நேருவின் 60வது நினைவு தினம்: டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 60வது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஜவஹர்லால் நேருவின் 60வது நினைவு தினம் இன்று (மே.27) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சாந்தி வனம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தி இசை இசைக்கப்பட்டது. சாந்தி வனத்துக்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர், நேருவின் நினைவிடத்தில் மலர்களைத் தூவி அஞ்சலி … Read more

ஜம்மு காஷ்மீரில் ரூ.95 கோடி மதிப்பிலான ரொக்கம், மது, போதைப்பொருள் பறிமுதல்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள், மது உள்ளிட்டவற்றை கொடுப்பதைத் தடுக்க அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளிலும் தேர்தல் முடிந்து விட்டது. அங்கு இதுவரை ரூ.95 கோடி மதிப்பிலான ரொக்கம், மது, போதைப்பொருளை பறிமுதல் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, “வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை … Read more

ஜாமீன் நீட்டிப்பு கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம்.வழங்கிய இடைக்கால ஜாமீன் ஜூன் 1 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் ஜாமீன் நீட்டிப்பு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில் அவருக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் ஜாமீன் நீட்டிப்பு கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், திஹார் … Read more

புனே கார் விபத்து: சிறுவனின் ரத்த பரிசோதனை முடிவுகளை திரித்த இரு மருத்துவர்கள் கைது

புனே: புனே சொகுசு கார் விபத்து வழக்கில் 17 வயது சிறுவனின் ரத்த பரிசோதனை முடிவுகளை திரித்ததாக இரு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19-ம் தேதி அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் சீர்திருத்த முகாமில் உள்ளார். புனேவின் கல்யாணி நகர் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கி, முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது … Read more

வெப்ப அலை காரணமாக மகாராஷ்டிராவின் அகோலாவில் 144 தடை உத்தரவு அமல்

புதுடெல்லி: மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ராஜஸ்தானில் கடந்த 3 நாட்களில் மட்டும் 22 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்து உள்ளனர். மத்திய பிரதேசத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவின் அகோலா நகரில் நேற்று 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதை யொட்டி அந்த நகரில் 144 தடை உத்தரவு … Read more

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தையே மாற்றி விடுவார்கள்: பிரதமர் மோடி

மிர்சாபூர்: இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி எழுதிவிடுவார்கள் என்று உத்தர பிரதேசத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். சிறு வயதில் பாத்திரங்கள், பிளேட்கள் கழுவி வளர்ந்த எனக்கு ஏழை மக்களின் சிரமங்கள் நன்கு தெரியும் என்றும் கூறினார். உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பொதுவாக, வீழ்ச்சியடைந்து … Read more

திருமலையில் தரிசனத்துக்கு 20 மணி நேரம் காத்திருப்பு

திருமலை: திருமலையில் பக்தர்களின் கூட்டம்அதிகரித்ததால், திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம், மாதவம்உள்ளிட்ட தேவஸ்தான விடுதிகளில் தங்கும் அறை கிடைக்காமல் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். திருப்பதியில் பஸ் நிலையம், ரயில் நிலையத்திலும் கூட்டம் அதிகமாக உள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகரிப் பால், திருப்பதி தேவஸ்தானம் திருமலையில் சிலா தோரணம் வரை இலவச பஸ்களை ஏற்பாடுசெய்துள்ளது. கோடை விடுமுறை,வார இறுதி நாட்கள் என்பதால் திருப்பதி, திருமலையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் சுமார் 20 மணி … Read more

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் குடகு, மைசூரு ஆகிய காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால்கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த பிப்ரவரியில் இருந்து மே மாதம் முதல் வாரம் வரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. இதனால் காவிரி ஆறு வறண்டதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து முற்றிலுமாக குறைந்தது. எனவே தமிழகத்துக்கு திறக்கப்பட வேண்டிய காவிரி நீர் முறையாக திறக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த … Read more

டெல்லி மெட்ரோ நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்டாதது ஏன்? – மத்திய அரசுக்கு டெல்லிவாழ் தமிழர்கள் கேள்வி

புதுடெல்லி: தமிழகத்தில் திருவள்ளுவரின் பெருமைகளை பேசும் பாஜக, டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அவரது பெயரை சூட்டாதது ஏன் என்று டெல்லிவாழ் தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வடமேற்கு டெல்லியில் உள்ள சக்கூர்பூரில் தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர். இதனால் சுமார் 25 வருடங்களுக்கு முன் டெல்லி மாநகராட்சி சார்பில் சக்கூர்பூர் காலனி சாலைக்கு ‘திருவள்ளுவர் மார்க்’ எனப் பெயரிடப்பட்டது. இதையடுத்து, சக்கூர்பூர் வழியாக புதிதாக ரோஸ் நிற மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதன் சக்கூர்பூர் மெட்ரோ ரயில் … Read more

உயர் நீதிமன்ற நீதிபதி பெயரில் வாட்ஸ்-அப் மூலம் நீதிபதியிடம் ரூ.50,000 மோசடி: மும்பை போலீஸார் விசாரணை

மும்பை: மகாராஷ்டிராவில் உயர் நீதிமன்ற நீதிபதியின் பெயரில் மாவட்ட நீதிபதியிடம் ரூ.50,000 மோசடி செய்த சைபர் கிரிமினல் குறித்து மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்ட நீதிபதி ஒருவருக்கு நேற்று முன்தினம் வாட்ஸ்-அப்பில்மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியின் புகைப்படத்துடன் ஒரு தகவல் வந்துள்ளது. உடனே ரூ.50,000 அனுப்பும்படியும் மாலைக்குள் திருப்பித் தந்துவிடுவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட நீதிபதி அந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ரூ.50,000 அனுப்பியுள்ளார். பிறகு மாவட்ட நீதிபதிக்கு மீண்டும் … Read more