“பிரச்சாரத்தில் நிதானத்தை கடைபிடியுங்கள்” – பாஜக, காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: “தேர்தல் பிரச்சாரத்தில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்” என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் மட்டுமே எஞ்சி உள்ளன. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைக்கும் பேச்சுக்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் இருகட்சிகளும் … Read more

ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்ததாகக் கூறப்படும் நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம், ஜனவரி 31ம் தேதி ஹேமந்த் சோரனை கைது செய்தது. இதை எதிர்த்தும், 2024 மக்களவைத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளவும் இடைக்கால ஜாமீன் கோரி ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால … Read more

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 31-ல் தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, கேரளாவில் வரும் மே 31-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான காலம் தென்மேற்கு பருவமழைக் காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒரு நாள் முன்பாக மே 31-ம் தேதியே தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு இந்தியாவில் சராசரியாக 96 முதல் 104 சதவீத மழை … Read more

தேர்தல் நேரத்தில் டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுத்த பாஜக சதி: அமைச்சர் அதிஷி

புதுடெல்லி: தேர்தல் நேரத்தில், டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜக சதி செய்துள்ளதாக டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மே 25ம் தேதி டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி அரசை குறிவைத்து டெல்லி மக்களுக்கு பாஜக தொல்லை கொடுக்கும் சதியில் ஈடுபட்டுள்ளது. டெல்லியில் யமுனை ஆற்றின் நீர் மட்டம் முதன்முறையாக … Read more

சம்ஸ்கிருத பாடசாலை, ஜெயின் கோயில் இருந்ததாக புகார்: அஜ்மீர் மசூதியில் ஏஎஸ்ஐ கள ஆய்வு நடத்த கோரிக்கை

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள மசூதி ஒன்றில் ஏஎஸ்ஏ களஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த மசூதி, சம்ஸ்கிருத பாடசாலையாக, ஒரு ஜெயின் கோயிலுடன் செயல்பட்டு வந்ததாக புகார் கிளம்பியுள்ளது. அஜ்மீர் நகரில் பழம்பெருமை வாய்ந்த காஜா மொய்னுத்தீன் சிஷ்டி தர்கா அமைந்துள்ளது. இதன் பின்புற சாலையில், ‘அடை தின் கீ ஜோப்டா (இரண்டரை நாளில்கட்டப்பட்ட கூரை)’ எனும் ஒரு மசூதியும் உள்ளது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த மசூதி, இந்தோ இஸ்லாமிக் … Read more

மகாராஷ்டிரா | உஜ்ஜைனி அணையில் படகு கவிழ்ந்து 6 பேர் மாயம்: மீட்புப் பணி தீவிரம்

புனே: மகாராஷ்டிரா மாநிலம் உஜ்ஜைனி அணையில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் மாயமாகினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், போலீஸார் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கலாசி கிராமத்தில் உஜ்ஜைனி அணையில் இந்த விபத்து நடந்தது. நிகழ்விடத்தில் என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அணையில் சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்றுடன் பெய்த திடீர் மலை காரணமாக படகு கவிழ்ந்ததாக அந்தப் படகில் பயணித்த சோலாபூர் துணை … Read more

புரி ஜெகந்நாதர் குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து 3 நாட்கள் விரதம்: சாம்பித் பத்ரா அறிவிப்பு

புவனேஸ்வர்: புரி ஜெகந்நாதர் குறித்து தான் வெளியிட்ட கருத்துக்கு வருத்தம் தெரிவித்து 3 நாட்கள் விரதம் இருக்கப் போவதாக பாஜக மூத்த தலைவரும், வேட்பாளருமான சாம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக சாம்பித் பத்ரா களமிறங்கியுள்ளார். இதையொட்டி நேற்று முன்தினம் புரி வந்த பிரதமர் மோடி, மிகப்பிரம்மாண்டமான வாகன பேரணியில் கலந்துகொண்டார். வாகனப் பேரணி முடிந்த நிலையில், செய்தியாளர்களிடம் சாம்பித் பத்ரா பேசும்போது புரி ஜெகந்நாதர் பிரதமர் மோடியின் தீவிர … Read more

கேரளாவில் உடல் உறுப்புக்காக ஆள்கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் கைது

திருவனந்தபுரம்: சர்வதேச அளவில் மனித உறுப்புகளை விற்கும் கும்பலை சேர்ந்த கேரள இளைஞர் சபித் நாசர் (30) நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சபித் நாசர். இவர், கேரளாவை சேர்ந்த பின்தங்கிய மக்களை ஏமாற்றி வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் இருந்து சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை எடுத்து விற்பனை செய்துள்ளார். கடந்த சில மாதங்களில் மட்டும் கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20 பேரை அவர் வெளிநாடுகளுக்கு … Read more

“5 கட்ட தேர்தல் முடிவில் இண்டி கூட்டணி தளர்ந்துவிட்டது” – பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: “மக்களவைத் தேர்தலில் வாக்களித்தோருக்கு நன்றி. 5 கட்ட தேர்தல் முடிவில் இண்டி கூட்டணி முற்றிலுமாக அதன் மதிப்பிழந்து, தளர்ந்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மேலும் மேலும் வலுவடைந்துள்ளது” எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. ஏப்ரல் 19, 26,மே 7, 13 ஆகிய நாட்களில் 4 கட்ட தேர்தல் ஏற்கெனவே முடிந்த நிலையில், 5-வது கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. உத்தர பிரதேசம் 14, … Read more

வி.கே.பாண்டியன் மீது பிரதமர் மோடி மறைமுக விமர்சனம் – பின்னணி என்ன?

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஏராளமான கனிம வளங்கள் இருந்தபோதிலும், அம்மாநிலம் வறுமையில் இருப்பது வேதனை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஒடிசாவின் அங்குல் நகரில் பாஜக சார்பில் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது: ஒடிசாவில் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக பிற மாநிலங்களுக்குச் செல்கின்றனர். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. ஒடிசாவில் கனிம வளங்கள் ஏராளமாக இருந்த போதிலும் மக்கள் … Read more