13-ல் இண்டியா கூட்டணி 10, பாஜக 2 இடங்களில் வெற்றி – 7 மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள்

புதுடெல்லி: நாடு முழுவதும் 7 மாநிலங்களின் 13 சட்டப்பேரவை தொகுதிளுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகளின்படி, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஓர் இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பிஹார், மேற்கு வங்கம், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில், மேற்கு வங்கம், உத்தராகண்ட், பிஹாரின் சில … Read more

சோனியா காந்தியுடன் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்திப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது அவரது மனைவி கல்பனா சோரனும் உடன் இருந்தார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், “இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்த சந்திப்பின்போது, ஜார்க்கண்ட்டில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பேசவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நான் சோனியா காந்தியை சந்திக்கவில்லை. அதோடு, நான் சிறையில் இருந்து … Read more

இடைத்தேர்தல் 2024 | இண்டியா கூட்டணி 1-ல் வெற்றி, 10-ல் முன்னிலை; என்டிஏ 2-ல் முன்னிலை

புதுடெல்லி: நாடு முழுவதும் ஏழு மாநிலங்களின் 13 சட்டப்பேரவை தொகுதிளுக்கு நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 13) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில், பஞ்சாப்பின் மேற்கு ஜலந்தர் சட்டப்பேரவைத் தொகுதியில் இண்டியா கூட்டணியின் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 12 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 10-ல் முன்னிலை வகிக்கின்றன. என்டிஏ 2 இடத்தில் முன்னிலை வகிக்கின்றது. பிஹார், மேற்குவங்கம், தமிழகம், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப் மற்றும் … Read more

தெலங்கானா பரபரப்பு | காங்கிரஸில் இணைந்த 9-வது பிஆர்எஸ் எம்எல்ஏ அரிகேபுடி காந்தி

ஹைதராபாத்: பாரத் ராஷ்ட்ர சமிதி எம்எல்ஏ அரிகேபுடி காந்தி, முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதன்மூலம், 9 பிஆர்எஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர். தெலங்கானாவின் செரிலிங்கம்பள்ளி தொகுதி எம்எல்ஏ அரிகேபுடி காந்தி, எதிர்பார்த்தபடி காங்கிரஸ் கட்சியில் இன்று (ஜூலை 13) இணைந்தார். ஹைதராபாத்தில் உள்ள முதல்வர் இல்லத்தில், முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணைந்தார். அவரோடு, பெருநகர ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் பிஆர்எஸ் கவுன்சிலர்களான செரிலிங்கம்பள்ளி கவுன்சிலர் நாகேந்தர் யாதவ், … Read more

ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் – விதிகளைத் திருத்தி உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, மத்திய உள்துறை அமைச்சகம் விதிகளைத் திருத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு இருக்கும் நிர்வாக அதிகாரத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், மத்திய உள்துறை அமைச்சகம் விதிகளை திருத்தி உள்ளது. காவல்துறை, பொது ஒழுங்கு, அகில இந்திய பணியாளர்கள் தொடர்புடைய விஷயங்களில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் துறைகளைச் சேர்ந்த பணியாளர்களின் நியமனம் மற்றும் இடமாறுதல் தொடர்பான அதிகாரமும் துணைநிலை … Read more

இடைத்தேர்தலிலும் சறுக்கிய பாஜக! 12 இடங்களில் இந்தியா கூட்டணி முன்னிலை!

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை தொடந்து ஹிமாச்சல், மேற்கு வங்கம் உட்பட 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது.

மும்பையில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்: அரசியல், திரை பிரபலங்கள் பங்கேற்பு

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி -நீடா அம்பானியின் இளைய மகன்ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்டுக்கும் நேற்று திருமணம்நடைபெற்றது. இன்று மற்றும்நாளை இரண்டு நாட்களுக்கு திருமண கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளன. இந்தத் திருமண நிகழ்வுக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முதல்வர்யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா … Read more

மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 12.5 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கம்: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 12.5 கோடி வேலைவாய்ப்புகள்உருவாக்கப்பட்டுள்ளன என்றுபாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சையத் ஜாபர் இஸ்லாம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கொள்கைகள் குறித்தும், வேலைவாய்ப்பின்மை குறித்தும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த சில தினங்களாக கேள்வி எழுப்பி வருகிறார். வேலைவாய்ப்பு அளித்துள்ளதாகக் கூறி பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களை திசைதிருப்பி வருகிறார் என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தியின் … Read more

கார்கில் போரில் டைகர் மலையில் விமானப்படை நடத்திய லேசர் குண்டு தாக்குதலின் வீடியோ வெளியீடு

புதுடெல்லி: கார்கில் போரில் டைகர் மலையில், பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானம் கடந்த 1999-ம் ஆண்டு ஜுன் 27-ம் தேதி இரவு நேரத்தில் லேசர் குண்டு தாக்குதல் நடத்திய முதல் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. காஷ்மீரின் லடாக் பகுதியில் அமைந்துள்ளது கார்கில். இங்குள்ள டைகர் மலையின் உச்சியில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 1999-ம் ஆண்டு ரகசியமாக சென்று முகாம் அமைத்தது. பாறை மூலம் பாதுகாப்பு அரண் அமைத்து, அங்கிருந்து … Read more

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு: ஆலோசனை கூட்டத்தில் சித்தராமையா முடிவு

பெங்களூரு: காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையின்படி 1 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட முடியாது என க‌ர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று முன் தினம் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கர்நாடக அரசு தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி காவிரி நீரை ஜூலை 31-ம் தேதி வரை திறந்துவிட வேண்டும். பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் தினமும் வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும் … Read more