மேற்கு வங்க பாஜக வேட்பாளருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

புதுடெல்லி: மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதி பாஜக வேட்பாளர் அம்ரிதா ராயுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி மூலம் பேசினார். அப்போது அவர், “ஏழைகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட சொத்துகளையும் திரும்பப் பெறுவதற்கான சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறேன். நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ள அதேவேளையில் ஊழல்வாதிகள் அனைவரும் … Read more

ஆம் ஆத்மி காட்சிக்கு தொடரும் சோதனை: முக்கிய கட்சித் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பியது ED

ஆம் ஆத்மி கட்சியின் கோவா தலைவருடன், ராமாராவ் வாக், தத்தா பிரசாத் நாயக் மற்றும் பண்டாரி சமாஜ் தலைவர் அசோக் நாயக் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப்பெற பரிசீலனை: அமித் ஷா தகவல்

புதுடெல்லி: தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது. பொது ஒழுங்கை பராமரிப்பதற்காகவும், சந்தேகப்படும் இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தவும் சந்தேக நபர்களை கைது செய்யவும், தேவைப்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தவும் ஆயுதப் படை வீரர்களுக்கு இந்த சட்டம் அதிகாரம் வழங்குகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் ஊடக குழுமத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஜம்மு … Read more

ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் காலமானார்: பிரதமர் மோடி, மம்தா இரங்கல்

கொல்கத்தா: ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் (94) கொல்கத்தாவில் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். சுவாமி ஸ்மரணானந்தா 1929-ல் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் பிறந்தார். 1952-ல் தன்னுடைய 22-வது வயதில் ராமகிருஷ்ணா மடத்தில் இணைந்தார். நீண்ட காலமாக ஆன்மிக சேவையாற்றி வந்த அவர், 2017-ம் ஆண்டு ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷனின் 16-வது தலைவராக பொறுப்பேற்றார். கடந்த ஜனவரி 29-ம் தேதி சிறுநீரகத்தில் ஏற்பட்ட நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை … Read more

“எனது கணவர் நாளை நீதிமன்றத்தில் ஆதாரங்களோடு உண்மையை வெளியிடுவார்” – சுனிதா கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் நாளை (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா தெரிவித்தார். முன்னதாக, அரவிந்த் கேஜ்ரிவாலை சுனிதா செவ்வாய்க்கிழமை மாலை அமலாக்கத் துறை அலுவலகத்தில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் சுனிதா கேஜ்ரிவால் கூறுகையில், “இரண்டு நாட்களுக்கு முன்பு, அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியின் தண்ணீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினை தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் அதிஷிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். மத்திய … Read more

ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் வேட்பாளர்கள் 9 பேர் அறிவிப்பு

புபனேஸ்வர்: ஒடிசாவின் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சி 9 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஒடிசாவில் 21 மக்களவைத் தொகுதிகளுக்கும், 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒன்றாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மே 13ம் தேதி தொடங்கி 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியின் மக்களவை வேட்பாளர்கள் 9 பேரின் பட்டியலை கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரணாப் பிரகாஷ் தாஸ் சாம்பல்பூர் தொகுதியிலும், … Read more

‘தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை’ – நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தன்னிடம் சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்குமாறு எங்களது கட்சி சார்பில் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நானும் அது குறித்து 10 நாட்கள் வரை யோசித்துப் பார்த்தேன். பின்னர் போட்டியிட விரும்பவில்லை என எனது முடிவை தெரிவித்தேன். தமிழகம் அல்லது ஆந்திராவில் இருந்து … Read more

லாலுவின் அடுத்த வாரிசு… யார் இந்த ரோகிணி ஆச்சார்யா? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகளான ரோகிணி ஆச்சார்யா மக்களவைத் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார். லாலு பிரசாத் யாதவின் வாரிசுகள் தேஜஸ்வி யாதவ் உட்பட 3 பேர் ஏற்கெனவே அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா பிஹார் மாநிலத்தில் உள்ள சரன் தொகுதியில் போட்டியிடுகிறார். தந்தையின் அரசியல் செல்வாக்கு இவருக்கு … Read more

“தேர்தல் பத்திர விவகாரத்தால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு” – நிர்மலா சீதாராமன் கணவர் கணிப்பு

பெங்களூரு: தேர்தல் பத்திர விவகாரம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று பிரபல பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி சேனல் ஒன்றுக்கு பரகலா பிரபாகர் அளித்த பேட்டியில், “தேர்தல் பத்திர விவகாரம் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். தேர்தல் பத்திர விவகாரம் இன்று இருப்பதைவிட அதிக வேகம் பெறும். தற்போது இருப்பதை விட அதிகளவில் பூதாகாரமாக … Read more

அமலாக்கத் துறைக்கு அவகாசம் வழங்கியது ஐகோர்ட் – கேஜ்ரிவாலுக்கு சிக்கல் நீடிப்பு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கோரிக்கைகளை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரித்தது. கேஜ்ரிவால் தனது மனுவில், கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை அமலாக்கத் துறையின் காவலில் இருந்து உடனடியாக விடுவிக்க உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். … Read more