“இந்துக்கள் என்பதால் தீவிரவாதிகள் பேருந்தை தாக்கியுள்ளனர்” – கங்கனா ரனாவத் கண்டனம்
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று யாத்ரீகர்கள் பயணித்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு நடிகையும், பாஜக எம்.பி-யுமான கங்கனா ரனாவத் கண்டனம் தெரிவித்துள்ளார். “தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர்கள் வைஷ்ணவ் தேவி கோயிலுக்கு தரிசன நிமித்தமாக பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் இந்து மக்கள் என்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். … Read more