இராக்கில் சிக்கியிருந்த பஞ்சாப் பெண் மீட்பு

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை பெண்​களிடம், நல்ல வேலை, நல்ல சம்​பளம் என்று கூறி இராக்​குக்கு ஏஜெண்ட் ஒரு​வர் அழைத்​துச் சென்​றார். இந்​நிலை​யில் பஞ்சாப் பெண் ஒரு​வரை அங்​குள்​ளவர்​கள் சித்​ர​வதை செய்​த​தாகத் தெரி​கிறது. அங்கு சென்ற பின்​னர் வீட்டு வேலை செய்​யு​மாறு அங்​குள்​ளவர்​கள் நிர்​பந்​தம் செய்​த​தாக​வும், வேலை செய்ய மறுத்​தால் வீட்​டின் உரிமை​யாளர் அடித்​து, உதைத்​தும் கொடுமை செய்​த​தாக​வும் அந்​தப் பெண் தெரி​வித்​தார். இந்​நிலை​யில் பஞ்​சாபிலுள்ள ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்​களவை எம்​.பி. பாப் பல்​பிர் … Read more

ரிமோட் கன்ட்ரோல் மூலம் நிதிஷ் குமாரை இயக்கும் பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாட்னா: பிஹார் முதல்​வர் நிதிஷ் குமாரை ரிமோட் கன்ட்​ரோல் மூலம் பாஜக இயக்​கு​கிறது என்று ராகுல் குற்​றம் சாட்​டி​னார். காங்கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தி, பிஹாரின் முசாபர்​பூரில் நேற்று தேர்​தல் பிரச்சா​ரம் செய்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: பிஹாரில் நிதிஷ் குமார் முதல்​வ​ராக இருந்​தா​லும் உண்​மை​யான அதி​காரம் பாஜக​விடம் உள்​ளது. இங்கு நிதிஷ் குமாரின் முகம் பயன்​படுத்​தப்​படு​கிறது. ஆனால் ரிமோட் கன்ட்​ரோல் பாஜக​வின் கைகளில் உள்​ளன. மிக​வும் பின்​தங்​கிய மற்​றும் விளிம்​புநிலை … Read more

ஆந்திராவை புரட்டிப் போட்ட மோந்தா புயல்: ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த முதல்வர் சந்திரபாபு நாயுடு

அமராவதி: மோந்​தா புயல் ஆந்​தி​ராவை புரட்டி போட்​டுள்​ளது. புய​லால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களை ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஹெலிகாப்டரில் சென்​று ஆய்வு செய்​தார். வங்க கடலில் மையம் கொண்​டிருந்த மோந்தா புயல் செவ்​வாய்க்கிழமை நள்​ளிரவு காக்​கி​நாடா – மசூலிப்​பட்​டினம் இடையே கரையை கடந்தது. அப்போது சுமார் 100 முதல் 110 கி.மீ வேகத்​தில் சூறாவளி காற்​றுடன் கனமழை பெய்​தது. கோனசீ​மா, விசாகப்​பட்​டினம், விஜயநகரம், அம்​பேத்கார், ஸ்ரீகாகுளம், பிர​காசம், கிருஷ்ணா, நெல்​லூர், கோதாவரி மாவட்​டங்​கள் அதி​க​மாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் … Read more

‘வாக்குக்காக பிஹாரை சுரண்டிவிட்டு, குஜராத்தில் தொழில்களை அமைக்கிறார்கள்’ – தேஜஸ்வி தாக்கு

பாட்னா: “பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொழில்களை எல்லாம் குஜராத்தில் அமைத்துவிட்டு, பிஹார் மாநிலத்தை வாக்குகளுக்காக சுரண்டி வருகிறது” என ஆர்ஜேடி தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குகளுக்காக பிஹாரை சுரண்டிவிட்டு தொழில்களை எல்லாம் குஜராத்தில் நிறுவி, பிஹாரை சிறைபிடித்து வைத்திருக்கிறது. இந்தத் தேர்தலில், மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக அவர்களை ஆட்சியிலிருந்து விரட்ட மக்களுக்கு … Read more

குஜராத்தில் உள்ள சர்தார் படேல் சிலை முன் அக்.31-ல் பிரம்மாண்ட அணிவகுப்பு: அமித் ஷா அறிவிப்பு

பாட்னா: குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலை முன்பாக, அவரது பிறந்த நாளான நாளை (அக். 31) குடியரசு தின அணிவகுப்பைப் போன்று பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும் என்று அமித் ஷா அறிவித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவை ஒன்றிணைப்பதில் சர்தார் வல்லபாய் படேல் பெரும் பங்கு வகித்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரது பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி, தேசிய ஒருமைப்பாட்டு … Read more

'பிஹாரிகள் மற்ற மாநிலங்களில் அவமதிக்கப்படும்போது காங்கிரஸ் கைதட்டுகிறது’ – சிராக் பாஸ்வான்

சாப்ரா: ‘மற்ற மாநிலங்களில் பிஹாரிகள் துன்புறுத்தப்படும்போது காங்கிரஸ் தலைவர்கள் கைதட்டுகிறார்கள்’ என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)-ன் தலைவருமான சிராக் பாஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சாப்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுப் பேசிய சிராக் பாஸ்வான், “நான் அரசியலில் நுழைந்ததற்குக் காரணம், மற்ற மாநிலங்களில் பிஹாரிகள் அவமதிக்கப்படும் விதம்தான். பிஹாரி என்ற வார்த்தை கூட ஒரு அவமதிப்பாக மாற்றப்பட்டது. பஞ்சாபின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர், காந்தி குடும்பத்தைச் … Read more

53-வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நியமனம்: நவம்பர் 24 அன்று பதவியேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த், இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நவம்பர் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு பி.ஆர். கவாய்க்கு மத்திய சட்ட அமைச்சகம் அண்மையில் கடிதம் எழுதியது. உச்ச நீதிமன்ற மரபுப்படி தனக்கு பிறகு மூத்த நீதிபதியாக உள்ள சூர்யா காந்தின் பெயரை 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி பி.ஆர். … Read more

ரஷ்ய எண்ணெய் மீதான அமெரிக்க தடை குறித்து இந்தியா ஆய்வு செய்கிறது: வெளியுறவு அமைச்சகம்

புதுடெல்லி: ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் விதித்துள்ள தடைகள் குறித்து இந்தியா ஆய்வு செய்து வருகிறது என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரந்திர் ஜெய்ஸ்வால், “ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் சமீபத்திய தடைகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே எங்கள் முடிவுகள் இருப்பது வழக்கம். எரிசக்தி குறித்த கேள்விக்கான எங்கள் பதில் மற்றும் நிலைப்பாடு நன்கு … Read more

“இந்திரா காந்திக்கு பிரதமர் மோடியை விட தைரியம் அதிகம்” – ராகுல் காந்தி

நாளந்தா: “1971 வங்கதேச போரின் போது, ​​இந்திரா காந்தி அமெரிக்காவுக்கு அஞ்சவோ, தலைவணங்கவோ இல்லை. ஆனால், பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை எதிர்கொள்ளும் திறமை இல்லை” என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறினார். பிஹாரின் நாளந்தாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “1971 வங்கதேசப் போராட்டத்தில், அமெரிக்கா தனது விமானங்களையும் கடற்படையையும் இந்தியாவை மிரட்டவும், அச்சுறுத்தவும் அனுப்பியது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ‘உங்கள் கடற்படைக்கு நாங்கள் பயப்படவில்லை, … Read more

பீகார் தேர்தல்: நான் ஏன் ஷாவுக்கு பயப்பட வேண்டும்? அமித்ஷாவுக்கு எதிராக கர்ஜித்த தேஜஸ்வி

Bihar Assembly Elections News: பீகார் சட்டமன்றத் தேர்தல்களுக்கு மத்தியில் அரசியல் பேச்சுக்கள் தீவிரமடைந்துள்ளன. “பீகார் முதல்வராக நிதிஷ் குமார் நீடிப்பார்” என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கூற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக பதிலளித்துள்ளார்.