ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியதால் மஜதவில் இருந்து நீக்கம்: தேவகவுடா பேரன் பிரஜ்வல் வெளிநாட்டுக்கு தப்பினார்

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டுக்கு தப்பிய அவர் உடனடியாக நாடு திரும்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வு குழு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் (33). கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யான அவர், தற்போதைய மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் அதே தொகுதியில் மீண்டும் … Read more

“பாஜக தேர்தல் அறிக்கை சுவடு தெரியாமல் காணாமல் போனது” – ப.சிதம்பரம் விமர்சனம்

புதுடெல்லி: “காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு இணையாக பாஜகவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் இல்லை. அதனால்தான் மோடியும் மற்ற பாஜக தலைவர்களும் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பற்றி பேசுவதில்லை. பாஜகவின் தேர்தல் அறிக்கை சுவடு தெரியாமல் காணாமல் போனது” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர், “மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் பேசிய பிரதமர், நாட்டின் வளங்களில் பட்டியலின, பழங்குடியின, ஓபிசி மற்றும் ஏழைகளுக்கு முதல் உரிமை உள்ளது என்றார். … Read more

‘பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் எந்தவொரு வாய்ப்பையும் தவறவிட்டதில்லை’ – பிரதமர் மோடி

மத் (மகாராஷ்டிரா): “60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சிக்கும் கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் பார்க்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் வறுமையை ஒழிப்பதைப் பற்றி பேசினார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து நான் மீட்டுள்ளேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மத் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “உங்களின் அன்பே எனது பலம். … Read more

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை தூக்கியெறியும்” – ராகுல் காந்தி

புதுடெல்லி: “மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள், பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசிக்களுக்கு உரிமை வழங்கிய அரசியல் சாசனத்தை கிழித்து தூக்கி எறிந்துவிடும்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி, அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை கையில் வைத்துக்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள், பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசிக்களுக்கு உரிமை … Read more

“கேஜ்ரிவால் உடல்நிலை சீராக உள்ளது” – திகார் சிறையில் சந்தித்த பஞ்சாப் முதல்வர்

புதுடெல்லி: அரவிந்த் கேஜ்ரிவாலின் உடல்நிலை சீராக இருப்பதாக, அவரை திகார் சிறையில் சந்தித்ததற்குப் பிறகு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கேஜ்ரிவாலின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. அவர் இன்சுலின் எடுத்து வருகிறார். தொடர்ந்து தினசரி பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பண்ணை விளைபொருட்கள் குறித்தும் என்னிடம் கேட்டறிந்தார். பஞ்சாப் … Read more

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்.பி.யுமான சீனிவாச பிரசாத் காலமானார்

பெங்களூரு: மைசூரு மாகாணத்தில் பாஜக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான சீனிவாச பிரசாத் உடல் நலக்குறைவால் பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 76. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் கடந்த 1947-ம் ஆண்டு பிறந்த சீனிவாச பிரசாத் 1974-ல் ஜனதா கட்சியில் சேர்ந்தார். பட்டியலின வகுப்பை சேர்ந்த இவர் பழைய‌ மைசூரு மாகாணத்தில் முக்கிய தலைவராக விளங்கினார். கருத்து வேறுபாட்டின் காரணமாக ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், சமஜா … Read more

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் தாமத நடவடிக்கை ஏன்? – கர்நாடக காங்கிரஸுக்கு பாஜக கேள்வி

புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்திருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முடிவை, அதன் கூட்டணி கட்சியான பாஜக வரவேற்றுள்ளது. அதேவேளையில், இந்த விவகாரத்தில் தாமதமாக நடவடிக்கை எடுத்ததாக கர்நாடகா அரசு மீது அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சட்டம் – ஒழுங்கு மாநிலத்தின் வசம் உள்ள நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற பாஜக தலைவர்கள் கர்நாடக … Read more

‘இது சரியான தருணமல்ல’ – மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ, அமலாகத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கான சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, ஜாமீன் வழங்குவதற்கு இது சரியான நேரம் இல்லை என்று கூறி ஜாமீன் மனுவை நிராகரித்தார். மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), அமலாக்கத் துறை மற்றும் மணீஷ் சிசோடியா தரப்பு … Read more

அமித் ஷா போலி வீடியோ விவகாரம்: காங். எம்எல்ஏ உதவியாளர், ஆம் ஆத்மி பிரமுகர் கைது

அகமதாபாத்: எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசிகளின் இடஒதுக்கீட்டை குறைக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக கூறப்படும் போலி வீடியோவை பகிர்ந்தது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரின் உதவியாளர், ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர் ஆகிய இருவரை கைது செய்திருப்பதாக குஜராத் போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து குஜராத் காவல் துறை வெளியிட்ட தகவல்: இந்த விவகாரம் தொடர்பாக அகமதாபாத் சைபர் கிரைம் போலீஸார், பனஸ்கந்தாவின் பலன்பூரில் வசிக்கும் சதீஸ் வன்சோலா மற்றும் தகோத் … Read more

“பிரதமர் ஏன் இவ்வளவு பதற்றத்துடன் இருக்கிறார்?” – ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

புதுடெல்லி: “பாஜக தங்களின் கோட்டையாக நினைக்கும் இடங்களில் கூட, பிரதமர் ஏன் இவ்வளவு பதற்றமாகவும், பயத்துடனும் இருக்கிறார்” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் மாநிலம் சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றார். அதே போல் ஒரு சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. Source link