பெங்களூரு வேலை கிடைக்காமல் இருந்திருக்கலாம்: கர்னூல் விபத்தில் மகளை இழந்த தந்தை உருக்கம்

கர்னூல்: ஆந்​தி​ரா​வின் கர்​னூல் அரு​கில் சொகுசுப் பேருந்​து தீப் பிடித்து எரிந்த விபத்தில் இறந்தவர்களில் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த அனுஷா​ ரெட்டியும் ஒரு​வர். இதுகுறித்து அனுஷா​வின் தந்தை கூறுகை​யில், “என் மகளுக்கு பெங்​களூரு வேலை கிடைக்​காமலேயே இருந்​திருக்​கலாம். வியாழக்​கிழமை இரவு பேருந்து நிலை​யம் வந்து எங்​கள் மகளை வழியனுப்பி வைத்​தோம். அது வழக்​க​மான பிரி​யா​விடை​யாக இருந்​தது. ஆனால் அது இப்​போது எங்​கள் வாழ்​நாள் முழு​வதுக்​கு​மான ஒரு கனவாக மாறி​விட்​டது” என்​றார். அனுஷா​வின் தாயும் வலி​யும் அதே அளவு கூர்​மை​யானது. … Read more

விவசாயிகளுக்கு நற்செய்தி! வங்கி கணக்கிற்கு வரும் ரூ.2000! எப்படி பெறுவது?

மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு, பி.எம். கிசான் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. 

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஜோதியின் ஜாமீன் மனு நிராகரிப்பு

சண்டிகர்: பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களையும் மத்திய அரசு கண்காணித்து, கைது செய்து வந்தது. அந்த வகையில், இந்திய ராணுவத் தகவல்களை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததால், பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 1.37 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்ட 33 வயதான ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவும் அடங்குவார். இந்நிலையில், ஹரியானா மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ஜோதி மல்ஹோத்ரா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த … Read more

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஹெலிகாப்டர் பயன்பாடு உயர்வு

புதுடெல்லி: பிஹாரில் தேர்தல் பிரச்​சா​ரம் சூடு​பிடித்​துள்​ளது. பிரச்​சா​ரத்​துக்கு அனைத்து கட்சி தலை​வர்​களும் 15 ஹெலி​காப்​டர்​களை வாடகைக்கு எடுத்​துள்​ளனர். இந்த எண்​ணிக்கை கடந்த 2020 தேர்​தலில் பயன்​படுத்​தி​யதைவிட ஒன்​றரை மடங்கு அதி​க​மாகும். ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) தலை​மையி​லான எதிர்க்​கட்​சிகளின் மெகா கூட்​ட​ணி​யில் 4 ஹெலி​காப்​டர்​களும் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம் (ஜேடி​யு)2, பாஜக 9 என மொத்​தம் 11 ஹெலி​காப்​டர்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. இதனால், பாட்னா விமான நிலை​யம் பரபரப்​பாக காணப்​படு​கிறது. முதல்​வர் நிதிஷ்கு​மார், மெகா கூட்​ட​ணி​யின் முதல்வர் … Read more

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகாராஷ்டிர பாணியை பயன்படுத்தும் பாஜக

புதுடெல்லி: ம​கா​ராஷ்டிரா சட்​டப்​பேரவை தேர்​தலில் பின்பற்றிய பாணியை பாஜக பிஹாரில் அமலாக்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தாகத் தெரி​கிறது. இது, மத்​தி​யில் அக்​கட்​சி​யின் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்டணி​யின்​ (என்​டிஏ) வெற்​றிக்கு வழி வகுக்​கும் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வில், இரண்​டாகப் பிரிந்த சிவசே​னா​வில் ஏக்​நாத் ஷிண்​டே​வின் பிரிவு பாஜக​வுடன் இணைந்து ஆட்சி அமைத்​தது. இதன் முதல்​வ​ராக ஏக்​நாத் ஷிண்​டேவை அமர அனு​ம​தித்​தது பாஜக. இரண்டு ஆண்​டு​கள் மற்​றும் ஐந்து மாதங்​களுக்கு முதல்​வர் பதவியை வகித்​தார் ஏக்​நாத் ஷிண்​டே. இதையடுத்​து, 2024-ல் … Read more

பிஹாரில் இண்டியா கூட்டணியின் ‘விஐபி’ முகம் – யார் இந்த முகேஷ் சஹானி?

பிஹார் தேர்தலில், மகாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கூட்டணியின் துணை முதல்வர் வேட்பாளராக விகாஷில் இன்சன் கட்சியின் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முகேஷ் சஹானி கட்சி பெயர் மட்டும் விஜபி அல்ல, சஹானியுமே ஒரு விஐபி தான். 243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ஆம் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மகா … Read more

''தலித் என்பதால் என்னை குறிவைக்கிறார்கள்'' – அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்பி உதித் ராஜ்

புதுடெல்லி: தலித் என்பதால் தான் குறிவைக்கப்படுவதாக டெல்லியில் அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் உதித் ராஜ் தெரிவித்துள்ளார். முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான உதித் ராஜ், 2014 முதல் 19 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பாஜகவில் இருந்து பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த உதித் ராஜ், அக்கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர் அணியின் தேசிய தலைவராக உள்ளார். இவரது மனைவி சீமா ராஜூம் ஐஆர்எஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். புதுடெல்லி, பண்டாரா பார்க்கில் … Read more

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கில் கர்நாடக நகைக் கடையில் விற்கப்பட்ட 400 கிராம் தங்கம் பறிமுதல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்கம் மாயமான விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள ஒரு நகைக் கடையில் விற்கப்பட்ட 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 2 துவார பாலகர் சிலைகள் மற்றும் அதன் பீடத்தின் மீதான தங்கத் தகடுகளுக்கு தங்க முலாம் பூசும் பணி கடந்த 2019-ம் ஆண்டு உன்னி கிருஷ்ணன் போற்றியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணி முடிந்த நிலையில் 4 கிலோ தங்கம் மாயமானதாக புகார் … Read more

ஊடுருவல்காரர்களை வெளியேற்றும் பணியை எங்கள் அரசு செய்யும்: பிஹாரில் அமித் ஷா பிரச்சாரம்

பாட்னா: “பிஹாரில் ஊடுருவல்காரர்கள் தொடர்ந்து வாழ வேண்டும் என ராகுல் காந்தி பேரணிகளை நடத்துகிறார். பிஹாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும் வெளியேற்றும் வேலையை எங்கள் அரசு செய்யும்” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். பிஹார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று சாத் திருவிழா தொடங்கியுள்ளது. தேர்தல் நெருங்குவதால் பிரச்சாரமும் சூடுபிடித்துள்ளது. சாத் திருவிழாவுக்கு மத்தியில் பிஹாரின் ககாரியா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சரும் … Read more

இந்தூரில் ஆஸி கிரிக்கெட் வீராங்கனைகள் இருவரிடம் பாலியல் சீண்டல்: ஒருவர் கைது

இந்தூர்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தூரில் நேற்று முன்தினம் அந்த அணியை சேர்ந்த இரண்டு வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியாக ஒருவர் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, இலங்கையில் நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்தியா மற்றும் … Read more