சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்த முடியாது.. கெஜ்ரிவாலுக்கு ஆளுநர் செக்.. அடுத்து என்ன?

VK Saxena Vs Arvind Kejriwal: டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா. “சிறையில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தை நடத்த முடியாது” எனக் கூறியிருப்பது டெல்லி அரசியல் மேலும் சூடுபிடித்துள்ளது.

சத்தீஸ்கர் | பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 6 நக்சல்கள் உயிரிழப்பு

பிஜாப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் இன்று (புதன்கிழமை) பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர், பலர் காயமடைந்திருக்கலாம் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பஸ்தர் பகுதி காவல்துறை ஐஜி சுந்தரராஜ் கூறுகையில், “பசகுடா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சிக்கூர்பட்டி மற்றும் புஸ்பகா கிராமங்களின் வனப்பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது” என்றார். மாவட்ட ரிசர்வ் கார்டு (டிஜிஆர்), மத்திய பாதுகாப்புப் படை, … Read more

பாஜக வேட்பாளர் பட்டியலில் வருண் காந்தி உட்பட 37 எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுப்பு

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 111 வேட்பாளர்கள் கொண்ட 5-வது பட்டியலை அக்கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் ராமாயண நடிகர் அருண் கோவில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடாவின் மருமகன் டாக்டர் சி.என்.மஞ்சுநாத், சந்தேஷ்காலி வன்முறையில் இருந்து தப்பிய ரேகா பத்ரா, தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போதைய எம்.பி.க்களான வருண் காந்தி, வி.கே.சிங், அனந்தகுமார் ஹெக்டே உள்ளிட்ட 37 பேருக்கு மீண்டும் வாய்ப்பு … Read more

‘அரசியலமைப்பு சட்டம்’ பற்றி பேசிய பாஜக எம்.பி. அனந்த்குமாருக்கு சீட் இல்லை!

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கர்நாடக பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டேவுக்கு சீட் வழங்காமல், வேட்பாளரை மாற்றிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா தொகுதி பாஜக எம்.பி.அனந்த்குமார் ஹெக்டே அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி செய்திகளில் அடிபடுவார். கடந்த 5 ஆண்டுகளில் அவர் 6 முறை நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என பேசியுள்ளார். இவர் அண்மையில், “நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜகவுக்கு பெரும்பான்மை … Read more

கங்கனா பற்றி காங்கிரஸ் பெண் நிர்வாகி சர்ச்சை கருத்து: சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்தி திரைப்பட நடிகை கங்கனா ரனாவத் பாஜக-வுக்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் அவரது சொந்த மாவட்டமான மண்டி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக கங்கனா அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்கனா ரனாவத் புகைப்படத்துடன் சர்சைக்குரிய ஒரு பதிவு வெளியானது. அதேபோன்று, குஜராத் காங்கிரஸ் நிர்வாகி எச்.எஸ்.அஹிர் எக்ஸ் பக்கத்தில் கங்கனா குறித்து ஒரு கமென்ட் வெளியானது. இதில் சுப்ரியா ஸ்ரீநேத்தின் பதிவை உடனடியாக … Read more

கேஜ்ரிவாலுக்கு ரூ.134 கோடி கொடுத்தோம்: காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் தகவல்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ரூ.134 கோடி கொடுத்தோம் என்று காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னு குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ‘சீக்கியருக்கான நீதி’ அமைப்பு தொடங்கப்பட்டது. காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதர வான இந்த அமைப்பு இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத நடவடிக் கைகளில் ஈடுபட்டது. இதனால் கடந்த 2019-ம் ஆண்டில் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. அமெரிக்காவில் வசித்து வரும் இந்த அமைப்பின் … Read more

வெப்ப அலையில் இருந்து வாக்காளர்களை பாதுகாக்க நடவடிக்கை: தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுரை

புதுடெல்லி: மக்களவை தேர்தலின்போது வாக்காளர்களை வெப்ப அலையின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வரவிருக்கும் கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை நிலவும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த தாக்கத்தை … Read more

அசாமில் பாஜக, காங். வேட்பாளர் நேருக்கு நேர் சந்திப்பு

திஸ்பூர்: அசாம் மாநில மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜக,காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்தித்தனர். இருவரும் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்தினர். தேர்தலில் வெற்றி பெற பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அசாமில் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பாஜக கூட்டணியில் அசாம்கண பரிஷத், ஐக்கிய மக்கள் கட்சி இடம்பெற்றுள்ளன. பாஜக 11, அசாம்கண பரிஷத் 2, ஐக்கிய மக்கள் கட்சி … Read more

கேஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி ஹோலி பண்டிகை கொண்டாடவில்லை: டெல்லி அமைச்சர் ஆதிஷி தகவல்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்ததைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி ஹோலி பண்டிகை கொண்டாடவில்லை என்று டெல்லிகல்வித் துறை அமைச்சர் ஆதிஷி அறிவித்தார். மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பானவிசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குக் கடந்த நவம்பர் முதல்8 முறை சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. இதனை நிராகரித்து வந்தகேஜ்ரிவாலை மார்ச் 21-ம் தேதிஅமலாக்கத்துறை கைது செய்தது. இதனை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டத்தில் … Read more

வயநாட்டில் ராகுலை எதிர்க்கும் கேரள பாஜக தலைவர்!

கேரளாவில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு பாஜக ஏற்கெனவே 12 இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இந்நிலையில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. இதன்படி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் அவருக்கு எதிராக கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். இத்தொகுதியில் ஆளும் இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனி ராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். கே.சுரேந்திரன், கடந்த 2020 … Read more