பட்ஜெட்டுக்கு முன் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். 2024-25-க்கான மத்திய பட்ஜெட், ஜூலை 23-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்பட உள்ள முதல் பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட் மீது பரவலான எதிர்பார்ப்புகள் உள்ளன. 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக … Read more

‘பிஹார், மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிப்பு’ – ஆர்எஸ்எஸ் கட்டுரையால் சர்ச்சை

புதுடெல்லி: பிஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம் மக்கள் தொகை பெருகுவதாகவும், இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை கைமீறும் என்றும் எச்சரித்து ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் தாய் அமைப்பாக இருப்பது ஆர்எஸ்எஸ். இதன் சார்பில் வெளியாகும் ‘ஆர்கனைஸர்’ ஆங்கில இதழில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது. அக்கட்டுரையில், ‘தேசிய அளவில் ஒருங்கிணைந்த மக்கள்தொகை கட்டுப்பாடு தேவை. இந்தியாவின் தென்பகுதி மற்றும் மேற்கு பகுதி மாநிலங்களின் மக்கள் … Read more

உ.பி. வெள்ளத்தில் 60+ கிராமங்கள் பாதிப்பு: ஹெலிகாப்டரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கால் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உத்தர பிரதேசத்தின் பல்ராம்பூர், ஷ்ரவஸ்தி, பஸ்தி, கோரக்பூர், பல்லியா மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள ரப்தி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்ராம்பூர், துளசிபூர், உத்ராலா ஆகிய பகுதிகளில் உள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல்ராம்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், நேபாளத்தில் இருந்து கீழ்நோக்கி வரும் நீர் … Read more

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் 130 இடங்களில் போட்டியிட வாய்ப்பு

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மகா விகாஸ் அகாதி கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. இதில், காங்கிரஸ் 130 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி), சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாதி, தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. கடந்த செவ்வாயன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மூன்று முக்கிய … Read more

நீட் வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசியவில்லை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்!

புதுடெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு 2024 (நீட்) வினாத்தாள் கசிவு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. அது சமூக ஊடகங்களில் பரவவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய புலனாய்வு முகமை (சிபிஐ) மூடி முத்திரையிடப்பட்ட தனது நிலை அறிக்கையை இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் வினாத்தாள் கசிவு பிஹாரின் ஒரு தேர்வு மையத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. இதனால் சில மாணவர்கள் … Read more

கர்நாடகாவில் மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரம்: சித்தராமையாவுக்கு எதிராக போலீஸில் புகார்

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூருநகர மேம்பாட்டு கழகம் கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. இதையடுத்து பார்வதிக்கு மைசூரு மாநகருக்குட்பட்ட பகுதியில் மாற்று நிலம்ஒதுக்கீடு செய்யப்பட்ட‌து. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்தது. கர்நாடக எதிர்க்கட்சி தலைவர்ஆர். அசோகா, ‘‘இந்த விவகாரத்தில் முதல்வர் சித்தராமையாவின் தலையீடு காரணமாகவே அதிக விலை கொண்ட மாற்று நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதில் விதிமுறை மீறலும், … Read more

ரஷ்யா, ஆஸ்திரியா பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (வியாழக்கிழமை) காலை புதுடெல்லி வந்தடைந்தார். ஆஸ்திரியாவின் அரசு, அதிபர் மற்றும் மக்களின் அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எக்ஸ் தள பதிவில் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். “இந்தப் பயணம் வரலாற்று சிறப்புமிக்கது. நமது தேசங்களுக்கு இடையிலான நட்புறவு தழைத்துள்ளது. வியன்னாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டது மகிழ்ச்சி. சிறப்பாக உபசரித்த ஆஸ்திரிய அரசு, அதிபர் கார்ல் … Read more

'நீட் வினாத்தாள் லீக் ஆகவில்லை…' மத்திய அரசு திடீர் பல்டி? உச்ச நீதிமன்றத்தில் NTA சொன்னது என்ன?

NEET Paper Leak Allegations: நீட் விவகாரம் முதலில் வெடித்த பீகாரின் பாட்னாவில் வினாத்தாள்கள் ஏதும் வெளியாகவில்லை என தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் பொது இடத்தில் சிகரெட் புகைக்க தடை

திருப்பதி: புண்ணிய வைணவ திருத்தலமாக விளங்கும் திருப்பதி நகரில் கோவிந்தராஜர், கோதண்டராமர், கபிலேஸ்வரர், பத்மாவதி தாயார் ஆகிய புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. மேலும், திருமலைக்கு செல்லும் பக்தர்கள் திருப்பதி வழியாகத்தான் திருமலைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், ஏற்கனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க திருப்பதி மற்றும் திருமலையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கவோ, பயன்படுத்தவோ முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் கூட திருமலையில் தடை செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், திருமலைக்கு குட்கா, சிகரெட், பீடி, பான் மசாலா, மதுபான … Read more

சொந்த வாகனத்தில் சைரன் பயன்படுத்திய மகாராஷ்டிர பெண் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்

மும்பை: மகாராஷ்டிராவில் சொந்த வாகனத்தில் சிவப்பு சைரன் விளக்கு பயன்படுத்திய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டார். யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 821-வது ரேங்க் பெற்றவர் பூஜா கேத்கர், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்ட உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளை அவர் பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்தது. பூஜா தனது சொந்த காரில் மகாராஷ்டிர அரசு என்ற பலகையும் சிவப்பு-நீல சைரன் விளக்கும் பயன்படுத்தி வந்துள்ளார். கூடுதல் … Read more