ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் தீபாவளி போனஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ர​யில்​வே​யில் பணி​யாற்​றும் 10.91 லட்​சம் ஊழியர்​களுக்கு, தீபாவளிப் பண்டிகையை முன்​னிட்டு ரூ.1,866 கோடியை போனஸாக வழங்க மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்ளது. தீபாவளி, தசரா, துர்கா பூஜை பண்​டிகைக் காலத்தை முன்னிட்டு ரயில்வே ஊழியர்​களுக்கு ஒவ்​வோர் ஆண்​டும் போனஸ் வழங்​கப்​படும். இந்​நிலை​யில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​தது. இதுகுறித்து ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரயில்​வே​யில் பணி​யாற்​றும் 10,91,146 ஊழியர்​களுக்கு 78 நாட்​களுக்கு நிக​ரான ஊதி​யத்தை … Read more

இனி இவர்களுக்கும் மாதம் ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை… மாநில அரசு அறிவிப்பு

Monthly Stipend For Lawyers: புதிய வழக்கறிஞர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை குறித்து இங்கு காணலாம். 

ஐ.நா. சபையின் ஏஐ சிறப்பு மையமாக சென்னை ஐஐடியை பரிந்துரைத்தது இந்தியா

சென்னை: ஐ.​நா. சபை​யின் டிஜிட்​டல் மற்​றும் வளரும் தொழில்​நுட்​பங்​களுக்​கான அலு​வல​கத்​தின் சிறப்பு மைய​மாக சென்னை ஐஐடியை மத்​திய அரசு பரிந்​துரை செய்​துள்ளது என்று மின்​னணு​வியல், தகவல் தொழில்​நுட்​பத்துறை செயலர் எஸ்​.கிருஷ்ணன் தெரிவித்தார். தற்​போதைய செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) காலச்​சூழலில் சவால்​களை திறம்பட கையாள்​வதற்​காக டிஜிட்​டல் மற்​றும் வளர்ந்து வரும் தொழில்​நுட்​பங்​களுக்​கான அலு​வல​கத்தை (ODET) ஐக்​கிய நாடு​கள் சபை அமைத்​துள்​ளது. அதன்​படி, ஒவ்​வொரு நாடும் ஐ.நா. சபை​யின் இந்த அலு​வல​கத்​தால் ஆதரிக்​கப்​பட்ட கல்வி நிறு​வனங்​களை அடை​யாளம் காட்ட வேண்​டும். … Read more

வயதின் அடிப்படையில் அரசியல் வாழ்க்கையை மதிப்பிடலாமா? – வாக்காளர்களுக்கு வயது குறித்த புரிதல் இல்லை

பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடிய போது, பாஜக மற்றும் சங் பரிவாருக்குள் “வயது வரம்பு” விதி இருப்பதாக கூறப்படுவது தொடர்பான ஊகங்கள் அதிகரித்தன. எல்.கே அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்கள் ஓய்வு பெற்றதை ஊடகமும், அரசியல் முணுமுணுப்புகளும் சுட்டிக்காட்டின. மோடி ஏன் வித்தியாசமாக நடத்தப்பட வேண்டும் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பினார்கள். இவை அனைத்தும் நல்ல கேள்விகள். பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகளில் தகுந்த பதில்கள் தெளிவாக வழங்கப்பட்டன. … Read more

தீபாவளி, சாத் பண்டிகைக்காக அக்.1 முதல் 12,000 சிறப்பு ரயில்கள்: கூடுதலாக 3 கோடி பேர் பயணிக்கலாம்

புதுடெல்லி: தீபாவளி மற்றும் சாத் பண்​டிகையமுன்​னிட்டு அக்​டோபர் 1 முதல் சுமார் 12,000 சிறப்பு ரயில்​கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது: தீபாவளி மற்​றும் சாத் பண்​டிகை காலத்​தில் ரயில்​களில் கூட்ட நெரிசலை குறைப்​ப​தற்​காக சுமார் 12,000 சிறப்பு ரயில்​களை ரயில்வே இயக்க உள்​ளது. இதன் மூலம் கூடு​தலாக 3 கோடி பேர் பயணம் செய்​ய​லாம். இது, ஆஸ்​திரேலி​யா​வின் மக்​கள் தொகையை விட அதி​க​மாகும். இந்த சிறப்பு ரயில்​கள் அக்​டோபர் 1 … Read more

நடித்துக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு: இமாச்சல பிரதேசத்தில் மேடையிலேயே உயிர்நீத்த நாடக நடிகர்

சம்பா: நடித்துக் கொண்டிருக்கும்போதே ​மாரடைப்பு ஏற்​பட்​ட​தில் மேடை​யிலேயே நாடக நடிகர் உயி​ரிழந்த சம்​பவம் இமாச்சல பிரதேச மாநிலத்​தில் நடந்​துள்​ளது. இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா பகு​தி​யைச் சேர்ந்​தவர் அம்​ரேஷ் மகாஜன் (70). நாடக நடிக​ரான இவர், பல்​வேறு நாடகங்​களில் பல வேடங்​களில் நடித்து ரசிகர்​களின் பாராட்​டைப் பெற்​றவர். பெரும்​பாலும் இவர் ராமாயணம், மகா​பாரதம், ராம்​லீலா போன்ற நாடங்​களில் நடிப்​பார். நேற்று முன்​தினம் இவர் சம்பா பகு​தி​யில் நடை​பெற்ற ராம்​லீலா நாடகத்​தில் தசரத மகா​ராஜா வேட​மிட்டு நடித்​துக் கொண்​டிருந்​தார். … Read more

விமானத்தின் கியர் பெட்டியில் ஒளிந்து ஆப்கனிலிருந்து டெல்லி வந்த சிறுவன்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து புது டெல்லிக்கு வந்த விமானத்தின் லேண்டிங் கியர் பெட்டியில் ஒளிந்து பயணித்த ஆப்கானிஸ்தான் சிறுவனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லி வந்த விமானத்தின் லேண்டிங் கியர் பெட்டியில் பதுங்கியபடி பயணித்த 13 வயது சிறுவன், செப்டம்பர் 21 அன்று விமானம் புதுடெல்லியில் தரையிறங்கிய போது விமான நிலைய அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டான். பழுப்பு நிற பதானி சூட் மற்றும் கருப்பு கோட் அணிந்த அந்த ஆப்கானிஸ்தான் … Read more

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு நிகரான அடிப்படை ஊதியத்தை போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், 10 லட்சத்து 91 ஆயிரத்து 146 ஊழியர்களுக்கு ரூ.1,865.68 கோடி தொகை போனஸாக வழங்கப்பட உள்ளது. தீபாவளி, தசரா, துர்கா பூஜை பண்டிகை காலத்தையொட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு போனஸ் வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் … Read more

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் போராட்டம்: 4 பேர் உயிரிழப்பு, 50+ காயம் – வன்முறையால் பதற்றம்

லே: யூனியன் பிரதேசமான லடாக்-குக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகர் லே-யில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து லடாக்கில் உள்ள லே உச்ச அமைப்பு (Leh Apex Body-LAB), கடந்த 10-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்ட 15 பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு … Read more

மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்காக காங். 10 வாக்குறுதிகள் – பிஹாரில் ராகுல் காந்தி வெளியீடு

பாட்னா: மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக 10 வாக்குறுதிகளை, பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி வெளியிட்டார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நீட்டிக்கப்பட்ட செயற்குழுக் கூட்டம் பாட்னாவின் சதக்கத் ஆஸ்ரமத்தில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டி … Read more