பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் முடக்கம்
புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முடங்கின. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தொடர்ச்சியாக 5 நாட்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதைத் தொடர்ந்து கடந்த 28, 29 ஆகிய தேதிகளில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. … Read more