தேசிய அரசியலில் இறங்குகிறார் அகிலேஷ் யாதவ்: உ.பி எதிர்க்கட்சி தலைவராகிறார் சித்தப்பா ஷிவ்பால்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், முழுவீச்சில் தேசிய அரசியலில் இறங்குகிறார். இவர் வகித்த உபி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் அகிலேஷின் சித்தப்பா ஷிவ்பால்சிங் யாதவ் அமர்கிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாகிவிட்டது சமாஜ்வாதி. இக்கட்சிக்கு உபியில் 37 மக்களவை தொகுதிகள் கிடைத்துள்ளன. இதன் வாக்கு சதவிகிதமும் உயர்ந்து 33.59 என்றாகி உள்ளது. இண்டியா கூட்டணியின் முக்கிய உறுப்பினர்களான சமாஜ்வாதியும், காங்கிரஸும் தனிப்பட்ட முறையில் … Read more

“போலி கருத்துக் கணிப்பின் மூலம் மிகப்பெரிய பங்குச்சந்தை ஊழல்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: போலி கருத்துக் கணிப்புகள் எதிரொலியாக மிகப்பெரிய பங்குச் சந்தை ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும் குறிப்பிட்ட முதலீட்டு ஆலோசனையை வழங்கியது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர் பேசியதாவது: … Read more

“ராகுலால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” – பங்குச்சந்தை ஊழல் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி

புதுடெல்லி: மிகப் பெரிய பங்குச் சந்தை ஊழல் குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மூத்த தலைவர் பியூஷ் கோயல் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியாமல் ராகுல் இவ்வாறு பேசுவதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “போலி கருத்துக் கணிப்புகளுக்கும், தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாகவே முதலீடு செய்து பெரும் லாபம் ஈட்டிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், பாஜகவுக்கும் என்ன தொடர்பு என்பதை நாடாளுமன்ற … Read more

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா ஜூன் 9-க்கு தள்ளிவைப்பு?

புதுடெல்லி: டெல்லியில் ஜூன் 9-ம் தேதி மாலை நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 8-ல் பிரதமர் மோடி பதவியேற்பார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இவ்விழா ஒருநாள் தள்ளிவைக்கப்படுவதாக தெரிகிறது. இந்தப் பதவியேற்பு விழாவில் தெற்காசிய தலைவர்கள் பலர் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவிருப்பதை ஏற்கெனவே உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களை … Read more

ஜூன் 4 பங்குச்சந்தை வீழ்ந்த நாளிலும் இந்திய முதலீட்டாளர்களுக்கு லாபம் தான்! பியூஷ் கோயல் பதிலடி!

Piyush Goyal Reply To Allegations Of Rahul Gandhi: லாபம் ஈட்டுவதற்காகவே போலியான கருத்துக்கணிப்புகளை (Exit Poll) மூலம் ஊழல் செய்துள்ளது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் பியூஷ் கோயல் பதில்… 

கங்கனாவை தாக்கியது ஏன்? – விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்

சண்டிகர்: நடிகை கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்தது ஏன் என்பது குறித்து சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கமளித்துள்ளார். அவரது விளக்க வீடியோ வைரலாகி வருகிறது. டெல்லி செல்வதற்காக நடிகை கங்கனா ரணாவத் சண்டிகர் விமான நிலையம் வந்தபோது, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு கங்கனாவை சிஐஎஸ்எஃப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான காரணம் குறித்து தெளிவாக விளக்கப்படவில்லை. இந்நிலையில், கங்கனாவை தாக்கியது குறித்து பேசியிருக்கும் காவலர் குல்விந்தர் கவுர், “100 ரூபாய் … Read more

அக்னிபாத் திட்டத்தை கைவிட, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாஜகவுக்கு நிதிஷ், சிராக் நிபந்தனை

புதுடெல்லி: “அக்னிபாத் திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என பாஜக கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள இரண்டு முக்கியக் கட்சிகள் நிபந்தனை விதித்துள்ளன. இளைஞர்களை ராணுவத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யும் வகையில் மத்திய அரசு 2022-ம் ஆண்டு அக்னிபாத் திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்படி, தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் பணி வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜக மூன்றாவது … Read more

பஞ்சாப் – பொற்கோயில் முன்பு காலிஸ்தான் கோஷங்கள்… ‘ஆப்ரேஷன் ப்ளு ஸ்டார்’ நினைவு நாளில் அத்துமீறல்

புதுடெல்லி: பஞ்சாபின் பொற்கோயில் முன்பாக இன்று (ஜூன் 6) காலிஸ்தான் கோஷங்களுடன், ஆதரவு பதாகைகளும் ஏந்தப்பட்டன. ‘ஆப்ரேஷன் ப்ளு ஸ்டார்’ 40-வது ஆண்டு நினைவு நாளில் இந்த அத்துமீறல்கள் நடைபெற்றுள்ளன. இந்தியாவிடமிருந்து பிரிந்த பாகிஸ்தானை போல், பஞ்சாபை காலிஸ்தானாக பிரிக்க முயற்சிக்கப்பட்டது. இதை தொடக்கம் முதல் எதிர்க்கும் இந்திய அரசு, காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்கி வருகிறது. இந்நிலையில், பஞ்சாபில் இன்று ‘ஆப்ரேஷன் ப்ளு ஸ்டார்’ 40-வது நினைவுநாள் சட்டவிரோதமாக அனுசரிக்கப்பட்டது. இதையெட்டி, அமிர்தசரஸில் சீக்கியர்களின் புனித தலமான … Read more

டெல்லி குடிநீர் பிரச்சினை: உபரி நீரை விடுவிக்க இமாச்சலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் உபரி நீரை விடுவிக்குமாறு இமாச்சல் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுமார் 137 கியூசெக்ஸ் நீரை கூடுதலாக இமாச்சல் விடுவிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்பு அது குறித்த தகவலை ஹரியாணா மாநில அரசிடம் இமாச்சல் தெரிவிக்க வேண்டுமெனவும் சுட்டிக் காட்டியுள்ளது. அதனை வாஜிராபாத் அணை வழியாக வெளியேற்றுவதற்கான வசதிகளை மேற்கொள்ள ஹரியாணா அரசு நடவடிக்கை எடுக்க … Read more

அக்னி வீரர் திட்டம் முதல் UCC வரை… நிதீஷ் குமார் வைக்கும் சில கோரிக்கைகள்..!!

2024 லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மற்றும் NDA அரசாங்கம் அமைப்பதற்கு முன்பு, பாஜகவின் கூட்டணிக் கட்சிகள், குறிப்பாக JDU அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.