ஆந்திர அமைச்சரவை இன்று காலை பதவியேற்பு: பிரதமர் நரேந்திர மோடி வருகை

விஜயவாடா: ஆந்திராவின் தலைநகரம் அமராவதிதான் என, ஆந்திர மாநிலமுதல்வராக இன்று பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உறுதிபட தெரிவித்தார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம்தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளைச் சேர்ந்த 162 எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர். இதில் ஆந்திர மாநில சட்டப்பேரவை தெலுங்கு தேசம் கூட்டணி கட்சிகளின் தலைவராக சந்திரபாபுநாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு … Read more

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா: திபெத்தில் பல இடங்களுக்கு புதிய பெயர் சூட்ட திட்டம்

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் பலஇடங்களுக்கு சீனா புதிய பெயர்சூட்டிவரும் நிலையில் அந்நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திபெத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு புதிய பெயர் சூட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறிவரும் சீனா அங்குள்ள பல இடங்களுக்கு தன்னிச்சையாக புதிய பெயரை சூட்டி வருகிறது. சீனா முதன்முதலில் கடந்த 2017-ல் அருணாச்சல பிரதேசத்தின் 6 இடங்களுக்கு புதிய பெயர் சூட்டியது. இதையடுத்து 2021-ல் 15இடங்களுக்கும் 2023-ல் 11 … Read more

வந்தே பாரத் முதல் அம்ரித் பாரத் வரை… பிரதமர் மோடி 3.0 அரசின் முக்கிய திட்டங்கள்..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சி காலத்தில், இந்திய இரயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் ஆகிய இரண்டின் திறனையும் அதிகரிக்கத் தயாராகி வருகிறது.

ஜூன் 24-ல் நாடாளுமன்றம் கூடுகிறது

புதுடெல்லி: வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல்ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) அறுதிப் பெரும்பான்மையை பெற்றது. கடந்த 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் என்டிஏ அரசு பதவியேற்றது. இந்த சூழலில் வரும் 24-ம் தேதி 18-வது … Read more

பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒடிசா முதல்வராக மோகன் மாஜி தேர்வு: 2 பேருக்கு துணை முதல்வர் பதவி

புவனேஸ்வர்: ஒடிசா பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், மாநில முதல்வராக மோகன் சரண் மாஜி (52)தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வர்களாக கே.வி.சிங் தியோ,பிரபதி பரிடா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஒடிசாவில் மக்களவை தேர்தலோடு, சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த மாநிலத்தில் 147 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. கடந்த மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த 4-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. மாநிலத்தில் ஆட்சி அமைக்க 74 எம்எல்ஏக்களின் … Read more

ஹிஜாப் அணிந்து வர தடை: வேலையை ராஜினாமா செய்த கொல்கத்தா கல்லூரி ஆசிரியை

கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள எல்ஜேடி சட்டக் கல்லூரியில் சுமார் மூன்று ஆண்டு காலம் பணியாற்றி வந்த சஞ்சிதா காதர் என்ற ஆசிரியை தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். பணியிடத்துக்கு ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்ததாக அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். எல்ஜேடி சட்டக் கல்லூரி தனியார் கல்லூரியாகும். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பணியாற்றி வந்த சஞ்சிதா காதரிடம் மே 31-ம் தேதிக்கு பிறகு பணியிடத்துக்கு ஹிஜாப் அணிந்து … Read more

“அமராவதியே ஆந்திராவின் தலைநகர்” – சந்திரபாபு நாயுடு உறுதி

விசாகப்பட்டினம்: “அமராவதியே ஆந்திராவின் தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம். பழிவாங்கும் அரசியலை செய்யப்போவதில்லை” என்று பதவியேற்பதற்கு ஒருநாள் முன்னதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் வென்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டமன்ற கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். நாளை நான்காவது முறையாக ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ளார். பதவியேற்பதற்கு … Read more

சமூக வலைதளங்களில் ‘மோடியின் குடும்பம்’ என்பதை நீக்கி விடலாம்: பிரதமர் வேண்டுகோள்

புதுடெல்லி: தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மக்கள் தங்கள் சமூக வலைதள பெயர்களுக்கு பின்னால் உள்ள ‘மோடியின் குடும்பம்’ என்பதை நீக்கி விடலாம் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர்கள் மாளிகையில் மிக விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கியபோது சமூக வலைதளங்களில் பாஜக ஆதரவாளர்கள், … Read more

“இந்த முறை 230 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வார்களா?: – மோடி மீது கவுரவ் கோகோய் தாக்கு

புதுடெல்லி: நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் வரை பாஜகவின் நாடாளுமன்ற ஜனநாயக அணுகுமுறை மாறாது என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகாய், இம்முறை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 230 எம்பிக்களை இடைநீக்கம் செய்வார்களா என கேள்வி எழுப்பியுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்றுள்ள நிலையில், அசாம் மாநில காங்கிரஸ் எம்பியும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கவுரவ் கோகாய் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “நரேந்திர மோடி தலைமையிலான தேசிய … Read more

மத்திய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் கூட இல்லாதது நாட்டின் மதிப்பை பாதிக்கும்: ஹரிஷ் ராவத்

புதுடெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் ஓர் இஸ்லாமியர்கூட இல்லாதது நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதிதாக அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் முகமும் இல்லை. இது உலக அளவில் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உலகமே ஒரு குடும்பம் எனக் கூறக்கூடியவர்கள் நாம். நாட்டின் மக்கள் தொகையில் … Read more