சிறையில் உள்ள அர்விந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சில தினங்களுக்கு முன்பு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால் தனது கட்சியினருக்கு அனுப்பிய செய்திக்குறிப்பை அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்றுவாசித்தார். அதில் கூறப்பட்டதாவது: … Read more

‘கட்டாயத்தால் அரசியல்வாதி ஆனவர் ராகுல் காந்தி!’ – பாஜக வேட்பாளர் கங்கனா கருத்து

புதுடெல்லி: “காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சொந்த விருப்பத்துக்கு மாறாக கட்டாயத்தினால் அரசியல்வாதியாக மாறியுள்ளதாக தெரிகிறது” என்று நடிகையும், பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் கங்கனா. அவர் அளித்த பேட்டி ஒன்றில், “ஒரு விஷயத்தை அவரால் (ராகுல் காந்தி) செய்ய முடியுமா இல்லையா என்பதை பற்றி கவலை இல்லாம் தொடர்ந்து அவர் மீது அந்த விஷயம் … Read more

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை 20 மணி நேரத்துக்குப் பின் மீட்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த 2 வயது குழந்தையை 20 மணி நேர போராட்டத்துப் பின்னர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். நேற்று மாலை 6.30 மணியளவில் மீட்புப் பணி தொடங்கிய நிலையில் குழந்தை தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் லச்சாயன் கிராமத்தில் நேற்று (ஏப்.3) மாலை ஸ்வஸ்திக் முஜகொண்டா என்ற 2 வயது ஆண் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. வீட்டிலிருந்து விளையாட வெளியே சென்ற குழந்தை தவறிவிழுந்துவிட … Read more

பிஹாரில் சிராக் கட்சியின் 22 முக்கியத் தலைவர்கள் விலகல்: இண்டியா கூட்டணியை ஆதரிப்பதாக அறிவிப்பு

புதுடெல்லி: பிஹாரில் சிராக் பாஸ்வானின் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) கட்சியில் இருந்து 22 முக்கியத் தலைவர்கள் விலகியுள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத இவர்கள், இண்டியா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினராக எல்ஜேபி உள்ளது. பிஹாரில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதியில் இக்கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இவை சமஸ்திபூர், ஹாஜிபூர், வைஷாலி, ககரியா மற்றும் ஜமுவாய் ஆகியன. இவற்றில் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அன்றி … Read more

ஹேமமாலினியை அவதூறாக பேசினாரா காங்கிரஸ் நிர்வாகி ரன்தீப்? – சர்ச்சையும் பின்னணியும்

பாஜக எம்.பி.யும், மதுரா தொகுதி வேட்பாளருமான ஹேமமாலினி குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கட்சியின் மூத்த தலைவருமான ரன்தீப் சுர்ஜேவாலா பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், தனது கருத்தை பாஜக திரித்து வெளியிட்டிருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். “பாஜகவின் ஐ.டி துறை தலைவர் அமித் மாள்வியா தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது. முழுமையாக வெளியிடாமல் சிதைத்து தவறாகப் பொருள்படும்படி வெளியிடப்பட்டுள்ளது. எனது நோக்கம் நிச்சயமாக ஹேமமாலினியை அவமதிப்பது … Read more

பட்டியலின இளம் பெண் வேட்பாளர்… யார் இந்த சாம்பவி சவுத்ரி? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் பிஹாரின் சமஸ்திபூர் தொகுதியில் களம் காண்கிறார் பிஹார் அமைச்சர் (ஜேடியு) அசோக் சவுத்ரியின் மகள் சாம்பவி குணால் சவுத்ரி. 25 வயதான இவர், பட்டியலின இளம் பெண் வேட்பாளர் என்ற அடையாளத்தையும் பெற்றுள்ளார். சமஸ்திபூர் தொகுதியில் களம் காணும் சாம்பவி குணால் சவுத்ரிவுக்கு சீட் கிடைத்ததில் அவரது … Read more

பங்குச்சந்தை முதலீடுகள், விவசாய நிலம் – ராகுல் காந்தி சொத்து மதிப்பு ரூ.20 கோடி

வயநாடு: மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது வேட்புமனு தாக்கலின்போது பிரமாணப் பத்திரத்தில் தனக்கு 20 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி. இதற்கான வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் உடன் சொத்து மதிப்பு உள்ளிட்ட பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில் தனக்கு 20 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, … Read more

“நாட்டை உருவாக்குவோர், அழிப்போர் இடையிலான வேறுபாட்டை உணர்வீர்” – ராகுல் காந்தி

புதுடெல்லி: “நாடு மிகவும் முக்கியமான கட்டத்தில் உள்ளது. நாட்டைக் கட்டி எழுப்புகிறவர்களுக்கும், அழிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை வாக்காளர்கள் அடையாளம் கண்டு அங்கீகரிக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடு மிகவும் முக்கியமான கட்டத்தில் வந்து நிற்கிறது. நாட்டின் ஒவ்வொரு பிரிவினரும் நாட்டை கட்டி எழுப்புவர்களுக்கும், அதனை அழிப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி என்றால், இளைஞர்களுக்கான வேலை உறுதி, … Read more

“விஷப் பாம்பைக் கூட நம்பலாம்… பாஜகவை நம்ப முடியாது!” – மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா: பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுவதில்லை என்று குற்றம்சாட்டியுள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “விஷப் பாம்பை கூட நம்பலாம். ஆனால், பாஜகவை நம்ப முடியாது” என்று கடுமையாக சாடியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தின் கூச் பெஹரில் வியாழக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டு பேசியது: “பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மீண்டும் பெயரினை பதிவு செய்யுமாறு பாஜக கேட்கிறது. ஏன் இப்போது பெயரைப் … Read more

சந்திரயான் 3 மூலம் டாப் கோடீஸ்வரரான இந்தியர்… யார் இந்த ரமேஷ் குன்ஹிகண்ணன்?

Forbes Billionaires List 2024 In Tamil: ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதன்முதலாக ரமேஷ் குன்ஹிகண்ணன் என்ற இந்தியர் இடம்பெற்றுள்ளார். இவரின் சுவாரஸ்ய பின்னணியை இதில் காணலாம்.