மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு பெண் மீது தாக்குதல்: வீடியோ வெளியிட்டது பாஜக

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் சோப்ராவில் பெண் ஒருவரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கும் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதற்கு பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக செய்திதொடர்பாளர் சேஷாத் பூனாவாலாநேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் மேற்கு வங்கத்தில் பெண் ஒருவரை ஒரு கும்பல் தாக்கும் வீடியோ இருந்தது. இது குறித்து பூனாவாலா கூறியிருப்பதாவது: சோப்ராவில் நடைபெற்ற தலிபான் ஸ்டைல் தாக்குதலுக்குப்பிறகு, மற்றொரு கொடூர தாக்குதல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் திரிணமூல் காங்கிரஸ் … Read more

கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி: கெஜட்டில் விரைந்து வெளியிட நிதியமைச்சகம் உத்தரவு

புதுடெல்லி: தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவுநாணயத்திற்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அரசு கெஜட்டில் விரைந்து வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான திமுகவின் தலைவருக்காக ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம்வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் அரசு சார்பில்கடந்த வருடம் கோரப்பட்டிருந்தது. இந்நாணயத்தை, கடந்த … Read more

சிபிஐ விசாரணை | மத்திய அரசுக்கு எதிரான மேற்கு வங்க அரசின் மனு விசாரணைக்குரியதே – உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: மாநிலத்தின் அதிகார வரம்புக்குள் மத்திய புலனாய்வு அமைப்பு அல்லது சிபிஐ விசாரணைக்கு அனுமதிக்கும் மத்திய அரசின் உத்தரவினை எதிர்த்து மேற்குவங்க அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்குரியதே என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் சந்தீப் மேதா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒப்புதலைத் திரும்பப் பெற்றாலும், சிபிஐ விசாரணைக்கு எதிரான மேற்கு வங்க மாநிலத்தின் மனு அதன் சொந்த தகுதியில் விசாரணைக்கு உகந்ததே என்று தெரிவித்தது. மேலும் … Read more

பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஐஆர்எஸ் அதிகாரி – பாலின மாற்றத்தை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு!

புதுடெல்லி: பெண்ணாக இருந்து ஆணாக மாறிய மூத்த ஐஆர்எஸ் அதிகாரியின் பாலின மாற்றத்தை மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய குடிமைப் பணி சேவை வரலாற்றில் முதல் முறையாக இது நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வந்த அனுசுயா என்ற பெண் அதிகாரி, அனுகதிர் சூர்யா என்ற ஆணாக மாறியுள்ளார். அவரது பாலின மாற்றத்தை மத்திய நிதி … Read more

உ.பி. அரசின் நிர்வாகத் தோல்வியே ஹாத்ரஸ் உயிரிழப்புகளுக்கு காரணம்: அகிலேஷ் குற்றச்சாட்டு

லக்னோ: உத்தரப் பிரதேச அரசின் நிர்வாகத் தோல்வியே ஹாத்ரஸ் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் சைஃபை நகரில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அகிலேஷ் யாதவ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “கடந்த 2-ம் தேதி ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த போலே பாபாவின் ஆன்மிக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 112 பெண்கள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச … Read more

“இது போருக்கான நேரம் அல்ல” – ஆஸ்திரியாவில் மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர் மோடி

வியன்னா: ஆஸ்திரியாவில் அந்நாட்டு பிரதமர் கார்ல் நெகம்மரைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்தார். அப்போது, ‘இது போருக்கான நேரம் அல்ல’ என்ற தனது முந்தைய கருத்தை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார். ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு இரண்டு நாள் பயணமாக நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மர், பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்றார். மேலும், பிரதமர் … Read more

பெண்ணாக இருந்து ஆணாக மாறிய அரசு அதிகாரி! ஒப்புதல் அளித்த மத்திய அரசு!

அரசு அதிகாரியான அனுசுயா தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றுமாறு மத்திய நிதியமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். அவரது கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.

மும்பை சொகுசு கார் விபத்து எதிரொலி: மிஹிர் ஷா மது அருந்திய பார் இடிப்பு

மும்பை: பிஎம்டபிள்யூ கார் விபத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியை சேர்ந்த ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷாவு மது அருந்திய மதுபான விடுதி புல்டோசரால் இடிக்கப்பட்டது. மும்பை ஜூஹு தாரா சாலையில் உள்ள அந்த மதுபான விடுதி புதன்கிழமை இடிக்கப்பட்டது. முன்னதாக, இந்த மதுபான விடுதிக்கு போலீஸார் செவ்வாய்க்கிழமை சீல் வைத்ததைத் தொடர்ந்து இன்று மும்பை மாநகராட்சி அதிகாரிகளால் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது. போலீஸாரின் கூற்றுப்படி, பிஎம்டபிள்யூ காரை அதிவேக வேகமாக … Read more

முஸ்லிம் பெண்களுக்கும் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: மத வேறுபாடின்றி திருமணமான அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் குற்றவியல் நடைமுறைத் சட்டம் பிரிவு 125-ன் கீழ் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முஸ்லிம் பெண்களுக்கு உரிமையுண்டு என்று உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 10) தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னம் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, “சிஆர்பிசி பிரிவு 125 மனைவியின் ஜீவனாம்சம் குறித்த சட்டபூர்வ உரிமையை பேசுகிறது. இது முஸ்லிம் பெண்களையும் உள்ளடக்கியது” என்று தனித்தனியாக, அதேசமயம் ஒரே தீர்ப்பை … Read more

உத்தரப்பிரதேசம் | பால் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 18 பேர் பலி

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ்-ல் உள்ள லக்னோ – ஆக்ரா விரைவுச் சாலையில் வேகமாக வந்த இரண்டடுக்கு பேருந்து, பால்வேன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர், 19 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து உன்னோவ் மாவட்ட ஆட்சியர் கவுரங் ரதி கூறுகையில், “அந்தப் பேருந்து பிஹார் மாநிலம் மோதிகரியில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. கார்ஹா கிராமம் அருகே நின்று கொண்டிருந்த பால் வண்டி மீது பின்னால் இருந்து பேருந்து … Read more