந்த அவதார்​-செ​ராமவுண்ட் ஆய்​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: இந்​தி​யா​வில் கார்ப்​பரேட் நிறு​வனங்​களின் தலைமை பொறுப்​பு​களில் 2016-ல் 13%-​மாக இருந்த பெண்​களின் எண்​ணிக்கை படிப்​படி​யாக அதி​கரித்து 2024-ல் 19% அளவுக்கு உயர்ந்​தது. இந்த நிலை​யில் தற்​போது தலை​மைத்​து​வத்​தில் பெண்​களின் பங்கு முதல் முறை​யாக 20% தொட்​டுள்​ளது. இது சமூகத்​தில் முற்​போக்​கான நிலையை பிர​திபலிப்​ப​தாக அமைந்​துள்​ளது. உலகம் முழு​வதும் கார்ப்​பரேட் நிறு​வனங்​களின் தலை​மைப் பதவி​களில் … Read more

தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

புதுடெல்லி: மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரும், காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான ராகுல் காந்தி 4 தென் அமெரிக்க நாடு​களுக்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளார். இதுதொடர்​பான தகவலை காங்​கிரஸ் கட்​சி​யின் தேசிய செய்தித் தொடர்​பாளர் பவன் கேரா வெளி​யிட்​டுள்​ளார். ராகுல் காந்​தி​யுடன் பவன் கேரா​வும் தென் அமெரிக்கா​வுக்கு சுற்​றுப்​பயணம் சென்​றுள்​ளார். 4 நாடு​களை உள்​ளடக்​கிய இந்த பயணத்​தின்​போது அரசி​யல் தலை​வர்​களை​யும், பல்​கலைக்​கழக மாணவர்​களை​யும், தொழில்​துறை தலை​வர்​களை​யும் ராகுல் காந்தி சந்​தித்து உரை​யாட உள்​ளார் என்று பவன் கேரா தனது எக்ஸ் பக்​கத்​தில் … Read more