குஜராத் – ராஜ்கோட் சிறார் விளையாட்டு மையத்தில் தீ விபத்து: குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

அகமதாபாத்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிறார் விளையாட்டு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள வணிக வளாகப் பகுதியில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் (TRP game zone) செயல்பட்டு வந்தது. இங்குள்ள தற்காலிக அமைப்பு ஒன்றில் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் … Read more

முதல் 5 கட்டங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தொகுதி வாரியாக வெளியிட்டது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: நடப்பு மக்களவைத் தேர்தலின் முதல் ஐந்து கட்டங்களுக்கான முழுமையான வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம், வாக்கெடுப்பு நாளில் பகிரப்பட்ட வாக்குகளின் தரவுகளை யாராலும் மாற்ற முடியாது என தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட 17-சி படிவத்தை பொதுவெளியில் வெளியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நேற்று (மே 24) தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட … Read more

“ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு நாட்டின் அரசியலே மாறிவிட்டது” – அமித் ஷா

காங்க்ரா (இமாச்சலப் பிரதேசம்): ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு நாட்டின் அரசியலே மாறிவிட்டது என்றும், பொய்யான விஷயத்தை பிரச்சினையாக்கும் பாரம்பரியத்தை அவர் தொடங்கி வைத்திருப்பதாகவும் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பின், இந்த நாட்டின் அரசியலே மாறிவிட்டது. இதற்கு முன், அரசியல் கட்சிகள், உண்மையான பிரச்சினைகளை மக்கள் முன் திரித்துப் பேசுவார்கள். … Read more

“நமது நிலத்தை ஆக்கிரமிக்கிறது சீனா… மோடியோ அமைதியோ அமைதி!” – கார்கே சாடல்

சிம்லா: இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் சாலைகளை சீனா அமைத்து வருவதாகவும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய கார்கே, “சிம்லாவின் அழகையும் சுற்றுச்சூழலையும் பார்க்கும்போது இது சிம்லாவா அல்லது சுவிட்சர்லாந்தா என்று எண்ணத் தோன்றுகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். சுற்றுலா வளர்ச்சி அடைந்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும், … Read more

“இண்டியா கூட்டணியினர் வகுப்புவாதிகள், சாதிவெறியர்கள்…” – பிரதமர் மோடி கொந்தளிப்பு

பாட்னா: இண்டியா கூட்டணியில் இருப்பவர்கள் ஆழமான வகுப்புவாதிகள், தீவிரமான சாதிவெறியர்கள், தங்கள் குடும்பத்துக்காக மட்டுமே பாடுபடக்கூடியவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். பிஹார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போதே வெளிவரத் தொடங்கிவிட்டன. ஆம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்லத் தொடங்கிவிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கான கருத்துக் கணிப்பாகவே இதைப் பார்க்கிறேன். இந்த தேர்தலில் இரண்டு … Read more

ஆந்திர தேர்தலில் அதிகமாக பதிவான தபால் வாக்குகள்: அரசு ஊழியர்கள் யார் பக்கம்?

ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ம் தேதி 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல்நடைபெற்றது. இதில் ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கும், தெலுங்கு தேசம் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவியது. இதில், சந்திரபாபு நாயுடு ஜனசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளார். இது இவருக்கு சாதகமாக உள்ளதென்று கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகன்மோகன் ரெட்டியின்சகோதரியான ஷர்மிளாவை காங்கிரஸ் களத்தில் இறக்கியது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியே காங்கிரஸில் … Read more

“உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்துக்காக வாக்களியுங்கள்” – ராகுல் காந்தி அழைப்பு

புதுடெல்லி: . மக்களவைத் தேர்தல் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், “அனைவரும் உங்களின் உரிமைகளுக்காகவும், உங்கள் குடும்பத்தினரின் எதிர்காலத்துக்காகவும் வாக்களியுங்கள்.” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காலை 11 மணி நிலவரப்படி 25.76 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. டெல்லியில் 21.69%, மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 36.88 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் … Read more

விளம்பரங்களை வெளியிட தடை: உச்ச நீதிமன்றத்தில் பாஜக வழக்கு

மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் விதிமுறைகளை மீறும் விதமாக எந்தவித விளம்பரத்தையும் பாஜக வெளியிடக்கூடாது என கொல்கத்தா நீதிமன்ற தனி நீதிபதி கடந்த 20-ம் தேதி தடை விதித்தார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த தடையை அவர் விதித்திருந்தார். இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது. அப்போது அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தனி நீதிபதி தீர்ப்பில் தலையிட முடியாது என்று உத்தரவிட்டு மனுவை … Read more

‘கடவுளால் செய்ய முடியாத செயல்கள்’ – மோடியை விமர்சித்த மம்தா பானர்ஜி

தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த மதுராப்பூர் பகுதியில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: தேர்தலில் எங்கே தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தில் அர்த்தமின்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பாஜக தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒருவர் தன்னை கடவுளின் குழந்தை என்கிறார். நான் கேட்கிறேன், கலவரத்தைத் தூண்டிவிடவும், விளம்பரங்களின் வழியாகப் பொய்களை பரப்பவும், என்ஆர்சியை நடைமுறைப்படுத்துகிறேன் என்கிற பெயரில் மக்களை சிறையில் அடைக்கவுமா கடவுள் ஒருவரை அனுப்பி வைப்பார்? நூறுநாள் … Read more

எல்லைகள் பாதுகாப்புடன் இருந்திருந்தால் இந்தியா இன்னும் வேகமாக வளர்ந்து இருக்கும்: அஜித் தோவல் கருத்து

புதுடெல்லி: எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த ரஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று கலந்து கொண்டு பேசியதாவது: நமது எல்லைகள் கூடுதல் பாதுகாப்புடன் இருந்திருந்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிஇன்னும் வேகமாக இருந்திருக்கும். எதிர்காலத்தில் நமது வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப, நமது எல்லைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே, எல்லை பாதுகாப்பு படையினரின் பொறுப்பு மிக, மிக அதிகமாக இருக்க வேண்டும். அவர்கள் 24 மணி … Read more