வட மாநிலங்களில் புழுதிப் புயல், ஆலங்கட்டி மழை: உ.பி.யில் ஒரே நாளில் 34 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: டெல்​லி, உத்தர பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களில் கனமழை காரண​மாக மக்​களின் இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த சில வாரங்​களாக வெப்​பத்​தில் தகித்து வந்த டெல்​லி-என்​சிஆர் பகு​தி​களில் புழுதி காற்​றுடன் ஆலங்​கட்டி மழை பெய்​தது. மழை பாதிப்​பால் இரு​வர் உயி​ரிழந்​தனர். 11 பேர் காயமடைந்​தனர். நீண்ட நாட்​களாக டெல்​லி​யில் வெப்​பம் அதி​கரித்து வந்த நிலை​யில், தற்​போது பெய்​துள்ள மழை​யால் ரம்​மிய​மான சூழல் நில​வுவ​தால் பொது​மக்​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். பலத்த காற்று வீசி வரு​வ​தால் நொய்​டாவுக்கு அருகே உள்ள … Read more

வக்பு திருத்தச் சட்ட வழக்கின் இடைக்கால உத்தரவு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை மூன்றாவது நாளாக வியாழக்கிழமை நடந்தது. இதில் மத்திய அரசு மற்றும் மனுதாரர்கள் என இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, வக்பு திருத்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அரசமைப்பு தொடர்பான 3 அம்சங்களுக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது. வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கடந்த மாதம் ஏப்ரல் 8-ம் … Read more

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு

புதுடெல்லி: தீ​விர​வாதத்​துக்கு எதி​ரான போரில் இந்​தி​யா​வுக்கு ஜப்​பான், ஐக்​கிய அரபு அமீரகம் முழுஆதரவு அளித்​துள்​ளன. தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்து உலக நாடு​களிடம் ஆதா​ரத்​துடன் எடுத்​துரைக்க சசி தரூர், ரவிசங்​கர் பிர​சாத், கனி​மொழி உள்​ளிட்​டோர் தலை​மை​யில் 7 எம்​பிக்​கள் குழு அமைக்​கப்​பட்டு உள்​ளன. ஐக்​கிய ஜனதா தள எம்பி சஞ்​சய் ஜா தலை​மையி​லான எம்​பிக்​கள் குழு ஜப்​பான் தலைநகர் டோக்​கி​யா​வில் அந்த நாட்டு வெளியுறவு அமைச்​சர் டகேஷி இவா​யாவை நேற்று சந்​தித்​துப் பேசி​யது. இதுகுறித்து சஞ்​சய் … Read more

கேரளாவில் 182 பேருக்கு கரோனா பாதிப்பு: சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: மே மாதத்தில் கேரளாவில் 182 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத் அமைச்சர் வீணா ஜார்ஜ், “தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருகின்றன. மேலும் கேரளாவிலும் கரோனா அதிகரிப்புக்கான வாய்ப்பு உள்ளது. தீவிரம் அதிகமாக இல்லாவிட்டாலும், தற்காப்பு முக்கியமானது. … Read more

கூட்டாட்சி விதிமுறைகளையும், அனைத்து வரம்புகளையும் அமலாக்க துறை மீறியுள்ளது: உச்ச நீதிமன்றம் கண்டனம் – முழு விவரம்

புதுடெல்லி: டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியதன்மூலம் கூட்டாட்சி விதிமுறைகளையும், அனைத்து வரம்புகளையும் அமலாக்க துறை மீறிவிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அமலாக்க துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற விடுமுறைக்கு பிறகு அமலாக்க துறை இதுகுறித்து பதில் அளிக்கவும் உத்தரவிட்டது. டாஸ்மாக் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெறுவதாக கூறி, சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலை அதிபர்களின் வீடுகளில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 … Read more

நம் பெண்களின் குங்குமத்தை அழித்தவர்கள் இன்று மண்ணோடு மண்ணாகிவிட்டனர்: பிரதமர் மோடி பெருமிதம்

பலானா: ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானை இந்திய ராணுவம் மண்டியிட வைத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் தேஷ்நோக் அருகில் உள்ள பலானா பகுதியில் நேற்று அரசு நலத்திட்ட விழா நடைபெற்றது. இதில், ரூ.26,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்குக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சில திட்டங்களை தொடங்கிவைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நமது சகோதரிகளின் குங்குமத்தை பறித்தனர். தீவிரவாதிகளின் … Read more

தமிழகத்தில் 9 நிலையங்கள் உட்பட ​​103 அமிர்த ரயில் நிலையங்கள்: பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து​வைத்தார்

தேஷ்நோக்/சென்னை: நாடு முழு​வதும் ரூ.1,100 கோடி​யில் புதுப்​பிக்​கப்​பட்ட 103 அமிர்த ரயில் நிலை​யங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று காணொலி வாயி​லாக திறந்து வைத்​தார். இந்​தி​யா​வில் நாள்​தோறும் சுமார் 3 கோடி பேரும், ஓராண்​டில் சுமார் 800 கோடி பேரும் ரயில்​களில் பயணம் மேற்​கொள்​கின்​றனர். இதை கருத்​தில் கொண்டு ரயில் நிலை​யங்​களில் பயணி​களுக்​கான வசதியை மேம்​படுத்த கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அமிர்த ரயில் நிலை​யம் திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டது. இந்த திட்​டத்​தின் கீழ் … Read more

ரெனி வில்பிரட்

கோஹிமா: நாகாலாந்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மீது பதிவு செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டதை அடுத்து, அவரை பணியிடைநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாகாலாந்து மாநில நிதித்துறையில் செயலாளராக பணியாற்றிய ரெனி வில்பிரட் மீது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களை அவமதித்ததற்கான பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று அம்மாநில தலைமைச் செயலாளர் ஜே ஆலம் வெளியிட்ட பணியிடைநீக்க உத்தரவில் தெரிவித்தார். அந்த உத்தரவில், ‘நாகாலாந்து அரசு, 21.05.2025 … Read more

நியூயார்க்கில் 'தி கிரேட் இந்தியன் மியூசிக்கல்: நாகரிகம் டு நேஷன்' நிகழ்ச்சியை நடத்தும் NMACC!

நியூயார்க் நகரத்தின் லிங்கன் மையத்தில் ‘தி கிரேட் இந்தியன் மியூசிக்கல்: நாகரிகம் டு நேஷன்’ நிகழ்ச்சியை நீதா அம்பானியின் NMACC நடத்த உள்ளது.

தூதுக்குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் மத்திய அரசு – சசி தரூரை தொடர்ந்து ஆனந்த் சர்மாவும் ஆதரவு

புதுடெல்லி: பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்கான ராஜதந்திர முயற்சியாக மத்திய அரசின் வெளிநாட்டுத் தூதுக்குழுக்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா வரவேற்றுள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடந்த ஆபரேஷன் சிந்தூருக்கு உடனடி ஆதரவு அளித்திருந்த காங்கிரஸ் கட்சி, மத்திய அரசின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுக்களை திசைதிருப்பும் முயற்சி என்று விமர்சித்துவரும் நிலையில், மத்திய அரசின் இந்த முயற்சியை சசி தரூருக்கு பின்பு பாராட்டியிருக்கும் இரண்டாவது … Read more