நடிகை சுமலதா எம்.பி. விரைவில் பாஜகவில் இணைகிறார்

கன்னட நடிகர் அம்பரீஷ், மண்டியா தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு பிறகு அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா காங். சார்பில் போட்டியிட விரும்பினார். சீட் கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட சுமலதா, இந்த தேர்தலில் பாஜகவிடம் சீட் கேட்டார். பாஜக மேலிடம் மண்டியா தொகுதியை கூட்டணியான மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கியது. அங்கு முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிடுகிறார். இதனால் அதிருப்தி … Read more

வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கேரளாவில் தவறான செய்தி வெளியிட்ட யூடியூபர் கைது

ஆலப்புழை: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கேரளாவில் தவறான செய்திகளை வெளியிட்ட யூடியூபரை போலீஸார் கைது செய்துள்ளனர். கேரளாவின் ஆலப்புழையைச் சேர்ந்த வெனிஸ் டி.வி. என்டர்டெயின்ட்மெண்ட் என்ற யூடியூப் சேனலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) பற்றிதவறான தகவல்கள் வெளியாயின. இதையடுத்து ஆலப்புழை தெற்கு போலீஸார் அந்த யூடியூப்சேனல் உரிமையாளர் மீது வழக்குதொடர்ந்து அவரைக் கைது செய்தனர். அவர் பெயர் விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்படும் இவிஎம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு … Read more

மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம் முடிந்தது: ஓய்வு பெற்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் கடந்த 1991-ம் ஆண்டு அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் மன்மோகன் சிங். அப்போது அவர் மத்திய நிதியமைச்சரானார். அதன்பின் 2019-ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மன்மோகன் சிங் எம்.பி.யாக இருந்தார். கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார். தற்போது 91 … Read more

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம்: மொய்த்ரா, ஹிராநந்தானி மீது அமலாக்கத் துறை வழக்கு

புதுடெல்லி: பிரதமர் மோடி மற்றும் தொழிலதிபர் அதானி பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் ஹிராந்தானியிடம் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் என்பவர் சிபிஐ-யில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டு உறுதியானதால், எம்.பி பதவியில் இருந்து மஹூவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து முறையான விசாரணை நடத்த லோக்பால் உத்தரவிட்டதையடுத்து மஹூவா மொய்த்ரா மற்றும் ஹிராநந்தானி ஆகியோர் மீது சிபிஐ … Read more

“உங்களின் குடும்ப உறுப்பினர் நான்!” – வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த ராகுல் காந்தி

வயநாடு: வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, தனது தொகுதி மக்களை வெறும் வாக்காளர்களாக பார்க்காமல், தனது குடும்ப உறுப்பினராகவே கருதுவதாக கூறினார். மக்களவைத் தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதற்காக அவர் புதன்கிழமை வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு முன்பு ஒரு ரோடு ஷோ ஒன்றில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவருடன் பிரியங்கா காந்தி உடனிருந்தார். பேரணியின்போது … Read more

சத்தீஸ்கரில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. பிஜப்பூர் மாவட்டத்தின் கோர்சோலி வனப் பகுதியில் நக்சலைட்களின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி படை, மத்திய ரிசர்வ் போஸீஸ் படை மற்றும் அதன் கமாண்டோ பிரிவான கோப்ரா ஆகியவை இணைந்து கடந்த 1ம் தேதி முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனத்தில் … Read more

பாஜகவின் ‘இணைய’ ஆளுமை… யார் இந்த தவால் படேல்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், குஜராத்தின் வல்சாத் மக்களவைத் தொகுதியில் (எஸ்டி) களம் காண்கிறார் தவால் படேல். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் தேர்தல் களம் சற்று விறுவிறுப்பாகவே காணப்படுகிறது. சமூக ஊடகங்களை கையாளுவதில் கைதேர்ந்தவராக அறியப்படும் தவால் படேல் பின்புலம் அறிவோம். சூடுபிடிக்கும் குஜராத் தேர்தல் களம்: 2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் … Read more

பாஜகவில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்… காங்கிரஸ் அதிர்ச்சி! – நடந்தது என்ன?

புதுடெல்லி: சர்வதேச குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் இன்று திடீரென பாஜகவில் இணைந்துள்ளார். இவரை மதுராவில் போட்டியிட வைக்கத் திட்டமிட்டிருந்த காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஹரியாணாவின் பிவானியை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங். தனது விளையாட்டுகளின் வெற்றிக்காக இவர், அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்டப் பல முக்கிய விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் விஜேந்தர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரியிடம் தோல்வியுற்றார். … Read more

'தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாதா?' – கேஜ்ரிவால் ஜாமீன் வழக்கில் அமலாக்கத் துறை வாதம்

புதுடெல்லி: “தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாது எனச் சொல்வது மோசமான வாதம். நாட்டை கொள்ளையடித்தாலும் தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாது எனப் பேசுவது தவறு” என்று டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஜாமீன் வழக்கில் அமலாக்கத் துறை வாதிட்டுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில், கேஜ்ரிவால் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு … Read more

இந்தியாவில் பிரதமர் வேட்பாளர் என்பவர் யார்? – மோடி ஆதரவாளர்களுக்கு சசி தரூர் தரும் பதில்

புதுடெல்லி: “நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நாம் தனிநபரைத் தேர்ந்தெடுப்பது இல்லை. மாறாக, ஒரு கட்சியையோ அல்லகு கூட்டணியையோ தான் தேர்ந்தெடுக்கிறோம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் குறித்த என்ற கேள்விக்கு இவ்வாறு அவர் பதிலளித்தார். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான சசி தரூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “மோடிக்கு எதிரான ஒரு பிரதமர் வேட்பாளரை அடையாளம் … Read more