கர்நாடகாவில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதாலும், இன்னும் சில நாட்களில் அம்மாநில அணைகள் அனைத்தும் நிரம்பும் என்பதாலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள 6 முக்கிய அணைகள் மற்றும் தடுப்பணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கனமழை காரணமாக உத்தர கன்னடா மாவட்டத்தில் இன்று (திங்கள்) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை (ஜூலை 16 வரை) கர்நாடகாவில் கனமழை … Read more

பருவமழை அப்டேட்- மகாராஷ்டிரா, கோவா, கேரளாவுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட்

புதுடெல்லி: மகாராஷ்டிரா, கோவா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்திய வானிலை மைய தகவலின்படி, தென்மேற்கு பருவமழையானது கீழ்நோக்கி நகர்ந்து மகாராஷ்டிரா, கோவா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் கடலோரங்களில் இந்த வாரம் நிலைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாநிலங்களில் வரும் நாட்களில் மிக கனமழை முதல் இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாநிலங்களுக்கு இந்திய வானிலை … Read more

இஷா அம்பானியின் பிரம்மாண்ட பங்களா – மாமனார் கொடுத்த கல்யாண பரிசு… எவ்வளவு தெரியுமா?

Isha Ambani Piramal: முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு திருமணமான போது, அவரின் கணவர் குடும்பத்தினர் அரேபிக்கடலை பார்த்தவாறு அமைந்திருக்கும் சொகுசு பங்களாவை பரிசளித்திருந்தனர். அந்த பங்களா குறித்து இங்கு காணலாம்.

கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது

பெங்களூரு: கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.187.3கோடி கொள்ளையடிக்கப்பட்ட தாக புகார் எழுந்தது. இந்த ஊழலுக்கு உதவாததால் ஆண யத்தின் கண்காணிப்பாளர் சந்திரசேகரனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் கடந்த மே மாதம் அவர் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநாபா, தலைமை கணக்காளர் பரசுராம், யூனியன் வங்கியின் எம்ஜி சாலை கிளை மேலாளர் சுஷ்சிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கர்நாடக பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா … Read more

மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கவுரவ் கோகய் நியமனம்; கொறடாவும் அறிவிப்பு

புதுடெல்லி: மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவராக கவுரவ் கோகய் மற்றும் தலைமைக் கொறடாவாக கொடிக் குன்னில் சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான கடிதம் மக்கள வைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர், தலைமை கொறடா மற்றும் மக்களவை காங்கிரஸ் கட்சியின் 2 கொறடாக்கள் நியமனம் தொடர்பாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித்தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணு கோபால் … Read more

இந்திய ஊடகங்கள் உலகளவில் செல்வாக்கை உயர்த்த வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி விருப்பம்

மும்பை: இந்திய ஊடகங்கள் உலகளவில் தங்களின் செல்வாக்கை விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா வளாகத்தில் நடைபெற்ற ஐஎன்எஸ் (இந்திய செய்தித்தாள் சங்கம்) கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது: ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மொழிகளுக்கு தனதுசமூக ஊடகங்களை விரிவுபடுத்துவதன் மூலம் இந்திய ஊடகங்கள் உலகளவில் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். வளர்ச்சியடைந்த பாரதத்தை அடைவதற்கான … Read more

கார்கில் வெற்றி தின வெள்ளி விழா: உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு விமானப்படை அஞ்சலி

புதுடெல்லி: கார்கில் வெற்றி தின வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, உயிர்நீத்த வீரர்களுக்கு விமானப்படை அஞ்சலி செலுத்தியது. காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள கார்கில் மலை உச்சிகளில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 1999-ம் ஆண்டு ரகசியமாக ஊடுருவி முகாம் அமைத்தது. மலை உச்சியில் முகாமிட்டிருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த முதலில் விமானப்படையின் உதவி நாடப்பட்டது. கார்கில் போரில் விமானப்படையின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் 5000 முறை பறந்து சென்று தாக்குதல் மற்றும் மீட்பு … Read more

செஸ் விளையாட்டில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றும் தொழில்நுட்ப திட்டங்கள்: சென்னை ஐஐடி வெளியீடு

சென்னை: உலகளவில் செஸ் விளையாட்டில் வல்லமை படைத்த நாடாக இந்தியாவை ஆக்குவதற்கான தொழில்நுட்ப உந்துதல் திட்டங்களை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடி-ன் உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையம் (Center of Excellence in Sports Science and Analytics – CESSA), தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளைப் பயன்படுத்தி உலகளவில் செஸ் விளையாட்டில் வல்லமை படைத்த நாடாக இந்தியாவை ஆக்குவதற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் … Read more

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ கேப்டனின் மனைவி குறித்து அவதூறு: டெல்லியில் எப்ஐஆர் பதிவு

புதுடெல்லி: கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ கேப்டன் அன்ஷுமான் சிங்கின் மனைவி ஸ்மிருதி சிங் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்ட நபர் மீது டெல்லி போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்திய ராணுவத்தின் 26-ஆவது பஞ்சாப் படைப் பிரிவில் சியாச்சின் பகுதியில் மருத்துவ அதிகாரியாக இருந்தவர் கேப்டன் அன்ஷுமான் சிங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி சியாச்சின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட வீரர்களையும், மருத்துவ உபகரணங்களையும் மீட்டபோது … Read more

பாஜகவினர் தீவிர களப்பணி ஆற்ற வேண்டும்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தல்

லக்னோ: 2024 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் அதீத நம்பிக்கை வைத்ததன் காரணமாக பாஜக எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாமல் போனது என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை அன்று உத்தரப் பிரதேச மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள், ஊராட்சி தலைவர்கள், மேயர்கள், பாஜக உறுப்பினர்கள் பங்கேற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசி இருந்தார். அப்போது அவர் தெரிவித்தது. இதில் பாஜக தலைவர் நட்டா பங்கேற்றார். … Read more