பிரதமர் மோடி இடஒதுக்கீட்டை ரத்து செய்ய விரும்புகிறார்: ராகுல் தாக்கு @ தெலங்கானா

ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்; அவர் மக்களிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்க விரும்புகிறார் என்று ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். தெலங்கானாவின் அடிலாபாத் (எஸ்டி) தொகுதிக்குட்பட்ட நிர்மல் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையில் நடக்கும் போட்டி. காங்கிரஸ் கட்சி அரசியல் சாசனத்தை பாதுகாக்க முயற்சி செய்கிறது. பாஜக – ஆர்எஸ்எஸ் இணைந்து அரசியலமைப்பையும், … Read more

‘நான் காந்தி குடும்பத்தின் பணியாளன் இல்லை’ – பாஜகவின் பியூன் விமர்சனத்துக்கு கே.எல்.சர்மா பதிலடி

புதுடெல்லி: தான் ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்றும், காந்தி குடும்பத்தின் பணியாளன் இல்லை என்றும் அமேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கே.எல். சர்மா அளித்த பேட்டியில், “இந்த முடிவு கட்சியின் உயர் மட்டத்தால் எடுக்கப்பட்டது. இந்த தொகுதியின் வேட்பாளராக யாரும் முன்பு அறிவிக்கப்படவில்லை. என்றாலும் ஸ்மிருதி இரானியை நான் நிச்சயம் தோற்கடிப்பேன் என்று நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்றயை எனது மிகப்பெரிய அறிவிப்பு … Read more

‘ஆன்மாவைக் கேளுங்கள்…’ – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அறிவுரை

புதுடெல்லி: நரேந்திர மோடியின் அரசியல் வரலாறு இந்து முஸ்லிம் பிரச்சினையை அடிப்படையாக கொண்டுள்ளது என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், அவர் (மோடி) தனது ஆன்மாவைத் தேட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங், "மோடியின் அரசியல் வரலாற்றை நீங்கள் பார்த்தால், அது இந்து-முஸ்லிம் பிரச்சினையை அடிப்படையாக கொண்டிருப்பதை பார்க்க முடியும். இதனால் யார் பலன் அடைகிறார்கள், யார் … Read more

3-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் அமித் ஷா, டிம்பிள்

காந்திநகர்: நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி கடந்த ஏப்ரல் 19-ம் தேதி 102 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26-ம் தேதி 88 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாம் கட்டமாக நாளை மறுநாள் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்த 95 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 1,351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் பல்வேறு விஐபி வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். அமைச்சர் அமித் ஷா: மத்திய உள்துறை அமைச்சர் … Read more

‘கர்நாடகாவில் காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெறும்’ – முதல்வர் சித்தராமையா நம்பிக்கை

பெலகவி (கர்நாடகா): கர்நாடாகாவில் இருக்கும் 28 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி குறைந்தது 20 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று மாநில முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாநிலத்தின் பெலகவியில், துணை முதல்வர் டிகே சிவகுமார், காங்கிரஸ கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலாவுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “மாநிலத்தில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. மே 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏப். 26ம் தேதி நடந்து முடிந்த … Read more

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள்: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான உரிமை கோரலை இந்தியா ஒருபோதும் கைவிடாது என்றும், ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு மற்றும் அதன் பொருளாதாரம் கண்டுள்ள முன்னேற்றத்தைப் பார்த்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் அவர்களாகவே இந்தியாவுடன் இணைந்து கொள்ள விரும்புவார்கள் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறுகையில், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க இந்தியா எதுவும் செய்யவேண்டியது இல்லை என்று நான் நினைக்கிறேன். ஜம்மு காஷ்மீரில் மாறியிருக்கும் … Read more

தாமரைக்கு வாக்களிப்பேன் என்று கூறிய பெண்ணின் கன்னத்தில் அறைந்த காங். வேட்பாளர்

ஹைதராபாத்: தெலங்கானாவில் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்கப் போவதாக கூறிய பெண் தொழிலாளியை காங். வேட்பாளர் கன்னத்தில் அறைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் நிர்வாகி டி.ஜீவன் ரெட்டி. இவர் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளாராக போட்டியிடுகிறார். இவர் தனது தொகுதிக்குட்பட்ட ஆர்மூர் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் இவர் சென்று ‘கை’ சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது ஒரு பெண், … Read more

ராகுலுக்கு சொந்தமாக கார், குடியிருப்பு இல்லை

லக்னோ: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, தற்போது உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியிலும் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்துள்ளார். மனு தாக்கல் செய்தபோது, வேட்புமனுவுடன் தனது சொத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக அவர் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள சொத்துகள் விவரம்: ரூ.4.33 கோடி மதிப்பிலான பங்குகள், ரூ.3.81 கோடி மதிப்பிலான பரஸ்பர நிதி பங்குகள், ரூ.26.25 லட்சம் வங்கி கையிருப்பு, ரூ.15.21 லட்சம் தங்கப் பத்திரங்கள் உள்பட ரூ.9,24,59,264 மதிப்புள்ள … Read more

தேர்தல் பணியின்போது மரணமடைந்த அசாம் அதிகாரி குடும்பத்துக்கு ரூ.15.3 லட்சம் கருணைத்தொகை

புதுடெல்லி: தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென உடல் நலிவடைந்து மரணமடைந்த அசாம் காசிரங்கா மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடி அதிகாரியின் குடும்பத்துக்கு தலைமை தேர்தல் ஆணையர் ரூ.15.3 லட்சம் கருணைத்தொகை கிடைக்கச் செய்துள்ளார். அசாமில் கடந்த மாதம் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் காசிரங்கா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி தேர்தல் பணியில் சுகுமால் ஜோதி போரா என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் ஹோஜாய் மாவட்ட … Read more

தேவகவுடாவின் மகன் ரேவண்ணா எம்எல்ஏ கைது: கர்நாடக அரசியலில் பரபரப்பு; பிரஜ்வலை தேடும் பணி தீவிரம்

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணா மீது அவரது வீட்டு பணிப்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில், அவர் நேற்று கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள‌ அவரது மகனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை போலீஸார் தேடி வருகின்றனர். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த‌ மகனும் மஜதவின் மூத்த தலைவருமான‌ ரேவண்ணா (66) கர்நாடக மாநிலம், ஹொலேநர்சிப்புரா தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். அவரது மகனும் ஹாசன் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா … Read more