“மோடி அரசு அரசியல் சாசனத்தை மீறிவிட்டது” – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: இடைக்கால சபாநாயகர் தேர்வு விஷயத்தில் நரேந்திர மோடி அரசு அரசியல் சாசனத்தை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் … Read more

“நாடாளுமன்ற கூட்டத்தொடர் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்” – பிரதமர் மோடி

புதுடெல்லி: “புதிய எம்பிக்கள் அனைவரையும் வரவேற்கிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நாடாளுமன்ற கூட்டம் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்.” என்று 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி தெரிவித்தார். 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நாடாளுமன்ற … Read more

மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப் பதவியேற்பு

புதுடெல்லி: மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹதாப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். இந்த விழாவை இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் புறக்கணித்தனர். 8 முறை எம்.பி.யாக இருந்த கேரளாவின் கொடிகுன்னில் சுரேஷை இடைக்கால சபாநாயகராக நியமிக்காமல், 7 முறை எம்பியாக இருந்த பர்த்ருஹரி மஹதாப்பை இடைக்கால சபாநாயகராக அறிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இவ்விழாவை புறக்கணித்தனர். நாடாளுமன்றத்தின் 18-வதுமக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் … Read more

கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட மாவோயிஸ்ட்கள்: சத்தீஸ்கரில் நடந்த சோதனையில் அம்பலம்

போபால்: சத்தீஸ்கரில் நடந்த சோதனையில் மாவோயிஸ்ட்கள் கள்ளரூபாய் நோட்டுகளை அச்சடித்துபுழக்கத்தில் விட்டது தெரியவந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ளது.இதை ஒடுக்க மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சுக்மா மாவட்ட போலீஸார், மாவட்ட ரிசர்வ் படையினர் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் உள்ளிட்டோர் கூட்டாக இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். … Read more

மத்திய அரசு ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும்: தாமதமானால் அரை நாள் விடுப்பு என எச்சரிக்கை

புதுடெல்லி: காலை 9.15 மணிக்கு அலுவலகம் வராவிட்டால் அரை நாள் விடுப்பாக கருதப்படும் என மத்திய அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலக ஊழியர்களின் பணி நேரம் காலை 9 மணி முதல்மாலை 5.30 மணி வரை ஆகும். ஆனால், பெரும்பாலான ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதும் முன்கூட்டியே அலுவலகத்திலிருந்து புறப்பட்டு செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இதைத் தடுக்க மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்ததும், பயோமெட்ரிக் வருகைப் … Read more

ஓட்டலில் பெண் காவலருடன் தங்கியிருந்த உ.பி. டிஎஸ்பி காவலராக பதவியிறக்கம்: துறை ரீதியான விசாரணைக்கு பிறகு டிஜிபி உத்தரவு

லக்னோ: உ.பி. கான்பூர் ஓட்டலில் பெண் காவலருடன் தங்கியிருந்த டிஎஸ்பி.,யை காவலராக பதவியிறக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேச காவல்துறையின் 26-வது பட்டாலியனில் கடந்த 2021-ம் ஆண்டில் டிஎஸ்பி அந்தஸ்தில் துணை கமாண்டராக பணியாற்றியவர் கிருபா சங்கர் கானோஜியா. இவர் உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தின் பிகாபூர் பகுதியில் பணியமர்த்தப்பட்டிருந்தார். இவர் தனக்குசொந்த வேலை இருப்பதாக கூறி, ஒரு நாள் விடுப்பில் சென்றுள்ளார். தனது செல்போனை சுவிட் ஆப் செய்து விட்டார். கிருபா சங்கரை அவரது … Read more

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை தொடங்கியது: மகாராஷ்டிராவில் 2 ஆசிரியர்கள் கைது

புதுடெல்லி: நீட் நுழைவுத் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, விசாரணையை சிபிஐ தொடங்கியது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டஇளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடுமுழுவதும் கடந்த மே 5-ம் தேதிநடைபெற்றது. இதற்கான ஆன்லைன்விண்ணப்ப பதிவு பிப்ரவரி 9-ம்தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதிநடந்தது. பின்னர், விண்ணப்பிக்கும் அவகாசம் மார்ச் 16-ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டது. இதன்பிறகு, திடீரென ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில்ஆன்லைனில் விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு … Read more

அயோத்தி ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்த ஆச்சார்யா லஷ்மிகாந்த் மறைவு: மோடி இரங்கல்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆச்சர்யா லஷ்மிகாந்த் தீட்சித் (82) காலமானார். அயோத்தி கோயிலில் புதிய ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்த அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். வாரணாசியின் நூறு வருட பழமையான வல்லப்ராம் சாலிகிராம் சாங்கவேத வித்யாலயா எனும் வேத பாடசலையில் வேதங்கள் கற்றுத் தரும் பணி செய்தவர், டாக்டர்.லஷ்மிகாந்த் தீட்சித். இவர், தென்னிந்தியா தவிர நாடு முழுவதிலும் பல முக்கிய பெரிய … Read more

இண்டியா கூட்டணி மவுனம் காப்பது ஏன்? – பாஜக கண்டனம் @ கள்ளக்குறிச்சி விவகாரம்

புதுடெல்லி: தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள கள்ளச் சாராய மரண விவகாரத்தில் இண்டியா கூட்டணி அமைதி காப்பது குறித்து பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்பி சம்பித் பத்ரா, “தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயம் பருகி 56 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் … Read more

நெட் தேர்வு முறைகேடு: பிஹாரில் விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல்; 4 பேர் கைது

பாட்னா: பிஹார் மாநிலத்தில் நெட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான 4 பேரை போலீஸார் கைது செய்தனர். யுஜிசி-நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது சிபிஐ. அந்த வகையில், பிஹார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தில் சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று நெட் தேர்வு … Read more