பிரதமர் மோடி படத்துடன் போஸ்டர்: அம்பானி இல்லத் திருமண விழாவில் அரசியல் சர்ச்சை!

மும்பை: விவிஐபி விருந்தினர்கள், தொடர் கொண்டாட்டம், ஆடம்பரச் செலவு போன்ற விஷயங்களுக்காக பெரிதும் பேசப்பட்ட இந்தியாவின் பெரும் பணக்காரரான அம்பானி இல்லத் திருமண விழா தொடர்பான போஸ்டரில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருந்தது திடீர் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி (29) – ராதிகா மெர்சண்ட் திருமணத்தையொட்டி, மும்பை விழா கோலம் பூண்டுள்ளது. இதனிடையே, அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸுக்கு சொந்தமான ஜியோ வோர்ல்ட் கன்வென்ஷன் … Read more

கேஜ்ரிவால் முதல்வர் பதவி விவகாரம்: உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? | HTT Explainer

புதுடெல்லி: “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை பதவி விலக நீதிமன்றம் அறிவுறுத்த முடியுமா அல்லது முதல்வராகவோ, அமைச்சராகவோ செயல்படக் கூடாது என்று உத்தரவிட முடியுமா என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதவி குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்தது தவறு என்றுகூறி உச்ச நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று (ஜூலை 12) உச்ச … Read more

அட்லி மனைவி பிரியா பிளவுஸில் எழுதியிருந்தது என்ன? மணமகன் வரவேற்பில் ஜொலித்த இந்த 3 நடிகைகள்!

Anant Ambani Baraat Ceremony: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமண விழா இன்று தொடங்கிய நிலையில், அதற்கு வருகை தந்த நட்சத்திரங்களில் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்த பிரபல நடிகைகளின் காஸ்ட்யூம்களை இங்கு காணலாம். 

“இந்தியாவுக்கு சொந்தமானது இந்த நூற்றாண்டு!” – குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்

மும்பை: இந்தியாவுக்குச் சொந்தமானது இந்த நூற்றாண்டு என என்னால் சொல்ல முடியும் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள நர்சி மோஞ்சி மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “இந்த நிறுவனம் நாளைய தலைவர்களை வளர்த்து வருகிறது. இதன் முன்னாள் மாணவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர். மேலாண்மை படிப்புகளில் சாதனை புரிகின்றனர். இந்த நிலையம், மாற்றத்தின் ஒரு அச்சாணி என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இது … Read more

“தலைப்புச் செய்திக்கான முயற்சி” – ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ அறிவிப்பு மீது காங்கிரஸ் காட்டம்

புதுடெல்லி: ஜூன் 25-ம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ என அனுசரிக்கப்படும் என்ற மோடி அரசின் அறிவிப்பு தலைப்புச் செய்திக்கான முயற்சி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமர் மேற்கொள்ளும் தலைப்புச் செய்திக்கான மற்றுமொரு பாசாங்குத்தனமான முயற்சியே இது. அறிவிக்கப்படாத 10 ஆண்டுகளாக அவரநிலையை பிறப்பித்தவர் அவர். அதன் காரணமாகவே, இந்த தேர்தலில் மக்கள் அவருக்கு … Read more

எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக அனுசரிப்பு: மத்திய அரசு

புதுடெல்லி: நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி, இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகார மனநிலையின் மோசமான வெளிப்பாடாக, நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். இதன்மூலம், அவர் நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்தத் தவறும் செய்யாமல் லட்சக்கணக்கான மக்கள் … Read more

நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்சினைகளில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே 

புதுடெல்லி: “பிரதமர் மோடி நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தள பக்கத்தில் வெள்ளிக்கிழமை இந்தியில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நரேந்திர மோடி அவர்களே, உங்களின் அரசாங்கம் கோடிக்கணக்கான மக்களை வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், சமத்துவமின்மை போன்ற படுகுழிக்குள் தள்ளிவிட்டுள்ளது. தாக்கல் செய்யப்படவிருக்கும் மத்திய பட்ஜெட்டுக்காக கேமிராக்களின் வெளிச்சத்தில் நீங்கள் கூட்டம் நடத்தும் வேளையில் நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளிலும் … Read more

ஆனந்த் அம்பானி weds ராதிகா மெர்ச்சன்ட்… காதல் முதல் கல்யாணம் வரை… அனைத்தும் இதோ!

Anant Ambani Radhika Merchant Wedding: ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் காதல் கதையில் தொடங்கி, அவர்கள் திருமணம் குறித்த தகவல்கள், அதில் பங்கேற்கும் பிரபலங்கள் உள்ளிட்ட பல விவரங்களை இதில் காணலாம். 

திட்டமிட்ட காலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும்: ஜம்மு – காஷ்மீர் தலைவர்கள் வலியுறுத்தல்

ஸ்ரீநகர்: திட்டமிட்ட காலத்தில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அம்மாநிலத்தின் தலைவர்களான ஒமர் அப்துல்லா, சஜத் லோன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடைசியாக 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு முதல் மத்திய ஆட்சியின் கீழ் இந்த யூனியன் பிரதேசம் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் வரும் செப்டம்பரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் … Read more

மும்பையில் கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீரால் மக்கள் அவதி

மும்பை: மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) காலை பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன் வெள்ள நீர் தேக்கத்தால் மும்பை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளையும் சூழ்ந்த வெள்ளநீரால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்திய வானிலை மையத்தால் மும்பைக்கு இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அடுத்த 3 – 4 மணிநேரங்களில் மும்பையின் நகர் பகுதியில் கடுமையான மழைப்பொழிவு … Read more