பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் முடக்கம்

புதுடெல்லி: எ​திர்க்​கட்​சிகளின் அமளி​யால் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் நேற்று முடங்​கின. நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்​கியது. ஆபரேஷன் சிந்​தூர், பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி உள்ளிட்ட பல்​வேறு விவ​காரங்​களை எழுப்பி எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் தொடர் அமளி​யில் ஈடு​பட்​டனர். இதன் காரண​மாக தொடர்ச்சி​யாக 5 நாட்​கள் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் முடங்​கின. இதைத் தொடர்ந்து கடந்த 28, 29 ஆகிய தேதி​களில் ஆபரேஷன் சிந்​தூர் தொடர்​பாக மக்​களவை​யில் சிறப்பு விவாதம் நடை​பெற்றது. … Read more

ராஜஸ்தான் மாநிலத்தில் சிந்து சமவெளி நாகரிகம்: ஹரப்பா காலத்து தொல்பொருட்கள் பாலைவனத்தில் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: ​ராஜஸ்​தான் மாநிலத்​தின் வறண்ட பாலை​வனத்​தில் சிந்​துசமவெளி தொடர்​பான நாகரி​கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்​குள்ள ஆழமான பாலைவன பகு​தி​யில் ஹரப்பா காலத்​தின் தொல்​பொருட்​களும் கிடைத்​துள்​ளன. இந்தகண்​டு​பிடிப்​பு, பண்​டைய சிந்து சமவெளி நாகரிக எல்​லைகளை மறு​வடிவ​மைக்​கும் முக்​கிய தடயங்​களை வெளிப்​படுத்​து​வ​தாகக் கருதப்​படு​கிறது. இது, ராஜஸ்​தானின் ஆழமான பாலை​வனத்​தி​லும் சிந்து சமவெளியைப் போன்ற நாகரிக அடை​யாளம் இருப்​ப​தற்​கான முதல் சான்​றாகும், மேலும் வடக்கு ராஜஸ்​தானுக்​கும் குஜ​ராத்​துக்​கும் நடுவே உள்ள ஹரப்பா தளங்​களுக்கு இடையே​யான ஒரு முக்​கிய இணைப்​பாக​வும் இது கருதப்​படு​கிறது. … Read more

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யா தாக்குர் உட்பட 7 பேரும் விடுதலை

மும்பை: மகாராஷ்டிராவின் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் பெண் எம்.பி. பிரக்யா தாக்குர் உட்பட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், மாலேகான் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி குண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். 101 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து மகாராஷ்டிர தீவிரவாத தடுப்பு (ஏடிஎஸ்) பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். பைக்கில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டுவெடித்து சிதறியது தெரியவந்தது. … Read more

குஜராத்தில் 3 மாதங்களாக டிஜிட்டல் கைது செய்து பெண் டாக்டரிடம் ரூ.19 கோடி சுருட்டிய கும்பல்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த மூத்த பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 15 முதல் ஜூன் 25 வரையில் என்னுடைய செல்போனில் வாட்ஸ்-அப்பில் அழைத்த ஒரு பெண், தனது பெயர் ஜோதி விஸ்வநாத் என்றும் தொலைத்தொடர்புத் துறையில் இருந்து பேசுவதாகவும் கூறினார். இதுபோல காவல் துணை ஆய்வாளர் என மோகன் சிங் என்பவரும் அரசு வழக்கறிஞர்கள் எனக் கூறி மேலும் 3 பேரும் செல்போனில் அழைத்தனர். அப்போது, என்​னுடைய செல்​போனிலிருந்து … Read more

இந்தியப் பொருளாதாரம் செயலிழந்து விட்டது: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியது உண்மைதான் – ராகுல் காந்தி

புதுடெல்லி: இந்தியப் பொருளாதாரம் மடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையான விமர்சனம் செய்த நிலையில் அது உண்மைதான் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். அமெரிக்கா-இந்தியா இடையே குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததை யடுத்து, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும், அது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்கள். கச்சா எண்ணெய் வாங்குவதால் அபராதமும் விதிக்கப்படும் … Read more

காங்கிரஸின் ‘இந்து பயங்கரவாதம்’ சதி முறியடிக்கப்பட்டுள்ளது: மாலேகான் தீர்ப்பு குறித்து பாஜக கருத்து

புதுடெல்லி: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதன் மூலம், காங்கிரஸ் கட்சியின் இந்து பயங்கரவாதம் எனும் சதி முறியகடிக்கப்பட்டுள்ளது என்று பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேரும் விடுவிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத், “காங்கிரஸின் இந்து பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவருக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை. … Read more

வரி விதிப்பு நடவடிக்கை, கச்சா எண்ணெய் குறித்து ட்ரம்ப் விமர்சனம்: ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் மோடி ஆலோசனை

புதுடெல்லி: இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுடன் இணைந்து தெற்காசியாவிலேயே மிக பெரிய கச்சா எண்ணெய் கிடங்கு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பு இன்று (ஆகஸ்ட் 1) முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்க … Read more

இந்திய பொருளாதாரம் உயிரற்றது என்பது பிரதமர், நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும்: ராகுல் காந்தி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தவிர்த்த மற்ற அனைவருக்கும் இந்திய பொருளாதாரம் உயிரற்றது என்பது தெரியும் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியாவும் ரஷ்யாவும் உயிரற்ற பொருளாதாரங்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “அவர் சொன்னது சரியானதுதான். பிரதமர், நிதி அமைச்சர் … Read more

13 வயசு சிறுமிக்கு… 40 வயசு ஆணுடன் கல்யாணம் – குழந்தை திருமணத்திற்கு வறுமை காரணமில்லையாம்!

Child Marriage: 13 வயது சிறுமிக்கும், 40 வயதான அதுவும் ஏற்கெனவே திருமணமான நபருக்கும் இடையே குழந்தை திருமணம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“தேச நலனை காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” – அமெரிக்க வரி விதிப்பு பற்றி பியூஷ் கோயல் கருத்து

புதுடெல்லி: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% இறக்குமதி வரி விதித்துள்ள நிலையில், நாட்டின் நலனை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய பியூஷ் கோயல், “பரஸ்பர வரிகள் குறித்த நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி பிறப்பித்தார். ஏப்ரல் 5 முதல் 10% அடிப்படை வரி அமலில் உள்ளது. அந்த 10% அடிப்படை வரியுடன் மொத்தம் … Read more