தென்னிந்தியாவில் ஒரு புதிய கதை எழுதிய NDA கூட்டணி: பிரதமர் மோடி
டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுடெல்லி: “ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிகாரமளிப்பதே எங்கள் முன்னுரிமை” என்று டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்டிஏ)-வின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், சிவ சேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், … Read more
மும்பை: அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் போட்டியிட்ட தனது மனைவி சுனேத்ர பவாரின் தோல்வி தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் தெரிவித்துள்ளார். “தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த முடிவினை எங்களால் பெற முடியவில்லை. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சி தரவில்லை. இதற்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் என்னுடன் தான் உள்ளனர். மற்ற அனைத்து தொகுதிகளை காட்டிலும் பாராமதியில் எங்களுக்கு வாக்கு கிடைக்காதது … Read more
பெங்களூரு: பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த வருடம் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் சார்பில் நாளிதழ்களில் பாஜக ஆட்சியை விமர்சித்து விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில், 2019 – 23 வரையிலான கர்நாடக பாஜக ஆட்சியில் ஊழல் நடந்தது என்றும் பாஜகவினர் ஊழல்வாதிகள் என்று விமர்சித்தும் கர்நாடகாவின் முக்கிய நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடக பாஜக ராகுல் … Read more
ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நிழலாக இருந்த வி.கே.பாண்டியன், தேர்தல் தோல்விக்குப் பிறகு மாயமானதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஒடிசாவில் சுமார் 24 வருடங்களாக தொடர்ந்து 5 முறை ஆட்சி செய்த பிஜேடி தலைவர் நவீனுக்கு, தேர்தல் முடிவுகள் படு தோல்வியை அளித்தன. ஒடிசாவின் 21 மக்களவைத் தொகுதிகளில் பிஜேடிக்கு ஒன்றுகூட கிடைக்கவில்லை. சட்டப்பேரவையின் 147 இடங்களில் பாஜக 79 இடங்களை பெற்று முதன்முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைக்க உள்ளது. பிஜேடி 51, காங்கிரஸ் 14, பிற கட்சிகள் … Read more
Oath Taking Ceremony: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் சில நாடுகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இந்தியா ஏற்கனவே அழைப்பு அனுப்பியுள்ளது.
புதுடெல்லி: மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கிறது. மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி. இந்தச் சூழலில் புதிதாக அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் இடம் வேண்டுமென்ற நிபந்தனைகள் எதுவும் தெரிவிக்கவில்லை என லோக் ஜன சக்தி கட்சியின் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார். அவரது கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் 2 முதல் 3 இடங்கள் வேண்டுமென பாஜக வசம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்தச் சூழலில் அப்படி … Read more
புதுடெல்லி: வேதாந்தா குழுமத்தின் தல்வாண்டி சபோ பவர் நிறுவனம் பஞ்சாபில் கடந்த 2011-ல் சீன நிறுவனத்தின் உதவியுடன் மின் உற்பத்தி மையத்தை நிறுவியது. அந்தப் பணிகள் நிறைவடைவதற்கு முன்பே 263 பணியாளர்களின் விசா காலம் முடிவடைந்தது. அவர்களின் விசா காலத்தை நீட்டிக்க அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக 2022-ம் ஆண்டு சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்தன. இந்த … Read more
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. பாஜக கூட்டணி 293 இடங்களிலும் இண்டியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதம ராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில், தலைமை … Read more
லக்னோ: ரூ.1 லட்சம் பணம் பெறுவதற்கான உத்தரவாத அட்டை கேட்டு, லக்னோ காங்கிரஸ் அலுவலகத்தில் பல பெண்கள் நேற்று வரிசையில் நின்றனர். மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘ வீட்டுக்கு வீடு உத்தரவாதம்’ என்ற திட்டத்தை உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் 25 உத்தரவாதங்கள் குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுமார் 8 கோடி வீடுகளுக்கு சென்று குடும்பத் தலைவிகளிடம் உத்தரவாத அட்டைகளை காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர். அதில் வறுமைக்கோட்டுக்கு கீழ் … Read more