ஹரியாணாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை பாஜக அனுமதிக்காது: அமித் ஷா

சண்டிகர்: ஹரியாணாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டை பாஜக அனுமதிக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். ஹரியாணாவில் இந்த வருட இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதனையொட்டி நடந்த பிற்படுத்தப்பட்டோர் சங்க கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக 1950 வாக்கில் காகா கலேகர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் அளித்த பரிந்துரைகளை வருட கணக்கில் காங்கிரஸ் அமல்படுத்தவில்லை. இதேபோல் … Read more

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் கைது! அதுவும் இந்த காரணத்திற்காக!

தெலுங்கானா போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த என்.கோட்டீஸ்வர் சிங் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆர்.மகாதேவன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு … Read more

நியூயார்க்கில் தேர் திருவிழா நடைபெற உதவிய ட்ரம்ப் உயிரை காப்பாற்றிய ஜெகந்நாதர்: இஸ்கான் தலைவர்

நியூயார்க்: நியூயார்க் நகரில் தேர் திருவிழா நடைபெற உதவிய டொனால்டு ட்ரம்ப் உயிரை ஜெகந்நாதர் காப்பாற்றி விட்டார் என இஸ்கான் அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் ட்ரம்ப்பின் காதில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் நூலிழையில் உயிர் தப்பினார். துப்பாக்கிச்சூடு நடத்திய 20 வயது இளைஞரை பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். … Read more

“மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க வேண்டும்” – தமிழக அரசுக்கு டி.கே.சிவகுமார் கோரிக்கை

பெங்களூரு: “தமிழ்நாட்டின் தலைவர்கள் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டிடம் என்னுடைய ஒரே கோரிக்கை, மேகேதாட்டு நீர்தேக்க அணையின் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.” என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழ்நாட்டின் தலைவர்கள் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டிடம் என்னுடைய ஒரே கோரிக்கை, மேகேதாட்டு நீர்தேக்க அணையின் கட்டுமானப் பணிகளுக்கு … Read more

ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு ரூ.5,000 கோடி செலவு: விருந்தினர்களுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள கை கடிகாரங்கள் பரிசு

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு ரூ.5,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொழிலதிபர் முகேஷ் அம்பானி – நீடா அம்பானி தம்பதியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. கடந்த ஓராண்டாகவே திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள், சடங்குகள் நடைபெற்று வந்தன. கடந்த ஒரு மாதமாக பல்வேறு ஆடம்பர நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. இந்நிலையில், ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு அவரது … Read more

காஷ்மீரில் என்கவுன்ட்டர்: ராணுவ அதிகாரி உள்பட 4 வீரர்கள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் நேற்று தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த என்கவுன்ட்டரில் படுகாயமடைந்த ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட 4 பேர் இன்று (ஜூலை 16) அதிகாலை வீரமரணம் அடைந்தனர். முன்னதாக நேற்றிரவு 9 மணியளவில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட வீரர்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை இந்த உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நடந்தது என்ன? காஷ்மீரின் டோடோ மாவட்டத்தில் தேசா வனப்பகுதியை ஒட்டிய தாரி கோடே எனுமிடத்தில் தீவிரவாதிகள் … Read more

பிரதமருடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று சந்தித்துப் பேசினார். இதுகுறித்து பிரதமர் அலுவல கம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார் என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, ஜூலை 13 -ம் தேதி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் … Read more

நேபாள புதிய பிரதமர் சர்மா ஒலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

புதுடெல்லி: நேபாள நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நேபாளத்தில் கடந்த 2022-ம்ஆண்டு முதல் நேபாள கம்யூனிஸ்ட் – மாவோயிஸ்ட் கட்சி தலைவர் புஷ்பகமல் தஹால் என்றபிரசண்டா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. பிரசண்டா ஆட்சி கவிழ்ந்தது: இந்த கூட்டணியில் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியும் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்த இரு தலைவர்களுக்கு இடையே பலமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டு … Read more

அமெரிக்காவுக்காக மார்பில் குண்டை ஏற்றுக் கொண்டார் ட்ரம்ப்: இடதுசாரிகளை விமர்சித்த கங்கனா ரனாவத்

புதுடெல்லி: குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவுக்காக மார்பில் துப்பாக்கி குண்டை ஏற்றுக் கொண்டார் என்று பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம், பட்லர் நகரில் நேற்று முன்தினம் டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அவரது வலது காதை துப்பாக்கி குண்டு துளைத்த நிலையில் நூலிழையில் அவர் உயிர்தப்பினார். இதுதொடர்பாக பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் குடியரசு … Read more