குண்டூரில் நில ஆக்கிரமிப்பு செய்து கட்டிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டிடம் இடிப்பு

குண்டூர்: குண்டூர் மாவட்டம், தாடேபல்லி கூடம் சீதாநகரில் ஜெகன்மோகன் ஆட்சியில், நீர்வளத்துறைக்கு சம்மந்தப்பட்ட 17 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, அதில் 2 ஏக்கரில் மிகப்பெரியதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் கட்டப்பட்டு வந்தது. கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் இருந்த நிலையில், ஆந்திராவில் ஆட்சி மாறியது. ஆதலால், இக்கட்டிடம் நில ஆக்கிரமிப்பு செய்து, சட்டத்தை மீறி கட்டியது என்பதால் நேற்று அதிகாலை 5.30 மணியில் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் 2 ஜேசிபி இயந்திரங்கள் … Read more

நீட் முறைகேடு புகார்கள்… நீக்கப்பட்டார் NTA தலைவர் – முன்னாள் ஐஏஎஸ் புதிதாக நியமனம்!

NTA Chief Sacked: நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் முறைகேடு ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அதன் தலைமை பொறுப்பில் இருந்த சுபோத் குமார் சிங்கை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.

நீட் தேர்வு வினாத் தாள் கசிந்த வழக்கில் முக்கிய குற்றவாளி உ.பி.யில் கைது

புதுடெல்லி: நீட் வினாத் தாள் கசிவுக்கு மூளையாக செயல்பட்ட ரவி அத்ரியை உ.பி. போலீஸார் கைது செய்துள்ளனர். பிஹார் மாநிலம் பாட்னாவில் நீட் தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மாணவர்கள் சிலரையும் அவர்களின் கூட்டாளிகளையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் உத்தரபிரதேச மாநிலம்கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தரவி அத்ரி என்ற இளைஞருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் கிரேட்டர் நொய்டாவின் நீம்கா கிராமத்தில் ரவி அத்ரியை உ.பி. போலீஸார் நேற்று … Read more

தேவகவுடா குடும்பத்துக்கு மீண்டும் சிக்கல்: சூரஜ் ரேவண்ணா மீது தன்பாலின சேர்க்கை புகார்

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது. அவரது வீட்டு பணிப்பெண், கட்சியின் பெண் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் அளித்த புகாரில், பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரஜ்வலின் அண்ணனும் மஜத எம்எல்சியுமான சூரஜ் ரேவண்ணா (36) மீது 24 வயதான இளைஞர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். … Read more

இந்தியா – வங்கதேசம் இடையே சுகாதாரம், மீன்பிடி தொழில் உள்பட 10 ஒப்பந்தங்கள் நிறைவேற்றம்

புதுடெல்லி: சுகாதாரம், மீன்பிடி தொழில் உள்பட இந்தியா – வங்கதேசம் இடையே 10 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகியதாக வெளியுறவுத் துறை செயலர் வினய் குவாத்ரா விளக்கம் அளித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தியா வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களின் சந்திப்பை அடுத்து, இரு நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் … Read more

நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வு நடைமுறையை சீர்திருத்த உயர்மட்ட குழு அமைத்தது மத்திய அரசு

புதுடெல்லி: நீட், நெட் உள்பட தேசிய தேர்வு முகமை நடத்தும் போட்டித் தேர்வுகளை சீர்திருத்தவும், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜேஇஇ (மெயின்), நீட் (யுஜி), சிமேட், ஜிபாட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. சமீபத்தில் நடைபெற்ற நீட் (யுஜி) நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. … Read more

நீட், நெட் முறைகேடு விவகாரம்: தேசிய தேர்வு முகமை தலைவர் அதிரடி நீக்கம்

புதுடெல்லி: தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைவராக இருந்த சுபோத் குமாரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது மத்திய அரசு. இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பாக தேசிய தேர்வு முகமையின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை நடத்திய நடப்பு ஆண்டுக்கான நீட் மற்றும் நெட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த சூழலில் இந்த மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. தலைவர் … Read more

முதுநிலை ‘நீட்’ தேர்வு ஒத்திவைப்பு: மத்திய அரசு திடீர் அறிவிப்பு

புதுடெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நாளை (ஜூன் 23, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் இன்று (சனிக்கிழமை) சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது. Source link

இடைக்கால சபாநாயகருக்கு உதவுவதை தவிர்க்க இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் திட்டம் | பதவிப் பிரமாண விவகாரம்

புதுடெல்லி: புதிதாக தேர்ந்தடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில், இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப்புக்கு உதவும் குழுவில் இடம்பெற்றுள்ள இண்டியா கூட்டணி எம்பிக்கள், தங்கள் பணிகளைச் செய்ய மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப்-பை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) தெரிவித்தார். மேலும், அவருக்கு உதவுவதற்கான குழுவில் காங்கிரஸ் மூத்த எம்பி கொடிக்குன்னில் சுரேஷ், திமுக … Read more

கர்நாடகாவில் அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் படம் கட்டாயம்: முதல்வர் சித்தராமையா உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் அனைத்திலும் பாபா சாகேப் அம்பேத்கரின் உருவப் படத்தை கட்டாயம் நிறுவ வேண்டும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் பாபாசாகேப் அம்பேத்கரின் உருவ படத்தை நிறுவ வேண்டும் என அங்குள்ள பட்டியலின அமைப்பினர் நீண்ட காலமாக கோரி வந்தனர். இதேபோல அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் அன்றாடம் வாசிக்க வேண்டும் வலியுறுத்தினர். கடந்த ஆண்டு … Read more