கர்​நாடகாவில் ரூ.15 ஆயிரம் ஊதி​ய​மாக பெற்​ற முன்​னாள் எழுத்​தர் ரூ.30 கோடி சொத்​து குவிப்பு

பெங்​களூரு: கர்​நாட​கா​வில் ரூ.15 ஆயிரம் ஊதி​ய​மாக பெற்ற முன்​னாள் எழுத்​தர் ஒரு​வரின் வீட்​டில் லோக் ஆயுக்தா அதி​காரி​கள் நடத்​திய சோதனை​யில் 24 வீடு​கள், 4 வீட்டு மனை​கள், 40 ஏக்​கர் நிலம் ஆகிய​வற்​றின் ஆவணங்​களும், ரூ.14 லட்சம் ரொக்கம், 350 கிராம் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்​ளிப் பொருட்​கள், 4 வாக​னங்​களும் சிக்​கின. கர்​நாடக மாநிலம் கொப்​பல் மாவட்​டத்​தில் ஊரக மேம்​பாட்டு வாரி​யத்​தில் எழுத்​த​ராக பணி​யாற்​றிய காளகப்பா நித‌குன்ட்டி வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து குவித்​த​தாக லோக் … Read more

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்​துக்கு எதி​ராக எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் நேற்று 8-வது நாளாக ஆர்ப்பாட்டத்​தில் ஈடு​பட்​டனர். பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் சிறப்பு திருத்​தம் மேற்​கொண்​டுள்​ளது. இதற்கு எதிர்க்​கட்​சிகள் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. லட்​சக்​கணக்​கான வாக்​காளர்​களின் வாக்குரிமையை பறிப்​பதே இதன் நோக்​கம் என்று அவை குற்​றம்​சாட்டி வரு​கின்​றன. இந்​நிலை​யில் பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​ததுக்கு எதி​ராக எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் நேற்று 8-வது நாளாக நாடாளுமன்ற வளாகத்​தில் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். … Read more

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை இடம்பெறவில்லை

புதுடெல்லி: பிஹார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சரிபார்க்கலாம். பெயர் விடுபட்டிருந்தால் வாக்காளர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்க கோரிக்கை விடுக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அவர்கள், … Read more

செப்.9-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 21 ஆகும். வாக்குப்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும், அதே நாளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவராக … Read more

செப்டம்பர் 9-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் செப்​டம்​பர் 9-ம் தேதி நடை​பெறும் என்று தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. நாட்​டின் 14-வது குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கரின் பதவிக் காலம் 2027 ஆகஸ்ட் வரை இருந்த நிலை​யில், உடல்​நிலையை காரணம் காட்​டி, அவர் தனது பதவியை கடந்த மாதம் 21-ம் தேதி ராஜி​னாமா செய்​தார். முழு​மை​யான 5 ஆண்டு பதவி காலத்​துக்​குள், அந்த பதவி காலி​யாக நேரிட்​டால்,உடனடி​யாக தேர்​தல் நடத்​தப்பட வேண்​டும் என்​ப​தால், அதற்கான நடை​முறை​களை … Read more

நாட்டின் தொடர்பு மொழியாக சமஸ்கிருதத்தை மாற்ற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து

நாக்பூர்: நமது நாட்டின் அனைத்து மொழிகளுக்கும் மூலம் சமஸ்கிருதம் எனத் தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டின் தொடர்பு மொழியாக சமஸ்கிருதத்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நாக்பூரில் உள்ள கவி கல்குரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அபினவ் பாரதி சர்வதேச கல்விக் கட்டிடத்தை இன்று திறந்துவைத்துப் பேசிய மோகன் பாகவத், “சமஸ்கிருதத்தை புரிந்து கொள்வதற்கும் அதில் உரையாடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நான் சமஸ்கிருத மொழியை கற்றுக்கொண்டேன். ஆனால், என்னால் சரளமாகப் பேச … Read more

ஜார்க்கண்டில் வீட்டுக்குள் நுழைந்த புலியை பாதுகாப்பாக மீட்க உதவிய தந்தை, மகளுக்கு விருது!

ராஞ்சி: தங்கள் வீட்டுக்குள் நுழைந்த புலியை பாதுகாப்பாக மீட்க வனத்துறைக்கு உதவிய நபர் மற்றும் அவரது மகளை ஜார்க்கண்ட் வனத்துறை பரிசுத்தொகை வழங்கி பாராட்டியுள்ளது. முரி காவல் நிலையப் பகுதியில் உள்ள மர்து கிராமத்தில் உள்ள புரந்தர் மஹ்தோ என்பவரின் வீட்டுக்குள் கடந்த ஜூன் 25 ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் ஒரு ஆண் புலி நுழைந்தது. இதனை அறிந்த மஹ்தோவின் மகள் சோனிகா குமாரி மற்றும் மற்றொரு பெண் தந்திரமாக வீட்டை விட்டு வெளியேறினர். … Read more

“நாகரிகமில்லாத பொறுப்பற்றவர் ட்ரம்ப்!” – இந்திய பொருளாதாரம் குறித்த கருத்துக்கு தேவகவுடா காட்டம்

பெங்களூரு: வேகமாக வளர்ந்து வரும் உலகின் 5-வது பெரிய பொருளாதாரமான இந்திய பொருளாதாரத்தை மடிந்துவிட்டது என்று டொனால்டு ட்ரம்ப் கூறுகிறார் என்றால், ஒன்று அவர் பார்வையற்றவராக இருக்க வேண்டும் அல்லது தகவல் அறியாதவராக இருக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தேவகவுடா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய பொருளாதாரம் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் ஆதாரமற்ற, ஆத்திரமான கருத்துகளை அறிந்தபோது மற்ற அனைவரையும் போலவே நானும் ஆச்சரியப்பட்டேன். அவரைப் போன்ற உறுதியற்ற, … Read more

அமெரிக்க உறவு முதல் நிமிஷா பிரியா வழக்கு நிலை வரை: இந்திய வெளியுறவுத் துறை விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவும் அமெரிக்காவும் வலுவான உறவைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், இந்த உறவு தொடர்ந்து வலுவடையும் என்று குறிப்பிட்டுள்ளார். ரந்திர் ஜெய்ஸ்வாலின் வாரந்திர செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்ஸ்வால், “அந்த தடைகளை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். அது … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

பெங்களூரு: வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கர்நாடகாவின் ஹசன் தொகுதியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மூன்று பாலியல் வன்கொடுமை வழக்குகள், ஒரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு என 4 வழக்குகள் உள்ளன. எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளுக்கான சிறப்பு அமர்வு நீதிமன்றம் ரேவண்ணாவின் வழக்குகளை … Read more