‘பெற்றோரை கவனிக்காவிட்டால்…’ – அரசு ஊழியர்களுக்கு தெலங்கானா முதல்வர் எச்சரிக்கை

ஹைதராபாத்: பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10–15% பிடித்தம் செய்யும் சட்டம் கொண்டுவரப்படும் என்றும், அந்த தொகை நேரடியாக பெற்றோரின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். நேற்று (அக்டோபர் 18) ஹைதராபாத்தில் உள்ள ஷில்பகலா வேதிகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 783 குரூப்-2 அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் விழாவில் பேசிய ரேவந்த் ரெட்டி, “அரசு ஊழியர்கள் யாராவது தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளவில்லை என்றால், அவர்களின் சம்பளத்தில் … Read more

தங்கத்தில் செய்யப்பட்ட இனிப்புகள்! விலை மட்டுமே 1 லட்சம்? சாப்பிட்டால் என்ன ஆகும்?

ஜெய்ப்பூரின் வைஷாலி நகர் பகுதியில் அமைந்துள்ள ‘த்யோஹார்’ என்ற இனிப்பு கடை தங்கத்தில் வித்தியாசமான இனிப்பை செய்துள்ளனர். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.

குஜராத்தில் இன்று அமைச்சரவை விரிவாக்கம்

அகமதாபாத்: குஜ​ராத் அமைச்​சரவை இன்​று விரி​வாக்​கம் செய்​யப்​படுகிறது. இதையடுத்​து, குஜ​ராத் முதல்​வர் பூபேந்​திர படேலை தவிர, ஏனைய 16 அமைச்​சர்​களும் பதவியை நேற்று ராஜி​னாமா செய்​தனர். குஜ​ராத் அமைச்​சர​வை​யில் மொத்​தம் 17 அமைச்​சர்​கள் இடம்​பெற்​றிருந்​தனர். குஜ​ராத் சட்​டப்பேரவை மொத்​தம் 182 உறுப்​பினர்​களைக் கொண்டது. எனவே, அதி​கபட்​சம் 27 அமைச்​சர்​கள் வரை பதவி வகிக்​கலாம் என்​பது விதி. இது, அந்த அவை​யின் மொத்த பலத்​தில் 15 சதவீதம் என்​பது குறிப்பிடத்​தக்​கது. Source link

25 வயது பாடகியை வைத்து பாஜக போடும் ஸ்கெட்ச்… இவரின் சொதிப்பு எவ்வளவு?

Maithili Thakur: பீகாரில் பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் 25 வயதான பிரபல பாடகி மைதிலி தாக்கூரின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகி உள்ளது. 

அடுத்த 18 மாதத்தில் வந்தே பாரத் 4.0 ரயில்கள்: மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டம்

புதுடெல்லி: தலைநகர் டெல்​லி​யில் நேற்று முன்​தினம் ரயில்வே கண்​காட்சி தொடங்​கியது. இதில் 15 நாடு​களைச் சேர்ந்த 450 நிறு​வனங்​கள் பங்​கேற்​றுள்​ளன. இந்த கண்​காட்​சியை ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தொடங்​கி​வைத்​து பேசி​ய​தாவது: வந்தே பாரத் ரயி​லின் தரம், வேகம் தொடர்ந்து அதி​கரிக்​கப்​பட்டு வரு​கிறது. தற்​போது வந்தே பாரத் 3.0 ரயில்​கள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன. இந்த ரயில்​கள் 52 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்​டும் திறன் கொண்​டவை ஆகும். ஐப்​பான் மற்​றும் ஐரோப்​பிய நாடு​களின் ரயில்​களை ஒப்​பிடும்​போது … Read more

எச்ஏஎல் நாசிக் மையத்தில் தயாரான தேஜஸ்-1ஏ போர் விமானத்தின் முதல் பறக்கும் சோதனை முடிந்தது

நாசிக்: எச்​ஏஎல் நிறு​வனத்​தின் நாசிக் மையத்​தில் தயாரிக்​கப்​பட்ட முதல் தேஜஸ்-1ஏ ரக போர் விமானம் தனது முதல் பறக்​கும் சோதனையை நிறைவு செய்​தது. இந்​துஸ்​தான் ஏரோ​னாடிக்ஸ் நிறு​வனத்​துக்கு (எச்​ஏஎல்) பெங்​களூருவில் இரண்டு விமான தயாரிப்பு நிலை​யங்​கள் உள்​ளன. இந்​நிலை​யில் ஆண்​டுக்கு 8 போர் விமானங்​கள் தயாரிக்​கும் வகை​யில் 3-வது விமான தயாரிப்பு மையம் மகா​ராஷ்டிரா மாநிலம் நாசிக்​கில் அமைக்​கப்​பட்​டது. எச்​ஏஎல் நிறு​வனத்​திடம் தேஜஸ் 1ஏ ரக போர் விமானங்​கள் தயாரிக்க இந்​திய விமானப்​படை ஆர்​டர் கொடுத்​துள்​ளது. தேஜஸ் … Read more

டிஜிட்டல் கைது மோசடி: உச்ச நீதிமன்றம் தாமாக வழக்குப் பதிவு

புதுடெல்லி: நாட்டின் பல பகுதிகளில் டிஜிட்​டல் கைது முறை​கேடு​கள் தொடர்​பாக உச்​ச நீ​தி​மன்​றம் தாமாக முன்வந்து வழக்​குப் பதிவு செய்​துள்​ளது. போலி​யான நீதி​மன்ற ஆவணங்​களைக் காட்டி டிஜிட்​டல் கைது முறை​கேடு​கள் நடப்​பது தொடர்​பாக உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சூர்​ய​காந்த், ஜோய்​மால்யா பக்சி அடங்​கிய அமர்வு நேற்று தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரித்​தது. டிஜிட்​டல் கைது முறை​கேடு​கள் மிக​வும் கவலை தரும் விஷ​யம் என்று குறிப்​பிட்​டுள்ள நீதிப​தி​கள், இந்த விவ​காரத்​தில் மத்​திய அரசு, சிபிஐ பதில் அளிக்கவும் … Read more

பிரதமர் மோடியின் தீபாவளிப் பரிசு மக்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் குறித்து டெல்​லி​யில் நேற்று மத்​திய நிதித்​துறை அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல், மத்​திய ரயில்வே துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் ஆகியோர் கூட்​டாக செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்​தனர். மத்​திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் பேசும்​போது “ஜிஎஸ்டி குறைப்​பால் உணவு பணவீக்​கம் கணிச​மாக குறைந்​துள்​ளது. ஜி.எஸ்​.டி. சீர்​திருத்​தம் மூலம் எலக்ட்​ரானிக் பொருள் விற்​பனை சாதனை படைத்​துள்​ளது” என்​றார். பின்​னர் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பேசி​ய​தாவது: … Read more

கோயில் ஊழியர்களுக்கு சிக்கன் மசாலா பரிசு

பந்தர்பூர்: நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு விதவிதமான பரிசுகளை வழங்கி வருகின்றன. இனிப்புகள், படுக்கை விரிப்புகள் என தொடங்கி சில நிறுவனங்கள் சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள், நகைகள், அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பந்தர்பூரில் உள்ள விட்டல் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிக்கன் மசாலா உட்பட பல உணவுப் பொருட்கள் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிவிஜி நிறுவனம் வழங்கி உள்ளது. … Read more

டெல்லியில் எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

புதுடெல்லி: டெல்லியின் பிஷாம்பர் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்ரா அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020-ம் ஆண்டு திறந்து வைத்தார். இதில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் (எம்.பி.) தங்கி உள்ளனர். இந்தக் குடியிருப்பு வளாகத்தில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. … Read more