விஸ்தாரா நெருக்கடி… 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து… விளக்கம் கேட்கும் DGCA!

Vistara Airlines Crisis: நாடு முழுவதும் பல விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விஸ்தாரா பயணிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

பாஜக ‘கச்சத்தீவு’, காங்கிரஸ் ‘சீன ஆக்கிரமிப்பு’ – மோதலின் பின்னணி என்ன?

பாஜக கச்சத்தீவு குறித்து பேசி வரும் இதேவேளையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள இந்தியாவின் ஓர் அங்கமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அதைத் தடுக்க பாஜக அரசு செய்தது என்ன? என காங்கிரஸ் கட்சியினர் கவுண்ட்டர் அட்டாக் செய்து வருகின்றனர். இதன் பின்னணி என்ன? தமிழக பாஜக அண்ணாமலை கச்சத்தீவு குறித்து வெளியிட்ட ஆர்டிஐ தகவல் அடிப்படையில் பாஜக – காங்கிரஸ், திமுக இடையே மோதல் வெடித்துள்ளது. குறிப்பாக, அந்த … Read more

கம்போடியாவில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் 250 இந்தியர்கள் மீட்பு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கம்போடியாவில் வேலைவாய்ப்பு என்று இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுமார் 5,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் தங்களது விருப்பத்துக்கு மாறாக தடுத்துவைக்கப்பட்டு இணைய மோசடிகளில் ஈடுபட வற்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சகம் கம்போடிய அரசுடன் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு 250 இந்தியர்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு விவகாரத் துறை அமைச்சக செய்தித் … Read more

என்ஐஏ தலைவராக சதானந்த் பதவியேற்பு – மும்பை தீவிரவாத தாக்குதலின்போது துணிச்சலாக போராடியவர்

புதுடெல்லி: தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) புதிய தலைவராக சதானந்த் வசந்த் ததே (57) பதவியேற்றார். கடந்த 2009-ம் ஆண்டு என்ஐஏ தொடங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த புலனாய்வு அமைப்பு டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. தீவிரவாதம் உள்ளிட்ட மிக முக்கிய வழக்குகளை என்ஐஏ விசாரிக்கிறது. இந்த அமைப்பின் தலைவராக இருந்த தினகர் குப்தா கடந்த 31-ம் தேதி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து என்ஐஏவின் புதிய தலைவராக, மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் … Read more

தேர்தல் பத்திர விவகாரம்: பிரதமர் மோடி விளக்கம்

புதுடெல்லி: ‘‘பாஜக அரசுக்கு பின்னடைவு ஏற்படும் அளவுக்கு நான் எதையும் செய்யவில்லை. தேர்தல் பத்திரங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை கொண்டாடுபவர்கள், மனம் திரும்புவார்கள்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தனியார் தமிழ் தொலைக்காட்சி சேனலுக்குப் பிரதமர் மோடி நேற்று முன்தினம் சிறப்பு பேட்டி அளித்திருந்தார். அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: தேர்தல் பத்திரங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததற்கு தாங்கள்தான் காரணம் என்று பெருமைப்படுபவர்களும், அதை கொண்டாடுபவர்களும் விரைவில் மனம் திரும்புவார்கள். தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதம் என்றுஉச்ச நீதிமன்றம் … Read more

இந்தியப் பொருளாதாரம் புதிய சாதனை படைக்கிறது: ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 1935-ம்ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மும்பையை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் 90-வது நிறுவன நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: ரிசர்வ் வங்கி இன்று 90-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ரிசர்வ் வங்கி முக்கிய பங்கு வகித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் 80-வது நிறுவன நாள் விழாவில் நான் … Read more

“தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடி பொய் கூறுகிறார்” – ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் பொய் கூறி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு நாளும் பாசாங்குத்தனத்தின் புதிய உச்சத்தைத் தொடுகிறார்; நேர்மையின்மையின் புதிய வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் பொய் கூறி இருக்கிறார். தன்னால் ஏற்படுத்தப்பட்ட … Read more

இந்தியாவில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: சென்னை ஐஐடி தகவல்

சென்னை: இந்தியாவில் அறுவை சிகிச்சை மகப்பேறுகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பதும், ‘மருத்துவ ரீதியான அவசியம்’ இல்லாத சூழலிலும் அறுவை சிகிச்சை மகப்பேறுகள் நடைபெறுவதும் சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும் நடைபெற்ற அறுவை சிகிச்சை முறையிலான பிரசவங்களின் (சி- செக்சன்) எண்ணிக்கை திடீரென கடுமையாக உயர்ந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களான … Read more

அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயர்களை மாற்றியது சீனா

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள இந்தியாவின் ஓர் அங்கமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளை தங்களின் மொழியில் புதிய பெயர்களை அறிவித்தும், தங்கள் நாட்டு வரைபடத்தில் இணைத்தும் சீனா தொடர்ச்சியான அத்துமீறல்களை செய்துவருகிறது. சீன சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களை மறுப்பெயரிட்டு வருகிறது. ஏற்கனவே … Read more

“வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அந்தர் பல்டி அடிப்பது ஏன்?” – ப.சிதம்பரம் @ கச்சத்தீவு

புதுடெல்லி: கச்சத்தீவு விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சரமாரியாகக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார், மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். இது தொடர்பாக ப,சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “பழிக்குப் பழி எல்லாம் பழங்கதை. ட்வீட்டுக்கு ட்வீட் தான் புதிய ரக ஆயுதம். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 27.1.2015 தேதியிடப்பட்ட ஆர்டிஐ மனுவை திரும்பப் பார்க்குமாறு வேண்டுகிறேன்.அந்தத் தேதியில் அவர் தான் நம் நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருந்தார் என நினைக்கிறேன். அந்த ஆர்டிஐ … Read more