பிஹார் தேர்தல்: என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? – தேஜஸ்வி யாதவ் கேள்வி

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “நான் முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல, பிஹாரில் மாற்றத்தை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான், நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். என் மீது நம்பிக்கை வைத்ததற்காக மகாகட்பந்தனின் அனைத்து உறுப்பினர்களுக்கும் … Read more

தீபாவளி துப்பாக்கியால் அதிர்ச்சி.. கண் பார்வை இழந்த குழந்தைகள்!

Bhopal Kids Affected By Diwali Gun : மத்திய பிரதேசத்தில் புதிய ரக தீபாவளி துப்பாக்கியை பயன்படுத்திய 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலருக்கு தோலிலும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது.

திரவுபதி முர்முவின் சபரிமலை வழிபாடு குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் சர்ச்சை பதிவு: பாஜக கண்டனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கோயிலின் வழக்கங்களை மீறியதாக கேரளாவைச் சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர் ஒருவர் வெளியிட்ட சமூக ஊடக பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் வாட்ஸ்அப் ஸ்டேட்டசில், “உயர் நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளின்படி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோயிலின் வழக்கங்களை வெளிப்படையாக மீறிவிட்டார். இந்த மரபு மீறலுக்கு சீருடையில் இருந்த … Read more

தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆர்ஜேடி முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்!

பாட்னா: மோசடி வழக்கில் சிபிஐ நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிஹார் சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆர்ஜேடி முன்னாள் தலைவர் அனில் சஹானி பாஜகவில் இணைந்தார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த அனில் சஹானி, பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவ்டே முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தார். 2012 ஆம் … Read more

மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு… NDA கூட்டணிக்கு பெரிய தலைவலி

Mahabathbandhan CM Candiate: மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது, ஆளும் தேசிய ஜனநாய கூட்டணிககு பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு அறிந்துகொள்ளலாம்.

பிஹார் தேர்தல் | இண்டியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் இந்த அறிவிப்பை வெளியிட்டார். பிஹாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கான நாட்கள் நெருங்கியுள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்டணி முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது. அதேநேரத்தில், இண்டியா … Read more

தீபாவளி போனஸ் வழங்காததால் இனிப்பை வீசிய தொழிலாளர்கள்

சண்டிகர்: ஹரியாணாவின் சோனிபட் மாவட்டம், கனவுர் பகுதியில் பிரபல நிறுவனம் செயல்படுகிறது. அந்த நிறுவனத்தில் தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. எனினும் அனைத்து ஊழியர்களுக்கும் சில நாட்களுக்கு முன்பு தீபாவளி பரிசாக சோன் பப்டி இனிப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன. இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள் நிறுவனத்தின் வாயிலில் இனிப்பு பெட்டிகளை வீசி எறிந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து நிறுவனத்தின் தொழிலாளர்கள் கூறும்போது, “தீபாவளி போனஸ் வழங்குவதாக நிர்வாகம் உறுதி அளித்திருந்தது. ஆனால் … Read more

பிஹார் தேர்தல் போட்டியில் ஜேஎம்எம் விலகல்: ஆர்ஜேடி – காங். சதி என குற்றச்சாட்டு!

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி, காங்கிரஸ் செய்துள்ள சதியால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) கட்சியின் கீழ் எதிர்கட்சிகளின் மெகா கூட்டணி அமைந்தது. இண்டியா கூட்டணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் ஜார்கண்டில் ஆளும் ஜேஎம்எம் கட்சியும் இடம் பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான இக்கட்சிக்கு கூட்டணி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதற்கு பிஹாரிலுள்ள 2 பழங்குடி தொகுதிகள் … Read more

வேட்பு மனு நிராகரிப்பால் ஆர்ஜேடி வேட்பாளர் கண்ணீர்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில் மோகானியா தொகுதி ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெல்லியில் இருந்து தேர்தல் அலுவலர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால் இம்முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நான் நிச்சயமாக நீதிமன்றம் செல்வேன்’’ என்றார். அப்போது அவர் மனம் உடைந்து கண் … Read more

தீவிரவாதத்துக்கு ‘ஹலால்’ நிதி: உ.பி. முதல்வர் குற்றச்சாட்டு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: ஹலால் சான்றிதழ் பெறப்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்தவொரு பொருளை நீங்கள் வாங்கும்போதும் அதில் ஹலால் சான்றிதழ் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சோப், துணிகள், தீப்பெட்டிகள் உள்ளிட்ட பல பொருட்கள் ஹலால் சான்றிதழ்களுடன் தற்போது வருகின்றன. இவ்வாறு வரும் பொருட்களின் விற்பனை மூலம் ரூ.25 ஆயிரம் கோடியை திரட்டி அவை தீவிரவாத அமைப்புகளிடம் வழங்கப்படுகின்றன. … Read more