பிஹார் பேரவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு 

பாட்னா: மொத்​தம் 243 இடங்​களை கொண்ட பிஹார் சட்​டப்​பேர​வைக்கு நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. பிஹார் தேர்​தலில் முதல்​முறை​யாக முன்​னாள் தேர்​தல் வியூக வகுப்​பாளர் பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்சி போட்​டி​யிடு​கிறது. இதுகுறித்து பிர​சாந்த் கிஷோர் நேற்று கூறிய​தாவது: இந்த தேர்​தலில் நான் போட்​டி​யிடக் கூடாது என்று கட்சி முடிவு செய்​துள்​ளது. எனவே தேஜஸ்விக்கு எதி​ராக ராகோபூரில் மற்​றொரு வேட்​பாளரை கட்சி அறி​வித்​துள்​ளது. இது கட்​சி​யின் … Read more

Diwali Holiday: 3 நாட்கள் இல்லை! தீபாவளிக்கு மொத்தம் 6 நாள் பள்ளிகள் விடுமுறை!

ஒவ்வொரு மாநிலத்திலும் தீபாவளி பண்டிகைகள், உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை நாட்கள் மாறுபடுகின்றன. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும்போது 3 பேர் உயிரிழப்பு

கொல்​லம்: கேரளா​வின் கொல்​லம் மாவட்​டம் நெடு​வாத்​தூர் கிராமத்​தில் 3 குழந்​தைகளு​டன் வசித்த அர்ச்​சனா (33) மற்​றும் அவரது இரண்​டாவது கணவர் சிவகிருஷ்ணன் (24) இடையே நேற்று முன்​தினம் இரவு தகராறு ஏற்​பட்​டது. மது போதை​யில் இருந்த சிவகிருஷ்ணன் அர்ச்​ச​னாவை தாக்​கிய​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் நேற்று அதி​காலை​யில் அர்ச்​சனா அரு​கில் இருந்த கிணற்​றில் குதித்​தார். தகவலின் பேரில் தீயணைப்பு படை​யினர் அங்கு விரைந்து வந்​தனர். சோனி குமார் (36) என்ற வீரர் கிணற்​றில் இறங்கி உயிருடன் இருந்த அர்ச்​ச​னாவை … Read more

ஊழல் வழக்கில் லாலு, மனைவி, மகன் மீது குற்றச்சாட்டு பதிவு: பிஹார் தேர்தலுக்கு முன் லாலு குடும்பத்துக்கு பின்னடைவு

புதுடெல்லி: ராஷ்ட்​ரிய ஜனதா தளத்​தின் (ஆர்​ஜேடி) நிறு​வனர் லாலு, அவரது மனைவி மற்​றும் மகன் மீது ஊழல் வழக்​கில் டெல்லி நீதி​மன்​றத்​தில் நேற்று குற்​றச்​சாட்டு பதிவு செய்​யப்​பட்​டது. பிஹார் தேர்​தலுக்கு முன் லாலு மற்​றும் அவரது குடும்​பத்​துக்கு இது பெரும் பின்​னடை​வாக கருதப்​படு​கிறது. ஆர்​ஜேடி நிறு​வனர் லாலு பிர​சாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009 வரை ரயில்வே அமைச்​ச​ராக இருந்​த​போது இரு ஐஆர்​சிடிசி ஓட்​டல்​களை பராமரிப்​ப​தற்​கான ஒப்​பந்​தம் சுஜாதா ஓட்​டலுக்கு வழங்​கப்​பட்​டது. இந்த ஒப்​பந்​தத்​திற்கு ஈடாக … Read more

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: மம்தா பானர்ஜிக்கு கிரண் ரிஜிஜு கண்டனம்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் துர்​காபூரில் மருத்​துவ மாணவி ஒரு​வரை ஒரு கும்​பல் பாலியல் வன்​கொடுமை செய்​து​விட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து முதல்​வர் மம்தா பானர்ஜி நேற்று முன்​தினம் கூறும்​போது, “மருத்​துவ மாணவிக்கு நடந்த பாலியல் வன்​கொடுமை மிக​வும் அதிர்ச்சி அளிக்​கிறது. அதே​நேரம் நள்​ளிரவு 12.30 மணிக்கு அவர்​கள் கல்​லூரி வளாகத்தைவிட்டு எப்​படி வெளி​யில் சென்​றனர்” என்றார். இதுகுறித்து மத்​திய நாடாளுமன்ற விவ​காரத்துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு நேற்று எக்ஸ் பக்கத்​தில், “பாலியல் வன்​கொடுமை​யால் பாதிக்​கப்​பட்ட மாண​வியையே … Read more

​ராஜஸ்தான் பேருந்து தீ விபத்தில் உயிரிழப்பு 21-ஆக உயர்வு: விதிகளை மீறி மாற்றங்​கள் செய்யப்பட்டது அம்பலம் 

ஜெய்​சால்​மர்: ராஜஸ்​தானில் நேற்று முன்​தினம் நடந்த பேருந்து தீ விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 21-ஆக அதி​கரித்​துள்​ளது. புத்​தம் புதிய அந்த தனி​யார் பேருந்​தில் விதி​களை மீறி மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டதே இந்த விபத்​துக்கு முக்​கிய காரணம் என்​பது தெரிய​வந்​துள்​ளது. ஜெய்​சால்​மரிலிருந்து நேற்று முன்​தினம் பிற்​பகலில் 57 பயணி​களை ஏற்​றிக்​கொண்டு ஜோத்​பூருக்கு புறப்​பட்டு சென்ற தனி​யார் பேருந்து தையாத் கிராமத்​துக்கு அருகே திடீரென தீப்​பிடித்து எரிந்​தது. இதில், 21 பேர் உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். தீக்​காயமடைந்த 16 பேர் … Read more

ஐபிஎஸ் அதி​காரி பூரண் குமார் குடும்​பத்​தினருக்கு ராகுல் ஆறு​தல்

புதுடெல்லி: ஹரி​யானா ஐபிஎஸ் அதிகாரியான பூரண் குமார் கடந்த 7-ம் தேதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி அம்னீத் பி.குமார், மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பட்டியல் வகுப்பை சேர்ந்த தனக்கு எதிராக மூத்த அதிகாரிகள் 10 பேர் சாதியப் பாகுபாடு காட்டியதாகவும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை 11 மணியளவில் சண்டிகரில் உள்ள பூரண் … Read more

மகா​ராஷ்டிர சாலை பள்ளத்தில் உயிரிழந்தால் ரூ. 6 லட்சம் இழப்பீடு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், மும்பை சாலைகளின் பரி​தாப நிலை மற்​றும் சாலை பள்​ளங்​களால் ஏற்​படும் உயி​ரிழப்​பு​கள் குறித்து மும்பை உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரணை நடத்​தி​யது. இந்த வழக்​கில் நீதிப​தி​கள் ரேவதி மோஹிதே தேரே, சந்​தேஷ் பாட்​டீல் ஆகியோர் அடங்​கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்​கியது. இந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: குடிமக்கள் நல்ல சாலைகளுக்கு உரிமை உடையவர்கள். சாலை பள்ளங்கள் அல்லது திறந்தவெளி சாக்கடைகளால் உயிரிழப்பு ஏற்பட்டால், இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ.6 லட்சமும் காயம் … Read more

புரன் குமார் ஐபிஎஸ் தற்கொலை வழக்கு… தேசமே திரும்பிப் பார்க்க காரணம் என்ன?

தற்கொலைகள் பிரபலங்கள் அல்லது அதிகார வட்டத்தில் நடக்கும்போது அது பேசுபொருளாவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், அப்படியான ஓர் அதிகார வட்ட தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து ஏற்படும் திடீர் திருப்பங்களும், அது அரசியல் வட்டத்தில் ஏற்படுத்தும் அதிர்வலைகளும், அதனால், அரசாங்கம் வரிந்து பேசும் சமரசங்களும், முக்கிய அரசியல் ஆளுமைகள் வரை எழும் சந்தேகக் குரல்களும், அதை தேசமே திரும்பிப் பார்க்க வைக்கும் வழக்காக மாற்றிவிடும் எனலாம். அதுதான் புரன் குமாரின் வழக்கிலும் நடந்திருக்கிறதோ எனுமளவுக்கு அதில் பல விஷயங்கள் … Read more

மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதித்த மாவட்டங்கள் 3 ஆக குறைந்தது: மத்திய அரசு

புதுடெல்லி: மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட (most-affected) மாவட்டங்களின் எண்ணிக்கை 6ல் இருந்து 3 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலை மார்ச் 31, 2026-க்குள் முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இதை நோக்கிய அரசின் செயல்பாடுகள், வெற்றிகரமாக உள்ளன. மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 12-ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த எண்ணிக்கை … Read more