பூத் வாரியாக வாக்குப்பதிவு விவரம் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. இதுதொடர்பாக இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு விவரங்களில் முரண்பாடு இருப்பதாக கூறி ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆர்), காமன் காஸ் ஆகிய தொண்டு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், … Read more

பாஜக செய்தி தொடர்பாளராக நியமனமா? – பிரசாந்த் கிஷோர் மறுப்பு

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், தனியார் ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், நடைபெறும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு வெற்றி கிடைக்கும் என கூறியிருந்தார். இதையடுத்து இவரை பாஜக.,வின் தேசிய செய்தி தொடர்பாளராக, பாஜக தலைவர் ஜே.பி நட்டா நியமித்துள்ளார் என்ற கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பகிர்ந்திருந்தார். இதையடுத்து பிரசாந்த் கிஷோரின் கட்சியான ஜன் சூரஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள … Read more

“டெல்லியில் இருந்து ஆம் ஆத்மி தலைவர்கள் பஞ்சாபை கட்டுப்படுத்துகின்றனர்” – பிரதமர் மோடி

குர்தாஸ்பூர்: டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பஞ்சாப் மாநிலத்தை கட்டுப்படுத்தி வருவதாக வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவர் தெரிவித்தது. “பஞ்சாப் மாநிலத்தில் ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி நடந்து வருகிறது. இது துரதிருஷ்டவசம். டெல்லி தர்பாரில் உள்ள ஆம் ஆத்மி தலைவர்கள் அதை செய்து வருகின்றனர். பஞ்சாப் மாநில முதல்வரால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. ஜுன் 1-ம் … Read more

கார் விபத்து வழக்கில் சாட்சிகளைக் கலைக்க முயற்சி: புனே காவல் ஆணையர் குற்றச்சாட்டு

புனே: “புனேவில் விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரை சிறுவன் ஓட்டவில்லை என்றும், அதனை அவரது குடும்ப ஓட்டுநரே ஓட்டினார் என்றும் நம்பவைக்க முயற்சிகள் நடந்துள்ளன. சாட்சிகளைக் கலைக்க முயன்றதாக வழக்கு பதியப்படும்” என்று புனே காவல் ஆணையர் தெரிவித்தார். புனேவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே.19) அன்று 17 வயது சிறுவன் ஒருவன் சொகுசு காரை ஓட்டி இருவர் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த வழக்கில் புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு … Read more

புனே கார் விபத்து: இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்

புனே: கடந்த 19-ம் தேதி அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன், தற்போது சிறார் சீர்திருத்த முகாமில் உள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் தகுந்த நேரத்தில் விபத்து குறித்த தகவலை கொடுக்க தவறிய காவலர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். புனேவின் கல்யாணி நகர் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கி, முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சிறுவன் மோதினார். இதில் … Read more

தானே ரசாயன ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 10 ஆக அதிகரிப்பு

தானே: மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் டோம்பிவிலி பகுதியில் நடந்த ரசாயன தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் வெடித்து சிதறி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 7 பேர் உயிரிழந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து இன்று மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதி தாசில்தார் விபத்து தொடர்பாக பேசுகையில், “விபத்துக்குள்ளான தொழிற்சாலை வளாகத்தில் மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என நினைக்கிறோம். இதனால் உயிரிழப்பு மேலும் … Read more

‘எங்கும் தோல்வியுறும் பாஜகவால் 400+ எப்படி வெல்ல முடியும்?’ – கார்கே ‘கழித்தல்’ கணக்கு

பெங்களூரு: “பாஜக அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்ற முழக்கத்தை எப்படி எழுப்புகிறார்?” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான கலபுர்கியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இண்டியா கூட்டணி பெரும்பான்மையைப் பெறுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருக்கின்றது. இண்டியா கூட்டணிக்கு மக்கள் நல்ல ஆதரவை வழங்கி வருகின்றனர். விலைவாசி … Read more

‘ரேவ் பார்ட்டி’ சம்பவம்: போதை நகரமாக பெங்களூரு சீரழிவதாக பாஜக காட்டம்

பெங்களூரு: ரேவ் பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, கர்நாடக பாஜக, தனது எக்ஸ் தளத்தில், “சிலிக்கான் சிட்டி தற்போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களுடன் நடத்தப்படும் ரேவ் பார்ட்டிகளால் நிரம்பியுள்ளது” என காங்கிரஸ் அரசை கடுமையாக சாடியுள்ளது. காங்கிரஸ் குறித்து கர்நாடக பாஜக தனது எக்ஸ் தளத்தில், “சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு பெங்களூருவில் எங்கு பார்த்தாலும் ஒழுக்கக் கேடான பார்ட்டிகள் நடக்கின்றன. சிலிக்கான் சிட்டி தற்போது கஞ்சா உள்ளிட்ட … Read more

வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரம்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: வாக்குச்சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிட உத்தரவிடக் கோரிய மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், அந்த மனுவை நிராகரித்தது. இன்றைய விசாரணையின்போது, “ஏற்கெனவே, ஐந்து கட்ட வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. 6-ம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பது சரியாக இருக்காது. அதனால், தேர்தல் முடிந்தபின் இந்த வழக்கு விசாரணை செய்யப்படும். கோடை விடுமுறை முடிந்தபின் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும். அதுவரை … Read more

அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் போராட்டம்தான் தேர்தல்: ராகுல் காந்தி பிரச்சாரம்

புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கான போராட்டம் தான் இந்த தேர்தல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். மக்களவைத் தேர்தலையொட்டி வடகிழக்கு டெல்லியின் தில்ஷத் கார்டன் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளரை கன்னையா குமாரை ஆதரித்து ராகுல் காந்தி பேசியதாவது: இந்திய அரசிலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பமாக இருந்து வருகிறது. பாஜகவினர் அரசியலமைப்பு சட்டத்தை கிழித்து எறிய விரும்புகின்றனர். இந்திய அரசியலமைப்பையோ, இந்தியக் … Read more