பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா

சண்டிகர்: பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது சொந்த காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகளுக்காகவும் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பன்வாரிலால் புரோகித் நேற்று சந்தித்த நிலையில் இன்று ராஜினாமா முடிவை எடுத்துள்ளார். பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் கடந்த 2021ல் பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக … Read more

எம்எல்ஏ.,க்களிடம் பாஜக பேரம் பேசியதாக குற்றஞ்சாட்டிய விவகாரம்: கேஜ்ரிவாலுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ.,க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும் படி நோட்டீஸ் வழங்க டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் குழு கேஜ்ரிவாலின்அதிகாரபூர்வ இல்லத்துக்கு சென்றுள்ளது. குற்றப்பிரிவு போலீஸாரின் நோட்டீஸினை ஏற்று அதற்கு பதில் அளிக்கத் தயாராக இருப்பதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் போலீஸார் எந்த நோட்டீஸையும் வழங்கவில்லை என்றும் அவர்கள் வரும் போதே ஊடகத்தினரை அழைத்து வந்தனர். காவல்துறை அவதூறு … Read more

மானிய விலையில் பாரத் அரிசி… கிலோ ₹29 மட்டுமே… அடுத்த வாரம் முதல் விற்பனை!

பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாகவும், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையிலும், மத்திய அரசு பாரத் அரிசி என்னும் திட்டத்தை தொடக்கியுள்ளது.

“காலத்துக்கு ஏற்ப சட்டங்களை இந்தியா நவீனப்படுத்தி வருகிறது” – பிரதமர் மோடி

புதுடெல்லி: காலத்துக்கு ஏற்ப சட்டங்களை இந்தியா நவீனப்படுத்தி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமை சட்ட ஆலோசகர்கள் மாநாடு புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டை தொடங்கிவைத்தார். சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய்.சந்திரசூட் ஆகியோர் இதில் பங்கேற்றனர். ஆசிய – பசிஃபிக், ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளை … Read more

கராச்சி To டெல்லி! ’பாரத ரத்னா’ விருது பெறப்போகும் பாஜக லால் கிருஷ்ண அத்வானியின் ‘யாத்திரைகள்’

Bharat Ratna To Lal Krishna Advani: பாஜகவின் தோற்றம் முதல் இன்று வரை கட்சியின் ஆணிவேராக இருந்து, பாஜகவுக்கு வழிகாட்டிய திரு லால் கிருஷ்ண அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளது

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் நரேந்திர மோடி தகவல்

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நாட்டின் மிகப்பெரிய இந்த கவுரவம் குறித்து அத்வானியிடம் பேசி எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். நம் காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ஒருவராக, அத்வானி ஜி இந்தியாவின் வளர்ச்சிக்கு செய்த … Read more

“மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 40 சீட் வெல்வதே சந்தேகம்” – மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி – காங்கிரஸ் மோதல் நாளுக்கு நாள் வலுத்துவருகிறது. மறைமுகமாக பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியை வலுவானதாக முன்னிறுத்துகிறது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அண்மைப் பேச்சு அவருடைய கட்சிக்கும் காங்கிரஸுக்குமான பூசலை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. முன்னதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சுமுகத் தீர்வு எட்டபப்டும்” … Read more

பாரத் ஜோடோ யாத்திரையின் போது தனக்கு பதில் ‘டூப்’ பயன்படுத்திய ராகுல் காந்தி: விரைவில் அம்பலப்படுத்துவதாக அசாம் முதல்வர் தகவல்

குவாஹாட்டி: `பாடி டபுள்` எனப்படும் டூப் ஆட்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்துகிறார். அந்த ‘டூப்’ நபரின் பெயர் விவரங்களை விரைவில் அம்பலப்படுத்துவோம் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். திரைப்பட நடிகர், பிரபலமான அரசியல்வாதிகள், நாட்டுத் தலைவர்கள் `பாடி டபுள்’ எனப்படும்டூப் நடிகர்களை பயன்படுத்துவார்கள். அவர்களது உயிருக்கு அச்சுறுத்துதல் இருக்கும் நிலையில் வெளியில் தோன்றும்போது அவர்கள் `பாடி டபுள்’ ஆட்களை பயன்படுத்துவர். தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் … Read more

இஸ்ரேலில் ரூ.1.4 லட்சம் சம்பளத்தில் வேலை செய்ய உயிருக்கு பயப்படாமல் வரிசையில் நிற்கும் பல மாநில கட்டிட தொழிலாளர்கள்

ரோதக்: இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், காசா மீது போர் தொடுத்துள்ளது இஸ்ரேல். மேலும், இஸ்ரேலில் பணியாற்றிய பாலஸ்தீன தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டது. இதனால். அங்கு கட்டிடதொழிலாளர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்திய தொழிலாளர்களை இஸ்ரேல் தேர்வு செய்கிறது. இதற்கான ஆட்கள் தேர்வு ஹரியாணாவின் ரோதக் நகரில் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஹரியாணா, பஞ்சாப், உ.பி, பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் டெல்லியை … Read more

1.9 கோடி ஏழை குடும்பங்களுக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு சர்க்கரை மானியம்

புதுடெல்லி: நாடு முழுவதும் 1.9 கோடி ஏழை குடும்பங்களுக்கு சர்க்கரைக்கு வழங்கப்படும் மானியத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு மானிய விலையில் சர்க்கரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கிலோ சர்க்கரைக்கு மத்திய அரசு ரூ.18.50 மானியம் வழங்குகிறது. இந்நிலையில் இந்த மானியத்தை மார்ச் 2026 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 1.89 கோடி குடும்பங்கள் … Read more