பவன் கல்யாண் ஆந்திர மாநில துணை முதல்வராக பொறுப்பேற்பு

விஜயவாடா: ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாண் விஜயவாடாவில் உள்ள அவரது அலுவலகத்தில் ஆந்திர மாநிலத்தின் துணைமுதல்வராக நேற்று பொறுப்பேற்றார். நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், தற்போதைய ஆந்திர மாநில அரசியலின் ‘கேம் சேஞ்சர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவை நேரில் சென்று சந்தித்த பின்னர், சிறைக்கு வெளியே வந்து, “தெலுங்கு தேசம் கட்சியுடன் ஜனசேனா கட்சியும் இணைந்து வரும் தேர்தலில் போட்டியிடும்” என அறிவித்தார். இதுதான் … Read more

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 54-வது பிறந்தநாள் கொண்டாடிய ராகுல்

புதுடெல்லி: ராகுல் காந்தி தனது 54-வது பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர்களுடன் கொண்டாடினார். ராகுல் காந்தியின் 54-வது பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் நேற்று கொண்டாடினர்.இதனிடையே டெல்லியில்உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசியத்தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், கவுரவ் கோகோய், காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோருடன் நேற்று தனது பிறந்தநாளை ராகுல் காந்தி கொண்டாடினார். அப்போது … Read more

நீட் தேர்வு சர்ச்சை: காங்கிரஸ் நாளை நாடு தழுவிய போராட்டம்

புதுடெல்லி: நீட் தேர்வு சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள சூழ்நிலையில் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) கண்டித்தும், மாணவர்களுக்கு நீதி கோரியும் நாடு முழுவதும் நாளை (ஜூன் 21) போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், பொறுப்பாளர்கள், அனைத்து பிரிவு தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளதாவது: இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் … Read more

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்!

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி திஹார் சிறையில் கேஜ்ரிவால் அடைக்கப்பட்டார். இதையடுத்து மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 10–ம் … Read more

மதுபான முறைகேடு வழக்கு… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்..!!

மதுபான முறைகேடு வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

“நீட் வினாத்தாள் கசிவு பின்னணியில் ஆர்எஸ்எஸ்” – ராகுல் காந்தி அடுக்கும் குற்றச்சாட்டுகள்

புதுடெல்லி: “நீட் வினாத்தாள் கசிவுக்கு கல்வி நிறுவனங்களை பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் கைப்பற்றியதே காரணம்” என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “இது ஒரு தேசிய நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போல் இது கல்வி நெருக்கடி. அரசுக்கு பதிலளிக்கும் அளவுக்கு கூட திறனில்லை. மத்திய அரசும், பிரதமரும் மௌனம் சாதிக்கின்றனர். சபாநாயகர் தேர்தலே தற்போது ​​பிரதமருக்கு முக்கிய விஷயம். … Read more

பிஹார் அரசு கொண்டுவந்த 65 சதவீத இடஒதுக்கீடு ரத்து – பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பாட்னா: பிஹாரில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 65 சதவீத இடஒதுக்கீட்டை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பிஹார் மாநிலத்தில் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டார். 1931-ம் ஆண்டுக்கு பிறகு பிஹாரில் சமீபத்தில் தான் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் அறிக்கை கடந்த ஆண்டு அக்.2-ம் தேதி வெளியானது. இதில் பிஹார் மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 64 சதவீதம் பேர் … Read more

நீட் முறைகேடு: ஜூலை 8-க்குள் தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட 4 மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு ஜூலை 8க்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் நடந்த பல்வேறு முறைகேடு காரணமாக மறுதேர்வு நடத்த வேண்டும் என சொல்லி தேசிய தேர்வு முகமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வினாத்தாள் கசிவு, கருணை … Read more

மேற்கு வங்கத்தில் ரேஷன் பொருள் விநியோக ஊழல்: நடிகை ரிதுபர்ணாவிடம் அமலாக்க துறை விசாரணை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பல கோடி ரேஷன் பொருள் வினியோக ஊழல் வழக்கில் பிரபல வங்காள நடிகை ரிதுபர்ணா செங்குப்தாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரண நடத்தினர். மேற்கு வங்கத்தில் பொது வினியோக திட்டத்துக்கான ரேஷன் பொருட்களை வெளிச் சந்தையில் விற்பனை செய்ததன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு பிரிவின் கீழ் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பகிபுர் … Read more

பேரவை இடைத்தேர்தலில் ஆசாத் கட்சி போட்டி: உ.பி.யில் பாஜகவுக்கு சாதகமாக வாக்குகள் பிரியும் வாய்ப்பு

புதுடெல்லி: உ.பி.யில் சட்டப்பேரவையின் 9 உறுப்பினர்கள் மக்களவைக்கு போட்டியிட்டு, எம்.பி.யாகி விட்டனர். இதனால், அந்த 9 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இத்துடன், சிஷாமா தொகுதி சமாஜ்வாதி எம்எல்ஏ இர்பான் சோலங்கி, ஒரு வழக்கில் ஏழு வருட தண்டனை பெற்றுள்ளார். இதனால் சிஷாமாவுக்கும் சேர்த்து 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் 4 முறை முதல்வரான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) போல் தலித் ஆதரவு பெற்றவராக சந்திரசேகர் ஆசாத் எனும் ராவண் … Read more