டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ராஜ்நாத் சிங் டிஸ்சார்ஜ்

புதுடெல்லி: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முதுகு வலி காரணமாக கடந்த 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் கீழ் செயல்படும் பழைய தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்ட ராஜ்நாத் சிங்கின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு தொடர் சிகிச்சைகளை அளித்து வந்தனர். இது குறித்து கடந்த 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் … Read more

ஆந்திராவில் ஆக.15 முதல் அண்ணா கேன்டீன் சேவை

அமராவதி: ‘‘ஆந்திரா முழுவதும் சுதந்திர தினம் முதல் அண்ணா கேன்டீன்கள் திறக்கப்படும்’’ என ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சர் நிம்மல ராமாநாயுடு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அம்மா உணவகங்களை போன்று, ஆந்திர மாநிலத்தில் கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அண்ணா கேன்டீன்கள் தொடங்கப்பட்டன. ஆனால், ஜெகன் அரசு வந்ததும், அண்ணா கேன்டீன்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது மீண்டும் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்றதும், அண்ணா கேன்டீன்கள் மீண்டும் திறக்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில், ஆந்திர மாநில நீர்வளத்துறை … Read more

தமிழகத்துக்கு தினமும் 8,000 கனஅடி காவிரி நீர் திறப்பு – சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: தமிழகத்துக்கு தினமும் 8,000 கனஅடி காவிரி நீர் திறக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லியில் கடந்த 11-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், “தமிழகத்துக்கு கர்நாடக அரசு 1 டிஎம்சி காவிரி நீரை ஜூலை 31-ம் தேதிக்குள் திறந்துவிட வேண்டும். தினமும் வினாடிக்கு 11,500 கன அடி நீர் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் செல்வதை உறுதி செய்ய … Read more

உ.பி.யில் சனிக்கிழமைதோறும் இளைஞரை கடிக்கும் பாம்பு: மாவட்ட ஆட்சியரிடம் வந்த புகார் மீது விசாரணை குழு அமைப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பதேபூரைச் சேர்ந்த விகாஸ் துபே (24). இவரை கடந்த 40 நாட்களில் 7 முறை பாம்பு கடித்துள்ளது. அதுவும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பாம்பு கடித்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் பாம்பு கடித்த போதெல்லாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சைக்காக நிறைய செலவு செய்ததால் விகாஸ் துபேவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தை அணுகிய அவர், சிகிச்சைக்கு நிதியுதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த … Read more

‘‘உயர்கல்வி அமைப்பில் உள்ள குறைகளை நீட் தேர்வு அம்பலப்படுத்தியுள்ளது’’ – ஸ்டாலினுக்கு ராகுல் கடிதம்

சென்னை: நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு; ஜூன் 28, 2024 தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு நன்றி. நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை, … Read more

இமாச்சல் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் முதல்வர் சுக்விந்தர் மனைவி கமலேஷ் வெற்றி

தெஹ்ரா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் முதல்வர் சுக்விந்தர் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்குர் வெற்றி பெற்றுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக சுக்விந்தர் சுகு பதவி வகிக்கிறார். இங்கு சுயேச்சைகளாக இருந்த எம்எல்ஏ.க்கள்தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது. அவர்கள் அனைவரும் பாஜக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இடைத்தேர்தலில் 65.42% வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இடைத்தேர்தலில் தெஹ்ரா தொகுதியில் முதல்வர் சுக்விந்தரின் மனைவி … Read more

காங்கிரஸ் கட்சி செய்த தவறுகளை நாமும் செய்யக் கூடாது: பாஜகவினருக்கு நிதின் கட்கரி அறிவுரை 

பனாஜி: கோவா மாநில பாஜக செயற்குழு கூட்டம் பனாஜி அருகில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருமான நிதின் கட்கரி பேசியதாவது: காங்கிரஸ் கட்சி தவறுகள் செய்ததால்தான் மக்கள் பாஜகவை தேர்வு செய்துள்ளனர். காங்கிரஸ் செய்த தவறுகளை நாமும் செய்தால் பிறகு அக்கட்சி ஆட்சியில் இருந்து வெளியேறியதற்கும் நாம் அதிகாரத்துக்கு வந்ததற்கும் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். பாஜக ஒரு வித்தியாசமான கட்சி என்று அத்வானி கூறுவார். … Read more

துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்: ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில் திருத்தம்

புதுடெல்லி: துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் பணியாற்றி வருகிறார். ஜம்மு காஷ்மீரி்ல் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநருக்கு அரசு நிர்வாக பணிகள் பலவற்றில் கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை (2019) … Read more

13 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன? | HTT Explainer

தமிழகம், மேற்கு வங்கம், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் , இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், பிஹார் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த முதல் இடைத்தேர்தல் என்பதால் பலராலும் உற்று நோக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் அடங்கிய இண்டியா கூட்டணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. 13 … Read more

திருமணத்திற்கு புறப்பட்ட மணமகன்… சிறுநீர் கழிக்கச் சென்றபோது மரணம் – பாம்பு கடித்து கொடூரம்!

Groom Died By Snake Bite: திருமணத்திற்கு புறப்பட்டபோது அவசரமாக பக்கத்தில் இருந்த புதரில் சிறுநீர் கழிக்க சென்றபோது, பாம்பு கடித்து மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.